search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை"

    தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள வன மற்றும் மலைப்பிரதேசங்களில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #TNCM
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று வனத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்தூர் எம்.எல்.ஏ. சின்னத்தம்பியின் கேள்விக்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அப்போது, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள வன மற்றும் மலைப்பிரதேசங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார். மாவட்ட அளவில் ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று மலைப் பிரதேசங்களில் உள்ள தேவைகளை கண்டறிந்து மத்திய அரசு உதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    முன்னதாக பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சேலம் மாவட்டம் சங்ககிரி, எளம்பிள்ளை சித்தர் மேல்மலை கோவிலுக்குச் செல்ல மலை மீது புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் கொல்லிமலை பகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு மண் சாலைகளை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.



    இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்தனர். #TNAssembly #TNCM

    மக்கள் புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், சட்டசபை ஜனநாயக மாண்பை பற்றி தி.மு.க.வினர் பேசுகிறார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்றைய தினம் முதல்-அமைச்சர் ஸ்டெர்லைட் ஆலை குறித்து விரிவாக பேசினார். மக்கள் விரும்பாத எதையும் இந்த அரசு ஏற்காது. ஆலையை தி.மு.க. திறப்பதற்கும், அதை நடத்துவதற்கும் அனுமதி அளித்ததை புள்ளி விவரங்களோடு முதல்-அமைச்சர் இங்கே பட்டியலிட்டார். மத்திய சுற்றுச்சூழல் மந்திரியாக இருந்த ராஜா, தமிழகத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மைதீன்கான் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதியளித்தனர்.

    இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, மக்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. ஆட்சிதான் என்று முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதில் இருந்து யார் தவறு செய்தார்கள் என்று தெரியமுடிகிறது. அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 320 ஏக்கர் நிலம் கொடுத்ததும், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான். அதை ரத்து செய்தது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.


    எங்கே தமிழக மக்கள் நம்மை புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், இன்று சட்டசபை ஜனநாயக மாண்பை பற்றி பேசுகிறார்கள். 22 ஆண்டுகளுக்கு பிறகு, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எப்படியாவது இந்த அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்று சதி செய்கிறார்கள். அந்த சதி முறியடிக்கப்பட்டு இந்த ஆட்சி வெற்றி நடைபோடுகிறது.

    முதல்-அமைச்சர் தெளிவான விளக்கம் கொடுத்த பிறகும், சட்டசபையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது சாத்தான் வேதம் ஓதுவது போன்று உள்ளது. 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, எங்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே போட்டனர். அப்போது ஜெயலலிதா மட்டும் தன்னந்தனியாக சட்டசபைக்கு வந்தார். சிங்கம் எப்போதும் தனியாகத்தான் வரும். 40 நிமிடங்கள் பேசினார். அப்போது, 37 முறை குறுக்கீடு இருந்தது.

    தற்போது சபாநாயகர் ஆசனத்தில் உட்கார்ந்து இருக்கும் சபாநாயகர் ப.தனபால், அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கி ஜனநாயக மாண்பை கட்டிக்காத்து வருகிறார். அன்றைய சபாநாயகர் ஆவுடையப்பன் ஜனநாயக மரபுகளை புறக்கணித்து எங்களை ஒருமையில் பேசி உட்காரச்சொன்னார்.

    கடந்த ஆண்டு இந்த அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தபோதுகூட, தி.மு.க. உறுப்பினர்கள் மரபுகளை மீறி நடந்துகொண்டார்கள். நான்கூட பேரவை தலைவராக இருக்கும்போது கோபம் வரும். ஆனால், தற்போதைய சபாநாயகர் அமைதியின் சொரூபமாக விளங்குகிறார்.

    ஜனநாயகத்திற்கு குழி தோண்டப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். இன்று அனைவருக்கும் சட்டசபையில் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தமிழக மக்களுக்கு இதை உணர்த்தத்தான் இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.

    இவ்வாறு ஜெயக்குமார் பேசினார். #DMK #MKStalin #MinisterJayakumar #TNAssembly
    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டசபை மூலம் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Cauveryissue #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் மத்திய நீர்வளத்துறைக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை அதன் செயலாளர் அளித்த பொறுப்பான பதிலிலிருந்து உணர முடிகிறது. ‘அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை’ என்பதைப் போல காவிரி விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நிலைப்பாடு, நடவடிக்கை ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து பார்த்தால் அவை அனைத்தும் தமிழக நலன்களுக்கு எதிராக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டதற்கு காரணங்கள் உள்ளன. இன்றைய நிலையில் பார்த்தால் காவிரியின் குறுக்கே உள்ள 4 கர்நாடக அணைகளில் மொத்தம் 9.52 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    மேட்டூர் அணையிலும் கிட்டத்தட்ட அதே அளவு தண்ணீர் மட்டும் தான் உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில், கேரளத்திலும், கர்நாடகத்திலும் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின்பயனாக கர்நாடக அணைகள் நிரம்பத் தொடங்கும்.


    காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடைமுறைக்கு வராவிட்டால், ஒட்டுமொத்த நீரையும் தமிழகத்திற்கு வழங்காமல் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டால், அதனால் அணை நீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்றாலும் கூட, குறைந்தபட்சம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவாவது பிறப்பிக்க முடியும்.

    ஆனால், அத்தகைய நன்மை கூட தமிழகத்திற்கு நிகழ்ந்து விடக்கூடாது என் பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் பொதுப்பணித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் குறித்து இன்று வரை வாய் திறக்க வில்லை என்பது தான். காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகங்களுக்கு மாநில அரசு துணை போவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    எனவே, இந்த வி‌ஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசிதழில் இந்த வாரத்திலேயே வெளியிடவும், அடுத்த வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்குத் தேவையான அழுத்தங்களை மத்திய அரசுக்கு சட்டப்பேரவை மூலமும், நேரிலும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Cauveryissue #Ramadoss

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சனையை முன்வைத்து தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. இன்று வெளிநடப்பு செய்தது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். #ThoothukudiFiring #TNAssembly #DMKWalkout
    சென்னை:

    சட்டசபையில் இன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், முதலமைச்சர் பதவி விலகும்வரை இனி பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்கப் போவதில்லை எனக் கூறினார். பின்னர் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நிருபர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-



    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முடிவு செய்தால், அமைச்சரவையை உடனடியாக கூட்டி கொள்கை முடிவை எடுத்து தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்.

    துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் என்பது ஏமாற்று வேலை. துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #TNAssembly #DMKWalkout

    திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததை தொடர்ந்து, மு.க ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #DMK #mkstalin
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    இந்த கூட்டத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்தார். இதனால் திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    பின்னர் சட்டமன்றத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி சம்பவம் குறித்த முதல்வரின் அறிக்கையில் துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை ஒரு இடத்திலும் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டினார்.

    மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிக்க முதல்வருக்கு 5 நாட்கள் தேவைப்பட்டுள்ளது என்றும், துப்பாக்கிச்சூடு குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.



    இதைத்தொடர்ந்து , முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை சட்டமன்ற நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்கபோவதில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை அடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #DMK #mkstalin
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேச, அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்ததால் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    இந்த கூட்டத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி  ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார்.



    இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்துவிட்டார். ஏற்கனவே இதுபற்றி விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதால், அதன்மீது பேசும்படி தி.மு.க. உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆனால், தங்கள் தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததை தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion

    தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். #TNAssembly #DMKMLAs
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

    இந்நிலையில் முதல் நாளான இன்று காலை சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். தூத்துக்குடி போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்துள்ளனர்.



    வழக்கம்போல், இந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்) கேள்வி எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த கூட்டத் தொடர் ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்பின்னர் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.  #TNAssembly #DMKMLAs
    உச்ச நீதிமன்றத்தால் கர்நாடக அரசியலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். #KarnatakaElection #YeddyurappaResign
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியது. எடியூரப்பா தனது உணர்ச்சிமிகு உரையில், உயிர் உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன் என்றார்.

    தனது பேச்சை முடித்ததும், எடியூரப்பா தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    இந்நிலையில், கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக எடியூரப்பா முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ததால் ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், சதி வீழ்த்தப்பட்டது. கர்நாடகாவிற்கு இது வெற்றி. பாஜக வீழப் போவதற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது என்றார்.



    இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், எடியூரப்பா ராஜினாமா செய்ததன் மூலம் ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றார்.

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், ஜனநாயகம் வெற்றி பெற்றதற்கு கர்நாடக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

    இதேபோல், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. குமாரசாமிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். #KarnatakaElection #YeddyurappaResign 
    கர்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார். #KarnatakaElection #Assembly #Adjourn
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் இன்று உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியது. முதல் மந்திரி எடியூரப்பா உணர்ச்சிமிகு உரையை ஆற்றினார். அப்போது அவர் உயிர் உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன் என்றார்.

    தனது பேச்சை முடித்ததும், எடியூரப்பா தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அப்போது சட்டசபையில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    இதையடுத்து, தற்காலிக சபாநாயகர் போபையா அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    அதன்பின்னர், சட்டசபையின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி, கவர்னரிடம் இருந்து வரும் அழைப்புக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார். #KarnatakaElection #Assembly #Adjourn
    கர்நாடக சட்டசபையில் இன்று உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியபோது முதல் மந்திரி எடியூரப்பா உணர்ச்சிமிகு உரையை ஆற்றினார். #KarnatakaElection #Assembly #Yeddyurappa
    பெங்களூரு:

    முதல் மந்திரி எடியூரப்பா இன்று சட்டசபையில் உணர்ச்சிமிகு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த  ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் என்னை வேட்பாளராக அறிவித்தனர். கர்நாடக மக்களின் பிரச்னைகலை தீர்த்து வைக்க பாடுபடுமாறு எனக்கு கட்டளையிட்டனர்.

    கர்நாடகாவில் தனி பெரும்பான்மை கட்சியாக பாஜகவை தேர்வு செய்ததற்கு நன்றி. பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் மக்கள் எங்களுக்கு கூடுதல் எம்.எல்.ஏ.க்களை அளித்துள்ளனர்.

    காங்கிரசும் மஜதவும் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதுதான் மக்களின் தீர்ப்பு. ஆனால், காங்கிரசும் மஜதவும் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றன.

    கர்நாடக தலைநகர் பெங்களூரில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மேலும், மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னை,  குடிநீர் பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன

    மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும் மஜதவும் செயல்பட்டு வருகின்றன. மாநில பிரச்னைகளில் அக்கறை காட்டாதவர்கள் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.

    நான் பதவியேற்றதும் முதல் கையெழுத்தே விஅவ்சாய கடன் தள்ளுபடிதான். ஏரி, குளங்களை பராமரித்து விவசாயிகளுக்கு புத்துயிர் ஊட்ட திட்டமிட்டேன். உயிர் மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன்.

    கர்நாடகாவை முன் மாதிரி மாநிலமாக மாற்ற பிரதமர் மோடி பல திட்டங்களை என்னிடம் கலந்துரையாடினார். கனிம வளத்தை அதிகமாக கொண்டது கர்நாடகா. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் நன்மை தரும் பல திட்டங்கள் கிடைக்கும் என தெரிவித்தார். #KarnatakaElection #Assembly #Yeddyurappa
    கர்நாடக சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக, முதலமைச்சர் எடியூரப்பா தனது திட்டங்கள் தொடர்பாக உரையாற்ற உள்ளார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaSpeach
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இது எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.



    அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்று வருகிறது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மற்ற எம்எல்ஏக்கள் 3.30 மணிக்கு பதவியேற்பார்கள் என தெரிகிறது. அதன்பின்னர் நம்பக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    ஆனால், மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பது தெரிய வந்தால் உடனே ராஜினாமா செய்துவிட்டு கவுரவமாக வெளியேறும்படி எடியூரப்பாவுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா செய்யலாம் என்றும் கன்னட ஊடகங்களில் தகவல் வெளியானது.

    இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக சட்டசபையில் உரையாற்ற எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய அவர், 13 பக்கங்கள் கொண்ட உணர்ச்சிமிகு உரையை தயார் செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த உரையில், விவசாய கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த உரையை வாசித்து முடித்ததும் அவர் தன் பதவியை ராஜினாமா செய்யலாம் என தெரிகிறது. #KarnatakaCMRace #KarnatakaFloorTest #YeddyurappaSpeach

    கர்நாடகத்தில் நீதியை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். #KarnatakaElection #FloorTest #Chidambaram
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் வீடியோ எடுப்பதுடன், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதற்கு முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறுகையில், பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவை காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.

    சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு எனது வணக்கங்கள். நீதியை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #KarnatakaElection #FloorTest #Chidambaram 
    ×