search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohti sharma"

    • இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்திய அணியில் கேப்டன் ரோகித் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து 53 ரன்களை குவித்து இருந்தார்.

    கொழும்பு :

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து 53 ரன்களை குவித்து இருந்தார்.

    போட்டி முடிந்த நிலையில் ரசிகர் ஒருவருடன் சைகையில் பேசி அவரை மகிழ்வித்தார். இந்த சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தப் போட்டிக்கு பின் மைதானத்தில் பிற இந்திய வீரர்களுடன் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோகித், ரசிகர் ஒருவர் தேசியக் கொடியுடன் நிற்பதை பார்த்தார். அந்த ரசிகர் தேசியக் கோடியை கீழே இறக்கி வைத்திருந்தார். இந்தியா வெற்றி பெற்றதால் தேசியக் கொடியை மேலே தூக்கி நன்றாக ஆட்டுமாறு தன் கையில் வைத்திருந்த பேட் மூலமாக அவருக்கு சைகை காட்டினார்.

    இதை எதிர்பாராத அந்த ரசிகர், ரோகித் தன்னுடன் சைகையில் பேசிய மகிழ்ச்சியோடு, தேசியக் கொடியை மேலே தூக்கி ஆட்டினார். அதைக் கண்டு ரோகித்தும் மகிழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. 


    ×