search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100192"

    நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
    சென்னை:

    நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை(புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் எனும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டு 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் 2017-18 ஆம் கல்வியாண்டு வரை 1232 புதிய பாடப்பிரிவுகள் முன்னாள் முதல்-அமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டன.

    பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கிலும், பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிப்பதால் மாணவ-மாணவிகள் அதிகளவில் பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுப்பதற்கு ஏற்றவாறும் இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் பெற ஏதுவாக முதல்-அமைச்சர் கடந்த ஜூன் 1-ந்தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் இதற்கென அரசுக்கு தொடரும் செலவினமாக 68 கோடியே 46 லட்சம் ரூபாய் ஏற்படும் என்றும் இப்பாடப் பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62 கோடியே 75 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

    மேற்காணும் அறிவிப்பின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ம் கல்வியாண்டிலிருந்து 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில் மற்றும் 71 பிஎச்.டி. ஆக மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கும், இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கான 693 உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் முதலாமாண்டிற்கு 270 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் அதற்கென ரூ.26 கோடியே 39 லட்சத்து 73 ஆயிரத்து 840 நிதி ஒப்பளிப்பு வழங்கியும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மேற்காணும் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (27-ந்தேதி) அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 264 பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகள் அடங்கிய அரசாணையினை தமிழக அரசின் இணையதளத்தில் ( www.tn.gov.in ) உயர்கல்வித் துறையின் கீழ் காணலாம். மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினை இக்கல்வியாண்டிலிருந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews
    கால்நடை மருத்துவ படிப்பில் சேர 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கலந்தாய்வு அடுத்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கால்நடை மருத்துவ படிப்பில் சேர 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூலை) 3-வது வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கை குழு தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்காக விண்ணப்பங்கள், இணையதளம் மூலம் கடந்த மாதம் (மே) 21-ந்தேதி முதல் இம்மாதம் 11-ந்தேதி வரை பெறப்பட்டன.

    இதில் கால்நடை மருத்துவ பட்டப்படிப்பில் மொத்தம் உள்ள 306 இடங்களுக்கு 12 ஆயிரத்து 107 பேரும், பி.டெக் பட்டப்படிப்புக்கு மொத்தம் உள்ள 94 இடங்களுக்கு 2 ஆயிரத்து 418 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

    ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ் நகல்களுடன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு கடைசி தேதியான கடந்த 18-ந்தேதி மாலை 5.45 மணி வரை கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு 10 ஆயிரத்து 207 விண்ணப்பங்களும், பி.டெக். பட்டப்படிப்புக்கு 2 ஆயிரத்து 10 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

    இதனையடுத்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் நடைபெறும்.

    மேலும் அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in எனும் பல்கலைக்கழக இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள கணிணி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (சத்துணவுப்பிரிவு) காலியாக உள்ள கணிணி அறிவுள்ள உதவியாளர் ஒரு பணியிடம் தகுதி உள்ள நபர் மூலம் பகுதி நேர தற்காலிக அடிப்படையில், மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளது.

    விண்ணப்பதாரர்கள் smart sivagangaiapp (கைபேசி செயலி) மூலம் 20.6.2018 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய தேதி மற்றும் காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

    இந்த தகவலை சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. #Tamilnews

    மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற உள்ளது. #NeetExam
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடுகிறது. 85 சதவீத இடங்களுக்கு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது. படிப்பில் சேர விண்ணப்பங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 18-ந்தேதி. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த தகவலை மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார். #NeetExam
    என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள 564 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் தலா 50 சதவீதம் இடங்கள் ஆகும்.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அதேபோல், என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி, கடந்த மாதம் (மே) 3-ந் தேதி ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கினார். இதன் மூலம் அவர்கள் வீட்டில் இருந்த படியே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அப்படி இணையதள வசதி இல்லாதவர்களுக்கு என்று தமிழகத்தில் 42 உதவி மையங்கள் தொடங்கப்பட்டன. அதிலும் மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் கடந்த மாதம் 30-ந் தேதி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதால், அந்த பகுதியில் இருந்து என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிப்பவர்களுக்காக காலஅவகாசத்தை நீட்டியது.

    அந்தவகையில், நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 31-ந் தேதி வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால், ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்த்தால், இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

    விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில், விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி வருகிற 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு, மருத்துவ கலந்தாய்வு கால அட்டவணைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
    சிறந்த சேவை பிரியும் பெண்கள் சுதந்திர தின விழா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சமூகநலத் துறையின் மூலம் 2018-ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழா சிறந்த சமூகப் பணியாளர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனம், விருதுக்கு பெண்களின் நலன், மேம்பாட்டிற்காக பணிபுரியும் தகுதியான தனிநபர், தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

    மேலும் விருது வேண்டி விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் பிறந்தவராகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக செயல்பட்டிருக்க வேண்டும்.

    தாங்கள் செய்த சேவை குறித்த உரிய விவரங்கள், அத்தாட்சியாக படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விபரங்களும் தர வேண்டும்.

    பிறந்த தேதி, கல்வித்தகுதி, போன்ற முழு முகவரியுடன், தொலைபேசி எண்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூன் 5 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#tamilnews
    கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பி.வி.எஸ்ஸி மற்றும் ஏ.எச்., பி.டெக் ஆகிய கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ் நகல்களுடன் தலைவர், சேர்க்கைக்குழு, (இளநிலை பட்டப்படிப்பு) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை-51 என்ற முகவரிக்கு அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 10,373 விண்ணப்பங்கள் ஆன் லைன் வழியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிடெக் (உணவு தொழில் நுட்பம்) பிடெக் (கோழியின் உற்பத்தி தொழில் நுட்பம்) மற்றும் பிடெக் (பால்வளத் தொழில் நுட்பம்) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஒரே விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வின் போது அவர்களின் தரவரிசைப்படி தமக்கு விருப்பமான தொழில் நுட்ப பட்டப்படிப்புகளை தேர்வு செய்யலாம் என்று சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

    என்ஜினீயரிங் படிப்பில் சேர இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ள நிலையில் நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 564 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 2 லட்சத்திற்கு மேல் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 65 சதவீதம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 35 சதவீதம் ஆகும்.

    அதுவே கல்லூரி சிறுபான்மையினர் கல்லூரியாக இருந்தால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதம்.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.

    இந்த வருடம் முதல் ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலம் வீடுகளில் இருந்து விண்ணப்பிக்க இயலாதவர்கள் தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்துள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து வருகிறார்கள்.

    இந்த மையங்களில் விண்ணப்பிக்கும் பணிகள் அனைத்தும் இலவசம்.

    என்ஜினீயரிங் படிப்பதற்கு இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் தான் உதவி மையம் மூலம் விண்ணப்பித்து உள்ளனர்.

    என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் என்பது குறிப்பிடத்தகுந்தது. 
    என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிய இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் இதுவரை 1,32,255 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். #EngineeringApplication
    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புக்கான பி.இ. மற்றும் பிடெக்குக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

    ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து 3 மாவட்டங்களில் இணைய தள சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் அவகாசம் அளித்து ஜூன் 2-ந்தேதி வரை நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.



    ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிய இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் இதுவரை 1,32,255 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

    2-ந்தேதி வரை அவகாசம் இருப்பதால் மேலும் பலர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#EngineeringApplication
    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #10thRevaluation
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற காரணங்களால் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக முடியாமலும், வெளியூர் செல்ல முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இணையதள சேவை முடக்கப்பட்டதால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, மாணவர்களின் நலன் கருதி மறுகூட்டலுக்கு தமிழக அரசு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் பகுதிகளில் அமைதி திரும்பிய அடுத்த நாளில் இருந்து 3 நாட்களுக்குள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #10thRevaluation

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. இதேபோல பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அரசு மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பபடிவங்கள் கடந்த 11-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த விண்ணப்பம் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிளஸ்-2 முடித்த மாணவிகள் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் வருகிற 29-ந் தேதி வரை வேலை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை வினியோகம் செய்யப்படும். இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி மாணவிகள் பெற்று கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் மாணவிகள் தங்களது சாதிசான்றிதழ்் நகலினை சமர்பித்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    கடந்த 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குவிந்தனர். இதனால் மன்னர் கல்லூரியில் விண்ணப்ப படிவங்களை வாங்க மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியிலும் மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்க நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

    மன்னர் கல்லூரியில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணி வரையிலும், அரசு மகளிர் கலை கல்லூரியில் வருகிற 29-ந் தேதி மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என அந்தந்த கல்லூரியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
    வேளாண் படிப்புக்கு இன்று முதல் இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 17-ந்தேதி ஆகும்.
    வடவள்ளி:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.

    இதில் உறுப்பு கல்லூரிகளில் 987 இடங்களும், இணைப்பு கல்லூரியில் 2,160 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் உள்ளன.

    தொழிற்நுட்ப படிப்புகளில் உறுப்பு கல்லூரிகளில் 1262 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 3,422 இடங்கள் நிரப்பப்படுகிறது.

    இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

    சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களை கொண்டு வந்து சரிபார்க்க வேண்டும்.

    பிளஸ்-2 மதிப்பெண்களை கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர் சேர்க்கை ஆன்-லைன் மூலம் நடைபெறும்.

    அதன்படி இன்று (18-ந்தேதி) முதல் இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 17-ந்தேதி ஆகும்.

    சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றுகள் சரிபார்ப்பு அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெறும்.

    தரவரிசை பட்டியல் ஜூன் 22-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    இதில் 65 சதவீத மாணவர்கள் கோவை வேளாண்மை கல்லூரியிலும், 35 சதவீதம் இணை மற்றும் உறுப்பு கல்லூரிகளிலும் நடைபெறும். இதனிடையே மே 21-ந்தேதி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை குறித்து சந்தேகம் மற்றும் முறைகள் குறித்து கல்லூரி வளாகத்தில் திறந்த வெளி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்க உள்ளனர்.

    இதில் மாணவர்கள் கலந்து கொண்டு விண்ணப்பிக்கும் முறையில் உள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். #Tamilnews
    ×