search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    தமிழக காங்கிரஸ் தலைவராகும் தகுதி தனக்கு உள்ளதாகவும் விரைவில் மாற்றம் வந்தால் தலைவர் ஆவேன் என்றும் கராத்தே தியாகராஜன் கூறினார். #Congress #KarateThiagarajan #Thirunavukkarasar
    சென்னை:

    தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவாஜியை ராசி இல்லாதவர் என்கிறார்கள். தோற்கிற ஜானகி அம்மாள் கூட்டணியில் ராஜசேகரனும், இளங்கோவனும் தான் சேர்த்து விட்டார்கள். தோல்வி அடைந்தவுடன் சிவாஜி காங்கிரசுக்கு வந்து இருந்தால் உயர்ந்த இடத்துக்கு சென்று இருப்பார்.

    இளங்கோவன் திரும்பவும் காங்கிரசுக்கு வந்து மத்திய மந்திரி ஆனார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரவில்லையா? காங்கிரஸ் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் சிவாஜி. நிறைய தலைவர்களை உருவாக்கி இருக்கிறார். கட்சி வளர்ச்சிக்காக உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

    தமிழக காங்கிரசில் தொண்டர்கள் இருக்கிறார்கள். வழிகாட்டும் தலைவர்கள் சரியில்லை. திருநாவுக்கரசர் வேலை வாங்க வேண்டும். திருநாவுக்கரசர் என்னை பதவியில் இருந்து எடுத்து விடுவதாக மிரட்டுகிறார்.


    முதல்-அமைச்சர் ஆகும் கனவில் அவர் இருக்கிறார். முதல்-அமைச்சராக யார் வேண்டுமானாலும் வரலாம். ப.சிதம்பரம், குமரி அனந்தன் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களுக்கு தகுதி உள்ளது. முதல்வரை தேர்வு செய்யும் தகுதி காங்கிரஸ் மேலிடத்துக்கு தான் இருக்கிறது.

    கட்சிக்கு தொடர்பில்லாதவர்களும் எனக்கு ஜூனியரான செல்லக்குமார் உள்ளிட்டோரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர். திருநாவுக்கரசருக்கு முதல்வராகும் தகுதி இருக்கும் போது, எனக்கும் தமிழக காங்கிரஸ் தலைவராகும் தகுதி உள்ளது. விரைவில் மாற்றம் வந்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவேன்.

    திருநாவுக்கரசர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். எனக்கு தலைவர் ராகுல், வழிகாட்டும் தலைவர் சிதம்பரம். உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. திருநாவுக்கரசர் இன்னும் காங்கிரஸ் கலாச்சாரத்திற்கே வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #KarateThiagarajan #Thirunavukkarasar
    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தங்கபாலு, டாக்டர் திருமாவளவன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்லக்குமார் ஆகியோரும் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

    தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் திருநாவுக்கரசரின் பிறந்த நாளையொட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் குமரி அனந்தன் கேக் வெட்டினார். இதேபோல் மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமையில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளும் பிறந்தநாள் கேக் வெட்டினார்கள்.



    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆலிஸ் மனோகரி 100 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் ஆரூண், விஸ்வநாதன் மற்றும் சிரஞ்சீவி, பவன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், வீரபாண்டியன், நிர்வாகிகள் துறைமுகம் ரவிராஜ், பிராங்ளின் பிரகாஷ், டி.வி.துரைராஜ், சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வட சென்னை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் ஏற்பாட்டில் பார்வையற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஊர்வசி அமிர்தராஜ் காலை உணவு வழங்கினார். தண்டையார் பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. #Congress #Thirunavukkarasar
    அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கால் ஊன்ற முடியாது என்று மதுரை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் கூறினார்.
    அவனியாபுரம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    லோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டமன்றத்தில் அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை. அவசர கோலத்தில் கொண்டு வந்துள்ளனர்.

    எந்த வகையான விதிகளோடு வைக்கப்பட்டு ஒரே நாளில் கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை. அதனால் தி.மு.க., காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம். லோக் ஆயுக்தா விசயத்தில் புதிய மாற்றங்கள், திருத்தங்கள் செய்து அமல்படுத்த வேண்டும்.

    அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்ற முடியாது. தமிழக மக்கள் பா.ஜனதாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


    ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அதே போல் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 2 நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு வந்துள்ளது. பின் 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டு தீர்ப்பு வர உள்ளது.

    எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தமிழகத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் வரலாம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் என்பது பண மதிப்பீடு போல் ஒரே இரவில் அறிவிக்க முடியாது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசிய கட்சிகளுடனும்-மாநில கட்சிகளுடனும் பேசி முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அண்ணாநகரில் நடந்தது. இதில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஜே.காமராஜ், செய்யதுபாபு, ராஜாஹசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வாக்காளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது, தேர்தலின்போது எப்படி செயல்படுவது? உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. #Congress #Thirunavukkarasar #BJP #Amitshah
    காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து தானும் பேசுவேன் என்று சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    1967-லேயே தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 1991-ல் காங்கிரசுடன் கெஞ்சி கூத்தாடி ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ராஜீவ் காந்தி உயிர்தியாகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சர் ஆனார்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வுக்கு, ஜெயலலிதாவுடன் சேர்த்து சமாதி கட்டி விட்டார்கள். தற்போது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி, நிழல் ஆட்சிதான் நடைபெறுகிறது. பா.ஜனதாவை சந்தோ‌ஷப்படுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமாரும், அ.தி.மு.க.வினரும் காங்கிரசை விமர்சிக்கிறார்கள்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியில்தான் அதிக ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருக்கிறார். எனவே, இனி பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காது என்று கருதுகிறேன்.

    தமிழ்நாட்டுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அதிக நிதி கொடுத்து இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். இது வெறும் ஏட்டளவில் உள்ள புள்ளி விவரம் தான். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் எந்த பெரிய தொழிற்சாலைகளும் வரவில்லை. நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.


    தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெறவில்லை.

    அனைத்து கட்சி தலைவர்கள், சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். இப்போது நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து நான் பேசுவேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்ற நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது என திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar
    திருச்சி:

    திருச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள், பிரதிநிதிகள், செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி காங்கிரஸ் தான். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு விட்டது.

    தினகரன் ஒரு பக்கம் தனியாக கட்சி நடத்துகிறார். அவரது மாமா திவாகரன் மன்னார்குடியில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இப்படி அ.தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ள பிளவினால் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


    50 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி இன்னமும் தமிழகத்தில் இருக்கிறது என்றால் அதற்கு காமராஜர் போட்ட பலமான அஸ்திவாரம் தான் காரணம். தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த ஆட்சியை காங்கிரஸ் துணை இல்லாமல் வீழ்த்த முடியாது. தமிழகத்தில் என்றாவது ஒரு நாள் காமராஜர் தொண்டன் முதல்-அமைச்சர் ஆவார், இது உறுதி.

    நான் ராகுல் காந்தியால் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்ற நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது. தேசிய அளவில் மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே தலைவர் ராகுல் மட்டுமே. அவரது தலைமையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #Thirunavukkarasar

    சேலம் - சென்னை 8 வழி சாலைக்கு எதிராக கருத்து கூறியதற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்தார். #GreenwayRoad #thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலத்தில் இருந்து சென்னை வரை 8 வழி சாலைக்கு சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் அனுமதி இல்லாமல் அவர்களை கட்டாயப்படுத்தியோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தோ, கைது செய்தோ ஒரு திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்க கூடாது. மக்களின் சம்மதம் பெற உரிய நஷ்டஈடு வழங்கி, அதை மக்கள் ஏற்றுக்கொண்டு நிலத்தை கொடுத்தால்தான் செய்ய வேண்டும்.

    பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்பவர்களை அச்சுறுத்தி நிலத்தை கையகப்படுத்துவது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். மக்களுக்கான திட்டங்கள்தான் இருக்க வேண்டும். திட்டங்களுக்காக மக்கள் இருக்கக்கூடாது. மக்கள் சம்மதம் இன்றி கட்டாயப்படுத்தி திட்டத்தை திணிக்கக்கூடாது.

    இந்த 8 வழி சாலைக்கு எதிராக கருத்து சொன்னதற்காக கைது செய்யப்படுவது பாசிச போக்கு ஆகும். இது கருத்து சுதந்திரத்தை நெரிக்க கூடிய செயலாகும். எனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    நீட் தேர்வினால் வட மாநிலத்தினர் அதிகமாக தேர்வு செய்யப்படுவது வருத்தப்படக்கூடியது. இதனால்தான் நீட் தேர்வு வேண்டாம், அதை சில காலம்வரை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    லோக் அயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்க கொண்டு வரப்படும் சட்டமாகும். இதில் கட்சிகள் பிரச்சினை அல்ல. அரசு அதிகாரத்தில் ஊழல் செய்பவர்கள் பயப்படவேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenwayRoad #thirunavukkarasar
    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் பேராசிரியர், துணை பேராசிரியர் நியமனத்தில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி பகுதியில் உள்ள ஏழைஎளிய மாணவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு, தொன்னூறுகளில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம். தொடக்க காலத்தில் துணை வேந்தர்களின் நேர்மையான நிர்வாகத்தினால் கல்விப் பணி சிறப்பாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் ஆட்சியாளர்களின் தலையீடு காரணமாக பல்வேறு குளறுபடிகள் ஏற்பட ஆரம்பித்தன.

    தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனம் என்பது தகுதி அடிப்படையில் இல்லாமல் அரசியல் சார்பான முடிவாக மாறி, பின் ‘கோடிகள்‘ மட்டுமே தகுதியை தீர்மானிப்பதாக அமைந்து விட்டது. அதன் காரணமாக பின்பகுதியில் வந்த துணை வேந்தர்கள் பல்கலைக் கழக வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் முதலீட்டு பணத்திற்கு லாபம் சம்பாதிக்கிற நோக்கத்தில் முனைப்பு காட்ட ஆரம்பித்தார்கள்.

    பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர் நியமனங்களில் ஊழல் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது பல்கலைக் கழகத்தின் தாரக மந்திரமாக மாறியது. இதனால் கல்வியின் தரம் அதளபாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் சமீபகாலமாக பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைத்த அடிப்படை தகுதிகளை காற்றில் பறக்க விட்டு பேராசிரியர், இணை பேராசிரியருக்கான பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன. 27 பணி நியமனங்களில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவு தொடங்க அங்கீகாரம் வழங்குவதில் அப்பட்டமான விதிமுறை மீறல்கள் நடைபெற்று ஊழலுக்கு வழிவகுத்துள்ளன.

    பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின்படி ஒருவர் துணை வேந்தர் ஆவதற்கு 10 வருடங்கள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது துணை வேந்தராக உள்ளவர் 7 வருடங்கள் தான் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். எனவே, இவரது நியமனம் செல்லாது என்பதை கூறுவதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

    மேற்சொன்ன அப்பட்டமான விதிமீறல்கள் அனைத்தையும் ஆதாரங்களோடு அறிக்கையாக தொகுத்து தமிழக ஆளுநரிடம் 18.4.2018 அன்று நேரிடையாக மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், மதுரை தெரசா, அழகப்பா பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் வழங்கியிருக்கிறார்கள்.

    ஆளுநர் அறிக்கையை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தும் இது வரை எந்த நடவடிக்கையும் கடந்த இரண்டு மாதங்களாக எடுக்கப்படவில்லை.

    எனவே, பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நிர்வாகம் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #Thirunavukkarasar

    தற்போதைய நிலையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #dmk #congressparty

    ஈரோடு:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்.

    அதன்படி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டம் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    தற்போது தமிழகத்தில் 60 கட்சிகள் உள்ளன. ரஜினி கட்சி தொடங்க இருக்கிறார். விஜய் போன்றோர் கட்சி தொடங்க போவதாக தகவல் உள்ளது. ஏற்கனவே கமல் கட்சி தொடங்கி விட்டார். எனவே தேர்தலுக்கு முன்பு இன்னும் 10 கட்சிகள் வரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அ.தி.மு.க. பல அணிகளாக இருக்கிறது. எனவே தற்போதைய நிலையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாததால் மக்கள் நலத்திட்டப்பணிகள் செய்யப்படவில்லை. எனவே உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விரைந்து முடிக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழலாம்.

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிச்சாலையில் சென்றால் 30 நிமிடம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அது 10 ஆயிரம் கோடி திட்டம் என்றும் கூறுகிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால், ஏற்கனவே இருக்கிற கிராம சாலைகள், நகர சாலைகள், ஒன்றிய சாலைகள், 4 வழி மற்றும் தேசிய சாலைகளை செப்பனிட்டு சரி செய்தாலே அவர்கள் குறிப்பிடும் அளவு நேரத்தை மிச்சப்படுத்த முடியும். எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது. மக்களை மிரட்டி சிறையில் அடைப்பதை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #dmk #congressparty

    மக்களின் உணர்வுப் பூர்வமான போராட்டங்களை அரசு அடக்கு முறையால் முடக்க கூடாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். #thirunavukkarasar #tngovt

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திருநாவுக்கரசர் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களின் உணர்வுகளை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ளவில்லை. காவல் துறையை கொண்டு அடக்கு முறையை ஏவி விட்டதால் 13 பேர் பலியாகி உள்ளனர். முன்னரே மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆலையை மூடியிருந்தால் உயிர் பலி ஏற்பட்டு இருக்காது.

    தற்போது 8 வழிச்சாலை பிரச்சினையிலும் அதே போன்ற நிலையைத்தான் தமிழக அரசு கையாண்டு வருகிறது. போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு, கைது, தடியடி, போலீசாரை கொண்டு மிரட்டல் போன்றவற்றை எடுத்து வருகிறது. மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்த நினைக்க கூடாது. மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்தும் திட்டம் வெற்றி பெறாது.

    ஆளுனரை எதிர்த்தால் 7 ஆண்டு, முதல்-அமைச்சரை எதிர்த்தால் 6 ஆண்டு, பாராளு மன்ற உறுப்பினரை எதிர்த்தால் 3 ஆண்டு, சட்ட மன்ற உறுப்பினரை எதிர்த்தால் 1 ஆண்டு என மக்களை மிரட்டி தமிழக அரசு ஆட்சி நடத்துகிறது. அரசு தவறு செய்தால் அதனை சுட்டிக் காட்டி போராட்டம் நடத்துவதுதான் எதிர் கட்சிகள் மற்றும் மக்களின் வேலை. ஆனால் குரல் கொடுத்தாலே அவர்களின் குரல் வளையை நெரிக்கும் பாசிச போக்கை அரசு கையாளுகிறது. இந்த சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக ரீதியில் அரசை வழி நடத்த வேண்டும்.

    உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு டெல்லி மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு மட்டும் பொருந்துவது கிடையாது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண்பெடி பேசி வருகிறார். அது போன்ற நிலையில்தான் தமிழக ஆளுனரும் நடந்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை வழி நடத்த வேண்டும். ஆளுனருக்கு அந்த அதிகாரம் கிடையாது.

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது மோடியின் விருப்பமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இது சாத்தியமல்ல என்று தேர்தல் கமி‌ஷனே கூறியுள்ளது. தன்னிச்சையான இந்த முடிவை கைவிட்டு காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை அழைத்து பேசி மத்திய அரசு ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் தனது மாநிலத்துக்கு ஆதரவான நிலைப் பாட்டையே குமாரசாமி எடுத்து வருகிறார். தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனிராஜா, மாநகர தலைவர் சொக்கலிங்கம், துணைத்தலைவர் ஆறுமுகம், நிஜகண்ணன், நிர்வாகிகள் வக்கீல்குப்புசாமி, கணேசன், ஹைருல்லா மற்றும் பலர் உடன் இருந்தனர். #thirunavukkarasar #tngovt

    பா.ஜனதாவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என்று காங்கயத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #thirunavukkarasar #bjp

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ப.கோபி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி.குப்புசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் காட்டூர் வெங்கடாச்சலம், பொங்கலூர் வட்டார தலைவர் தியாகராஜன், மற்றும் காங்கயம், வெள்ளகோவில், பொங்கலூர், அவினாசி, பல்லடம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு மூன்றாவதாக மூத்தநீதிபதி ஒருவரை நியமித்து தற்போது வழக்கு விசாரணை தொடங்கி இருப்பது நல்லது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் தள்ளி வைத்து இருப்பது கண்டிக்க தக்கது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். தற்போது சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மக்கள் போராடி வருகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கு எதிராக திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யக்கூடாது. பா.ஜனதாவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை. எனவே மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தாமல் தமிழக மக்களை தொல்லைகளுக்கு உள்ளாக்கும் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.

    தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து விட்டதாக கனவுலகில் மிதந்து வருகிறது. டெல்லி கவர்னர் வி‌ஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அது அனைத்து மாநில கவர்னர்களுக்கும் பொருந்தும். அதன்படி கவனர்கள் நடந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு வேறு அல்ல. மத்திய அரசு வேறு அல்ல, இரண்டும் பா.ஜனதா அரசுதான். பா.ஜனதா மற்ற மாநிலங்களில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சி நடத்துகிறது. ஆனால் தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். காங்கயத்தில் இரும்பு தாது எடுக்கும் விவகாரத்தில் மக்கள் பக்கம் காங்கிரஸ் நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #bjp

    அரசுக்கு எதிராக போராடும் பொதுமக்களை ஜனநாயகத்திற்கு விரோதமாக கைது செய்வதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    8 வழி சாலையாக என்றாலும் சரி, மக்களுக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் கண்டித்து அரசியல் கட்சிகளோ பொது மக்களோ போராடுகிறபோது பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டுமே தவிர பிரச்சினையை மக்களுக்காக எழுப்புபவர்களை அடக்குகிறவிதமாக வழக்கு போடுவது, கைது செய்வது ஜனநாயக விரோதமான ஃபாஸிச போக்கு. அதை காங்கிரஸ் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். சிறு குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை கட்டாயப்படுத்தி எடுக்கப்படுவதால் போராடுகிறார்கள். அவர்களுடைய பிரச்சினையை கையில் எடுப்பது அரசியல் கட்சியின் கடமையாகும். அதற்காக கைது செய்வது தவறானது. இதுவரை நடைமுறையில் இல்லாத போராட்டங்களை நசுக்குகிற செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவரப்படுவது காலதாமதமாக இருந்தாலும் நான் வரவேற்கிறேன். இதில் முதலமைச்சர் உள்பட அனைவரையும் விசாரிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    தமிழகத்தில் எய்மஸ் மருத்துவமணை வருகிறதை வரவேற்கிறேன். இதற்கு மத்திய அரசு நிதியை உடனடியாக அளிக்க வேண்டும். மாநில அரசு நிதி பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை ஏன் அரசு நிறுத்தி உள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் தவறா? அல்லது தற்போது அரசு செய்துள்ளது தவறா? என்பதை அமைச்சர் தங்கமணி தெரிவிக்க வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரித்து காலதாமதமின்றி விரைவாக தீர்ப்பு வர வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முடிவில் அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்றக்கூடாது என்று கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    பீளமேடு:

    கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருப்பது வரவேற்கத்தக்கது. இவர்கள் அந்தந்த தொகுதியில் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து 9 மாத காலத்துக்கு மேலாக செய்யாமல் இருப்பதால் அந்த பகுதியின் மக்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்கும் என நம்புகிறோம். இந்த தீர்ப்பின் மூலம் சபாநாயகரின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பு வரும்பட்சத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மேலும் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

    நாடு முழுவதும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்து உள்ள நிலையில் மத்தியில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகள், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்தை அறிந்து முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நடத்த கூடாது என்ற எண்ணத்தில் தனி அலுவலர்களின் பணியை காலநீட்டிப்பு செய்துள்ளனர்.


    அரசுக்கு எதிர் கருத்து கூறுபவர்களை சிறையில் அடைத்தும், துப்பாக்கி சூடுநடத்தியும், மக்களின் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்ற கூடாது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மக்களின் அன்றாட பயன்பாட்டு செலவுகள், கட்டுமான பொருட்கள் போன்றவை உயர்ந்துஉள்ளது. இது குறித்து மத்திய அரசு தொடர்ந்து விவாதம் செய்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது.

    நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்களை ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு மருத்துவ வசதி மற்றும் பிற வசதிகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    ×