என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sarabeshwarar"
ஓம் சகல நாயகி போற்றி
ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி
ஓம் தர்ம பரிபாலதையே போற்றி
ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி
ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி
ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி
ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி
ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி
ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி
ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி
ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி
ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி
ஓம் ஹரத்துள்ளாயே போற்றி
ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி
ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி
ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி
ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி
ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி
ஓம் சிங்க முகமுடையவளே போற்றி
ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி
ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி
ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி
ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி
ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி
ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி
ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி
ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி
ஓம் கர்ணகோர ரூபமே போற்றி
ஓம் ஞானவழி எழிலே போற்றி
ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி
ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி
ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி
ஓம் வாடும் பயிர் காப்பாயே போற்றி
ஓம் வானம் பூமி காப்பாயே போற்றி
ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி
ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி
ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி
ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி
ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி
ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி
ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி
ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி
ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி
ஓம் சித்தி வழி சித்தியே போற்றி
ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி
ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி
ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி
ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி
ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி
ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி
ஓம் தயை சுவை மோகனமே போற்றி
ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி
ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி
ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி
ஓம் பத்ரகாளி வடிவே போற்றி
ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி
ஓம் சூலினியின் துணையே போற்றி
ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி
ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி
ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி
ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி
ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி
ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி
ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி
ஓம் மாவீர கோகிலமே போற்றி
ஓம் சர்வபாப விநாசனி போற்றி
ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி
ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி
ஓம் உகந்தது தருவாயே போற்றி
ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி
ஓம் கணித்தது புகுவாயே போற்றி
ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி
ஓம் ஆபத் சகாயமே போற்றி
ஓம் ஆகாய வெளிவழியே போற்றி
ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி
ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி
ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி
ஓம் பார்வதி மய சக்தியே போற்றி
ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி
ஓம் பிரணவரூப ஒலியே போற்றி
ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி
ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி
ஓம் புவன யோக வீரமே போற்றி
ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி
ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி
ஓம் புத பேத நாசினி போற்றி
ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி
ஓம் வனநேச பாரிதியே போற்றி
ஓம் குண ரூப சாரதியே போற்றி
ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி
ஓம் டமருகம் தரித்தாய் போற்றி
ஓம் சூலமும் கொண்டாய் போற்றி
ஓம் பக்தரின் பிரியமே போற்றி
ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி
ஓம் ராஜராஜ தேவியே போற்றி
ஓம் கங்காதர காருண்யே போற்றி
ஓம் வித்தைக் கதிபதியே போற்றி
ஓம் வித்வ மூல சித்தமே போற்றி
ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி
ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி
ஓம் காமதேனு மடியே போற்றி
ஓம் காற்று நீர் நேருப்பே போற்றி
ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி
ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி
ஓம் மகாபல மாசக்தியே போற்றி
ஓம் மகா பைரவி தேவியே போற்றி
ஓம் நலம் தரும் நாயகியே போற்றி
ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி போற்றி போற்றி
- மேலும் பிரத்தியங்கரா தேவியை தரிசித்தால் பில்லி, சூனியம், ஏவல் அண்டாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
- திருமணம் தள்ளி போகும் ஆண்கள், பெண்கள் கோவிலில் மஞ்சள், குங்குமம் வைத்து அபிஷேகம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.
புதுவை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கோவில்களில் ஒன்றாக பிரத்தியங்கரா தேவி கோவிலும் உள்ளது.
புதுவை நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி காட்டு பகுதியில் இந்த கோவில் அமைந்து உள்ளது.
இங்கு 72 அடி உயரம் உள்ள பிரமாண்டமான பிரத்தியங்கரா தேவி சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் அருகில் பூமியின் பாதாள அறையில் கோவில் அமைந்துள்ளது.
கோவில் நுழைவு வாயில் சிங்கத்தின் வாய்ப்போல அமைக்கப்பட்டுள்ளது.
அதன் வழியாக படியில் இறங்கி சென்று பாதாள அறையில் உள்ள சாமியை தரிசிக்க வேண்டும். பிரத்தியங்கரா தேவி கருவறை விமானம் பூர்ணமேடு வடிவில் அமைந்துள்ளது.
மயான பூமியை விரும்பும் பிரத்தியங்கரா தேவியின் கோவிலை சுற்றி 5 இடங்களில் மயான பூமி அமைந்துள்ளது.
கோவிலை வலம் வந்தால் ஆகம சாஸ்திரப்படி முதலில் பிரளயவிநாயகர் சன்னதி உள்ளது. அதை தொடர்ந்து இந்திரன், அக்னி, வாயு, வருணன், மேதா தட்சிணாமூர்த்தி, ஈசான்ய பகவான், துர்க்கை, வாஸ்து, புருஷன், யமதர்மராஜன் போன்ற பரிவார தேவதைகளின் சன்னதிகளும் சாஸ்திரப்படி அமைந்துள்ளன.
கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். புதுவை, தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால பூஜைகள் நடக்கிறது. பவுர்ணமி கழித்து வரும் தேய்பிறை அஷ்டமியில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பிரத்தியங்கரா யாகம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு வேண்டும் வரங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டால் 64 திருஷ்டிகள் நிவர்த்தியாகும்.
மேலும் பிரத்தியங்கரா தேவியை தரிசித்தால் பில்லி, சூனியம், ஏவல் அண்டாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
திருமணம் தள்ளி போகும் ஆண்கள், பெண்கள் கோவிலில் மஞ்சள், குங்குமம் வைத்து அபிஷேகம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.
வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள் ஆடி மாதம் வெள்ளிக் கிழமை பால்குடம், தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் வழிபாடு செய்கின்றனர்.
- பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது.
- அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும்.
பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கரா தேவி.
இவள் பத்ரகாளியின் சொரூபம்.
பிரத்யங்கரா தேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கரா, பிராம்பி பிரத்யங்கரா, ருத்திர பிரத்யங்கரா, உக்கிர பிரத்யங்கரா, அதர்வண பிரத்யங்கரா,பிராம்மி பிரத்யங்கரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள்.
கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர்.
இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவரகளாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர்.
தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லஷ்மி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர்.
உக்கிர தெய்வமாக காணப்பட்டாளும் இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
இவளது மூல மந்திரத்தை ஜெபித்து துவங்கி இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும்.
பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது.
அனைத்து தோஷங்களும் விலகி ஓடும்.
நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும்.
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் பிரீத்தியான மிளகாயுடன் தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும்.
உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற காரமான பொருட்கள் மிகவும் பிடித்தமானது.
- இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவ பெருமான் சரபேஸ்வரராக உருவெடுத்தார்.
- சரபம் பாதி பறவை உருவத்தையும், பாதி காளி உருவத்தையும் கொண்ட பிரம்மாண்ட பறவை.
ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னரும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை.
இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவ பெருமான் சரபேஸ்வரராக உருவெடுத்தார்.
சரபம் பாதி பறவை உருவத்தையும், பாதி காளி உருவத்தையும் கொண்ட பிரம்மாண்ட பறவை.
கூரிய நகங்களையும், பற்களையும் கொண்டது. சரபரும், நரசிம்மமும் சண்டையிட்டனர்.
நீண்ட நாட்கள் நீடித்தத சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்யங்காரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.
நரசிம்மத்தின் மூர்க்க குணமாக இருந்த கண்ட பெருண்டத்தை தன் வாயிலிட்டு விழுங்கினாள் தேவி.
நரசிம்மர் சாந்தமானார். தான் சிவ பெருமானுடன் சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18 ஸ்லோகங்களால் பாடினார்.
இந்த 18 ஸ்லோகங்களே சரபேஸ்வரரின் அஷ்டோத்திர நாமாக்கள்.
- அன்னைக்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனையும் கிடையாது.
- ஆண்டுக்கு ஒரு நாள் தை மாதம், முதல் தினத்தன்று அன்னைக்குப் புனுகு தைலம் சாத்தப்படுகிறது.
அன்னையின் சந்நிதி அமைந்திருக்கும் இடமே யாகபூமி என்பதால் இங்கே யாகம் செய்தால் யார் யாருக்கு என்ன வேண்டுதல்களோ, அவை நியாயமான வேண்டுதல்கள் எனில் அனைத்தும் நிறைவேறுகின்றன.
மாந்திரீகத்தின் துணைகொண்டு எதிரிகளால் ஏவி விடப்படும் பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, ரணம், ரோகம் ஆகிய அனைத்தும் இங்கே யாகம் செய்வதால் நிவர்த்தி ஆகின்றன.
மேலும் வீட்டில் ஏற்படும் அனைத்து திருஷ்டி தோஷங்களும் கழிகின்றன.
யாகத்தின் போது அன்னம், நெய் மற்றும் அனைத்து திரவியங்களுடன் புஷ்பங்களும் பழங்களும் யாகத்தீக்கு ஆகுதியாக அளிக்கப்படுகின்றன.
மாந்திரீகத்தின் காரணமாக ஏற்படும் உபாதைகள் நீங்குவதற்காக மிளகாய் வற்றலும் யாகத் தீயில் ஆகுதியாக அளிக்கப்படுகிறது.
மிளகாய் எவ்வளவு சேர்த்தாலும் சிறிதளவு காரம் கூட வெளிபடுவதில்லை. நெடியும் வருவதில்லை என்பது இன்று வரை இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஆச்சரியம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிகும்பலா யாகம், பிற்பகல் இரண்டு மணிக்கு நிறைவு பெறுகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து யாகம் செய்கிறார்கள்.
யாகம் முடிந்தவுடன், தயிர் சாதம் அன்னதானமாக அளிக்கப்படுகிறது. சுமார் இருபதாயிரம் பேர் இந்த அன்னத்தை அன்னையின் அருட்பிரசாதமாக ஏற்று, உண்டு மகிழ்கிறார்கள்.
மகா பிரத்தியங்கிராதேவி. இரண்டு ஆள் உயரத்துக்குப் பிரமாண்டமான திருஉருவம். 4 சிம்மங்கள் பூட்டிய ரதத்தில், அமர்ந்த நிலையில் 18 திருக்கரங்களுடன் இத்தலத்தில் காட்சி அளிக்கிறாள்.
அன்னைக்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனையும் கிடையாது.
ஆண்டுக்கு ஒரு நாள் தை மாதம், முதல் தினத்தன்று அன்னைக்குப் புனுகு தைலம் சாத்தப்படுகிறது.
சிம்ம முகம் கொண்டு, 18 கரங்களிலும் பல வகை ஆயுதங்கள் ஏந்திப் பயங்கரமாகக் காட்சி தரும் அன்னையின் எதிரில் நின்றால் நம்மை அறியாமல் உடல் சிலிர்க்கிறது.
எதிரிகளை அழிக்கத்தானே அன்னை இந்த திருக்கோலம் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் எழுந்தவுடன் அன்னையின் முகம் அன்பு வடிவமாக நமக்குத் தோன்றுகிறது.
- புலிபாணி சித்தர் அழகாக தமிழில் இந்த தேவியை பாடல்களில் மந்திரத்தில் சொல்லி உள்ளார்.
- சனிபகவானின் குமாரர் குளகன் இந்த தேவியை வழிபட்டு உள்ளான்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், அய்யாவாடி (ஐவர்பாடி) என்ற கிராமத்தில் ஸ்ரீ அதர்வண பத்திரகாளி, பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது.
இக்கோவில் இந்தியாவில் தமிழகத்தில் இங்கு மட்டும்தான் அமைந்துள்ளது.
அம்பிகை சிம்ம முகத்தோடும் 18 திருக் கரங்களோடும் 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் லட்சுமி சரஸ்வதியோடு காட்சி தருகிறாள்.
ஸ்ரீ பிரித்தியங்கிரா தேவி ஆங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் என்ற மகரிஷிகள் உபாசன மூர்த்தியாக பூஜித்து 20 அக்ஷரம் கொண்ட மந்திரத்தை ஜபித்து அவர்கள் பெயரைக் கொண்டு இந்த தேவி விளங்குகிறாள்.
ஸ்ரீமகா பிரத்தியங்கிரா தேவி சரபேஸ்வரருடைய நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவள்.
நரசிம்மம் என்ற கண்ட பேருண்டத்தை அடக்கவே அவதரித்தாள் அவள்.
ஆயிரம் முகங்கள், 2 ஆயிரம் கைகள், சிவப்பேறிய மூன்று கண்கள், கரிய நிறம் மிகப் பருத்த சரீரம், பெருங்கழுத்து நீலநிற ஆடை, கபாலமாலை, பயங்கரமான புலி நகம் போன்ற கைகளோடு அவதரித்து கண்ட பேருண்டம் என்ற நரசிம்மத்தை யுத்தம்செய்து சாப்பிட்டு விட்டாள்.
அவளே உக்ரபிரத்தியங்கிரா தேவி. அந்த தேவி சாந்தம் அடைய சரபரும், தேவர்களும், ரிஷிகளும் எல்லோரும் துதித்தனர். அவள் விஸ்வரூபம் அடங்கி ஸ்ரீமகா பிரத்தியங்கிரா தேவியாக காட்சி தந்தாள்.
இந்த தேவியை சித்தர்கள், அகத்தியர், பஞ்சபாண்டவர்கள், ராமர், லட்சுமணன், இந்திரஜித் (மேகநாதன்), இவர்கள் பூஜித்துள்ளனர்.
இந்திரஜித் ராமரோடு யுத்தம் செய்து தோற்றுபோய் இவ்விடத்தில் அம்பிகையை வழிபாடு செய்தான். அவன் மாயாவி என்பதால் எட்டுத்திக்கும் மாசான பூமியும் பூத பிரேதங்களும் வைத்து நிகும்பலா யாகம் செய்ய விபீசனர் ராமரிடம் சென்று இந்திரஜித்தை காணவில்லை.
அவன் யாகம் செய்து முடித்துவிட்டால் அவனை ஜெயிக்க யாராலும் முடியாது என்று சொல்ல ராமர் இவ்விடம் வந்து அம்பிகையை பிரார்த்தித்தார்.
அம்பிகை ஸ்ரீராமருக்கு அனுக்கிரகம் செய்துவிட்டு மறைந்து விட்டாள். மேகநாதன் யாகம் செய்ய முடியாமல் பல இடம் தேடி அம்பிகையை காணாமல் யுத்தத்தில் உயிர் பிரியும் தருவாயில் அம்பிகையை பிரார்த்தனை செய்தான்.
அம்பிகை காட்சி தந்து தர்மமே வெல்லும் என்று சொல்ல, எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று பிரார்த்தித்தான். வேண்டும்வரம் தருகிறேன் என்று சொல்ல மரண, ரிபு, விஷ, வியாதி தாரித்திரிய நாசி நீம் என்ற வரத்தை பெற்று அம்பிகை திருவடியை அடைந்தார்.
இந்திரஜித் வரம் பெற்ற தலம் என்றும் புராணம் கூறுகிறது. அவன் வழிபட்ட தலம் ஆதலால் இன்றும் எட்டுதிக்கில் மயான பூமியும் ஒரே ஆலமரத்தில் 5 விதமான இலைகளை கொண்ட அதிச தலவிருட்சமும் சிம்மமுக காளியையும் இன்று காணலாம்.
பஞ்சபாண்டவர் பூஜித்தபடியால் ஐவர்பாடி என்ற நாமம் சம்மந்தரால் திருக்கோவையில் பாடி நான்கும் என்ற பதிகத்தோடு காரணப் பெயர் உள்ளது.
இந்த தேவியை வழிபாடு செய்தால் பிறரால் ஏவப்படும் ஆபிசார தோஷம், பில்லி சூணியம், ஏவல், வைப்பு, ரணம் ரோஹம் மிருத்தியுபயம் 64 விதமான சாபங்கள், மாதுருசாபம், பிதுர்சாபம், நர, மிருசு பசு, பட்சி இவர்களால் ஏற்படும் சாபங்களும் நிவர்த்தி ஆகும்.
இந்த தேவியை பற்றி ருக்வேதத்தில் 48 பஞ்சாதிகள் பெருமைப் படுத்துகிறது. இவளுக்கு மேல்எந்த மந்திரமும் தெய்வமும் இல்லை என்று அதர்வண வேதம் கூறுகிறது.
தேவி, தேவிமகாதேவி, மமசத்ருன், விநாசய என்றும் குஞ்சிதாங்கிரியில் உமாபதி சிவம் என்றும் அழகாக சொல்லியுள்ளார்கள்.
பிரத்தியங்கிரா தேவி பற்றி பல விஷயங்கள் பெரியோர்களும், மகான்களும் கூறுவார்கள். 9 விதமாக பிரத்தியங்கிரா அவதரித்து சரப சக்தியாக கூறுவார்கள்.
பால பிரத்தியங்கிரா, பிராம்பி பிரத்தியங்கிரா ருத்ர பிரத்தியங்கிரா, உங்கிர பிரத்தியங்கிரா, விபரீத பிரத்தியங்கிரா, லம்பிய பிரத்தியங்கிரா, அதர்வண பிரத்தியங்கிரா, சிம்ம முக காளி, மகா பிரத்தியங்கிரா என்று அவர்களை கூறுவார்கள்.
புலிபாணி சித்தர் அழகாக தமிழில் இந்த தேவியை பாடல்களில் மந்திரத்தில் சொல்லி உள்ளார். பிரபஞ்ச ஸார ஸங்ர ஹித்தில்
பிரத்தியங்கிரா த்யானசிலே ந சூர்யாத் திவேஷ மாத்மனி என்ற பழமொழியால் இத்தேவியை யார் வழிபடுகிறார்களோ அவரிடம் துவேஷம் கொள்ளக் கூடாது என்றும் உள்ளது.
சனிபகவானின் குமாரர் குளகன் இந்த தேவியை வழிபட்டு உள்ளான்.
ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்கள் 3, 6, 8, 12ல் உள்ள திசைகள் மாந்தி குளிகன் மற்றும் நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகி பல கோடி செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழவும் நோயற்ற வாழ்வும் 16 வித செல்வங்களை அடையவும் இத்தேவியை தரிசித்து அருள்பெறலாம்.
- சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.
- திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.
கணபதி ஹோமத்தின் பலன்கள்
சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.
நவக்கிரக ஹோமத்தின் பலன்கள்
திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.
அஷ்ட பைரவர் ஹோமத்தின் பலன்கள்
ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.
சரபரேஸ்வரர் ஹோமத்தின் பலன்கள்
பட்சி தோஷம், பிசு கத்தி தோஷம் (பெண் சாபம்) வாகன தோஷம் நிவர்த்தி ஆகும்.
- நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.
- நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.
கருச்சிதைவையும், நம் கருமத்தையும் நீக்குபவள்.
நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.
நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.
அமாவாசை தினத்தன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்ட ஹோமம்.
சர்பரேஷ்வரர் ஹோமம் பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறும்.
பிரத்தியங்கிரா தேவி ஹோமத்தின் பலன்கள்
கிரகங்களால் ஏற்படும் தடைகள், அதனால் உண்டாகும் பாவங்களும் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.
- இந்த தேவியின் மந்திரத்தை தெரிந்து கொண்டவர். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆவார்.
- அவர் மூலமாய் இந்த தேவியை வழிபாடு செய்தவன் ராவணேஷ்வரன் மகன் மேகநாதன் எனும் இந்திரஜித் ஆவான்.
பிரத்தியங்கிரா தேவி வழிபாடு குறித்து சேலம் அன்னை உக்ரபிரத்தியங்கிரா கோவில் அர்ச்சகர் பூபதி சிவாச்சாரியார் கூறியதாவது:
இந்த கலியுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆதிசக்தி அம்சமாகிய அன்னை ஸ்ரீ அதர்வண பத்ரகாளி.
இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தியங்கிரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.
இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.
இந்த தேவியின் மந்திரத்தை தெரிந்து கொண்டவர். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆவார்.
அவர் மூலமாய் இந்த தேவியை வழிபாடு செய்தவன் ராவணேஷ்வரன் மகன் மேகநாதன் எனும் இந்திரஜித் ஆவான்.
இந்த தேவியின் மகிமை பற்றி புலிப்பாணி முனிவர் மிகவும் விமரிசையாக கூறியுள்ளார்.
இந்த தேவி ஸ்ரீதேவி எந்திரத்தின் உத்தரதிக்கில் இருப்பவர்.
இந்த தேவியின் அவதாரம் ஆயிரம் சிங்க முகங்களும் இரண்டாயிரம் கைகளும் கோரைபற்களும் நீல நிறம் உடையவளாகவும், ஆமை மாலையையும் கபால மாலையையும் அணிந்து காட்சி தருபவள்.
அக்கினி சுவாலை கொண்டவள்.
சிம்ம வாகனத்தில் அமர்ந்து அஷ்ட நாகங்களையும் குடையாக கொண்ட இந்த தேவியின் பெயர் உக்ரகாளி அதர்வண பத்ரகாளி, பிரத்தியங்கிரா தேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.
இந்த தேவியானவள் விர்பரேஸ்வரர் சக்தியில் இருந்து தோன்றியவள்.
இந்த தேவியானவள் தர்மம் காத்து அதர்மம் அழித்து இப்பூவுலகை காத்தருளுகிறாள். இந்த தேவி மங்களம் தரும் மகா காளிதேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.
- இதில் திருமணம் தடை படுபவர்கள் பங்கேற்றால் நிச்சயம் திருமணம் கை கூடும்.
- இந்த பூஜை திருமணஞ்சேரியில் மட்டுமே நடைபெறும். அதற்கு அடுத்து இங்குதான் நடைபெறுகிறது.
கோவையில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் வெள்ளிமலை தோட்டம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான சித்தலிங்கேஸ்வரர் கோவில்.
சித்தர் பெருமான் ஸ்ரீ பிரமானந்த சாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்ட உலகில் முதல் நவபாஷான சிவலிங்கம் இங்குள்ளது.
உலகிலேயே நவபாஷான சிவலிங்க கோவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீ சித்தர் பீடம் பிரம்மானந்த மடம் அறக்கட்டளையினர் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.
தினமும் சாமிக்கு மூலிகை தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
ஞாயிறு மாலை வேள்வி பூஜையும், இரவு சிவசக்தி யாக பூஜையும் நடைபெறுகிறது.
இந்த பூஜையில் பங்கேற்போருக்கு திருமண தடை நீங்கும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும்.
இங்குள்ள அம்மன் சன்னதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாக கருதப்படுகிறது.
கோவிலில் கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
மேலும் இந்த கோவிலில் நவகோள்களும் ஒரே நேர் கோட்டில் உள்ளது தனிச்சிறப்பு என்று கூறுகிறார்கள்.
சித்தலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சபூத தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அகிலம் போற்றும் சரபேஸ்வரருக்கும் இங்கு தனி சன்னதி உள்ளது.
இங்கு சரபேஸ்வரர் ஐம்பொன் சிலையில் அழகு மிளிர காட்சி தருகிறார்.
சன்னதியின் மேற்கூரை பிரமிடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சரபேஸ்வரர் சன்னதி மற்றும் சித்தலிங்கேஸ்வரர் கோவிலை வலம் வந்தால் அண்ணாமலையில் கிரிவலம் வந்த பலன் கிடைக்கும் என்று ஆன்மீக பெரியவர்கள் கூறுகிறார்கள்.
சரபேஸ்வரர் சன்னதியில் ஜாதக ரீதியான தோஷங்களுக்கு அதற்குரிய பரிகார பூஜைகள் நடைபெறுகிறது.
ராகு, கேது, செவ்வாய், தோஷம் உள்ளவர்கள் மற்றும் திருமணம் தடைபடுகிறதே என்று மனவேதனையில் உள்ளவர்கள் வாயு திசையில் அமைந்திருக்கும் காளத்தி நாதருக்கு அவர்கள் கைகளாலே ருத்ராபிஷேகம் செய்து பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.
பரிகார பூஜை முடித்து சரபேஸ்வரரை வழிபட்டால் திருமண தடை நீங்குவதோடு, அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
சரபேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை தோஷ நிவர்த்தி பூஜை நடைபெறும்.
இதில் திருமணம் தடை படுபவர்கள் பங்கேற்றால் நிச்சயம் திருமணம் கை கூடும்.
இந்த பூஜை திருமணஞ்சேரியில் மட்டுமே நடைபெறும். அதற்கு அடுத்து இங்குதான் நடைபெறுகிறது.
தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள பைரவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் மனதில் நினைத்தது நடக்கும்.
இந்த கோவிலுக்கு சென்று வர கோவை காந்திபுரத்திலிருந்து 74,74ஏ மற்றும் சிங்காநல்லூரிலிருந்து மினி பஸ், ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.
- கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர்.
- இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர்.
கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர்.
இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர்.
தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கவுரி, லட்சுமி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர்.
உக்கிர தெய்வமாக காணப்பட்டாலும் இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
இவளது மூல மந்திரத்தை ஜெபித்து துவங்கி இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது.
அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும்.
அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் பிடித்தமான மிளகாயுடன் தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும்.
உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற காரமான பொருட்கள் மிகவும் பிடித்தமானது.
குழந்தை வரம் தரும் பிரத்தியங்கிரா தேவி
ராமாயண காலத்தில் அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜனுக்கு பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் மனம் புழுங்கி வந்தாராம்.
புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தினால் குழந்தை செல்வம் கண்டிப்பாக கிடைத்து விடும் என ஏராளமான ரிஷிகள் கூறியதை அடுத்து நம்பிக்கையுடன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினாராம்.
அதன்பின் 3 மனைவிகளுக்கு ராமர், லெட்சுமணன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறந்தார்கள் என ராமாயண வரலாறு கூறுகிறது.
தற்போது ஏராளமான குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை வேண்டி கோவில் மற்றும் புண்ணியதலங்களுக்காக செல்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஸ்ரீமகாபஞ்சமி பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக ஸ்ரீமகாபுத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது.
- புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
- சிவகங்கை ஸ்ரீ மகாபஞ்சமி பிரத்யங்கராதேவி கோவிலில் இந்த பூஜை நடைபெறுகிறது.
ராமாயண காலத்தில் அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜனுக்கு பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் மனம் புழுங்கி வந்தாராம்.
புத்திய காமேஷ்டி யாகத்தை நடத்தினால் குழந்தை செல்வம் கண்டிப்பாக கிடைத்து விடும் என ஏராளமான ரிஷிகள் கூறியதை அடுத்து நம்பிக்கையுடன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினாராம்.
அதன்பின் 3 மனைவிகளுக்கு ராமர், லெட்சுமணன், பரதன், சத்துகென் ஆகியோர் பிறந்தார்கள் என ராமாயண வரலாறு கூறுகிறது.
தற்போது ஏராளமான குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை வேண்டி கோவில் மற்றும் புன்னியஸ்தலங்களுக்காக செல்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஸ்ரீமகாபஞ்சமி பிரத்தியங்கரா தேவி கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக ஸ்ரீமகாபுத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்