search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நளினி"

    ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி, மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்ட மனுவை இன்று வாபஸ் பெற்றார். #RajivGandhiCase #Nalini
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி நளினி, வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலிலேயே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஹரித்ரா என்று பெயரிட்டார்.

    தற்போது லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைக்க நளினி முடிவு செய்தார். கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி பரோல் கேட்டு நளினி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். மேலும் சிறைத்துறை தலைவரிடமும் முறையிட்டார். ஆனால், பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ஜெயிலில் நளினி உண்ணாவிரதம் இருந்தார்.



    இதற்கிடையே, மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நளினி வாபஸ் பெற்றார். இதையடுத்து, அந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து ஆளுநர் முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் பரோல் மனுவை நளினி வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #RajivGandhiCase #Nalini
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #RajivCaseConvicts
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

    தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் கலைஞர் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த கழகத்தின் நிலைப்பாடாகும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும்; 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RajivCaseConvicts #DMK #MKStalin
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

    தமிழக விரைவு கோர்ட்டில் நடந்த விசாரணையில் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.

    ஆனால் அந்த மனு மீது எந்த ஜனாதிபதியும் முடிவு எடுத்து அறிவிக்கவில்லை. இதற்கிடையே கருணை மனு தாக்கல் செய்து நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது.

    அந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருப்பதால் தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் மத்திய அரசு ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தண்டனை பெற்ற 7 பேரும் விடுதலையாவதில் சிக்கல் நீடித்தப்படி இருந்தது.


    இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். இதற்காக சட்டசபையில் அவர் தீர்மானமும் கொண்டு வந்தார்.

    அந்த தீர்மானத்தை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால் அதில் தமிழக அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள உரிமைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:-

    ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம்.

    இது தொடர்பாக தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். 2016-ம் ஆண்டு தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் கவர்னரே முடிவு செய்யலாம்.

    எனவே மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.

    சுப்ரீம்கோர்ட்டின் இன்றைய பரபரப்பு தீர்ப்பு காரணமாக ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் விரைவில் விடுதலையாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவர்னர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்பார். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். அநேகமாக 7 பேரை விடுவிக்க கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேரறிவாளன் வக்கீல் பாபு இதுகுறித்து கூறுகையில், “தமிழக அரசு கவர்னரை சந்தித்து பேசி 7 பேர் விடுதலைக்கு உதவ வேண்டும்” என்றார். 

    இதனை அடுத்து, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt
    ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி, பல்வலிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    வேலூர்:

    முன்னாள் பிரமதர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    15 நாட்களுக்கு ஒருமுறை முருகன், மனைவி நளினியை சந்திக்கிறார். இந்த நிலையில், நளினி கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். ஓரிரு நாட்களாக பல்வலி அதிகமானது.

    இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை 9.20 மணிக்கு நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். கடவாய் சொத்தை பல் ஒன்று பிடுங்கப்பட்டது.

    1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு 10.30 மணி அளவில் மீண்டும் வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு நளினி அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி, பல் வலிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    15 நாட்களுக்கு ஒருமுறை முருகன், மனைவி நளினியை சந்திக்கிறார். இந்த நிலையில், நளினி கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். ஓரிரு நாட்களாக பல்வலி அதிகமானது.

    இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை 9.20 மணிக்கு நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். 1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு 10.30 மணி அளவில் மீண்டும் வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு நளினி அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் - நளினி ஆகியோர் போலீசார் பலத்த காவலுடன் வேலூர் ஜெயிலில் சந்தித்து பேசினர்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவரும் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து ஒரு மணி நேரம் பேசி வருகின்றனர்.

    அதன்படி, நேற்று காலை ஆண்கள் ஜெயிலில் உள்ள முருகனை, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஆயுதப்படை போலீசார் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு நளினியை காலை 7.50 மணி முதல் 8.50 மணி வரை சந்தித்து முருகன் பேசினார்.

    பின்னர் அவர் மீண்டும் பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்டு ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 
    ×