என் மலர்
நீங்கள் தேடியது "Shiva"
- குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
- தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும்.
வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழிபடுவதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்.
குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும் வழிபாடு செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும்.
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நலமும் வளமும் தரும் பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது.
நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். சிவ என்பதற்கு மங்களம் என்று பொருள். நந்தி என்பதற்கும் ஆனந்ததையும் மகிழ்ச்சியையும் தருபவர் என்றே பொருள். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் நந்தி. நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். இறைவனின் சந்நிதியில் நந்திக்குப் பின் நின்று வணங்க வேண்டும் என்பதன் தாத்பர்யமும் தர்மத்தைப் பின்பற்றி அதன் மூலம் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான்.
நந்திபகவான் பிரதோஷ நாளில் வேண்டும் வரம் தருபவராக விளங்குகிறார். இந்த நாளில் அவரை நினைத்து வழிபடுவது சிவ பெருமானின் பேரருளை நமக்குத் தரும். அதனால்தான் பிரதோஷ தினத்தில் நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். இன்று மாலை (19/1/23) பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.
வியாழக்கிழமை (இன்று) நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத் தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
- வருகிற 20-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
- 20-ந் தேதி சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.
இந்துசமய அறநிலையத்துறையின் குமரி மாவட்ட திருக்கோவில்கள் (சுசீந்திரம்) நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் சென்னித்தோட்டம் கமுகண்ணூர் மகாதேவர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் 65-வது மகாசிவராத்திரி திருவிழாவும், இந்து சமய மாநாடும் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 20-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
முதல் நாள் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜையும், 8 மணிக்கு சுத்திகலச பூஜை, 10.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ- மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு கொடிப்பட்டம் வழங்கும் நிகழ்ச்சி, 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு கொடிமர பூஜை மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
2-வது நாள் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, காலை 7 மணிக்கு மாபெரும் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவாசக சித்தர் சிவ.தாமோதரன் திருவாசகம் முற்றோதுகிறார்.
8.30 மணிக்கு கலசபூஜை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு பகவதி சேவை போன்றவை நடக்கிறது.
இதேபோல் விழா நாட்களில் ஒவ்ெ்வாரு நாளும் கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன்னதானம், சாமி வாகன பவனி ஆகியவை நடக்கிறது. 8-வது நாள் திருவிழாவான 18-ந் தேதி மாலை 5 மணிக்கு சாமி ரிஷப ரதத்தை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகருமான பொன்மாணிக்கவேல் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். அன்று நள்ளிரவு 12 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகரும், இசை அமைப்பாளருமான சென்னை ஸ்ரீகாந்த் தேவா மாபெரும் இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவான 20-ந் தேதி காலையில் அபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆறாட்டு பூஜையும் 6.30 மணிக்கு பஜனையை தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
- 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்வார்கள்.
- இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமு மாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
இதற்காக பக்தர்கள் முன்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர், திருநந்திக்கரை நந்தீஸ்வரர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர், திருப்பன்னிப்பாகம் மகாதேவர், கல்குளம் நீலகண்டசுவாமி, மேலாங்கோடு மகாதேவர், திருவிடைக்கோடு மகாதேவர், திருவிதாங்கோடு மகாதேவர், திருப்பன்றிகோடு மகாதேவர், திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆகிய 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்வார்கள். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டாக நடைபெறும் இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். அப்போது இவர்கள் காலை, மாலை வேளைகளில் குளித்து சிவன் கோவில்களுக்கு சென்று சிவநாமத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்வதுண்டு. சைவ வகை உணவுகளை மட்டுமே உட்கொள்வார்கள். பின்னர் சிவராத்திரி தினத்திற்கு முந்தைய நாளில் காவி உடை அணிந்து விபூதி பூசி, கையில் விசிறியுடன் கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவர் கோவிலில் தொடங்கி ஒவ்வொரு கோவிலாக ஓடியவாறு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். 110 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நீண்ட ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்க கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பழங்காலத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களும் நடந்தும், ஓடியும் சென்றுள்ளனர். அண்மை வருடங்களாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே நடந்தும், ஓடியும் செல்கின்றனர். பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் இந்த ஓட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிலில் உள்ள குளத்தில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்பதும் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பது ஐதீகம்.
சிவாலய ஓட்டத்திற்கான கதை
சிவாலய ஓட்டம் தொடர்பாக பக்தர்கள் மத்தியில் 2 விதமான கதைகள் கூறப்படுகிறது. இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய, தருமரின் யாகம் ஒன்றிற்கு புருஷா மிருகத்தின் பால் பெற பீமன் சென்ற கதை மற்றும் சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவ பெருமானிடம் வரம் பெற்ற பின்னர் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க முயலும் போது சிவபெருமான் கோபாலா.. கோவிந்தா என்று கூறியவாறு ஓடியதும், இறுதியில் மோகினி அவதாரமெடுத்து வந்த விஷ்ணு சூண்டோதரனை அழிக்கும் கதை சொல்லப்படுகிறது.
இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய கதையில், புருஷா மிருகத்தின் பால் பெற சென்ற பீமன், கிருஷ்ணனின் உபதேசப் படி உத்திராட்ச கொட்டைகளை போட்ட இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும், சூண்டோதரன் கதையில் சிவபெருமான் பதுங்கி மறைவாக இருந்த இடங்களே சிவத்தலங்களாயிற்று என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முன்சிறை மகாதேவர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது.
திருநட்டாலம் கோவிலில் சுவாமி சிவன்-விஷ்ணு என சங்கர நாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.
இந்த வருடம் சிவராத்திரி தினம் வருகிற 18-ந் தேதியாக உள்ள நிலையில் மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும், ஓட்டமுமாகவும் செல்லும் பக்தர்கள் 17-ந் தேதி பிற்பகலில் ஓட்டத்தை தொடங்குகின்றனர். 19-ந் தேதி காலையில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள்.கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்றும் அச்சமும் மக்கள் மத்தியில் இருந்த நிலையில் சிவாலய ஓட்ட பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி இல்லாத சாலை வசதி, தடையற்ற மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உயரமான மலையில் அமைந்துள்ளது.
- மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் எர்ராவாரிபாளையம் மண்டலம் தலகோணா கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. அந்தக் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உயரமான மலையில் அமைந்துள்ளது.
அங்கு உயரமான மலைகளில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். சுற்றுலா பயணிகளும் வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர்.
கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டிக்கு கோவில் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் நேரில் அழைப்பிதழை வழங்கினார்.
- மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந்தேதி வரை 11 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் சுவாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி கொடிமரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, கொடிமண்டபம் எதிரே பிரியாவிடையுடன் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். சுவாமி-அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளை வலம் வருகிறார்கள். இரவில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்கிறார்கள்.
முக்கிய நிகழ்ச்சியாக 8-ம் நாள் விழாவான மாசி மகா சிவராத்திரி அன்று (18-ந் தேதி) நடராஜர் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு சுவாமி-அம்பாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி காட்சி தருகின்றனர். அன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடையானது திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்..
9-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் விழா நாளான மாசி அமாவாசை அன்று சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வருகிற 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.
- சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து மண்டபத்தில் எழுந்தருளினர்
- கோவில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.
விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடை பெற்றது. தொடர்ந்து பிரியா விடையுடன், ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
காலை 6 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடானார்கள். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சுவாமி-அம்பாள் காலை 9 மணியளவில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைகிறார்கள்.
இன்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் புறப்பாடான பின் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலும் தீர்த்த கிணறுகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றமடைந்தனர்.
- காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
- இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஆடி, தை அமாவாசை மகாளய அமாவாசை நாட்களில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தருவார்கள்.
சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் மகா சிவராத்திரி அன்றும் திரளான பக்தர்கள் வருகை தருவதுண்டு. அதன்படி இந்த ஆண்டு வருகிற 18ந் தேதி (சனிக்கிழமை) சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சதுரகிரி மலைக்கு செல்ல வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டோர் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.
மகா சிவராத்திரி முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னேற்பாடு வசதிகளை செய்து வருகிறது. மேலும் மழைக்குச் செல்லும் பாதைகள், கோவில், மலை அடிவாரத்தில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு இரவு வழிபாடு நடத்துவது விசேஷமாக கருதப்படுகிறது. எனவே வருகிற 18-ந் தேதி பக்தர்கள் சதுரகிரிக்கு மலை ஏற இரவிலும் அனுமதிக்க வேண்டும். சிவராத்திரி என்பதால் கட்டுப்பாடின்றி பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முறை மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இரவிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது
- பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
நெல்லையப்பர் கோவில் சார்பில் வருகிற 18-ந்தேதி இரவு பாளையங்கோட்டையில் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது என்று கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி முக்கிய சிவாலயங்களான மயிலாப்பூர் கபாலீசுவரர், தஞ்சை பிரகதீசுவரர், கோவை பட்டீசுவரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் மற்றும் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆகிய 5 கோவில்களிலும் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
இதையொட்டி நெல்லையப்பர் கோவில் சார்பில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் தசரா விழா நடைபெறும் (எருமை கடா) மைதானத்தில் வருகிற 18-ந்தேதி மாலை 4 மணி முதல் 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை மகா சிவராத்திரி பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
- விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
- தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடைபெறும்.
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காடு சிவபுரத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டலாபிஷேக விழா மற்றும் மகா சிவராத்திரி விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. மண்டலாபிஷேக விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக நாளை அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் பூஜை, கலச பூஜை, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு மூலமூர்த்திகள் அனைவருக்கும் அஷ்டாபிஷேகம், 11.30 மணிக்கு தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதல், 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.40 மணிக்கு சிவபுராணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.
17-ந் தேதி சிவராத்திரி விழா நிகழ்ச்சியாக அதிகாலை 5.30 மணிக்கு கணபதிஹோமம், 6 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7.10 மணிக்கு திருவாசக முற்றோதுதல், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடைபெறும்.
மாலை 6 மணிக்கு திருவாசக சபை தலைவர் சின்னையன் தலைமையில் 1008 திருவிளக்கு பூஜை, 6.40 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பரிசு வழங்கல், 8.30 மணிக்கு தீபாராதனை, 8.40 மணிக்கு சிவபுராணம் பாராயணம் ஆகியவை நடக்கிறது.
18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு அகண்ட நாம ஜெபம் தொடக்கம், 11 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அகண்ட நாம ஜெபம் நிறைவு, தொடர்ந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 5.30 மணிக்கு சனி மகாபிரதோஷ அபிஷேகம், 6.40 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு சாமபூஜை தொடக்கம், அதிகாலை 4.30 மணிக்கு வாண வேடிக்கை போன்றவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சின்னையன் தலைமையில் துணைத்தலைவர் முருகன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் நாராயணன் நாயர், துணைச் செயலாளர்கள் சேகர், ரமேஷ், இசக்கிமுத்து, ராஜகோபால் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கவுரவ ஆலோசகர்கள் செய்து வருகிறார்கள்.
- வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும்.
- சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரியொட்டி, பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பழனி மலைக்கோவிலில் இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால பூஜையுடன் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இதேபோல் பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், சன்னதி வீதி, மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள சிவன் சன்னதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
- 18-ந்தேதி 1008 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது.
- 19-ந்தேதி திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
விழாவில் முதல் நாளான 18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ருத்ராபிஷேகம், கால சாந்தி பூஜை நடக்கிறது. 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் 1008 வலம்புரி சங்காபிஷேகம், உச்சிக்கால பூஜை, மாலை 3.30-க்கு விநாயகர், வெங்கடேச பெருமாள், முருகர், அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இதையடுத்து 4.30 மணி அளவில் சனி மகா பிரதோஷ அபிஷேகம், தீபாராதனையும், 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், சிவராத்திரி முதல் ஜாம பூஜை, தீபாராதனை நடக்கிறது.
இரவு 7.30-க்கு தங்கத்தேரில் சுவாமி, அம்பாள் பிரகாரவலமும்,8.30 மணிக்கு 108 வலம்புரி சங்கு பூஜை ஹோமமும் நடைபெறுகிறது. 9 மணிக்கு மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளும், 9.30 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் மகா சிவராத்திரி 2-ம் ஜாம பூஜை, தீபாராதனை நடக்கிறது. 11.30 மணியளவில் ருத்ராபிஷேக பூஜை தொடங்குகிறது. நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவர் 3-ம் ஜாம பூஜை மற்றும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி 4-ம் ஜாம பூஜையும், 7 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும், 9 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்ம ஸ்தாபனம் சார்பில் நடைபெறுகிறது.
- பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது.
- 19-ந்தேதி அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகம், மாலை 4.30 மணி அளவில் சனி மகா பிரதோஷம், இரவு 8.30 மணிக்கு முதல் காலம், இரவு 11.30 மணிக்கு 2-ம் காலம், லிங்கோத்பவர் அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜை நடக்கிறது.
முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தேவாரம்- திருவாசகம் இசைப்பாடல்கள், வாய்ப்பாட்டு, மாணவ-மாணவிகளின் பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது. 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு 4-ம் காலம், 5.30 மணிக்கு அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் சிவக்குமாா் மற்றும் பலா் செய்துள்ளனா்.