search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்.பி கரிய முண்டாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கடத்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீட்கப்பட்டனர். #Policemenrescued
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பா.ஜ.க. எம்.பி. கரியமுண்டா வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 4 அதிகாரிகள் கடத்தப்பட்டதாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர்.

    இந்நிலையில், டிலிங் பாரா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கடத்தப்பட்ட 4 காவல் அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசிய காவல்துறை இயக்குனர் பாண்டே, உள்ளூர் மக்களின் உதவியுடன் அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மீட்கப்பட்ட அதிகாரி கூறுகையில், பாதல்கர்கி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    முன்னதாக 3 காவல் அதிகாரிகள் மட்டுமே கடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த காவல்துறை இயக்குனர், 4-ம் அதிகாரி விடுமுறையில் இருப்பதாக எண்ணியிருந்ததாகவும், மீட்கப்பட்ட பின்னரே 4 பேர் என உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார். #PolicemenRescued
    பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் சிக்கிக்கொண்ட கணவன்-மனைவி 6 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டனர்.
    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள வன பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை பாலம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் ஆகிய பாலங்களை தொடும் அளவிற்கு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    நேற்று அமாவாசை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம் சார்பில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சைரன் மூலம் ஒலி எழுப்பியும், ஒலி பெருக்கி மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் தீயணைப்பு துறையினரும், கோவில் பணியாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே தமிழக - கேரள எல்லையில் அட்டப்பாடி கிராமம் உள்ளது. இங்கு பாலக்காடு மாவட்டம் பட்டிமாளம் பகுதியை சேர்ந்த சுகுணன் (70), அவரது மனைவி வல்சம்மா (65) ஆகியோர் ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இவர்களது தோட்டத்துக்கு பவானி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். கடந்த 8-ந் தேதி இவர்கள் தோட்டத்தில் இருந்த போது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    உடனே இருவரும் வெளியேற முயன்றும் முடியவில்லை. ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் நின்று கொண்டனர். இந்த நிலையில் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.

    இவர்கள் இருவரும் சிக்கி கொண்டது யாருக்கும் தெரியவில்லை. செல்போனும் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஆற்றின் மறு கரையில் நின்று பார்த்த போது கணவன்-மனைவி ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டில் அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அட்டபாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் இரு மரங்களுக்கிடையே கயிறு கட்டி கணவன்-மனைவியை மீட்டனர்.

    6 நாட்களாக தவித்த தம்பதிகள் மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாப்பிடாமல் சோர்வுற்று இருந்ததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கோவை மாவட்டம் வால்பாறையில் 8-வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதியடைந்தனர். கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    இன்று காலையும் மழை நீடித்தது. இதனால் காந்திபுரம், சிங்கா நல்லுர், கவுண்டம் பாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.

    மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர்.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    பீளமேடு விமான நிலையம்-1, மேட்டுப்பாளையம்-2, பொள்ளாச்சி- 25, பெரிய நாயக்கன் பாளையம்-4, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்-4.60, சின்கோனா-120, சின்னக் கல்லார்-116, வால்பாறை ( பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம்) -97, வால்பாறை தாலுகா அலுவலகம்- 107, கோவை தெற்கு - 3. மாவட்டம் முழுவதும் மொத்தம் 479.60 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    மாங்காடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவத்தில் போலீசார் சிறப்பாக பணியாற்றி 3 மணி நேரத்தில் காரை மீட்டனர்.
    பூந்தமல்லி:

    மாங்காட்டை அடுத்த பரணிபுத்தூரில் சவாரி ஏற்ற வருமாறு இன்று காலை 6 மணி அளவில் தனியார் கால்டாக்சி நிறுவனத்துக்கு அழைப்பு வந்தது.

    இதையடுத்து டிரைவர் செல்வம் காருடன் அந்த இடத்திற்கு சென்றார். நீண்ட நேரம் வரை பயணிகள் யாரும் வரவில்லை.

    சந்தேகம் அடைந்த அவர் கால்டாக்சி நிறுவனத்தில் பதிவான செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து அவர் சவாரியை ரத்து செய்து விட்டு காரை ஓட்ட முயன்றார். அப்போது மறைந்திருந்த 4 வாலிபர்கள் திடீரென செல்வத்தை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் காரை ஓட்டி கடத்தி சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த செல்வம் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு கார் கடத்தல் கும்பல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சார்லஸ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கால் டாக்சியில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் கார் செல்லும் இடத்தை கண்காணித்து விரட்டிச் சென்றனர்.

    காலை 9 மணி அளவில் ஊரப்பாக்கம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கினர். உடனே அதில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து காரை மீட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    கார் கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். #Tamilnews
    “30 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன ராஜராஜ சோழன் சிலை மீட்புக்கு ‘தினத்தந்தி’ செய்தியே காரணம்”, என்று முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் கூறினார்.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், வி.வி.சாமிநாதன். இவர் சென்னையில் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘தஞ்சை பெரிய கோவிலில் இருந்து களவு போன ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் மிருளானி சாராபாய் மியூசியத்தில் இருக்கிறது, அச்சிலைகளை கைப்பற்ற வேண்டும்’, என்று ‘காஞ்சி பெரியவாள்’ என்று அழைக்கப்படுகிற சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

    அரசியல் செல்வாக்கும், செல்வமும், அதிகாரமும் உள்ள ஒரு குழு, இந்த களவுபோன சிலைக்கு பின்னால் இருக்கிறது. எனவே தான் அந்த சிலைகளை கைப்பற்ற முடியாமல் 30 ஆண்டுகள் கடந்து விட்டன.

    இந்த சம்பவம் தொடர்பாகவும், அதன் வழக்கு பின்னணி தொடர்பாகவும் ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தேன். ‘தினத்தந்தி’ பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டு, சிலை களவு போனது குறித்து உலகம் அறிய செய்தது.

    இதுதொடர்பாக தமிழக அரசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். மாநில அரசின் சிலை மீட்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடமும் நேரில் வேண்டுகோள் விடுத்தேன். தொடர் நடவடிக்கைகளால் தான் சிலை மீட்பு தனிக்குழு உருவாக்கப்பட்டது.

    அந்த தனிக்குழுவினர் தான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து களவு போன ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலைகளை மீட்டு கொண்டு வந்தனர்.

    எனவே ‘தினத்தந்தி’ பத்திரிகை வெளியிட்ட செய்தியே ராஜராஜன் சிலை மற்றும் அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் மீட்க முக்கிய காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    எஸ்.வாழவந்தி அருகே 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த பசுமாட்டை மீட்டனர்.
    மோகனூர்:

    நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மலையாளன் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை நேற்று காலை 10.30 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

    அப்போது அவரது வீட்டின் அருகே இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பசுமாடு கால்தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பசுமாடு விழுந்ததை அறிந்த மலையாளன் சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினரும், எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்புச்செழியனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்பு குறித்து ஆலோசித்தனர்.

    பின்னர் இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை கயிற்றால் கட்டினார்கள். பின்னர் பெரிய ஏணியை கயிற்றுடன் கிணற்றுக்குள் இறங்கினார்கள். அந்த ஏணியின் உதவியுடன் பசுமாட்டை கிணற்றுக்குள் இருந்து வெளியே கயிறு மூலம் இழுத்தனர்.

    சுமார் அரை மணி நேரம் முயற்சிக்கு பிறகு பசுமாட்டை ஏணி உதவியுடன் வெளியே மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டின் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அந்த காயத்துக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினார்கள். 
    மங்களூரு அருகே படகு சேதமாகி கடலில் தத்தளித்த கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை கடற்படை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
    மங்களூரு:

    கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான கார்வார், உடுப்பி மற்றும் தென்கனராவை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை இலாகா அறிவித்து இருந்தது. இதனால் கடலோர மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஆனால் இந்த தகவலை அறியாத கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி வழியாக மங்களூருவில் இருந்து 15 மைல் தொலைவில் நங்கூரம் இட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கிய படகு சேதம் ஏற்பட்டு நீரில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 10 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

    இதுகுறித்து அறிந்த மங்களூரு கடற்கரை பாதுகாப்பு படையினர் கடலில் தத்தளித்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்களை கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கும் பணியில் கர்நாடக மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேறி மாயமான மாணவி கோட்டீஸ்வரியை போலீசார் பீகார் ஓட்டலில் இருந்து மீட்டனர்.
    அம்பத்தூர்:

    சென்னை நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (வயது 19). இவர் ஏற்கனவே ஒரு முறை நீட் தேர்வு எழுதியதில் மதிப்பெண் அடிப்படையில் பல் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான இடம் கிடைத்தது.

    அதை ஏற்காத அவர் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது மீண்டும் நீட் தேர்வு எழுதினார். ஆனால் கடந்த முறையை விட இப்போது குறைவான மதிப்பெண்களே கிடைத்தது.

    இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி திடீரென்று மாயமானார். இதுபற்றி அவரது பெற்றோர் தலைமை செயலக காலனி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தார். கோட்டீஸ்வரி மாயமான போது தனது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார். அதில் ‘நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என்று கூறி இருந்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சென்ட்ரலில் இருந்து ரெயிலில் ஏறி எங்காவது சென்றிருக்கலாம் என்று தெரிய வந்தது. அதன்படி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி பீகாரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பீகாருக்கு சென்றனர். அங்கு ஓட்டலில் தங்கியிருந்த கோட்டீஸ்வரியை மீட்டனர்.

    தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் தெரிவித்தார்.

    அதனடிப்படையில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். அதில் ராஜராஜ சோழன் சிலையும், ராணி லோகமாதேவி சிலையும் பெரியகோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவ்வப்போது ரகசியமாக பெரியகோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.



    அப்போது சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குஜராத்தில் உள்ள சிலைகளை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார்.

    இந்த நிலையில் குஜராத்தில் உள்ள தாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு சரியான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்தனர்.

    இதைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை எடுத்து கொண்டு குஜராத் சென்று சிலைகள் உள்ள அருங்காட்சியகத்தில் அதை ஒப்படைத்தனர். அங்கு இருந்த 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது தெரிந்ததும், அருங்காட்சியக நிர்வாகம் ராஜராஜ சோழன் சிலையையும், லோகமாதேவி சிலையையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் சிலைகளை அருங்காட்சியகத்தில் இருந்து மீட்ட போலீசார், உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். தற்போது ராஜராஜ சோழன் சிலையும், லோகமாதேவி சிலையும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த 2 சிலைகளும் நாளை மாலை தஞ்சையில் உள்ள பெரியகோவிலுக்கு எடுத்து வருதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் அருகே கொத்தடிமையாக இருந்து வாத்து மேய்த்த ஆந்திராவைச் சேர்ந்த 2 குழந்தைகளை போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த செட்டி சத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் ராஜேந்திரன். இவருக்கு செட்டி சத்திரம் பகுதியிலில் வசிக்கும் ஒரு தம்பதியினர் கொத்தடிமைகளாக குழந்தைகளை வைத்து வாத்து மேய்ப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த அந்த தம்பதிகளிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணய்யா, அவரது மனைவி லட்சுமியம்மா என்பதும் அவர்கள் பவானி (வயது 8), நாகராஜ் (10) ஆகிய குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ரூ. 20 ஆயிரம் கொடுத்து வேலைக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.

    அந்த குழந்தைகளை அவர்கள் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்துள்ளனர். இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கிருஷ்ணய்யா, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் கொத்தடிமைகளாக இருந்த 2 குழந்தைகளை மீட்டனர்.

    இந்த சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. #RPFConstable #Train
    புதுடெல்லி:

    சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 23ம் தேதி இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயிலில் சென்றார். அப்போது அந்த பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அந்த பெண்ணின் அலறல் கேட்டு அதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர்  சிவாஜி அங்கு சென்றார். ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது துணிச்சல் மிக்க செயலுக்கு போலீசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், ஓடும் ரெயிலில் பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓடும் ரெயிலில் இளம் பெண்ணை காப்பாற்றிய சிவாஜியின் துணிவை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே அமைச்சர் பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, ரெயில்வே ஐ ஜி பொன் மாணிக்கவேல் சிவாஜியின் துணிவை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RPFConstable #Train
    ×