search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.
    • இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    நடந்து முடிந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் மக்கள் கொண்டாடினர். இந்த வெற்றிக்கு வீரர்களின் உழைப்பு காரணமாக இருந்தாலும் டிராவிட்டின் முயற்சிகள் பின்னணியில் மகத்தானவையாக பார்க்கப்படுகிறது.

    ஆனால், கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணிக்கு டிராவிட் தொடர்ந்து பயிற்சியளிப்பார் என்று யாரும் நம்பவில்லை. ஆனால், கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இருந்து வந்த ஒரு போன்தான் டிராவிட்டை மாற்றியுள்ளது.

    ரோஹித் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் டிராவிட்டை 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை இந்திய பயிற்சியாளராக தொடர எப்படி சமாதானப்படுத்தினார்கள் என்பதை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு, "நவம்பரில் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி, ரோஹித்" என்று டிராவிட் தெரிவித்து இருந்தார்.

    முன்னதாக, பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார்.

    இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி உள்ளார்.

    • சச்சினின் தீவிர ரசிகரான சுதிர்குமார் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    • இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    உடல் முழுவதும் இந்திய அணியில் மூவர்ண கொடியின் பெயிண்டை அடித்து கொண்டு நெஞ்சில் சச்சின் டெண்டுல்கர் என்று எழுதி கொண்டு, தேசிய கொடியை எந்தி செல்லும் சச்சினின் அதி தீவிர ரசிகர் சுதிர் குமார்.

    இவர் தொடக்கத்தில் நண்பர்களிடம் கடனை வாங்கியாவது கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றுவிடுவார். சில சமயம், காசு இல்லை என்றால் நடந்தோ, இல்லை யாரிடமாவது லிப்ட் கேட்டோ, மைதானத்துக்கு சென்று விடுவார்.

    தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஒரே மாதிரி தோற்றத்துடன் வந்ததை அடுத்து கிரிக்கெட் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலம் ஆனார். மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள், இவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் காசு கொடுக்க வேண்டும். இப்படி தான் வாழ்க்கையை ஓட்டினார்.

    சுதிர் குமார் சௌத்ரியின் அன்பை பார்த்த சச்சின் டெண்டுல்கரே, அவருக்கான டிக்கெட் செலவு மற்றும் போக்குவரத்து செலவை ஏற்று கொண்டார். பின்னர் அவரின் குடும்பத்துக்கும் உதவித் தொகையும் சச்சின் வழங்குகிறார். சச்சின் ஓய்வு பெற்ற பிறகும் அணி நிர்வாகமே இவருக்கான டிக்கெட்டை வழங்கி வருகிறது. வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று அங்குள்ள வீரர்களிடம் பேசும் அளவுக்கு இந்திய அணியில் செல்லப் பிள்ளையாக மாறினார் சுதிர்குமார் சௌத்ரி.

     

    இந்த நிலையில் சுதிர்குமார் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியை பார்க்க சென்றார். இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா அங்குள்ள கடற்கரையில் போட்டோஷீட் நடத்தினார். அப்போது உலகக் கோப்பையுடன் சுதிர்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் ரோகித் சர்மாவும் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • இதனை தொடர்ந்து கோலி, ரோகித், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.

    டி20 உலகக் கோப்பை 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த தொடரில் தோல்வியே இல்லாமல் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி எல்லா ஐசிசி கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான்.

    மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள்.

    இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

    • நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை.
    • தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக் கோப்பையை வாஙகியது, மைதானத்தில் உள்ள மண்ணை எடுத்து சாப்பிட்டது என உற்சாகத்தில் ரோகித் செய்து வரும் செயல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

     

    அந்த வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் மைதானத்தில் கோப்பையுடன் படுத்திருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, தற்போது நான் உள்ள மனநிலையை சிறந்த முறையில் இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. நிறைய வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால் நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. விரைவில் உங்களுடன் அதை பகிர்வேன்.

    ஆனால் இப்போதைக்கு என்னுடையதும் பில்லியன் கணக்கான மக்களுடையதுமான கனவு நினைவான இன்ப அதிர்ச்சியை கிரகிக்க முயற்சித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று அதிகாலை தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

     

    • மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது
    • டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறது

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. டி20 தொடர் அறிமுகமான 2007 ஆம் ஆண்டு முதல் தொடரில் டோனி தலைமையில் இந்திய அணி அதன்பின் நடந்த தொடர்களில் வெற்றிபெறவில்லை. தற்போது 17 வருடங்கள் களைத்து 2 வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளதை நாடே கொண்டாடி வருகிறது.

    இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த மோடி, தனது எக்ஸ் தளத்தில் டி20 ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தனியாக வாழ்த்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

     

    இந்நிலையில் ஜடேஜாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

    மோடி ஜடேஜாவுக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நீங்கள் ஆல் ரவுண்டராக தனித்துவமான முறையில் செயப்பட்டீர்கள். கிரிக்கெட் ரசிகர்கள் உங்களது ஸ்டிரோக் பிளே ஸ்டைலையும்,, அற்புதமான ஃபீல்டிங்கையும் விரும்புகிறார்கள். தற்போதும் கடந்த டி20 போட்டிகளிலும் உங்களின் வசீகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களின் பயணம் தொடர எனது வாழ்த்துகள் என்று எழுதியிருந்தார்.

    இந்நிலையில் 'டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு பெற்று விட்டார், அவரை பாராட்டி ஒரு டிவீட் எழுது' என CHAT GPT யிடம் கூறியதற்கு அச்சு அசலாக மோடியின் பதிவு போலவே வாக்கியம் பிசகாமல் CHAT GPT எழுதியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவின் டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.

    உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
    • 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    முன்னதாக டோனி தலை மையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளார். கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    டோனி 3 ஐ.சி.சி. கோப்பை யையும் (2007 இருபது ஓவர் உலக கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி), கபில்தேவ் (1983 ஒருநாள் போட்டி உலக கோப்பை), ரோகித் சர்மா (2024 இருபது ஓவர் உலக கோப்பை தலா ஒரு ஐ.சி.சி. கோப்பையை யும் பெற்றுக் கொடுத்தனர்.

    சாம்பியன் பட்டம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு தெண் டுல்கர், டோனி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பிரபலமான கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஆனால் அந்த மாதிரி வந்து கோப்பை வாங்குங்கள் என கூறியது சக வீரரான குல்தீப் யாதவ். இந்திய வீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று பதக்கங்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது ரோகித் சர்மாவிடம் குல்தீப், மெஸ்ஸி ஸ்டைலில் கோப்பையை பெறுங்கள் என கூறியதும் அதற்கு ரோகித் சரி என்பது போல தலையை அசைப்பது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

    • இந்திய கிரிக்கெட்டுகாக அவர் ஏராளமானவற்றை செய்துள்ளார்
    • இந்த வெற்றி பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையிலான உறவை நாங்கள் வலுவாக பின்பற்றியதற்கான முடிவாகும்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

    மேலும் 2007-ஆம் ஆண்டு டோனியின் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதுக்கு பின்னர் தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது மீண்டும் 2-வது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்த வெற்றியை நாங்கள் ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    கடந்த 20 - 25 வருடங்களாக அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு அபாரமானது. இந்த ஒரே ஒரு கோப்பை மட்டுமே அவருடைய அலமாரியில் தவறி இருந்ததாக நான் கருதுகிறேன். எனவே அவர் கோப்பையை வென்றதற்காக எங்கள் அனைவரது சார்பாக மகிழ்ச்சியடைகிறேன். அவருக்காக நாங்கள் இதை செய்துள்ளோம். தற்போது அவர் எந்தளவுக்கு பெருமையாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.

    இந்த வெற்றி பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையிலான உறவை நாங்கள் வலுவாக பின்பற்றியதற்கான முடிவாகும். இதை நாங்கள் ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுகாக அவர் ஏராளமானவற்றை செய்துள்ளார் என்று கூறினார்.

    முன்னதாக எனக்காக வெல்லாமல் நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஃபைனலுக்கு முன்பாக ட்ராவிட் சொன்னது குறிப்பிடத்தக்கது.

    • நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார் என அவரது ஓய்வு குறித்து டிராவிட் கூறினார்.
    • இந்த போட்டியுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வை அறிவித்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

    இந்நிலையில் என்னை பொறுத்தவரை நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார் என ரோகித் ஓய்வு அறிவித்தது குறித்து ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிராவிட் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அவர் எனக்கு கொடுத்த மரியாதை, அணியின் மீதான அக்கறை, அர்பணிப்பு, எப்போதும் பின்வாங்காமல் இருப்பது, அவரின் ஆற்றல் ஆகியவைதான் என்னை மிகவும் ஈர்த்தது. என்னை பொறுத்தவரை நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார்.

    • டி20 உலகக் கோப்பையை 100% வெற்றி பெற்ற முதல் கேப்டன்.
    • அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி.

    டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதே போன்று இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியும் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துயுள்ளது. இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி படைத்த சாதனைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    • ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை விளையாடி உள்ளார். 159 டி20 போட்டிகள். இவருக்கு அடுத்த இடத்தில் பால் ஸ்டிர்லிங் 145 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
    • நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இவர் டி20 போட்டிகளில் 4231 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 4188 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கிறார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கிளென் மேக்ஸ்வெல்-உடன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 205 சிக்சர்களை விளாசிய ரோகித், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


    • டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். நவம்பர் 2022 மாதம் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டினார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை விராட் கோலி பாபர் அசாமுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 39 அரைசதங்களை அடித்துள்ளனர்.
    • டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
    • ஆட்ட நாயகன் போன்றே தொடர் நாயகன் விருதுகளை அதிகம் வென்றவர்கள் பட்டியலிலும் விராட் கோலி தான் முதலிடம் பிடித்துள்ளார். இவரை இதுவரை 7 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி. 
    ×