search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணமதிப்பிழப்பு"

    பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் அரியலூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட  இ.காங்கிரஸ் சார்பில் பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

    இதில்  மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரதலைவர் சந்திரசேகர், வட்டார தலைவர் தியாகராஜன், கர்ணன், திருமானூர் பாண்டியராஜன், சீமான் மூப்பனார், தா.பழுர் சக்ரவர்த்தி, மாரிமுத்து, ஜெயங்கொண்டம் செங்குட்டுவன், நகரதலைவர் ஜாக்சன், ஆண்டிமடம் கொடியரசு, மாசிலாமணி, செந்துறை கொளஞ்சிநாதன், உடையார்பாளையம் ஜெயராமன், மாவட்ட பொருளாளர் மனோகரன், தொழிற்சங்கம்  சிவக்குமார், சேவாதளம் சிவா, மகிளா காங்கிரஸ் சின்ன பொண்ணு, மாரியம்மாள், தமிழரசி, தொகுதி தலைவர் திருநாவுக்கரசு  உட்பட 50 பேர் கலந்து கொண்டனர். 

    அனுமதியை மீறி மறியலில் ஈடுபட்டதால் 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.
    தமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மை தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு வரலாறு தெரிய வாய்ப்பில்லை என்று இளங்கோவன் ஆதரவாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். #Thirunavukkarasar #Elangovan
    சென்னை:

    தமிழக காங்கிரசில் இளங்கோவன் மற்றும் திருநாவுக்கரசர் கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இளங்கோவன் ஆதரவாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஏ.பி.சி.வி. சண்முகம், ரங்கபாஷ்யம், வி.ஆர். சிவராமன், ஜெரோம் ஆரோக்கியராஜ், குலாம் மொகைதீன், வசந்தராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராகுல் காந்தியின் ஆணையின்படி மோடி அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை நினைவூட்டி கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இளங்கோவனின் அரசியல் பாரம்பரியம் பற்றி விமர்சனம் செய்தது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனையும் மிகுந்த மனவேதனை அடையச் செய்துள்ளது.

    சமூக நீதிக்காக புரட்சி செய்த தந்தை பெரியாரையும், சொல்லின் செல்வர் ஈ.வே.கி. சம்பத் குறித்தும் பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு தகுதி இல்லை. பச்சைத் தமிழர் காமராஜர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவர் தந்தை பெரியார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து காங்கிரஸ் பேரியக்கத்தை ஓங்கி நிற்கச் செய்தவர் தந்தை பெரியார்.


    தனது கவுரவம் பாதிக்கப்பட்ட போது, தன்மானம்தான் பெரிது என எண்ணி திராவிட கொள்கைகளை துறந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்த சம்பத் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக - பொதுச் செயலாளராக பணியாற்றி பட்டித் தொட்டியெங்கும் தனது சொல்லாற்றலால் காங்கிரஸ் கொள்கைகளை முழங்கியவர்.

    சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தில் பிறந்து மறைந்த பல தியாகிகளை உலகம் உள்ளவரை அனைவரும் போற்றும் வண்ணம் தனது நடிப்பால் உயிரோட்டம் கொள்ளச் செய்தவர் சிவாஜிகணேசன், காங்கிரஸ் பேரியக்கமே தனது உயிர் மூச்சு என வாழ்ந்தவர். அவரைக் கொச்சைப்படுத்தி பேசுவதை உண்மையான எந்த காங்கிரஸ் தொண்டனும் ஏற்கமாட்டான்.

    ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்கை பிடிப்போடு வெவ்வேறு கட்சிகளில் இருப்பது தவறில்லை. ஒரே நபர் பதவி சுகத்துக்காக, விசுவாசமும், நன்றியும் இல்லாமல் பல கட்சிகளுக்கு போவதுதான் கேவலமான செயல்.

    பதவிக்காக தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மை தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு அவர்களது வரலாறு தெரிய வாய்ப்பில்லை. பதவி சுகத்திற்காக பல கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து, இருந்த இடத்திற்கு விசுவாசமும், நன்றியும் இல்லாதவர் திருநாவுக்கரசர். இளங்கோவன் மீது இனி மேலும் இது போன்ற தரமற்ற விமர்சனங்களை செய்தால் இவர் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த போது மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்த இரவில் என்னென்ன காரியங்கள் செய்தார் என்ற விபரங்களை எல்லாம் வெளியிட நேரிடும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்கள். #Thirunavukkarasar #Elangovan #Congress
    ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்ததாக கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இவை அனைத்தும் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகள். சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ரெயில் வரும் வழியில் மேற்கூரையில் துளையிட்டு அந்தப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப்பின் துப்பு துலங்கிய இந்த கொள்ளை தொடர்பாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மோகர்சிங், கிருஷ்ணா, மகேஷ்பாரதி மோகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    இவர்களில் 5 பேரை போலீசார் நேற்று விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், வாழப்பாடி, சேலம் ஜங்‌ஷன், செவ்வாய்ப்பேட்டை ரெயில்வே குட்ஷெட் ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தோம் என்பதை நடித்து காட்டினார்கள். அவற்றை போலீசார் வீடியோ எடுத்தனர்.

    இந்த கொள்ளையில் மொத்தம் 16 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது 7 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 9 பேரை தேடிவருகிறார்கள். 16 பேரும் பல்வேறு குழுக்களாக தமிழகம் வந்து 4 மாதம் தங்கி திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    சின்ன சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில் தண்டவாளத்தில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால் அந்த இடத்தில் ரெயில் மெதுவாக செல்லும் இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த இடத்தில் ரெயில் சென்றபோது கட்டர் மூலம் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளது தெரிய வந்தது. 4 பேர் மட்டும் ரெயிலின் மேல் கூரையில் ஏறி துவாரம் போட்டுள்ளனர்.


    கொள்ளையடிக்கப்பட்ட 5.78 கோடியை கொள்ளையர்கள் அனைவரும் சரிசமமாக பங்குபோட்டு உல்லாசமாக செலவு செய்தனர். சொந்த ஊரில் நிலம் மற்றும் சொத்துக்களையும் வாங்கியுள்ளனர். மீதம் உள்ள ரூ.2 கோடியை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாததாலும் செலவழிக்க முடியாமலும் பதுக்கி வைத்து இருந்தனர்.

    இந்தநிலையில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவற்றை கிழித்து போட்டு யாருக்கும் தெரியாமல் தீவைத்து எரித்து விட்டதாக போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

    7 கொள்ளையர்களின் 13 நாள் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைவதால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். #SalemTrainRobbery #TrainRobbery
    பண மதிப்பிழப்பின் மூலம் மக்களை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congress #demonstration #centralgovernment

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பண மதிப்பிழப்பின் மூலம் மக்களை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.என். கந்தசாமி, பி.வி. மணி, பச்சைமுத்து, கே.பி.எஸ். மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கட்சி நிர்வாகிகள் மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், கே.பி துரை, சவுந்தர்குமார், வக்கீல் கருப்பசாமி, பழையூர் செல்வராஜ், கே.வி.செல்வராஜ், ராமநாகராஜ், கோவை போஸ், காந்தகுமார், குணசேகரன், கே.என் வசந்த், ஜீ. ஆர். சீனிவாசன்,

    ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, காட்டூர் சோமு, பட்டம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே. குமரேசன், விஜய் சாந்த், சர்ச்சின் சிவக்குமார், இதயம் ரகுமத்துல்லா, கேபிள் வினோத், மகளிர் காங்கிரஸ் தலைவி உமா மகேஸ்வரி, கார்த்தி, எம்.துளசி ராஜ், ராயல்.சி.மணி, பாசமலர் சண்முகம், விஜயகுமார், அசோக் குமார், கணேசன், சீரா கணேசன், கர்ணன், ஆனந்தன், காமராஜ் துல்லா, சாய் சாதிக், தங்கராஜ், எம்.எஸ். பார்த்தீபன், உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பார்க்கில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார். சர்க்கிள் தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் சின்னையன், முன்னாள் மேயர் வெங்கடாசலம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கட்சி நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காயத்ரி, விஜயகுமார், சின்னராஜ், ராமலிங்கம், திருமூர்த்தி, லாலிரோடு செல்வம், கோவிந்தராஜ், செல்வராஜ், வரதராஜ், குனிசை செல்வம், செல்வபுரம் ஆனந்த், தங்கதுரை, ஆகாஷ், மாரியப்பன், தங்கமணி கிருஷ்ணகுமார் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #congress #demonstration #centralgovernment

    தக்கலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்றார். #congress #centralgovernment #demonetisation

    தக்கலை:

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஓராண்டு நிறைவடைந்து உள்ளதை கருப்பு தினமாக கருதியும், கருப்பு பணத்தை மீட்டு எடுப்போம் என்று மத்திய அரசு அறிவித்து இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தக்கலை வட்டாரத்தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் தம்பி விஜயகுமார், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஏசுராஜா, மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ஜாண் இக்னேசியஸ், சேம் செல்வக்குமார் உள்பட திரளான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். மேலும் தக்கலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #congress #centralgovernment #demonetisation 

    மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக அறிவித்து திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். #demonetisation #thirunavukkarasar #congress

    சென்னை:

    மத்திய அரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. மூன்றாம் ஆண்டான இந்த வருடமும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லிபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோடி கோடியாக பணம் வரும் என்று சொல்லி பணம் மதிப்பிழப்பின் மூலம் மக்களை தெரு கோடிக்கு கொண்டு வந்து விட்டது மோடி அரசு. மோடி பதவியேற்ற பிறகு நாடு முழுவதும் எதிர்ப்பையே சம்பாதித்து வருகிறார்.

    தற்போது எதிர்ப்பு அலை தான் வேகமாக வீசுகிறது. வருகிற தேர்தலில் மோடி ஆட்சியை காங்கிரஸ் வீழ்த்துவது உறுதி. இதற்காக மத சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருவது கூடுதல் பலம் சேர்க்கும்.

    எங்களை பொறுத்தவரை ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். மோடி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை. சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயம் நலிவடைந்துள்ளது. இந்த அரசு அகற்றப்பட்டால் தான் நாடு முன்னேறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் குமரி அனந்தன், டாக்டர் செல்லக்குமார், விஜயதரணி எம்.எல்.ஏ. தணிகாசலம், கஜநாதன், தாமோதரன், அசன் ஆரோன், சொர்ணா சேதுராமன், மாவட்ட தலைவர்க் சிவராஜசேகர், வீரபாண்டியன், எம்.எஸ்.திரவியம் மற்றும் நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், பி.வி.தமிழ்செல்வன், தணிகைவேல், பிரகாஷ், துரைசிங், ஜெகன், நாச்சிகுளம் சரவணன், தி.நகர் விக்னேஷ்வரன், சாம்டெனிசன், வில்லிவாக்கம் சுரேஷ், தாஸ்பாண்டியன், இல.பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #demonetisation #thirunavukkarasar #congress

    பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ந்தேதியை நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. #Demonetisation #Congress

    புதுடெல்லி:

    பண மதிப்பு இழப்பு பற்றிய அறிவிப்பை 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். இதையடுத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ந்தேதியை நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    பண மதிப்பு இழப்பு என்ற அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு முழுவதும் ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். சிறு தொழில்கள் முடங்கின. இந்த நிலையில் 5 மாநிலங்களுக்கு தேர்தல் வந்துள்ளது.

     


     

    டெல்லியில் நடைபெறும் கருப்பு தின நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்குவார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டு இந்த திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசுவார்கள்.

    பண மதிப்பு இழப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை புள்ளி விவரமாக காங்கிரஸ் தெரிவிக்கும். கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கப் போவதாக தவறான தகவலை கூறி இந்த திட்டத்தை கொண்டு வந்தனர்.

    இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆனால் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்தார்கள். எனவே நவம்பர் 8-ந்தேதியை காங்கிரஸ் நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த்சர்மா இதுபற்றி கூறியதாவது:-

    பொறுப்பற்ற முறையில் பிரதமர் எடுத்த இந்த முடிவால் கோடிக்கணக்கான மக்கள் வலியை அனுபவித்தனர். இந்தியா முழுவதும் ஏராளமானவர்கள் உயிரை இழந்தார்கள். பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. எனவே தான் இந்த கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Demonetisation #Congress

    மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் முடங்கிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #GST #Demonetization
    திருப்பூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

    தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே கமல்ஹாசன் பேசினார். பின்னர் தாராபுரம் மற்றும் எல்லப்பாளையத்தில் அரச மரத்தடியில் அமர்ந்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து காங்கேயம், பல்லடம், வீரபாண்டி, திருப்பூர் சி.டி.சி. கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி கமல்ஹாசன் பேசினார். இறுதியாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களை சந்தித்து கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு பின்னலாடை துறை சரிவை கண்டிருக்கிறது. பணமதிப் பிழப்பு , ஜி.எஸ்.டி உள்ளிட்ட மும்முனை தாக்குதலால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சினிமாத் துறையும் இதில் பாதிக்கப்பட்டது. அதற்கான கடுமையான குரலை நானும் எழுப்பியிருக்கிறேன். உங்களுக்கான உரிமையை நீங்கள் கேட்டுபெறுங்கள் அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழகத்தின் தொழில் துறை மற்ற மாநிலங்களை நோக்கி செல்கிறதென்றால் அதற்கு மத்திய மாநில அரசுகளே காரணம். இழந்தபின்பு ஆறுதல் தெரிவிப்பதை விடுத்து இழப்பு ஏற்படும் முன் அதனை சரிசெய்ய கவனம் செலுத்தவில்லை.

    மேற்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மக்கள் பல குறைகளை தெரிவித்திருக்கின்றனர் . அவற்றை சரி செய்ய மக்கள் நீதி மய்யம் முனைப்பு காட்டும்.

    தமிழக வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மக்கள் நீதி மய்யம் செயல் திட்டங்களை உருவாக்கி வருகிறது. அதனை தொழில் துறையோடு கலந்து பேசி செயல்படுத்த முனைப்பு காட்டுவோம்.

    மக்கள் நீதி மய்யத்தின் ஸ்லோகமான ‘நாளை நமது’ என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதால் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் எங்களுக்கான பலம் அதிகமாக இருப்பதை உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    கிராமங்கள் தான் நகரங்களுக்கு உணவு அளிப்பவர்கள். எல்லாம் செய்தது போல சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழலை நாம் தான் ஒழிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் செய்வது மட்டுமல்ல, மக்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும்.

    படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும். நகரத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் விரைவில் வரும். முன்னேற்றங்கள் கிராமத்தை நோக்கி நகர வேண்டும். நல்லது எல்லாம் ஒன்று கூட ஆரம்பித்து விட்டது. அது தான் நாம் ஒன்று சேர்ந்திருப்பது.

    கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி செல்கிறேன். கிராம சபை கூட்டங்கள் புதைக்கப்பட்டுள்ளது. அதை தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    சட்டமன்றத்துக்கு இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமலே மக்கள் நீதி மய்யம் கட்சி மக்கள் நலனுக்காக கேள்விகளை கேட்டது. யார் தடுத்தாலும் தடைகளை வென்று சரித்திரம் படைப்போம். என்னைப் பல இடங்களில் நான் மக்கள் முன் பேசுவதற்கு பல தடைகளை இடுகின்றனர். நாம் சந்தித்து பேசி விடப்போகிறோம் என்ற பயத்தில் நான் பேசப்போகும் இடங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

    கல்வியை தாங்கிபிடிக்க வேண்டிய அரசு அதை விடுத்து மதுக்கடைகளை தாங்கி நிற்கிறது. இளைஞர்கள் அனைவரையும் நான் வேலை தேடும் இளைஞர்களாக பார்க்கவில்லை. வருங்கால முதலாளிகளாக தான் பார்க்கிறேன்.

    எனக்கு தெரியும் முதலாளிகளை எங்கு வைக்க வேண்டும், திருடர்களை எங்கு வைக்க வேண்டும் என்று. இது மின்னல் போல் வந்து மறைந்து செல்லும் பயணம் அல்ல. இது தொடரும். பல்வேறு இடையூறுகளிடையே காவல்துறையினர் நமக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். காவல்துறையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்கள் பணிக்கு நாம் இடையூறு செய்ய அளிக்க கூடாது. நமது இயக்கம் கட்டுப்பாடு நிறைந்த இயக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #GST

    பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும், பா.ஜ.க மோடியின் புகழ் பாடுவது, ரோம் நகர் எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல் இருப்பதாக சிவசேனா குறிப்பிட்டுள்ளது. #Demonetisation
    மும்பை:

    சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு குறித்து தலையங்கத்தில் கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
     
    'கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 2016, நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு இழப்பு  நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம், ஊழல் போன்றவை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியதற்கு மாறாகவே அனைத்தும் நடந்துள்ளது.

    மக்களுக்கு வெறுப்பையும், மோசமான அறிவுரைகளையும் செலுத்தி செயல்படுத்தப்பட்ட இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையைத் தேசப்பற்றுடன் கொண்டுவரப்பட்டது என்று கூற முடியாது. நாட்டில் பொருளாதார சர்வாதிகாரத்தை இது ஏற்படுத்திவிட்டது.

    சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் பணமதிப்பு இழப்பின் போது புழக்கத்தில் இருந்த செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.1.47 லட்சம் கோடியில், 99.30 சதவீதம் வங்கிக்குத் திரும்பி வந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஏறக்குறைய ரூ.10 ஆயிரம் கோடி மட்டுமே வங்கிக்கு வரவில்லை.


    இதன்மூலம் மலையைத் தோண்டிப் பார்த்தும், ஒரு சுண்டெலிகூட வெளியேவரவில்லை என்பதுதான் தெளிவாகிறது. இந்தக் குறைவான தொகையை, பிடிப்பதற்காகத்தான் மத்திய அரசு பொருளாதாரத்தையே சிதைத்து இருக்கிறது.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவால், நாடு பொருளாதார குழப்பத்தைச் சந்தித்தது. சிறு, குறு தொழில்கள் அழிந்துபோகின. சேவைத்துறை மிகப்பெரிய சிக்கலில் சென்றது. கட்டுமானத்துறை ஆட்டம் கண்டன. சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான மக்கள் வங்கியின் வாசலிலும், ஏ.டி.எம் வரிசையிலும் நின்று மடிந்தனர்.

    அதுமட்டுமா, அதன்பின் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியின் வேகம் திடீரென சரிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது.

    பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியும், அதை நாடுமுழுவதும் பகிர்ந்து அளிக்க ரூ.2 ஆயிரம் கோடியும், ஏ.டி.எம் நெட்வொர்க்கை மேம்படுத்த ரூ.700 கோடியும் செலவு செய்துள்ளது.


    நாடு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை, இழப்பைச் சந்தித்தபோதிலும், மோடி அரசு தொடர்ந்து பெருமை பேசித்தான் வருகிறது. இந்த மனநிலையைப் பார்க்கும்போது, 'ரோம்நகரம் தீபற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்தது நினைவுக்கு வருகிறது'. பணமதிப்பு நீக்கம் என்பது கொடுமையான நடவடிக்கையாகும்.

    நாட்டின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய நிலையில், அது கொள்ளையடிக்கப்பட்டபோது, அது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டார். அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டும்.

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது புரட்சிகரமான நடவடிக்கை. அதனால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடும் என்று நம்மிடம்  காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், நூற்றுக்கணக்கான கோடி கறுப்புப்பணம் அரசியல்வாதிகளால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது.

    குஜராத்தில் உள்ள இரு கூட்டுறவு வங்கிகளில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டன. பணமதிப்பு நீக்கம் குறித்து சில மாதங்களுக்கு முன்பே சில நாளேடுகள் இது குறித்து செய்தி வெளியிட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முட்டாள் என்று பட்டம் சூட்டியவர்களின் செயலின் உண்மை வெளிவந்துவிட்டது. பணமதிப்பு இழப்பு தோல்வி அடைந்த ஒன்று ரிசர்வ் வங்கி கூறிவிட்டது'. இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Demonetisation #BJP #ShivSena
    பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்று வரை சர்ச்சைக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த அறிவிப்பு என கூறப்பட்டபோதிலும், தற்போது சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப பெறப்பட்டது என்ற தகவல் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய மந்திரி அருண் ஜெட்லி, கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளதே அதற்கு சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
    பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணக்காரர்கள் மட்டுமே அதிக பலனடைந்துள்ளதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். #RahulGandhi #Demonetisation #BJP #PMModi
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

    ஆனால், இதன்மூலம் இந்தியாவில் கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதியை ஏற்று அனைவரும் இந்த பணமதிப்பிழப்பினை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கணக்கிடும் பணியை மத்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. சமீபத்தில் சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் திரும்ப வந்துவிட்டதாக தகவல் வெளியானது.

    அனைத்து பணங்களும் வங்கி மூலம் மீண்டும் வந்துவிட்டதால், கருப்பு பணம் எங்கே? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது, பணமதிப்பு நீக்கம் என்பது பிழை அல்ல, அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என்றும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    மேலும், மத்திய பா.ஜ.க அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே எனவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Demonetisation #BJP #PMModi
    வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிப்பதற்காகவா இந்த பணமதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #PChidamabaram #Demonetisation
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், ரூ.15, 310,73  கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ‘வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது? இந்த 13 ஆயிரம் கோடி பணமும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கலாம். சிறிது பணம் தொலைந்தோ, அழிக்கப்பட்டோ இருக்கலாம்.


    பணமதிப்பு நீக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை இழந்துள்ளது. இதனால் மட்டும் ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். #PChidamabaram #Demonetisation
    ×