search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Slipped out"

    • நேற்று முன் தினம் கார்த்திகா, குழந்தையை மில்லில் உள்ள காவலாளி அறை அருகில் உள்ள அறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
    • பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை மகாஸ்ரீ தூங்கிக் கொண்டிருந்தது.

    ஈரோடு:

    அரியலூர் மாவட்டம், இளங்குடந்தை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா (24). இவர் காங்கயத்தில் உள்ள ஒரு நூல் மில்லில் வேலை பார்த்து வந்தபோது விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கனீஸ் (6) என்ற மகனும், மகாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    கார்த்திகா தனது மகளுடன் ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள பழைய அய்யம்பா–ளையம் பகுதியில் உள்ள நூல் மில்லில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் கார்த்திகா, குழந்தையை மில்லில் உள்ள காவலாளி அறை அருகில் உள்ள அறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

    பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை மகாஸ்ரீ தூங்கிக் கொண்டிருந்தது.

    இதையடுத்து கார்த்திகாவும் குழந்தை மகா ஸ்ரீ அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் காவலாளி கார்த்திகாவை அழைத்து–ள்ளார். இதையடுத்து கார்த்திகா வெளியே சென்று காவலாளியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது குழந்தை மகாஸ்ரீ அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்று கார்த்திகா பார்த்தார். அப்போது கட்டிலில் தூங்கிக் கொண்டி–ருந்த குழந்தை மக ஸ்ரீ கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு இருப்பது தெரியவந்தது.

    உடனடியாக அவரை கோபி அரசு மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை மகாஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.குழந்தையின் உடலைப் பார்த்து கார்த்திகா அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×