என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 101815"
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சூராபந்தரில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள், அதே வன்முறை கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார்கள். அதனால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கான ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்த மோசடியாளர்களை பாதுகாக்க ஒரு முதல்-மந்திரி தர்ணா போராட்டம் நடத்தியது, இதுவே முதல்முறை. ஆனால், இந்த காவலாளி (மோடி), சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளையோ, அவர்களை பாதுகாப்பவர்களையோ தப்ப விடமாட்டான்.
இவ்வாறு மோடி பேசினார்.
சுராபந்தரில், கொல்கத்தா ஐகோர்ட்டின் சர்க்யூட் கிளையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘வடக்கு வங்காள மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. அவர்கள் வழக்கு தொடர இனிமேல் 600 கி.மீ. பயணம் செய்து கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டியது இல்லை. 100 கி.மீ.க்குள் இங்கு வந்து விடலாம்’’ என்று கூறினார்.
சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-
விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக பொய் சொல்லி, சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளில் பெற்ற கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளனர்.
அப்படியானால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி பெற தகுதி இல்லையா? இந்த விதிமுறைகளை ஏன் முன்பே சொல்லவில்லை? அடகுகடைக்காரர்களிடமும், உறவினர்களிடமும் பெற்ற கடன்களை யார் தள்ளுபடி செய்வது?
சத்தீஷ்கார் மாநில அரசு, சி.பி.ஐ.க்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துள்ளது. தவறு செய்தவர்கள்தான் விசாரணையை கண்டு பயப்படுவார்கள். காரணமின்றி யாராவது விசாரணை நடத்துவார்களா?
இந்திரா காந்தி குடும்பத்தில் பெரும்பாலானோர், ஒன்று ஜாமீனில் இருக்கிறார்கள் அல்லது முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். மெகா கலப்பட கூட்டணியிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #CBIvsMamata #PMModi
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார். விசாரணைக் காவல் முடிவடைந்தபின்னர், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்குகளில் ஜாமீன் கோரி கிறிஸ்டியன் மைக்கேல் இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், கடந்த டிசம்பர் 22ம் தேதி முதல் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், விசாரணை முடிந்து 60 நாட்கள் ஆன நிலையில் தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததன் காரணம் குறித்து 12ம் தேதிக்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்கும்படி சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையையும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சு வார்த்தையில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க.- அ.தி.மு.க. தலைமையில் 2 அணிகள் தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளன. தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வரை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் தி.மு.க. தலைமையில்தான் 11 கட்சிகள் இடம் பெற்று மெகா கூட்டணியாக உருவாகியுள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்? என்பதை தமிழகம் தான் முடிவு செய்யும். தமிழகத்தின் தேர்தல் முடிவு தான் அகில இந்திய அளவில் எதிர் பார்க்கப்படுகிறது.
மோடிக்கு எதிராக அணி திரளும் மத சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம். மம்தா பானர்ஜி தலைமையில் 20 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.
இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராகி விட்டன. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக தி.மு.க. கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பொன்குமாரின் கட்டிட தொழிலாளர் கட்சி ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.
தி.மு.க.வுக்கு எதிராக ஒரு சில கட்சிகள் இருந்தாலும் இன்னும் அணி என்ற வடிவம் பெறவில்லை.
பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைக்க மாட்டார்கள். சி.பி.ஐ.யை வைத்து அச்சுறுத்தி தான் அ.தி.மு.க.வோடு பா.ஜனதா கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. மனமுவந்து கூட்டணி அமையாது.
பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் அது அ.தி.மு.க.வுக்கு தான் நஷ்டம். பலவீனம் ஆகி விடும்.
பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இருவரையும் சேர்த்து கொண்டால் கூட்டணியில் எண்ணிக்கைதான் கூடுமே தவிர பயன் இல்லை.
கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #thirumavalavan #parliamentelection
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த வெள்ளி விழா ஆண்டு தொடக்க விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய நாட்டின் மிகப்பெரிய பலமே மனித வளம். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சீனாவை நாம் மிஞ்சியுள்ளோம். 30 வயதுக்குறைந்த இளைஞர்கள் நம்முடைய நாட்டில் 60 சதவீதம் பேர் உள்ளனர். இதனால் தான் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான கோடி ரூபாய் நம்முடைய நாட்டில் முதலீடு செய்யப்படுகிறது. பல நிறுவனங்கள் நம் நாட்டை நோக்கி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நம் நாட்டிலே படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, தென்கொரியா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் சாதாரண மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கும், தொழில் வியாபாரிகளுக்கு, தொழிற்சாலை நிறுவனங்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பல வாக்குறுதிகளை கொடுத்த மத்திய அரசு நான்கரை ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நிறைவேற்றவில்லை. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி இவைகளெல்லாம் நாட்டில் வேலைவாய்ப்பை குறைத்து பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இந்திய நாட்டில் வளர்ச்சி 9 சதவீதம் இருந்தது. தற்போது 7.1 சதவீதமாக ஆகியுள்ளது. இந்தியாவில் பொருளாதாரம் 2 சதவீதம் குறைந்துள்ளது. பாரதிய ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து துறைகளையும் சரி செய்ய குறைந்த பட்சம் ஓராண்டு ஆகும். விவசாயிகள், தொழில் நிறுவனம், தொழிற்சாலை, தொழிலாளர்கள், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வரே தெருவில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம் வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அதை தன் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் எதிரிகளையும், தொழில் அதிபர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. சி.பி.ஐ. நிறுவன தலைவரே ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எல்லாமே பலவீனமடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமென்றால் நாட்டில் மாற்றம் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #Narayanasamy #BJP
சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ சேனல் அருகே முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினார். அதேசமயம், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளை சிறைப்பிடித்தது மற்றும் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது.
இதையடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் மாநில டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கவர்னர் திரிபாதி ஆலோசனை நடத்தினார். நிலைமையை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், உள்துறைக்கு கவர்னர் திரிபாதி ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளார். #CBI #WestBengalGovernor
சென்னை:
உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தியின் உருவ படத்தை துப்பாக்கியால் சுட்ட இந்து மகா சபை நிர்வாகிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து மகாசபை நிர்வாகிகளை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாத்மா காந்தி இந்தியாவின் அடையாளம். இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜாசகுன் பாண்டே மற்றும் நிர்வாகிகள் காந்தியை அவமதித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்று பின்னர் இந்து மகா சபை உறுப்பினராகி காந்தியை சுட்டு கொன்றவர் கோட்சே. அவரது வாரிசுகள் இன்று மீண்டும் ஆயுதங்களுடன் வலம் வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர்தான் கவுரிலங்கேஷ், கல்புர்சி ஆகியோரை வீடு தேடி சென்று துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள்.
மேற்கு வங்காளத்தில் சாரதா சிட் பண்ட் வழக்கில் மம்தாவுக்கு எதிராக சாட்சி சொல்லும்படி சிலர் வற்புறுத்தப்படுகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது.
மம்தா சமீபத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியதே சி.பி.ஐ. ஏவி விடப்பட்டிருப்பதற்கு காரணம். மம்தா பானர்ஜி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி சதி செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிந்தனை செல்வன், பாவரசு, எஸ்.எஸ். பாலாஜி, வன்னியரசு, இரா. செல்வம், வி.கோ, ஆதவன், செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumavalavan #mamata #pmmodi
அதேசமயம் சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ சேனல் அருகே மம்தா பானர்ஜி நேற்று இரவு தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். மம்தாவின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
இந்நிலையில், கொல்கத்தா விவகாரம் தொடர்பாக, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது.
பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்க மறுப்பதாகவும், விசாரிக்க சென்றால் தடைகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிரான ஆதாரங்களை நாளை தாக்கல் செய்யும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்தார்.
வலுவான ஆதாரங்கள் இருந்தால் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வருந்தும் அளவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். #CBI #KolkataCommissioner
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்