search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    வருகிற 31-ந்தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிக்குமாறு சிவசேனாவுக்கு, பா.ஜனதா தலைவர் அமித்ஷா கெடு விதித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. #AmitShah #ShivSena
    மும்பை :

    பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிலும், மராட்டிய மாநில அரசிலும் சிவசேனா அங்கம் வகிக்கிறது. எனினும் சிவசேனா எதிர்க்கட்சியான காங்கிரசை காட்டிலும் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. சமீபத்தில் பண்டர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். ஊழல் புகார்களில் சிக்கி உள்ள பா.ஜனதாவுடன் நாங்கள் ஏன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை இரு கட்சிகளும் இணைந்தே சந்தித்தன. இந்த தடவை நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி நீடிக்குமா?. சட்டசபை தேர்தலை போல கூட்டணி முறியுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.



    இந்தநிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் அக்கட்சியின் மராட்டிய மாநில எம்.பி.க்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, அவர் சிவசேனா கூட்டணிக்கு வரவில்லையென்றால் தனித்து போட்டியிட தயாராக இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களிடம் அறிவுறுத்தினார். மேலும் கூட்டணிக்காக சிவசேனா சொல்லுவதற்கு எல்லாம் நம்மால் ஆட முடியாது. வருகிற 31-ந்தேதிக்குள் அவர்கள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை தனித்து சந்திப்பது குறித்து நீங்கள் முடிவு எடுக்கலாம் என்று பா.ஜனதா எம்.பி.க்களிடம் அமித்ஷா கூறியதாக தெரியவந்துள்ளது.

    இது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் கேட்டபோது, இந்த கெடுவை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அல்லது பா.ஜனதா தலைவர் அமித்ஷா எங்களுக்கு விதித்து உள்ளாரா?. அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவிக்கட்டும். அதன் பிறகு நாங்கள் பதில் அளிக்கிறோம், என்றார். #AmitShah #ShivSena
    பா.ஜனதாவுடன் கூட்டு சேர அதிமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #BJP #ADMK #Parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை அரசியல்வாதிகளும் பொது மக்களும் எதிர் கொள்ள இன்னும் சுமார் 100 நாட்களே உள்ளன.

    இன்னும் 2 மாதத்தில் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது.

    தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை பெரும்பாலான மாநில கட்சிகள் கூட்டணியை மாற்றி உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இந்த தடவை இடம்மாறி உள்ளன. அதுபோல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு பல புதிய கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

    இதற்கிடையே பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தெலுங்கானா, ஒடிசா உள்பட சில மாநில கட்சிகளின் தலைவர்கள் மூன்றாவது அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்றாவது அணி உருவானால் அது பல மாநிலங்களில் காங்கிரஸ், பா.ஜ.க. அணிகளுக்கு கிடைக்கும் வாக்குகளை கணிசமாக பிரிக்கும். இதனால் வாக்குகள் சிதறும். இது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்குமா என்பது கணிக்க முடியாதபடி உள்ளது.

    இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் அமைய உள்ள கூட்டணி உடன்பாடுகள் பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுக்கும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    தமிழ்நாட்டை பொருத்த வரை பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே தனி செல்வாக்கு இல்லை. எனவே அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் உருவாகும் கூட்டணியே பிரதானமாக உள்ளது. அந்த வகையில் தி.மு.க. தலைமையில் கூட்டணி தயாராகி விட்டது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் உறுதியாக உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. அந்த கூட்டணியில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. இடம் பெறும் என்று கடந்த சில மாதங்களாக பேச்சு நிலவுகிறது.


    சமீபத்தில் அ.தி.மு.க. மந்திரிகள் தங்கமணி, வேலு மணி இருவரும் டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்த போது கூட்டணி தொடர்பாகவும் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியானது. பா.ஜ.க. 12 தொகுதிகளை கேட்டதாகவும், அதில் பெரும்பாலான எம்.பி. தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் உள்ளதால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அதிர்ச்சியிலும் தயக்கத்திலும் இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க.வை சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக தற்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்களில் சுமார் 10 பேர் பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் ஒரு காரணத்தையும் கூறி வருகிறார்கள்.

    பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்தால் அது பா.ஜ.க.வை மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் சேர்த்து பாதித்து விடும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் சொல்கிறார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்களின் இந்த கருத்தை சில அ.தி.மு.க. மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் ஆதரித்துள்ளனர். எனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி பற்றி பேசி முடிவு செய்யும் முன்பு தங்களுடன் கலந்து பேச வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் கூறுகையில், “பா.ஜ.க. எங்களை வாசலுக்கு வெளியில் கிடக்கும் மிதியடிபோல நடத்துகிறது. அந்த கட்சியுடன் எப்படி கூட்டணி சேர முடியும்?” என்று ஆவேசமாக கேட்டார்.

    மற்றொரு அ.தி.மு.க. எம்.பி. கூறுகையில், “ஒவ்வொரு ஓட்டுச்சாவடி பூத்களிலும் உட்காருவதற்கே பா.ஜ.க.வில் ஆள் இல்லை. அப்படிப்பட்ட கட்சியுடன் கூட்டணி வைப்பதால் அ.தி.மு.க.வுக்கு எந்த லாபமும் இல்லை” என்றார்.

    அ.தி.மு.க. எம்.பி.க்களில் 6 அல்லது 8 எம்.பி.க்கள்தான் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக தெரிகிறது. இதை கண்டு கொள்ளாத பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும் பாலானவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்கள் பா.ஜ.க. கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இடம் பெற செய்ய வேண்டும் என்று 99 சதவீத அ.தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்தியபடி உள்ளனர்.

    வட மாவட்டங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தி வாய்ந்த கட்சியான பா.ம.க., நிச்சயமாக கூட்டணி சேரும் முடிவில்தான் இருக்கிறது. தி.மு.க.வில் ஏற்கனவே நிறைய கட்சிகள் சேர்ந்துவிட்டதால் பா.ம.க. அங்கு செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தே.மு.தி.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தி.மு.க.வில் த.மா.கா.வுக்கு இடம் இல்லை என்று கூறப்பட்டுவிட்டதாம். காங்கிரசின் எதிர்ப்பு காரணமாக த.மா.கா.வை தி.மு.க.வினர் கழற்றி விட்டு விட்டனர்.

    எனவே த.மா.கா.வும் அ.தி.மு.க. கூட்டணி பக்கம் வந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இடம் பெறும் என்று கருதப்படுகிறது.

    இது அ.தி.மு.க.வை மெகா கூட்டணியாக மாறச் செய்யும். ரஜினியின் ஆதரவும் இந்த கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் சமபலத்துடன் மோதும் பரபரப்பான நிலை உருவாகும்.  #BJP #ADMK #Parliamentelection

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் கமல் தனது சொந்த ஊரான பரமக்குடி அடங்கியுள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. #KamalHaasan #Congress

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தீவிரமாகி உள்ளன.

    தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

    தமிழகத்திலும் தி.மு.க. தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பல கட்சிகள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வையும், மத்தியில் பா.ஜனதாவையும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வரும் கமல்ஹாசனும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். கூட்டணி அமைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று கூறி இருக்கும் கமல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவது உறுதியாகி உள்ளது. அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் அது பா.ஜனதாவுக்கு எதிராக அமையும். காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாகவே அமையும்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள கமல் தேர்தல் களத்தில் குதிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    தனது சொந்த ஊரான பரமக்குடி அடங்கியுள்ள ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

    சொந்த தொகுதியில் போடடியிட்டால் அது கூடுதல் பலமாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடனும் கமல் கருத்துக்களை கேட்டு வருகிறார். அதே நேரத்தில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நேரத்தில் டெல்லி சென்றிருந்த கமல் அங்கு சோனியா- ராகுல் ஆகியோரை சந்தித்து பேசினார்.

    இதுபற்றி அவர் கூறும் போது, காங்கிரஸ் தலைவர்களுடன் அரசியல் நிலவரம் பற்றி பேசினேன் என்று கூறியிருந்தார். இதன் மூலம் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே காங்கிரஸ் தலைவர்களுடன் கமல் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.

    நேற்றைய பேட்டியில் கூட கூட்டணி தொடர்பாக காங்கிரசுடன் பேச்சு நடப்பதாகவே கமல் கூறியுள்ளார். இதனால் காங்கிரசுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் போது கமலுக்கும் சேர்த்தே தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #KamalHaasan #Congress

    தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்றும் அது நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும் என்றும் ஜி.கே.வாசன் கூறினார். #TamilMaanilacongress #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தை தொடங்கி வைத்து ஜி.கே.வாசன் பேசியதாவது:-

    தா.மா.கா. தமிழக அரசியல் கட்சிகளில் வித்தியாசமான கட்சி. அரசியலில் நேர்மையும் தூய்மையும் நிலைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில் முன்னணி கட்சியாக திகழ்கிறது.

    அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. என்பதை வெளிப்படுத்தும் வகையில் மக்களின் ஆதரவு பெருகி உள்ளது. தேர்தல் வருவதால் தொண்டர்கள் மேலும் உற்சாகமாக செயல்பட வேண்டும். நமக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    த.மா.கா.வின் அடையாள சின்னமான சைக்கிள் சின்னம் மீண்டும் நமக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு கோர்ட்டு தீர்ப்பின் மூலம் பிரகாசமாகி உள்ளது. அதை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    கூட்டணி அமைப்பதற்கான முடிவை தலைவர் என்ற முறையில் என்னிடம் வழங்கி உள்ளீர்கள். உங்கள் கருத்தையும் அறிந்து மக்கள் ஏற்கும் கூட்டணியில் த.மா.கா. இடம்பெறும்.

    தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அது நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    * கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாய கடன், கல்விக்கடன் அனைத்தையும் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

    *ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.

    * வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் முடிவை கட்சி தலைவரான ஜி.கே. வாசன் இடம் ஒப்படைப்பது.

    * ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தடுக்க தேர்தல் கமி‌ஷன் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணைத் தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், என்.எஸ்.வி. சித்தன், தலைமை நிலையச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேசன், டி.எம்.பிரபாகர், டி.என்.அசோகன், சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜு.சாக்கோ, சைதை மனோகரன், அண்ணாநகர் ராம்குமார் அருண்குமார், விக்டரி மோகன், தாம்பரம் மணி, சிவகுமார், டி.ஆர்.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TamilMaanilacongress #GKVasan
    தேர்தல் தோல்வியில் இருந்து பாஜக பாடம் கற்கவில்லை என்று சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது. #ShivSena

    மும்பை:

    மத்தியிலும், மராட்டிய மாநிலத்திலும் சிவசேனா கட்சி பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது.

    ஆனால், பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் சமீப காலமாக சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது.

    கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படாமல் அதன் உறுப்பினர்கள் சபையை புறக்கணித்தனர்.

    அந்த விவகாரத்தின் போது, ராகுல்காந்தி அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து பேசியதை சிவசேனா பாராட்டியது.

    இதன் பிறகும் பாரதிய ஜனதாவை சிவசேனா ஒவ்வொரு வி‌ஷயத்திலும் விமர்சித்து வருகிறது. 3 மாநிலத்தில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்ததற்கு மோடியே காரணம் என்றும் சிவசேனா கூறி இருந்தது.

    இந்த நிலையில் ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சிவசேனா பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    2014 பாராளுமன்ற தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று உறுதி அளித்தார்கள். அதனால்தான் ஆட்சிக்கும் வந்தார்கள்.


     

    ஆனால், ஆட்சி இப்போது முடிய போகும் நிலையில் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஏராளமான வெற்று வாக்குறுதிகளை கொடுத்தது. அதேபோல்தான் ராமர் கோவில் கட்டுவோம் என்றும் வெற்று வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்.

    இப்போது தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே ஏன் ராமர் கோவில் கட்டவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் ராமர் கோவில் பற்றி பாரதிய ஜனதா ஏதேதோ சொல்லி கொண்டு இருக்கிறது.

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறும்போது, நிதானமாக இருப்போம், சரியான நேரத்தில் எல்லாம் நடக்கும் என்று கூறுகிறார்.

    மத்திய மந்திரி நிதின் கட்காரி ராமர் கோவிலை அனைவருடைய ஒப்புதலோடும், ஒத்துழைப்போடும் கட்டுவோம் என்று கூறுகிறார்.

    எப்போது கோவில் கட்டப்போகிறீர்கள்? ராமர் கிட்டத்திட்ட 25 ஆண்டுகள் காத்து இருந்து விட்டார். நீங்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தும் கட்ட முடியவில்லை.

    எவ்வளவு காலம்தான் கும்பகர்ண தூக்கத்தில் இருக்க போகிறீர்கள்? 3 மாநிலத்தில் தோல்வி அடைந்து இருக்கிறீர்கள். இதற்கு பிறகும் நீங்கள் பாடம் கற்கவில்லை.

    இதேநிலை நீடித்தால் பாராளுமன்ற தேர்தலிலும் அது தோல்வியை நோக்கி அழைத்து செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் அவசர சட்டம் கொண்டு வரவில்லை. இதுபற்றி கேட்டால் இந்த வி‌ஷயத்துக்கு அவசர சட்டம் கொண்டு வர முடியாது என கூறுகிறீர்கள்.

    பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பலர் சிக்கி உள்ள நிலையில் அந்த வழக்குகளை கூட அகற்றுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மூத்த தலைவர் அத்வானியை ஜனாதி பதியாகத்தான் உருவாக்க வில்லை. குறைந்த பட்சம் அவர் மீது உள்ள வழக்குகளையாவது நீக்குங்கள்.

    இவ்வாறு அதில் எழுதப்பட்டு உள்ளது. #ShivSena

    வருகின்ற தேர்தல்களில் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ADMK #MinisterKadamburRaju
    கோவில்பட்டி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 2 எம்.எல்.ஏ.க்களில், ஒட்டப்பிடாரத்தில் வெற்றி பெற்ற சுந்தரராஜன் தி.மு.க.வில் இருந்து வந்தவர். விளாத்திகுளம் உமா மகேஸ்வரி தே.மு.தி.க.வில் இருந்து வந்தவர். அ.தி.மு.க., தி.மு.க.வில் தொடக்கத்தில் இருந்து இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள்.


    செந்தில் பாலாஜி ஏற்கனவே, ம.தி.மு.க., தி.மு.க.வில் உறுப்பினராக இருந்துள்ளார். அங்கிருந்து தான் அ.தி.மு.க.வுக்கு வந்தவர். அவர் தி.மு.க.வில் செல்லும் நிலைப்பாட்டில் இருக்கலாம். அதனால், தான் ஏற்கனவே சொன்னேன்.

    வருகின்ற தேர்தல்களில் மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது. அ.தி.மு.க.வில் உள்ளவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். கட்சி மாறி வருபவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

    மேகதாது திட்ட அறிக்கை தொடங்குவதற்கு தமிழகம் மட்டுமல்ல புதுவை முதல்வர் நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேகதாது அணை பிரச்சனையை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம், அந்தந்த மாநிலங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்பது விதி. விதிகளுக்கு உட்பட்டு எங்கள் கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து, மேகதாதுவில் அணை கட்டுவதை அரசு தடுக்கும்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் அரசு அழைத்து பேச தயாராக உள்ளது. வருவாய்த்துறை அமைச்சர், அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியுள்ளார். நிச்சயமாக அவர்களை அழைத்து பேசும்போது, சுமூக தீர்வு காணப்படும்.

    திரைப்பட தணிக்கைக்குழுவில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்தால் தான், அவர்கள் மாநிலத்தின் பிரச்சனைகளை எடுத்து கூறி, மாநிலத்தில் தாக்கம் ஏற்படக்கூடிய வி‌ஷயம் இருக்குமாயின், அதனை தணிக்கை நடைபெறும் நேரத்தில் தடுக்க முடியும்.

    மாநில அரசின் பிரதிநிதித்துவம் இல்லாததால் இதுபோன்ற நிலை உள்ளது. இதனை எடுத்து கூறியுள்ளோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்ய போகிறோம் என்றார்கள். அதன் பின்னர் இல்லை என்றனர்.

    அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அவர்களின் உரிமையில் தலையிட முடியாது. எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அதனை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterKadamburRaju
    தாய்லாந்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்துவது உறுதியாகி உள்ள நிலையில், பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு விதித்த தடையை ராணுவ அரசு நேற்று நீக்கியது. #Thailand #ElectionCommission #MilitaryGovernment
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டில் 2014-ம் ஆண்டு, பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, ராணுவம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தது.

    கடந்த ஆண்டு புதிய அரசியல் சாசனத்தை ராணுவ அரசு இயற்றியது. அதன்மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மக்கள் புதிய அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் அளித்தனர்.

    இந்த நிலையில் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்துவது உறுதியாகி உள்ளது. அங்கு பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அந்த தடையை ராணுவ அரசு நேற்று நீக்கி விட்டது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கு தேர்தல் மூலம் ஜனநாயகம் மலருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால், புதிய அரசியல் சட்டத்தின்படி தேர்தல் நடைபெற்ற பின்னரும் ராணுவம் செல்வாக்குடன் திகழ முடியும். செனட் சபை நியமனங்களை ராணுவம் செய்ய முடியும். இதன் மூலம் பிரதமர் யார் என்பதை ராணுவம் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும்.

    இப்போது பிரசார தடை நீக்கப்பட்டிருப்பதால், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வழி பிறந்துள்ளது.

    தாய்லாந்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யிங்லக் ஷினவத்ராவுக்கு முன்பாக பிரதமராக இருந்த தக்‌ஷின் ஷினவத்ராவும் அரசியல் செல்வாக்குடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தெலுங்கானாவுக்கு தேர்தல் பணிக்கு சென்ற தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று சென்னை திரும்பிய ஊர்க்காவல் படையினர் போராட்டம் நடத்தினர். #TelanganaElection

    சென்னை போலீஸ் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊர்க்காவல் படையினர் பணியாற்றுகிறார்கள். பிற வேலைகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் பேரிடர், கலவரம், தேர்தல் போன்ற சமயங்களில் போலீசார் போன்று காக்கிச்சீருடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    அதன்படி தெலுங்கானா மாநில தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் சென்றிருந்தனர். அங்கு பணி முடிந்து நேற்று அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு வந்து சேர்ந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் திடீரென்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக ஊர்க்காவல் படையை சேர்ந்த சிலர் கூறும்போது, “தெலுங்கானா மாநிலத்தில் எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. நல்ல சாப்பாடு, தங்குமிடம் இல்லாமல் 5 நாட்களும் கொசு மற்றும் பூச்சிக்கடியில் தவித்தோம். தெலுங்கானாவில் உள்ள ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம், மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு பணி நிரந்தரம் இல்லை. வாரந்தோறும் ரூ.2,100 தான் சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே எங்களுக்கும் தெலுங்கானாவை போன்று மாத ஊதியம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து ஊர்க்காவல் படையை சேர்ந்த அதிகாரி மஜித் சிங், எழும்பூர் போலீஸ் உதவி கமிஷனர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்க்காவல் படையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். ஊர்க்காவல் படையினர் போராட்டம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. #TelanganaElection
    தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்ற ரூ.3½ கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் பறிமுதல் செய்தனர். #TelanganaAssembly #Election2018 #CashSeized
    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் வாரங்கல் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்த வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் ரூ.3½ கோடி இருந்தது தெரியவந்தது.

    இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. 
    வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம் என்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ChandrababuNaidu #TelanganaAssemblyElections
    ஐதராபாத் :

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    ஐதராபாத் மற்றும் ஹாமம் பகுதிகளில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘ஓட்டு போட்டவுடன் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்களோ? அது எந்திரத்தில் தெரியும். இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்த இயலும். எனவே வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்தார். ChandrababuNaidu #TelanganaAssemblyElections
    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். #AmitShah #BJP

    புதுடெல்லி:

    அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகில மாநிலங்களில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். அங்கு ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு கடும் சவால் நிலவுவதாக சொல்வது தவறானது.

    ஆனால் நிலைமை அப்படியல்ல. தேர்தல் முடிவு டிசம்பர் 11-ந்தேதி வரும்போது 3 மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்போம். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மேலும் உயர்ந்து வலுவாகும்.

    மக்களின் அமோக ஆதரவுடன் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார்.

    ஒரு மாநிலத்தில் அரசு நடந்து கொண்டிருந்தால் ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். ஆனால் எதிர்ப்பை மட்டும் பத்திரிகைகள் வெளிப்படுத்தி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன. குஜராத் மாநிலத்திலேயே இதை பார்த்திருப்பீர்கள்.

    மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாங்கள் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம். ஏராளமான வளர்ச்சி திட்டங்களை அங்கு நிறைவேற்றி இருக்கிறோம். 129 நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

    நாங்கள் செய்துள்ள வளர்ச்சி திட்டங்களே எங்களுக்கு மக்களிடம் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

    அரசுக்கு எதிர்ப்பு இருப்பதாக இப்போது தான் சிலர் பேசுகிறார்கள். இதேபோலத்தான் குஜராத் தேர்தலிலும் சொன்னார்கள். ஆனால் அங்கு நாங்கள் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றோம். அதற்கு நாங்கள் செய்த திட்டங்கள் தான் காரணம். அதேபோல இந்த மாநிலங்களிலும் எங்களுடைய திட்டங்கள் வெற்றியை தேடித்தரும்.

     


    மாநில தேர்தல் முடிவின் தாக்கம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்று சொல்வது சரியான வாதம் அல்ல. மாநில தேர்தல் என்பது அங்குள்ள சூழ்நிலைகளை பொறுத்து, அங்குள்ள பிரச்சினைகளை மையமாக வைத்து நடப்பதாகும்.

    எனவே அதன் தாக்கக்தை பாராளுமன்றத்தில் எதிர் பார்க்க முடியாது. எங்கள் கட்சியை பொறுத்தவரை கூட்டு அரசியல் முறையில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் செய்த திட்டங்கள், எதிர்கால பணிகள் மூலம் 2019 தேர்தலிலும் சிறப்பான வெற்றியை பெறுவோம். மக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.

    2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து பல மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். உத்தரபிரதேசம், மராட்டியம், அரியானா என பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறோம்.

    இப்போது நடக்கும் 5 மாநில தேர்தல்களும் எங்களுக்கு முக்கியமானது தான். இதிலும் சிறப்பான வெற்றி கிடைக்கும்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. பெரிய அளவிலான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எங்களது உறுதியான எண்ணம் நோக்கம் ஆகும். இதில் வேறு எந்த சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை.

    அதே நேரத்தில் இது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஜனவரி மாதம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. நிச்சயம் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை காத்திருப்போம்.

    இது 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு. ஆனால் காங்கிசார் இந்த வழக்கை மீண்டும் நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கபில்சிபில் கூறியிருக்கிறார். அவர்கள் தான் வழக்கை தள்ளிப்போட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

     


    இந்த வி‌ஷயத்தில் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது. சிவசேனாவை பொறுத்தவரை அது தனி கட்சி. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். இந்த வி‌ஷயத்தில் எங்களுக்குள் மோதல் போக்கு எதுவும் இல்லை.

    2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு 22 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் 21 மாநிலங்களில் காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் கொண்டுள்ள இந்துத்வா கொள்கைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள்.

    நாங்கள் தேர்தல் காலத்தில் மட்டும் இந்த கொள்கைகளை பின்பற்றுபவர்கள் அல்ல. காங்கிரஸ் முத்த தலைவர்கள் கமல்நாத், ஜி.பி. ஜோஷி போன்றவர்கள் ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் கருத்துக்களை கூறி அரசியல் ஆதாயத்தை பெற முயற்சிக்கிறார்கள்.

    தற்போது காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலிவான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி, உமாபாரதி போன்றவர்கள் பற்றி மோசமான விமர்சனங்களை செய்கிறார்கள். நாங்கள் அவர்களுடைய வாரிசு அரசியல், ஜாதி அரசியலை தடுப்பதால் எங்கள் மீது ஆத்திரம் அடைந்து இது போன்று நடந்து கொள்கிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர்கள் மோடியின் தாயாரை பற்றி விமர்சித்தது மிகவும் தவறானது. கடுமையாக கண்டிக்கக் கூடியது.

    நாங்கள் ஒருபோதும் ஜாதி, மத அரசியலை முன்வைப்பது இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் தான் செயலாற்றி வருகிறோம். எனவே அனைத்து தரப்பு மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தில் நாங்கள் சட்டமன்ற தேர்தலில் வலுவாக போட்டியிடுகிறோம். இதனால் தெலுங்கானா அரசை விமர்சிக்கிறோம். பாராளுமன்ற தேர்தல் என வரும்போது, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி எங்களை ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்க்க வேண்டும்.

    மாநில தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் வெவ்வேறு சூழ்நிலைகளை கொண்டது.

    ரபேல் விமான ஊழல் தொடர்பாக ராகுல்காந்தி தொடர்ந்து அப்பட்டமான பொய் தகவல்களை கூறி வருகிறார். இதனால் பிரதமர் மோடியின் செல்வாக்குக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய நாங்கள் சீலிட்ட கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறோம்.

    எங்களை எதிர்ப்பதற்கு எந்த பிரச்சினையும் கையில் இல்லாததால் இதையே திரும்ப, திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்.

    சி.பி.ஐ. மற்றும் ரிசர்வ் வங்கி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி போன்றவர்கள் குற்றம்சாட்டுவது தவறு. சி.பி.ஐ.யில் 2 அதிகாரிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த விவகாரம் தற்போது மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி விவகாரத்தை பொறுத்தவரை ரிசர்வ் வங்கி சட்ட விதிகள் படி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதற்காக மத்திய அரசு தலையிட்டதாக கூறுவது தவறு. தன்னிச்சையாக செயல்படும் அவற்றின் மீது மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.

    காஷ்மீர் மாநில சட்டசபையை கலைத்தது கவர்னர் எடுத்த முடிவு. அங்கு குதிரை பேரம் நடந்ததால் கவர்னர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் அவர்களுக்கு யார் ஆதரவு கொடுக்கிறார்கள் என்ற விவரத்தை கூட குறிப்பிடவில்லை. அதற்கான கடிதமும் கொடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அமித் ஷா கூறினார். #AmitShah #BJP

    இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார். #Rajapakse #srilankaparliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். இதனால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

    சிறிசேனாவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு பாராளுமன்றத்தில் போதிய மெஜாரிட்டி இல்லை. அதனால் அவர் மீது 2 தடவை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இருந்தும் ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.

    இந்த நிலையில் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ராஜபக்சே முதன் முறையாக டி.வி.யில் பேசினார். அப்போது அதிபர் சிறிசேனா நேர்மையான மற்றும் உண்மையான அரசை நடத்தி வருகிறார். ஆனால் இது இடைக்கால அரசுதான்.

    எனவே நிலையான அரசு அமைய வேண்டியது அவசியம். ஆகவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.

    இதற்கிடையே அதிபர் சிறிசேனா வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் பதவியில் ராஜபக்சேவை நியமித்தது ஏன் என விளக்கம் அளித்தார்.



    அவர் கூறும்போது, “ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகிய 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    ஆனால் பிரதமர் பதவி ஏற்க இருவரும் மறுத்து விட்டனர். எனவேதான் 3-வது நபரான மகிந்த ராஜபக்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது” என்றார். #Rajapakse #srilankaparliament
    ×