search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேக்"

    கரூர் அருகே பொது இடத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கரூர்:

    கரூர் அருகே சணப்பிரட்டி செல்லும் ரோட்டில் தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர்கள் ஒன்று கூடி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக பசுதிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, சிலர் பொது இடத்தில் மேஜை போட்டு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். போலீசாரை கண்டதும், அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், எஸ்.வெள்ளாளப்பட்டி தொழிற்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), நல்லப்ப நகரை சேர்ந்த அசோக் ஆனந்த் (31), தில்லை நகரை சேர்ந்த கார்த்திக் (28) என்பது தெரியவந்தது. மணிகண்டனின் பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினோம் என்று அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நீளமான பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதாக மணிகண்டன், அசோக் ஆனந்த், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சணப்பிரட்டியை சேர்ந்த அசோக் மற்றும் முழியன் என்ற சதானந்தம், தொழிற்பேட்டை நல்லப்ப நகரை சேர்ந்த பாலன், பசுபதிபாளையம் பாரதி நகரை சேர்ந்த பழம் ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதை மணிகண்டனின் நண்பர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

    அந்த வீடியோவில், பொது இடத்தில் மேஜை போட்டு கேக்கில் மெழுகுவர்த்தி தயாராக இருக்கிறது. அதனை ஊதி அணைக்கின்றனர். பின்னர் வெட்டுடா மச்சான்... என நண்பர்கள் குரல் எழுப்ப, அந்த கேக் பட்டாக்கத்தியால் வெட்டப்படுகிறது. பின்னர் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன.

    கரூரில் பட்டாக்கத்தியால் இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது பசுபதிபாளையத்தில் 3 வழக்குகளும், கரூர் டவுன் போலீசில் ஒரு வழக்கும் உள்ளன. கார்த்திக் மீது மதுபாட்டில் விற்றதாக ஒரு வழக்கு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பேரீச்சம் பழம் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - இரண்டரை கப்,
    வெண்ணெய் - ஒன்றேகால் கப்,
    பால் - ஒன்றரை கப்,
    கண்டன்ஸ்டு பால் - 1 டின் (400 மிலி),
    பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்,
    ஆப்ப சோடா - 1 டீஸ்பூன் (தலைதட்டி),
    பேக்கிங்சோடா - 2 டீஸ்பூன் (தலை தட்டி),
    வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    பொடித்த சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.

    பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வையுங்கள்.

    சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.

    பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.

    அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

    கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.

    இப்போது சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேப்பர் கப் - தேவைக்கேற்ப (5 To 6),
    உப்பு - 1/4 டீஸ்பூன்,
    கோதுமை மாவு - 150 கிராம்,
    நாட்டு சர்க்கரை - 100 கிராம்(Brown Sugar),
    வாழைப்பழம் - 2 (பெரியது பழுத்தது),
    வெண்ணெய் - 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)
    வாழைப்பழம் எசென்ஸ் (அல்லது) 1 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - தேவைக்கேற்ப (1 or 1 1/2),
    முட்டை: 1 (பெரியது) .



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

    பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.

    பிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

    பின் முட்டை பீட்டர் (egg beater) கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.

    பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டையில் பிறந்தநாள் விழாவின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (24). மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 25-ந்தேதி இவரது பிறந்த நாளையொட்டி இரவு நண்பர்கள் கேக் வாங்கி வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டுக்கு வெளியே நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது சதீஷிடம் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்ட கூறினர். அவரும் கத்தியால் கேக்கை வெட்டி நண்பர்களுக்கு கொடுத்தார். முகத்தில் கேக்கை பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ காட்சியை பார்த்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக வாலிபர் சதீசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “வீடியோவில் சதீசின் நடவடிக்கை பயமுறுத்தும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் இருந்தது.

    அவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மற்ற இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தேவையில்லாத பிரச்சனை உருவாகலாம் என்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடினார். இதையறிந்த போலீசார் அங்கு சென்று ரவுடிகளை மடக்கி பிடித்தனர்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். #waqaryounis #Apologisetofans
    இஸ்லாமாபாத்:

    வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனிஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.

    புனித ரமலான் மாதத்தில் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.



    ‘வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வக்கார் யூனிஸ். #waqaryounis #Apologisetofans
    போலீஸ் நிலையத்தில் கேக் ஊட்டிய விவகாரம் தொடர்பாக பெண் போலீஸ்-ஏட்டு உள்பட 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    பரமக்குடி:

    தமிழகத்தில் தொடர்ந்து சில போலீசாரின் வரம்பு மீறிய செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டிய போலீசார் பொது இடத்தில் தரக்குறைவாக நடந்து கொள்வதும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும் கண்கூடாக நடந்து வருகிறது.

    அதுவும் இன்றைய நவீன காலத்தில் போலீசார் செய்யும் சிறு தவறுகூட சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. இதனால் பொதுமக்கள்-போலீசார் இடையேயான நல்லுறவு கேள்விக்குறியாகி விடுகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு எமனேசுவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி பொதுஇடத்தில் முதியவரை தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் போலீஸ் நிலையத்திலேயே பெண் போலீஸ், ஏட்டுக்கு கேக் ஊட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரமக்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரியும் முத்துப்பாண்டிக்கு, அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் ஏட்டு மாரியம்மாள் கேக் ஊட்டினார். அப்போது அருகில் இருந்த போலீஸ்காரர்கள் ராஜ்குமார், முத்துவேல்ராஜன் ஆகியோர் இதனை படம் எடுத்துள்ளனர்.

    இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் போலீஸ் நிலையத்தில் பணி நேரத்தில் போலீஸ்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து ஏட்டு முத்துப்பாண்டி, பெண் போலீஸ் ஏட்டு மாரியம்மாள், போலீஸ்காரர்கள் ராஜ்குமார், முத்துவேல்ராஜன் ஆகியோர் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். #tamilnews

    இராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி காவல்நிலையத்தில் சீருடை இருந்த பெண் போலீஸ் ஒருவர் பணியில் இருந்த ஏட்டு-க்கு கேக் ஊட்டும் வீடியோ காட்சி 'வாட்ஸ்அப்பில்' பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    இராமநாதபுரம்:

    சமூக வலை தளங்களான ‘வாட்ஸ்-அப்’, பேஸ்புக் போன்றவை எந்த அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியில் மக்களுக்கு பயனைத் தருகின்றனவோ, அந்த அளவிற்கு கெடுதலையும் தருகிறது. அதே நேரம் சிலரின் தவறுகளையும் வெளிக்கொண்டு வந்து விடுகிறது.

    அப்படி வெளியான ஒரு ‘வாட்ஸ்-அப்’ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அதில் சீருடை அணிந்த பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கேக் ஊட்டுகிறார். இந்த ‘வைரல்’ வேகமாக பரவியதால் காவல் துறை விசாரணையில் இறங்கியது. அந்த காட்சிகள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலையத்தில் நடந்தவை என தெரிய வந்தது. சீருடையில் இருப்பவர் பரமக்குடி தாலுகா போலீஸ் ஏட்டு மாரியம்மாள்.

    இவர், அருகில் உள்ள பரமக்குடி நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் டீ டைம் உரையாடலில் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு முத்துப்பாண்டிக்கு கேக் ஊட்டியதை சக போலீஸ்காரர் படம் பிடித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் வைரலாக்கி உள்ளார்.

    பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி சொல்பவரை அடித்து உதைத்த சம்பவம் ‘வாட்ஸ்- அப்’ மூலம் பரவியது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் போலீஸ் ஏட்டுகளின் இந்த காட்சி ‘வாட்ஸ்-அப்’களில் வைரலாகி உள்ளது.

    கண்காணிப்பு காமிராக்களை போலீஸ் நிலையங்களில் பொருத்தினால் குற்ற நிகழ்வுகளை தடுக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
    ×