என் மலர்
நீங்கள் தேடியது "Removal of encroachments"
- முதுகுளத்தூர் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய அதிகாரியை பொதுமக்கள் பாராட்டினர்.
- நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து தண்டோரா மூலம் நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜாரில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
முதுகுளத்தூர் பஜாரில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5 கோடியே 42 லட்சம் செலவில் சாலை அகலப்படுததும் பணி 2 மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் நடைபாதைகள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி இணைந்து தண்டோரா மூலம் நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பிறகும் நடை பாதை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதால் போலீஸ் உதவியுடன் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த பணியின்போது உதவிகோட்டப் பொறியாளர் பிரேமானந், நெடுஞ்சாலை துறை உதவிப்பொறியாளர் மகேஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி பணியாளர்கள் ராஜேஷ், குமார், முருகேசன் உள்பட தூய்மைப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்
- சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இடித்து அகற்றப்பட்டது
- சாலை அகலமானதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
திருச்சி:
திருச்சி பீம நகர் ஹீபர் ரோடு, பாரதிதாசன் சாலை, பறவைகள் சாலை, மத்திய பஸ்லையும் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இடித்து அகற்றம்
இது தொடர்பாக கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோருக்கும் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று காலை அதிரடியாக மேற்கண்ட பீமநகர், பாரதிதாசன் ரோடு, வில்லியம்ஸ் ரோடு, பறவைகள் சாலை, மத்திய பஸ் நிலைய சுற்றுப்புற பகுதிகளில் உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை உதவி பொறியாளர்கள் வேல்முருகன், பா. வா. பக்ருதீன், சுகாதார அலுவலர் தலை விரிச்சான் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் காலை ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
பீமா நகர் ஹீபர் ரோடு பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும் 5 அடி முதல் 10 அடி வரை சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டது அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான இடங்களில் மேற்கூரைகள் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் கட்டுமானங்களும் இருந்தன. இவை அனைத்தும் இடித்து தள்ளப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால் சாலையின் அகலம் கூடியுள்ளதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேற்கண்ட பகுதிகளில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றம் மேற்கண்ட பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தியது. கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் திடீரென சாலையாகிரமிப்புகள் அகற்றப்பட்டது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேலும் சாலைகளை ஆக்கிரமித்தால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
- குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பவர்கிரிட் மூலம் உயர் மின்கோபுரங்கள் அமைத்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்ப டவில்லை.
பிரதி மாதம் முதல் வாரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும்.சாத்தூர், நெமிலி, சென்னச முத்திரம், காவேரிப்பாக்கம், பாகவெளி, உளியூர், சீக்கராஜபுரம், வடகால் கிராமங்களில் உள்ள ஏரி கால்வாய் தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேமராக்கள் பழுதாகி உள்ளன.அதனை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசா யிகள் முன்வைத்தனர்.
கூட்டத்தில், விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் சரவணன், வேளாண்மை துணை இயக்குனர் விஸ்வ நாதன், வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- முதுகுளத்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
- ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொந்தம்புலி கிராமத்திற்கு 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவித்து வந்தனர். சித்திரங்குடி-பொந்தம் புலி கிராமத்திற்கு இடையில் 150 மீட்டர் தூரம் மட்டுமே அரசு புறம்போக்கு நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை அகற்ற முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பரமக்குடி சப்-கலெக்டர்அப்தாப் ரசூல் தலைமையில் தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏனாதி ஊராட்சி பொந்தம்புலி கிராமத்திற்கு முதுகுளத்தூர்-கமுதி நெடுஞ்சாலையில் இருந்து சித்திரங்குடி கிராமத்தில் 150 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது. இதில் அதன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 'புறம்போக்கில் இருந்த புளிய மரத்தை ஏலம்விட சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏனாதி கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், சித்திரங்குடி வி.ஏ.ஓ. பழனி உள்பட வருவாய்த்துறையினர் இருந்தனர்.
- போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு தொடர்ந்து வாகன விபத்துகள் நடந்து வருகிறது.
- காங்கயம் நகராட்சி சார்பில் பலமுறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர்.
காங்கயம் :
கோவை-கரூர், ஈரோடு-பழனி, பெருந்துறை உள்ளிட்ட சாலைப் பகுதிகளை இணைக்கும் நகரமாக உள்ள காங்கயம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு தொடர்ந்து வாகன விபத்துகள் நடந்து வருகிறது.சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு காய்கறி மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், மேலும் கடைகளுக்கு முன் கூடுதலாக மேற்கூரை அமைக்கப்பட்டும், விற்பனைப்பொருட்களை சாலையில் வைத்தும் உள்ளனர்.இதனால் காங்கயம் நகரில் வாகன விபத்து அடிக்கடி நடைபெற்று வருகிறது.
காங்கயம் நகராட்சி சார்பில் பலமுறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கடந்த சில நாட்களாக நகராட்சி நிர்வாகம் சார்பில், வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.
இதையடுத்து நகர்மன்றத் தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில், நகராட்சிப் பணியாளர்கள் 25 பேர் சாலையோர ஆக்கிரமிப்பு–களை அகற்றினர்.
- தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது 49 வீடுகளும், 57 கடைகளும் அகற்றப்பட்டது.
தேனி:
தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் உள்ள தேனி பங்களாமேடு, குயவர்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து அரண்மனைப்புதூர் விலக்கு வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சீத்தராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது தேசிய நெடுஞ்சாலை இளநிலை பொறியாளர் தேவநாதன், தேனி தாசில்தார் சரவணபாபு, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் திருமுருகன், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது 49 வீடுகளும், 57 கடைகளும் அகற்றப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
- பிற பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று சிலர் குற்றம் சாட்டினர்.
- நோட்டீஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து பிரதான ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளியங்காடு நால் ரோடு பகுதியில் கல்லாங்காடு செல்லும் ரோட்டில், இருபுறமும் கடைகள் முன் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்காக, நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் பொக்லைன் வாகனத்துடன் அங்கு சென்றனர்.
கடைகள் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தெரிவித்தனர். இதனால், கடை உரிமையாளர்கள், பந்தல், ெஷட், போர்டுகள், பொருட்கள் ஆகியவற்றை அவர்களாகவே அகற்றிக் கொண்டனர்.
இந்நிலையில், நால்ரோடு பகுதியில் ஒரு ரோட்டில் மட்டும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதாகவும், பிற ரோடுகளில் அது குறித்து கண்டு கொள்ளாமல் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி, கட்டட உரிமையாளர்கள், கடைக்காரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து எந்த நோட்டீசும் வழங்கவில்லை. பிற பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று சிலர் குற்றம் சாட்டினர்.
அதிகாரிகள் தரப்பில், ஆக்கிரமிப்பு அகற்றுமாறு இரு முறை ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் உத்தரவு பெற்று, நோட்டீஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கோவிலை இடிக்க எதிர்ப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகளும் உள்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனை சாலையின் இருபக்கமும் கட்டிடங்கள் உள்ளன. நோயாளிகள் சாலையை கடக்கும் போது அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.
கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் சிரமப்பட்டு பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதன் அடிப்படையில் ரூ.13.½ கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதன் ஆரம்ப கட்ட பணி தொடங்கப்படுகிறது.
அதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் வரை சாலையை விரிவுபடுத்துவதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் ஓரம் உள்ள கடைகள் மற்றும் பயனியர் நிழல் கூடம் போன்றவற்றை அகற்றினர். சாலை ஓரம் இருந்த பழமையான நாகம்மன் கோவில் முன்பு உள்ள மண்டபம் மற்றும் கோவில் பூஜை சாமான்கள் வைக்கும் அறை போன்றவற்றை அகற்றினர்.
கோவிலின் கருவறை இடிக்க முற்பட்டபோது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலால் நெடுஞ்சாலை துறைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வாதிட்டனர்.
இன்ஸ்பெக்டர் காண்டீபன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கோவில் இடிக்கும் பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- திருப்பத்தூர் அருகே ஊரணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆ. தெக்கூர் கிராமத்தில் நகரத்தார்களால் கட்டப்பட்ட 120 ஆண்டு கால மீனாட்சி சுந்தரேஸ்வரரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் முன்பு 5 ஏக்கர் பரப்பளவில் ஊரணி இருந்தது. ஆனால் இந்த ஊரணியைச் சுற்றி வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமித்த தால் தண்ணீர் வரத்து பாதை அடைபட்டு பயன்பாடு இல்லாமல் போனது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டி 2 ஆண்டுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அனைத்து பகுதிகளையும் மீட்டெடுத்து ஊரணியை சீரமைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த 17-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் தலைமையில் ஊரணியின் மேற்குப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் விநியோகத்தை தடை செய்தனர்.
மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஊரணியை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் இருந்து வரும் சுமார் 47 குடியிருப்பு பகுதிகளின் உரிமை யாளர்களுக்கு மாற்று இடங்களில் 3 சென்ட் நிலம் வழங்கி, வரும் நாட்களில் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக ஆக்கிரமிப்பு களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளால் பொன்னமராவதி-திருப்பத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 22 மற்றும் 23- வது வார்டு சுமங்கலி சில்க்ஸ் பிரிவு சாலையிலிருந்து, பாப்பாபட்டி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையினை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
- சாலை குறுகிய அளவில் இருந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தன.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 22 மற்றும் 23- வது வார்டு சுமங்கலி சில்க்ஸ் பிரிவு சாலையிலிருந்து, பாப்பாபட்டி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையினை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலை குறுகிய அளவில் இருந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தன.
இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்து அப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது . இதனை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
- கலெக்டர் ஆய்வு
- ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் தாலுகா குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ் சாலையையொட்டி வடுகந்தாங்கல் உள்ளது. இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக ரூ.30 லட்சத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டி.எம்.கதிர் ஆனந்த் எம். பி. ஒதுக்கி உள்ளார்.
தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில் பஸ் நிலையம் அமைவதற்கான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை தாசில்தார் அ.கீதா, ஒன்றியக்குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல் பனா, பெ.மனோகரன், மேலாளர் பா.வேலு, துணை தாசில் தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் சரவணன், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி ஆகியோர் பார்வையிட்டனர்.
- போலீசார் பாது காப்புடன் நடந்தது
- சர்வீஸ் சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே புத் துக்கோவில் பகுதியில் கோவில் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட் டிடங்களை தேசிய நெடுஞ் சாலை துறையினர் பொக் லைன் எந்திரங்களை வைத்து நேற்று முன்தினம் அகற்றினர்.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக புத்துக்கோவில் பகு தியில் சென்னை-பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலையி லும், பெங்களூர்- சென்னை செல்லும் சர்வீஸ் சாலையி லும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற் றும் பணிகள் நடைபெற்றது.
இதில் 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற் றப்பட்டது. வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பழனி மற்றும் அம்பலூர் போலீசார் பாது காப்புடன் தொடர்ந்து ஆக் கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.