என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandalwood"

    • குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தீபாவளியை யொட்டி தஞ்சை மாநகரில் சேர்ந்த குப்பைகளை அதிகாலை முதலே தூய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்ப டையில் செயல்பட்டு குப்பை களை அகற்றி நகரை தூய்மை யாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.

    இதனை யொட்டி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி கவுரவித்து ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை இணைந்து தஞ்சை மாநகராட்சி 12-வது பிரிவை சேர்ந்த காமராஜர் நகர், ராஜராஜன் நகர், மாதவ்ராவ் நகர், உழவர் சந்தை, முனியாண்டவர் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி மாதவ்ராவ் நகரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி கவுரவித்தனர்.

    பின்னர், இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன் பேசுகையில், தெருக்களை சுத்தமாக வைத்துக்கொண்டு நோய் தொற்றிலிருந்து காப்பாற்று வதால் பொதுமக்களில் ஒருவராக நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருப்பதாகவும் அதுவும் விழா காலங்களில் சேரும் அதிகப்படியான குப்பைகளை விரைந்து அகற்றி நகரை அழகாக்குவதில் தூய்மை பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பேசுகையில், பண்டிகை காலத்தில் டன் கணக்கில் சேர்ந்த குப்பைகளை அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஒற்றுமையுடன் செயல்பட்டு விரைந்து அகற்றி நகரை தூய்மையாக்கியதை வெகுவாக பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு சந்தனம் பூசப்பட்டது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹாவில் 721-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு புனித அம்மா பள்ளிவாசல் சென்று வலம் வந்து, பின் 40 அடி உயரமுள்ள சந்தனக்கூடு ஜருக கண்ணாடியால் ஜோடிக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு முதன்மை தர்கா பாரம்பரிய அறங்கா வலர் பாக்கர் அலி தலைமை யில்தர்காவை சுற்றி வலம் வந்தது.

    தொடர்ந்து, இன்று சந்தனக்கூடு தர்காவலம் சுற்றி அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு புனித சந்தனம் பூசப்பட்டது.

    இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை ஒன்றி யத்துக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மார்க்களுக்கும் நேற்று அடைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் திருவாரூர் மாவட்ட போலீசார் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    விழாவையொட்டி, வருகிற 8-ந் தேதி இரவு மகரிபு தொழுகைக்கு பின் புனித திருக்குர்ஆன் ஷரீஃப் ஓதி துவா செய்து இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

    • கமுதி அருகே சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • இதில் பாரம்பரிய நடனம் ஆடி இளைஞர்கள் அசத்தினர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மகான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு பள்ளி வாசல் தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சந்தனக்கூடு நகரின் முக்கிய வீதிகள் வழி யாக வந்தது. அப்போது இளைஞர்கள், பெரிய வர்கள், சிறுவர்கள் சந்தன கூடு விழாவிற்கு ஒன்றுகூடி மேள சத்தம் மற்றும் இறைபாடலுக்கு ஏற்றவாறு தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி ஊர்வலமாக சென்றனர்.

    களிகம்பு நடனத்தில் முத்தாய்ப்பாக வட்டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில் கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும், களிகம்பு நடனமாடி சந்தனக்கூட்டை வரவேற்று சென்றனர்.

    • சந்தன மரங்களை சிறு, சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.
    • பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466- வது ஆண்டு கந்துாரி விழா கடந்த 24- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வரும் 3-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. கந்தூரி விழாவிற்காக தமிழக அரசு சார்பில் 45 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டளை அரைத்து வருகின்றனர்.

    நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த யாத்திரிகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன மரங்களை சிறு சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.

    சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊர வைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் வரும் 2- ம் தேதி ஒப்படைக்கப்படும்.

    தொடர்ந்து நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 3 -ம் தேதி அதிகாலை நாகூர் வந்தடையும்.

    பின் தர்கா தலைமாட்டுவாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்.
    • சந்தனம், குங்குமமிட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டார ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சூலமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை திமுக பேரூர் செயலாளர் வக்கீல் துளசி அய்யா, அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணைத் தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லதா வரவேற்று பேசினார். இந்த வளைகாப்பு விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் மாலை அணிவித்து தட்டில் பழங்கள் இனிப்பு வைத்து சீர் வழங்கப்பட்டது அனைவருக்கும் இனிப்புடன் கூடிய ஐந்து வகை சித்ரானங்கள் உணவு விருந்து வழங்கப்பட்டது.

    விழாவில் அய்யம்பேட்டை பேரூராட்சி அதிகாரி ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு காமாட்சியம்மன் கோயிலில் தை முதல் வெள்ளியை முன்னிட்டு பூச்சொரிதல் எனப்படும் புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது.

    விஸ்கர்ம சமுதாய மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று புஷ்பாஞ்சலி விழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதைப்போல் நேற்று விழாவையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, பக்தர்கள் எடுத்துவந்த மலர்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்று. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் தக்கர் கோவிந்தராஜன், சாமிநாதன், தலைவர் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ரமேஷ், குருக்கள் இசைசுந்தர் உள்ளிட்ட விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    • 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விக்கிரவாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பனையபுரம் சோதனை சாவடி அருகே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அவர்களின் உத்தரவின் படி விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு துணை சூப்பிரண்டுபழனி தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையி லான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

     அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் சுமார் 7 கிலோ எடையுளள சந்தர மரக் கட்டைகள் துண்டு துண்டாக இருந்தது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், புதுவை மாநிலம் சோரப்பட்டு மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பரமணி (வயது 52) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த பையை எடுத்துச் சென்று பனையபுரம் பெட்ரோல் பங்க் அருகில் நிற்பவர்களிடம் அளித்து வந்தால் கூலி தருவதாக ஒருவர் கூறியதும், அதனால் இந்த பையை சுப்பரமணி எடுத்து வந்ததும் போலீ சாருக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து புதுவையில் இருந்து சுமார் 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.

    மேலும், சுப்பரமணியிடம் சந்தனகட்டைகளை கொடுத்து அனுப்பியவர் யார்?, இவர் அதனை கொடுக்க வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில், வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்ட ப்பட்டது.

    திரளான பக்தர்கள் வந்திருந்து, சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்த ர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    • ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

    கீழக்கரை

    ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற மே 21-ந் தேதி மாலை மவுலீதுடன் தொடங்குகிறது. மே 31-ந் தேதி மாலை கொடியேற்றப்படுகிறது. இதைதொடர்ந்து, ஜூன் 12-ந் தேதி மாலை துவங்கும் சந்தனக்கூடு திருவிழா, ஜூன் 13 அதிகாலை மக்பராவில் சந்தனம் பூசப்படுகிறது.

    இந்த நிலையில், சந்தனக்கூடு திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. கோபு தலைமையில் நடந்தது. கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மே 31 முதல் ஜூன் 13 வரை முக்கிய இடங்களில் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ஏர்வாடி நகர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் பேண வேண்டும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறின்றி வாகனங்கள் வந்து செல்ல வேண்டும், கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

    சந்தனக்கூடு ஊர்வலத்தில் சமுதாயம் சார்ந்த கொடிகள் எடுத்து வரக்கூடாது, மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு தர்ஹா கமிட்டி உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முகமது பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகவேல், ஜோதி மாணிக்கம், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

    • சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.
    • சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் உலகப் பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுல்லா அடக்கமாகி உள்ளார். இந்த தர்காவில் வருடந்தோறும் உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த வருடம் 849-ம் ஆண்டு உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவின் முதல் நிகழ்ச்சி மகரீபு தொழுகைக்கு பின் மவ்லீது (புகழ் மாலை) ஓதப்பட்டு நேற்று தொடங்கியது. இதை யொட்டி தர்கா அக்தார்கள் முன்னிலையில் ராமநாத புரம் மாவட்ட டவுன் ஹாஜியார் சலாஹூதீன் ஆலிம் தலைமையில் புகழ்மாலை மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தொடர்ந்து தர்கா மண்டபத்தில் இருந்து ஹக்தார்களால் மவ்லீது ஷரீப் எனும் புகழ்மாலை 23 நாட்களுக்கு ஓதப்படுகி றது. அதனை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி 13-ந் தேதி அதிகாலை வரை நடக்கிறது. மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுக்க, நாட்டியக் குதிரைகள் நடன மாட, சந்தனக்கூடு பவனி வருகிறது. அனைத்து சமுதாயத்தினரின் அணி வகுப்புடன் புனித மக்பரா வில் சந்தனம் பூசப்படும்.

    19-ந் தேதி நிறைவு நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப்பின் கொடி யிறக்கம் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு விநியோகிக்கப்பட்டு 849-வது உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர். யாத்ரீகர்க ளுக்கான சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    • பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் அடங்கப் பட்டிருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 849-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நாளை (12-ந்தேதி) நடை பெறுவதையொட்டி, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏர்வாடிக்கு வரத் துவங்கினர். இதனால் தர்கா பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக்கூடு திருவிழா கடந்த 21-ந் தேதி மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தர்காவில் மின் அலங்காரம் செய்யும் பணி மதுரை மதினா லைட் நிறுவனத்தினர் செய்து வரு கின்றனர்.

    நாளை மாலை 4.30 மணிக்கு யானை. குதிரையு டன் ஊர்வலமாக சென்று தர்்காவில் இருந்து போர்வை எடுக்கும் விழா நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும், தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த் தனையும், தொடர்ந்து தர்கா வில் சந்தனம் பூசும் நிகழ்சசி நடைபெறும்.

    மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்கா வளாகத்தில் மருத்துவக்குழுவினர் முகா மிட்டு தயார் நிலையில் உள்ளனர். தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற் பாடுகள் செய்யப் பட்டு ள்ளது. தர்கா வளாகத்தில் கூடுதலாக சிறப்பு கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. குப்பைகள் உடனுக்குடன் அகற்ற 50-க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளுர் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகை யில் 24-ந்தேதி (சனிக் கிழமை) வேலை நாளாக அறிவிக்கப் படுவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித் துள்ளார்.

    எஸ்.பி., தங்கதுரை உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். தர்கா நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான் லெவ்வை, செயலாளர் சிராஜ்தீன், துணைத் தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏற் பாடுகளை செய்து வருகிறார்கள்.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் அடங்கப்பட்டி ருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 849-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா இன்று (12-ந்தேதி) நடை பெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு யானை, குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் விழா நடைபெறுகிறது.

    நாளை அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஏர்வாடி தர்கா பகுதி முழு வதும் பக்தர்கள் கூட்டத்தால் களை கட்டி யுள்ளது. மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்கா விற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. தர்கா வளாகத்தில் கூடுத லாக சிறப்பு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப் படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். சீருடை அணியாத போலீ சார், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

    வருகிற 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியு டன் அன்னதானம் வழங்கப பட்டு விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்துள்ளனர்.

    ×