என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sleight of hand"
- கடலூர் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் நகை திருடப்பட்டது.
- அப்போது ஒரு வாலிபர் ஆனந்தராஜா பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்
கடலூர், :
கடலூர் மாவட்டம் புவனகிரி கொத்தட்டைைய சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). சம்பவத்தன்று பிரகாஷ் தனது உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு, தனது வீட்டிற்கு செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று பிரகாஷ் தூங்கிவிட்டார். தூக்கத்திலிருந்து விழித்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரம், செல் மற்றும் அரசு ஆவண கார்டு அனைத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 25 ஆயிரம் ஆகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ்கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவை சோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடலூர் எம்.புதூரை சேர்ந்த ஆனந்தராஜா (வயது 33) என்பவர் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஆனந்தராஜா பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதில் திடீரென்று விழித்துக் கொண்ட ஆனந்தராஜா அந்த வாலிபரை பின்தொ டர்ந்து திருடன் திருடன் என கத்திக்கொண்டு துரத்தினார். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த பள்ளியில் கம்ப்யூட்டர்களுக்கு தனியறை உள்ளது.
- தலைமை ஆசிரியர் நாகமணி பள்ளி–யை பூட்டிவிட்டு சென்றார்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கிளிய–னூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கிளியனூர் மற்றும் கிளியனூரை சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கம்ப்யூட்டர்களுக்கு தனியறை உள்ளது. நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்தவுடன் மாலையில் தலைமை ஆசிரியர் நாகமணி பள்ளியை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு சமயம் அரசு பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் பள்ளியின் பின்பக்கம் வழியாக பள்ளிக்குள் நுழைந்து கம்ப்யூட்டர் இருக்கும் அறை பூட்டை உடைத்து உள்ளே இருந்த பேட்டரிகளை திருடி சென்றுவிட்டனர்.இன்று காலை வழக்கம்போல் பள்ளியை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர் அறை உடைக்கப்பட்டு அதிலிருந்து பேட்டரிகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் நாக மணி கிளியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்கு பதிவு செய்து அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்