search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    8 வழிச்சாலை பசுமை திட்டத்தில் விவசாயிகளை காவல் துறையினர் மூலம் அச்சுறுத்துவது ஜனநாயக மக்கள் விரோத போக்கு என்று திருநாவுக்கரசர் கூறினார். #congress #thirunavukkarasar
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆய்வு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ராஜபாளையத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழகத்தில் சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள் காவல்துறையை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி, அவர்களின் நிலத்தை அபகரிக்க முயல்வது ஜனநாயக மக்கள் விரோத போக்காகும்.

    சமீப காலமாக சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. இப்பிரச்சனை நிகழாமல் இருக்க மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காவல்துறை எண்ணிக்கையை அதிகரித்து மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மோடி ஆட்சியில் மத்திய அரசின் சார்பிலோ அல்லது மாநில அரசின் சார்பிலோ எந்த தொழில் நுட்பமும் கடந்த நான்கு ஆண்டுகளில் தொடங்கப்படவில்லை. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியின்மை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

    குஜராத், பீகார் போல் தமிழகத்திலும் பூரண மது விலக்கு அமல்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன், ராஜ பாளையம் நகர கமிட்டி நிர்வாகி சங்கர்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். #congress #thirunavukkarasar
    தாமிரம் கிடைக்கவில்லை எனக்கூறி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    சென்னை:

    தாமிரம் கிடைக்கவில்லை எனக்கூறி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன், உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், நேற்று குமரி அனந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    பின்னர் திருநாவுக்கரசர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரம் கிடைப்பது இல்லை என அமைச்சர் தங்கமணி கூறி இருப்பது, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது போல் உள்ளது. இதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது. தாமிரம் போன்ற பொருட்களை வாங்க அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இதை காரணம் காட்டி மின்தடை ஏற்படும் சூழ்நிலையையும் ஏற்படுத்தக்கூடாது. மின் துறை அமைச்சரின் பேச்சு, மக்களின் குரலாக இல்லாமல் ஸ்டெர்லைட்டின் குரலாக இருப்பது கண்டனத்துக்குரியது.

    மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நீட் தேர்வு காரணமாக தொடரும் மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் வேதனையை தருகிறது. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டு நீட் தேர்வில் தோல்வி அடைவதால் அவர்களின் டாக்டராகும் கனவு தகர்ந்து விடுகிறது.

    மாணவர்களின் நலனை அரசு புறக்கணித்துவிட்டது. இதற்காக பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தக்கூடாது. உயிரை மாய்த்துக்கொள்வதால் இதற்கு தீர்வு ஏற்படாது. தற்கொலை செய்வதை மாணவ-மாணவிகள் தவிர்க்க வேண்டும்.

    தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் சில காலத்துக்கு நீட் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசிடம், தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தமிழகத்தில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாகவும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாகவும் அனைத்து தொழில்களும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.

    201718 -ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் பெருமளவு சரிந்துள்ளது.

    இதனால் வேலை வாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இந்த கொள்கை விளக்க குறிப்பின் அடிப்படையில் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    தமிழகத்தின் தொழில் முதலீடுகள் 2015 -ம் ஆண்டு முதலே குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடு வெறும் 0.8 சதவீதம் தான். முதல் 10 இடங்களைப் பெற்ற மாநிலங்களில் தமிழகம் இல்லை.

    ஹுன்டாய் மோட்டார் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது உற்பத்தி பிரிவை தொடங்க முயற்சி எடுத்தது. அது தொடர்பாக ஆட்சியாளர்களோடு பேசியதில் அவர்கள் கூறிய நிபந்தனைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து அந்நிறுவனம் ஆந்திராவிற்கு போகிற நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar
    ‘நீட்’ அநீதியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க கடுமையான போராட்டங்களுக்கான வியூகத்தை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திணிப்பை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டதையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டதால் ஏற்படுகிற பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    தற்போது நடத்தப்பட்ட நீட் தேர்வில் தேசிய அளவில் மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 45 ஆயிரத்து 336 மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. இது 39.56 சதவீதமாகும்.

    எதிர்காலங்களில் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    செஞ்சிக்கு அருகில் பெருவர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்கிற தலித் மாணவி 1125 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப நிகழ்வு நடந்துள்ளது.

    இத்தகைய தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், அதில் 3050 இடங்கள் இருந்தாலும் நீட் தேர்வு காரணமாக நமது மாநிலத்திலேயே மருத்துவ படிப்பில் சேருகிற வாய்ப்பை இழக்க வேண்டிய மோசமான நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு தான் காரணமாகும்.

    எனவே, தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதிகள் பல முனைகளில் தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகின்றன. இந்த அநீதிகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தி வருகின்றன. இந்த அநீதியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க கடுமையான போராட்டங்களுக்கான வியூகத்தை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா. ஜனதாவை விழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும், வருங்காலத்தில் ராகுல்காந்தி தான் பிரதமர் என்று திருநாவுக்கரசர் பேசினார்.
    பள்ளிபானையம்:

    நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் பள்ளிபாளையத்தில் மாவட்ட தலைவர் பி.டி. தனகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 52 ஆண்டுகள் ஆட்சியில்  இல்லா விட்டாலும் காங்கிரஸ் கட்சி உயிர்ரோட்டமாக உள்ளது. தமிழகத்தில் பதிவு பெற்ற கட்சிகளாக 65 உள்ளது. இதில் 2-வது பெரிய கட்சி காங்கிரஸ் தான், மூன்றாவது அணி, நான்காவது அணிக்கு வாய்ப்பு இல்லை.

    பாரதீய ஜனதாவை விழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும், இந்தியாவில் மாற்றத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தரமுடியும். வருங்காலத்தில் ராகுல்காந்தி தான் பிரதமர். 

    இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட இளைஞர்அணி தலைவர் சதிஷ்குமார், பள்ளிபாளையம் நகர தலைவர் வசந்தா பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்  வட்டார தலைவர் ஜலில் நன்றி கூறினார்.
    யார் ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது என விவாதிக்க மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் தயாரா? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.#MKStalin #DMK #BJP #Tamilisai
    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விலக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். அதை போக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாக உள்ளது. குழுக்கள் அமைத்து மக்களுக்கு ஆதரவாக அரசு செயல்படவேண்டும். அரசின் ஆதரவு இல்லாததால் வேறு யார் மூலமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் செல்கின்றனர்.

    தூத்துக்குடியில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். மக்களுக்கு ஆதரவாக இருக்க முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து பொருளாதார ரீதியாக அரசியல் கட்சிகள் என்ன வாங்குகிறார்கள்? என்று எனக்கு தெரியாது.

    ஸ்டெர்லைட் நிர்வாகிகள் என்னை சந்திக்கவேண்டும் என்று கூறியபோது நான் மறுத்துவிட்டேன். பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார விவகாரங்கள் எனக்கு தெரியாது. அதுபற்றி கேட்காதீர்கள். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு உள்துறை மந்திரி வருத்தத்தை தெரிவித்து உள்ளார்.

    மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஆதரவாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியது தமிழக போலீஸ்தான். இதை கண்காணிக்க தமிழக உளவுத்துறை தவறிவிட்டது. ஆனால் துப்பாக்கி சூட்டிற்கு மோடிதான் காரணம் என்று பொய்யான பிரசாரம் செய்யப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இதை ஜி.எஸ்.டி.க்குள் விரைவில் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்து மக்கள் பயன்பெறுவார்கள்.



    தூத்துக்குடிக்கு அமைச்சர்கள் செல்வது ஆரோக்கியமான சூழ்நிலையாகும். கலவரத்திற்கு பிறகு அப்படியே விட்டுவிடாமல் அரசு சென்று மக்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு முழுபாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    மத்திய அரசு 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு என்ன செய்து உள்ளது என்ற விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்?. யாருடைய ஆட்சி காலத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது? என்று விவாதம் நடத்த மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் தயாரா?. காவிரி விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறதோ அதை மத்திய அரசு கடைபிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #DMK #BJP #Tamilisai
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். #Thirunavukkarasar #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் நேற்று தனித்தனியாக தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர்.

    அப்போது, திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    அராஜகமாக, காட்டுமிராண்டித்தனமாக போலீசார் நடந்து இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் நடந்த போராட்டத்தில் 5 கிலோமீட்டர் தூரம் வரை அமைதியாக வந்துள்ளனர்.

    குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு போலீசார் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் 12 பேர் இறந்துள்ளனர். ஜனநாயக நாட்டில் அறவழியில் நடந்த போராட்டத்திற்கு தீர்வு காணாமல் துப்பாக்கி குண்டுகள் மூலம் முடிவு கட்ட முயற்சி செய்து உள்ளனர். பாசிச ஆட்சி போல் இத்தனை பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு மூல காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறுகையில், “துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசு, காவல்துறை சேர்ந்து பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தி உள்ளது. காவல்துறை திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளது. காக்கை, குருவிகளை போல், மனிதர்களை படுகொலை செய்து உள்ளனர். இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்றார்.  #Thirunavukkarasar #SterliteProtest
    ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர்.#RajivDeathAnniversary
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமாக சத்திய மூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு, மாநில தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து திருநாவுக்கரசர் தலைமையில் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக சட்டம் தன் கடமையைச் செய்யும் என தெரிவித்தார்.

    அதிமுக உடைந்து பலவீனமாகிவிட்டதால், தமிழகத்தில் 2வது பெரிய கட்சி காங்கிரஸ்தான் என்றும், காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை குமாரசாமி மதித்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.  #RajivDeathAnniversary
    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக குஷ்பு ஆதரவாளர்கள் அணி திரண்டு வருகிறார்கள். அவர்கள் திருநாவுக்கரசருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். #Congress #Khushboo
    சென்னை:

    நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை விமர்சனம் செய்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் இன்னும் 1 மாதத்தில் நீக்கப்படுவார் என்றார்.

    இதற்கு பதிலடி கொடுத்த திருநாவுக்கரசர், குஷ்புவை கடுமையாக விமர்சித்தார். அவர் தி.மு.க.வில் இருந்து செருப்பு, முட்டை வீசி வெளியேற்றப்பட்டார் என்றார். இந்த மோதல் காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் குஷ்பு ஆதரவாளர்கள் திருநாவுக்கரசருக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள். அவர்கள் திருநாவுக்கரசருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    குஷ்பு ஆதரவாளர்களான தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது இஸ்மாயில், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணிகண்டன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டி சம்மந்தமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நாகரீகமில்லாத மிகவும் தரக்குறைவான கடுமையான வார்த்தைகளால் குஷ்புவை பேசியுள்ளார். தனது தகுதியை மறந்து பேசியுள்ளார்.

    பெண்களை தெய்வமாக போற்றும் நமது நாட்டில் பெண்களைப் பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவது இரும்பு மங்கை எனப்போற்றப்படும் இந்திரா காந்தியின் உருவமாக காங்கிரசாரால் கொண்டாடப்படும் சோனியா காந்தியின் வழிகாட்டுதலால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு இழுக்கு என்பதை தாங்கள் ஏன் உணரவில்லை?

    பெண்களை கேவலமாக பேசி ஜாமீன் கூட பெற முடியாமல் ஊர் ஊராக மாறு வேடத்தில் சுற்றித் திரியும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.வி. சேகரின் பேச்சுக்கும் உங்களின் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்.

    சிறுபான்மை சமுதாயத்தை தாங்கள் இழிவு படுத்துவது புதிதல்ல. தாங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வந்த பிறகு காங்கிரஸ் தலைமையிலான சத்தியமூர்த்தி பவனிலேயே அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் அசீனா தங்கள் முன்னிலையிலேயே தாக்கப்பட்டார்.

    பெண்கள் பாதுகாப்பிற்காகவும், சிறுபான்மையினர் பாதுகாப்பிற்காகவும், போராட்டங்களும், மக்கள் இயக்கங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் ஆணாதிக்க அரசியலில் தன்னாலும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியோடு, குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்திலிருந்து அரசியலுக்கு வந்து தேசிய அளவில் பதவியை பெற்று பணியாற்றி வரும் குஷ்புவை பெண் என்றும் பாராமல் தாங்கள் பேசியிருப்பது சிறுபான்மை மக்களின் மீது தாங்கள் கொண்டிருக்கும் மனநிலையை உணர்த்துகிறது.

    இதை வன்மையாக கண்டிக்கிறேன். சொந்த கட்சிக்காரர்களின் சரமாரி கேள்வி கணைகளாலும் மாற்று கட்சி நண்பர்களின் கட்சித் தலைவர் இப்படி பேசலாமா எனும் தொடர் கேள்வியாலும் இக்கோரிக்கையை வைக்கிறோம்.

    ராகுலின் கரத்தை வலுப்படுத்தி ராகுலால் நியமிக்கப்பட்ட எங்கள் மாநில தலைவர் உங்கள் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வீறு கொண்டு எழ ராகுலால் நியமிக்கப்பட்ட குஷ்புவை நீங்கள் மதித்து பேசும் பேச்சு ராகுலை பெருமை படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Congress #Khushboo
    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு கவிழும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #KarnatakaElection #Thirunavukkarasar
    சென்னை:

    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து கூறியதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 15 நாள் கால அவகாசம் என்பது ஒரு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் முதல்-அமைச்சர் மட்டும் இருந்து கொண்டு ஆட்சி அமைக்க முடியாது.

    நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. வெறும் 104 இடங்களை வைத்துள்ள பா.ஜனதாவால் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அதனால் எடியூரப்பா அரசாங்கம் கண்டிப்பாக கவிழும்.

    காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் சேர்ந்து ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்படும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது முதல் பெரிய கட்சி பா.ஜனதா என்கிறார். அப்படி பார்த்தால் பீகாரில் ஆர்.ஜே.டி. லாலு கட்சிதான் பெரிய கட்சி. லாலுவும் நிதிஷ் குமாரும் சேர்ந்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைத்தனர். அதன்பிறகு அதை உடைத்து பி.ஜே.பியும் நிதிஷ்குமாரும் சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.

    அந்த மாநிலத்தில் அதிக இடங்களை பிடித்தது லாலு கட்சிதான் அவர்களுக்குதான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    அதே மாதிரிதான் கோவாவில் கங்கிரசுக்கு 28, பா.ஜனதாவுக்கு 22 இடம் தான் உள்ளது. இதேபோல் மிசோரம் மாநிலத்திலும் நிலைமை உள்ளது. இப்படி பல மாநிலங்களில் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நிலையில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.

    4 மாநிலத்தில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சிகள் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோவாவில் ஆரம்பித்து மற்ற மாநிலங்களிலும் கேட்க ஆரம்பித்துள்ளன.


    எனவே ஜனநாயக விரோதமாக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க கவர்னரை ஏஜெண்டாக பயன்படுத்தும் தவறான வழிமுறையை பிரதமர் மோடியும் மத்திய பா.ஜனதா அரசும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

    கர்நாடக சட்டசபையில் நடக்கும் தீர்ப்பின் மூலமாக கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும்போது ஒரு சரியான பாடத்தை பா.ஜனதா கற்றுக்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Congress #KarnatakaElection #Thirunavukkarasar
    தி.மு.க.வில் இருந்து முட்டை, செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்ட குஷ்புவின் நடிப்பு காங்கிரஸ் கட்சியில் எடுபடாது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukarasar #Kushboo #Congress
    சென்னை:

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்வதில் தவறு கிடையாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எந்த கட்சியுடனும் ஆயுட்கால கூட்டணி வைக்க முடியாது. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ?. அதன்படி நாம் கூட்டணியை அமைக்கிறோம். தற்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடருகிறது.

    நான் ராகுல்காந்தியின் நேரடி உத்தரவின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?. பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    உண்மைக்கு மாறான தகவல்களை எப்படி அவர் கூறலாம். அதற்கான தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது?. தலைமை இவரிடம் கருத்து கேட்டதா?. இதுபோன்ற பொய்யான புகார்களை குஷ்பு தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

    குஷ்பு ஒரு நடிகை. படங்களில் அவர் எந்த வேடத்திலும் நடிக்கலாம். ஆனால் காங்கிரசில் அவர் நடிப்பு எடுபடாது. தி.மு.க.வில் இருந்தபோது நீங்கள் ஏன் வெளியேற்றப்பட்டீர்கள் என்பது தமிழக மக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் தெரியும். முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இலவசமாக அவர் பிரசாரம் செய்யவில்லை. ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு தான் பிரசாரம் செய்தார். பிறகு குளுகுளு அறையில் போய் படுத்துக்கொண்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மகன் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்ய அந்த தலைவர் அழைத்தபோது, அதிக பணம் கேட்டார். இத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தி.மு.க.வில் நடந்தது போல், காங்கிரஸ் கட்சியிலும் முட்டை வீச்சு, செருப்பு வீச்சு நடத்தப்படும் நிலை ஏற்படும். அந்த நிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நான் எம்.ஜி.ஆர்., வாஜ்பாய், ராகுல்காந்தி ஆகியோருடன் பழகியவன். அரசியல் பயின்றவன்.

    காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபிறகு எத்தனை முறை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறீர்கள். காசு வாங்காமல் கட்சி பணி ஆற்றியது உண்டா?. நான் ஜெயலலிதாவையே பார்த்தவன், குஷ்பு எம்மாத்திரம். தி.மு.க.வில் அவர் பேச்சாளராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது தான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கூறிய கருத்துகள் தி.மு.க.வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின. இதை தமிழக மக்களும், தி.மு.க.வினரும் மறக்கவில்லை.

    2 மாதத்தில் என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கி விடுவதாக கூறுகிறார். முடியுமா?. அப்படி என்னை பதவியில் இருந்து தூக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய அவர் தயாரா?. சொன்னது நிறைவேறவில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா?. வேண்டாத வேலைகளை, கயிறு திரிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thirunavukarasar #Kushboo #Congress 
    கர்நாடகத்தில் அதிக இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும், காங்கிரஸ்- ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018
    அவனியாபுரம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் 38 சதவீத வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இது பா.ஜ.க.வை விட 2 சதவீதம் அதிகம் ஆகும்.

    பா.ஜ.க. 104 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. 108 பெரிதா? 118 பெரிதா? இதனை புரிந்து கொள்ள கோவா, திரிபுரா மாநிலங்களில் உள்ளது போல, கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

    ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு எடப்பாடி-ஓ.பி.எஸ்.சுக்கு இல்லை. இருவரும் பா.ஜ.க.வுக்கு துணை போகிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு பா.ஜ.க.வை வாழ்த்துகிறார்கள்.



    தமிழகத்தில் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

    காவிரி பிரச்சினையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் தர மாட்டார்கள். இது குறித்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டு மூலம் கட்டாயப்படுத்த வேண்டும்.

    எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ளது போல் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #Thirunavukkarasar
    ×