search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • ரோகித் சர்மா 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
    • 7-வது இடத்தில் களமிறங்கிய 3-வது இந்திய கேப்டன் என்ற தனித்துவமான பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய ஓப்பனிங் இடத்தை இஷான் கிஷானுக்கு கொடுத்து சுயநலமற்ற முடிவை எடுத்தார்.

    அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷான் தேவையான ரன்களை எடுத்த நிலையில் எதிர்ப்புறம் சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்டியா 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போதும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்கள் களமிறங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் தாக்கூரும் 1 ரன்னில் அவுட்டாகினார்.இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16* ரன்கள் எடுத்த நிலையில் ஒரு வழியாக 7-வது வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்து 12* ரன்களுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.

    இந்த போட்டியில் அணியின் நலனுக்காக இஷான் கிசன் போன்ற இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் ரோகித் சர்மா நடந்து கொண்டது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு 7-வது இடத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

    இந்த சுயநலமற்ற முடிவால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 7-வது இடத்தில் களமிறங்கிய 3-வது இந்திய கேப்டன் என்ற தனித்துவமான பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    இதற்கு முன் கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் அப்போதைய கேப்டன் கபில் தேவ் 7-வது இடத்தில் விளையாடினார். அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2007 உலக கோப்பையில் பெர்முடாவுக்கு எதிராக ராகுல் டிராவிட் 7-வது இடத்தில் களமிறங்கினார். அவர்களது வரிசையில் தற்போது ரோகித் சர்மாவும் இந்த போட்டியில் 7-வது களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    பார்படாஸ்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்தார்.

    வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேசியதாவது:

    அணி நிர்வாகம் முதலில் பந்து வீசி பெரிய இலக்கை பின்னால் துரத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மோசமாக மாறியது.

    வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என மூவருக்குமே ஆடுகளம் சாதகமாகதான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை இவ்வளவு குறைந்த ரன்களில் நாங்கள் சுருட்டுவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பல வீரர்கள் திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தோம்.

    114 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டியது என்பது எங்களுடைய பந்துவீச்சாளர்களின் சிறப்பாக செயல்பாட்டை காட்டியது. உலக கோப்பை தொடருக்கு முன்பு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என நினைத்தோம்.

    நான் என்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கினேன். அதன் பிறகு இப்போதுதான் அந்த இடத்தில் விளையாடினேன்.

    முகேஷ் குமார் முதல் போட்டியில் நன்றாகவே பந்து வீசினார். டெஸ்ட் போட்டியிலும் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். இசான் கிஷனுடைய பேட்டிங்கும் நல்ல முறையில் இருந்தது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்தான் என தெரிவித்தார்.

    • ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் போன்ற எத்தனையோ இளம் வீரர்கள் துருப்பு சீட்டுகளாக உள்ளனர்.
    • ஆசிய மற்றும் உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது கணிப்பது மிகவும் கடினமானது.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது.

    இந்தப் போட்டிகளில் இந்திய அணி நிலை குறித்து இலங்கை முன்னாள் பிரபல வேகப்பந்து வீரர் சமிந்தா வாஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிகளில் விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோரை மட்டும் இந்திய அணி நம்பி இருக்கவில்லை. பல இளம் வீரர்கள் அணியின் துருப்பு சீட்டுகளாக இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் போன்ற எத்தனையோ இளம் வீரர்கள் துருப்பு சீட்டுகளாக உள்ளனர்.

    ஜெய்ஷ்வால், சுப்மன்கில் போன்ற இளம் வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். இந்தியாவில் எத்தனையோ திறமைசாலிகள் உள்ளனர். எல்லோரும் போட்டி போடுகிறார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணி எப்போதுமே விராட்கோலி, ரோகித் சர்மாவை சார்ந்து இருக்காது என்று நான் நினைக்கிறேன். மற்ற திறமையானவர்களும் இருக்கிறார்கள். கோலி, ரோகித் அபாரமாக செயல்பட்டால் பெரும்பாலும் இந்தியாவே வெற்றி பெறும்.

    பும்ரா உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவரது சேவை பெற இந்திய அணி விரும்புகிறது. காயத்தில் இருந்து குணமடைந்த அவர் மீண்டும் நல்ல நிலைக்கு வருவது எளிதல்ல. பும்ரா முழு உடல்தகுதி பெற்றால் உலக கோப்பையில் இந்தியாவுக்கு பலன் கிடைக்கும்.

    ஆசிய மற்றும் உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது கணிப்பது மிகவும் கடினமானது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலையாக இருக்கும் அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. 50 ஓவர் போட்டிகள் அனைத்தும் 325 முதல் 350 ரன்களுக்கு செல்கிறது. எனவே எந்த அணி 320 முதல் 350 ரன்களை பெறுகிறதோ அவர்களால் வெற்றி பெற இயலும்.

    இவ்வாறு சமிந்தா வாஸ் கூறியுள்ளார்.

    • உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம்.
    • தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் பும்ரா குறித்து பேசி வருகிறோம்.

    பார்படாஸ்:

    ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று பார்படாஸில் தொடங்குகிறது.

    இந்நிலையில் பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம். அவர் மோசமான காயத்திலிருந்து மீண்டுள்ளார். மேலும் அணி இன்னும் அறிவிக்கப்படாததால் அவர் அயர்லாந்திற்கு செல்வாரா என்பது எனக்கு தெரியாது. அவர் விளையாடினால் அது நல்லது.

    உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம். ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் திரும்பும் போது போட்டி சார்ந்து சில விஷயங்கள் முக்கியம். அதை அவர் விஷயத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் இது குறித்து பேசி வருகிறோம். இப்போதைக்கு அவர் குறித்து வரும் தகவல் அனைத்தும் பாசிட்டிவாக உள்ளது.

    என ரோகித் கூறினார்.

    • ஜெயவர்தனே 29 முறை தொடர்ச்சியாக இரட்டை இலக்க ரன்னை கடந்திருந்தார்
    • ரோகித் சர்மா கடந்த 2021-ல் இருந்து ஒற்றையிலக்க ரன்னில் அவுட்டாகவில்லை

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 438 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    2-வது இன்னிங்சில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 80 ரன்களும், 2-வது இன்னிங்சில் 57 ரன்களும் சேர்த்தார்.

    இதன்மூலம் தொடர்ச்சியாக 30 இன்னிங்சில் இரட்டை இலக்க ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து இரட்டை இலக்க ரன்களுக்கு கீழ் அடித்தது கிடையாது.

    இதற்கு முன் இலங்கை வீரர் ஜெயவர்தனே 2001-02-ல் 29 இன்னிங்சில் இரட்டை இலக்க ரன்கள் அடித்திருந்தார்.

    1951-53-ல் லென் ஹட்டன் 25 முறையும், 1961-65-ல் ரோஹன் ரஹ்காய் 25 முறையும, ஜெயவர்தனே 2002-2004-ல் 24 முறையும், 2012-14-ல் டி வில்லியர்ஸ் 24 முறையும் தொடர்ச்சியாக இரட்டை இலக்க ரன்களை சேர்த்திருந்தனர்.

    • முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.
    • ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 18-ந்தேதி நடக்கிறது.

    இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்ட்யா, சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிக பனிச்சுமை காரணமாக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    அதே போல் சுப்மன் கில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது, "வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு பிறகு ஹர்த்திக் பாண்ட்யா எப்படி உணர்கிறார் என்பதை பொறுத்து அணி தேர்வு அமையும். உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டனாக ஹர்த்திக் இருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது" என்று தெரிவித்தன.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகன் விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது.

    இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜெய்ஸ்வாலுக்கு நல்ல திறமை இருக்கிறது, அவர் தயாராக இருக்கிறார் என்பதை கடந்த காலத்தில் நமக்குக் காட்டினார்.

    அவர் விவேகமாக பேட்டிங் செய்தார். போட்டியின் எந்த சமயத்திலும் அவர் அச்சம் அடையவில்லை. நாங்கள் நடத்திய அரட்டைகள் அவருக்கு, நீங்கள் இங்கு சொந்தமானவர் என்பதை நினைவூட்டுவதாக இருந்தது.

    பந்து வீச்சில் இது ஒரு சிறந்த முயற்சி. அவர்களை 150 ரன்களுக்கு வெளியேற்றுவது எங்களுக்கு சவாலாக அமைந்தது.

    பேட்டிங் கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ரன்கள் எடுப்பது எளிதானது அல்ல. நாங்கள் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்ய விரும்பினோம். எனவே 400 ரன்களுக்கு மேல் எடுத்தோம், அதன்பின் வெளியேறி நன்றாக பந்து வீசினோம்.

    அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக அஸ்வின் பந்துவீசியது மிகவும் சிறப்பு என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 171 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், விராட் கோலி ஜோடி 110 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய ரகானே 3 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்து 76 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்தியாவின் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா சதமடித்து அசத்தினர்.
    • முதல் விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 229 ரன்கள் சேர்த்தது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.

    இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் சதமடித்தார். அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார். ஆனால் 103 ரன்னில் அவுட்டானார்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து இறங்கிய விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வரை இந்தியா 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டில் சதமடித்தார்.
    • அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார்.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.

    இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

    அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார். ஆனால் 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் நாள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.

    இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

    • ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    • பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என இந்திய அணி கேப்டன் கூறினார்.

    டொமினிகா:

    இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று தொடங்குகிறது.

    இந்திய அணியில் புஜாராவின் இடத்தில் யார் பிளேயிங் லெவனில் இடம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அறிமுக வீரராகவும், தொடக்க வீரராகவும் களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இந்திய அணியின் 3-வது வரிசை வீரராக ஷுப்மன் கில் களமிறங்குவார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    ×