search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sky fun"

    • அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    • பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு வந்தது.

    மக்களாட்சியை நிறுவிய இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜூலை 14-ந் தேதியான நேற்று புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் தேசிய தின விழா நடந்தது.

    விழாவுக்கு பிரெஞ்சு துணை தூதர் லிசே போட் பரே தலைமை தாங்கி பிரெஞ்சு தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சியும், விருந்தும் நடந்தது. விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள், பிரெஞ்சு குடிமக்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

    அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் எதிரே வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை மலர் தொடு வியாபாரிகள் ஒற்றுமை கழகத்தினர் செய்திருந்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி செட்டிப்பாளையம் குளக்கரையில் உள்ள மாரியம்மனுக்கு 35- ம் ஆண்டு ஆடிப்பூர பூப்பல்லக்கு பெருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் செஞ்சி அங்காளம்மன் கோவிலில் இருந்து அக்னி சட்டி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க 108 பால்குடம் ஊர்வலமும் வந்து மாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் அன்னதானமும் மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை மலர் தொடு வியாபாரிகள் ஒற்றுமை கழகத்தினர் செய்திருந்தனர்.

    ×