search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால்குடம்"

    • சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.‌
    • விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டு இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் ரெட்டிபா ளையம் சக்கராம்பேட்டை பகுதியில் சியாமளா தேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பால்குடம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று 36-ம் ஆண்டு பால்குடை விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அலகு காவடி எடுத்தும், அலகு குத்தியும் குளக்கரையில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.

    பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தனர். பின்னர் சியாமளா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

    இன்று இரவில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.

    விழாவில் வருகின்ற 30 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பா டுகளை நாட்டாமைகாரர்கள், கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    கொடைக்கானல் நகர் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.
    கொடைக்கானல் நகர் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் சார்பில் மண்டகப்படிகள் நடைபெற்றது. அத்துடன் திருக்கல்யாணம், மலர்வழிபாடு விழா, ஊஞ்சல் உற்சவம், பூச்சொரிதல் நடந்தது.

    மேலும் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
    மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
    ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தத்தில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், விழா கமிட்டியினரும் இணைந்து செய்திருந்தனர். விழாவையொட்டி கிராமம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    பெரிய காளியம்மன் கோவில் திருவிழாவின் இறுதிநாளான நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தனர்.
    கொடைக்கானல் நகர் டோபிகானல் பகுதியில் பெரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் இறுதிநாளான நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடத்துடன் டெப்போ காளியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் டோபிகானல் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.
    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் மற்றும் அன்ன அபிஷேகம் நடந்தது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி 2 ஆயிரத்து 7 பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக காந்திரோட்டில் உள்ள பாண்டிய வேளாளர் சமூக திருமண மண்டபத்துக்கு, பழனி நகரின் 33 வார்டுகளை சேர்ந்த பெண்கள் மஞ்சள் புடவை அணிந்து பால்குடத்துடன் நேற்று காலை வந்தனர்.

    பின்னர் அங்கு பால்குடத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு நடந்த உச்சிக்கால பூஜையில் மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    அதன்பிறகு மாலை 4 மணி அளவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மாரியம்மனுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. மாலை 5 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது, அன்ன அபிஷேகம் மற்றும் அலங்காரங்களை பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் கோவில் முறை பண்டாரங்கள் செய்தனர்.

    விழாவையொட்டி 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் தனசேகர், பழனிவேல், கார்த்திக், பாண்டிய வேளாளர் சங்க பிரமுகர் பெருமாள், சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கொங்குவேளாளர் பிரமுகர் மாரிமுத்து, வக்கீல் கல்யாணசுந்தரம் மற்றும் பழனி வ.உ.சி. மன்றம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மிராஸ் பண்டாரங்கள் சங்கம், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    பால்அபிஷேகம் செய்து தெய்வங்களை நாம் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்கள் மனம் குளிர்ந்து வரம் தருவார்கள் என்பது நம்பிக்கை.
    அம்பிகைக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் நேர்த்திக் கடனாகப் பால்குடம் எடுப்பது வழக்கம். இதுபோன்ற நேர்த்திக் கடன்களின் வாயிலாக, நம்முடைய வாழ்வில் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.

    பால் வெண்மை நிறம் உடையது. நம்முடன் பழகுபவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்களாக அமைந்து, நமக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்பதற்கான பரிகாரம் இது.

    மேலும் இந்தப் பால்அபிஷேகம் செய்து தெய்வங்களை நாம் குளிர்ச்சிப்படுத்தினால் மனம் குளிர்ந்து வரம் தரும் என்பது நம்பிக்கை.
    காளியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர்.
    மணப்பாறையில், திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி திருவிழா நேற்று முன்தினம் இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) காலை அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுவதல், மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    அதைத்தொடர்ந்து அன்னதானமும், மாலை பெண்கள் நடத்தும் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கரகம் களைதல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர். 
    நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டுபெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட 1,008 பக்தர்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
    திருவொற்றியூர் கார்கில் நகரில் 60 அடி உயர பிரித்தியங்கிரா தேவி சிலை அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட 1,008 பக்தர்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பால்குட ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தொடங்கி வைத்தார்.

    அப்போது பக்தர் ஒருவர் உடலில் அலகு குத்தி பறவை காவடியில் தொங்கியபடியும், பறவை காவடி அமைந்துள்ள வேனை 2 பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி இழுத்தபடியும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் சில பக்தர்கள் முனிவர், அம்மன் உள்ளிட்ட மாறுவேடங்கள் அணிந்தும், உடலில் ஊசியால் எலுமிச்சை பழங்கள் மற்றும் தென்னங்குலையை அலகு குத்தி இழுத்தபடியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினார்கள். விழாவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. 
    மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவிலில் உள்ள மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவிலில் மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாளன்று பால்குட விழாவும், அதைத்தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து செல்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பால்குட விழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆடி முதல் நாளான நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆண்டவர் கோவில் அருகே உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் பரம்பரை அறங்காவலரும், பொய்கைப்பட்டி, குமாரவாடி ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்து வீரலெக்கைய நாயக்கர் தாரை, தப்பட்டையுடன் முன்செல்ல அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் நல்லாண்டவர் கோவிலை வந்தடைந்ததும், அங்கு அனைத்து பால்குடங்களும் இறக்கி வைக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நல்லாண்டவருக்கு முத்துகண்ணன் சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள் தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக, ஆராதனை செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலால் நல்லாண்டவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகர், கோவிலின் பரம்பரை அறங்காவலரும், ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்துவீரலெக்கைய நாயக்கர், மணியம் சண்முகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் ஊர் நாட்டாண்மைகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை டாக்டர் கரு.ராசகோபாலன் தொகுத்து வழங்கினார். 
    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் ஆனித்திருமஞ்சன திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 84-வது ஆண்டாக ஆனித்திருமஞ்சன திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றிக்கு சென்று நீராடி பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தினர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தொட்டியம் மெயின் ரோடு, வளையல்காரத் தெரு, காந்தி ரோடு, வடக்கு ரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து மதுரை காளியம்மனுக்கு தீர்த்தம், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி திருநெல்வேலி அருகே உள்ள வீரவநல்லூர் மதுரைகாளியம்மன் வழிபாட்டு குழுவின் சார்பில் மதுரைகாளியம்மன் பற்றிய வில்லுப்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் ஆனித்திருமஞ்சன விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
    தஞ்சை காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்துச்சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
    தஞ்சை காமராஜர் மார்க்கெட் காய்கனி வர்த்தக சங்கம் சார்பில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு 43-வது ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், அன்வர், கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலம் தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை பூங்காவில் இருந்து புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி வழியாக சென்று புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடைந்தது. இதில் 100 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்னதாக வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் எடுத்துச்செல்லப்பட்டது.

    ஊர்வலம் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலை அடைந்ததும் அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் அருகே உள்ள மண்டபத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. இதில் வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×