search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"

    தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் கருணாநிதி 96-வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 3-ந் தேதி 4 மணிக்கு நடக்கிறது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. போட்டியிட்ட 19 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    இதையடுத்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் கருணாநிதி 96-வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) 4 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வரவேற்கிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித்தலைவர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
    டெல்லியில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்களை சோனியா அழைத்துள்ள நிலையில், சந்திரசேகர ராவ் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரசுடன் பேச்சு நடத்தலாம் என்று தெரிகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 23-ந் தேதி வெளிவர உள்ளன. அன்று எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா அழைத்துள்ளார்.

    இதற்காக அவர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கும், பா.ஜனதாவை எதிர்த்து செயல்படும் மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

    சோனியா அனுப்பிய கடிதம் இன்று மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு சென்று சேர்ந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கடிதம் வந்தது.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் 23-ந் தேதி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க அதிரடியாக செயல்படுவது என்று அந்த கூட்டம் மூலம் ஏற்பாடு நடந்து வருகிறது.

    23-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிஜூ ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கும் சோனியா கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் இந்த 3 பேரும் 23-ந் தேதி டெல்லி கூட்டத்தில் பங்கேற்பார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    குறிப்பாக சந்திரசேகர ராவும், ஜெகன்மோகன் ரெட்டியும் தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்ட பிறகே காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தலாம் என்று கூறி இருப்பதாக தெரிகிறது. அவர்களது தயக்கம் காரணமாக 23-ந் தேதி கூட்டம் முழுமையான எதிர்கட்சிகளை கொண்டதாக இருக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    குஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.



    பட்டேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடுக்காக போராடிய ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ஹர்திக் பட்டேலின் கன்னத்தில் அறைந்த நபரை அங்கிருந்த தொண்டர்கள் அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #HardikPatel
    ராஜஸ்தானின் டோங்க் என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களது போர் காஷ்மீருக்கானது, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார். #PMModi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது. காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர்.

    காஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது. எங்களது போர் காஷ்மீருக்கானது மட்டுமே. காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல.



    பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    எல்லைப்பகுதியில் உள்ள வீரர்கள் மீதும் மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உரிய நேரத்தில் எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம் என தெரிவித்துள்ளார். #PMModi
    புல்வாமாவில் இந்திய வீரர்கள் சிந்திய ரத்தம் வீணாகப் போகாது. ஊழலில் திமுகவும் காங்கிரசும் சமம் என ராமநாதபுரத்தில் இன்று பேசிய பாஜக தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #ParliamentElection #BJP #AmitShah
    ராமநாதபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக, அமித் ஷா இன்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்தார். முன்னர் மதுரை வந்த அமித் ஷாவை விமான நிலையத்தில்  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் என்ற 2 வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.



    பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதத்திற்கு எள்முனை அளவு கூட இடம் அளிக்காது. புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.

    பல்வேறு சிறந்த தலைவர்களை இந்தியாவிற்கு கொடுத்த பூமி தமிழகம். நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி சார்பில் 35-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நம்புகிறேன்.

    தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வலிமையாக பாஜக கூட்டணி போட்டியிடுகின்றன. ஊழலைப் பொருத்தமட்டில் திமுகவும் காங்கிரசும் சமம். நல்லாட்சியை பொருத்தமட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியும், பாஜகவும் சமம். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். 

    இந்த கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். #ParliamentElection #BJP #AmitShah
    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் பேசினார்.

    இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்ட பொருளாளர் அன்பழகன், துணை செயலாளர் தங்க.பிச்சைமுத்து, இலக்கிய அணி செயலாளர் சிவசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவசங்கர், பொய்யூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செய்தனர். 
    கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் ஆட்சியை மாற்றுவோம் என வலியுறுத்தினார். #Mamata #AntiBJPRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். 
     
    இந்த கூட்டத்தில் மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

    பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. மோடி அரசின் காலாவதி தேதி முடிந்து விட்டது. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது.

    மோடி ஆட்சியின் முடிவுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது. புதிய விடியல் வர உள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்திருப்போம், இது உறுதி. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
     


    பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம். மத்தியில் ஆட்சியை மாற்றுவோம்.

    மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பாஜக உரிய மதிப்பு அளிப்பதில்லை என தெரிவித்தார்.  

    இந்த கூட்டத்தில் பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியும் அமித்ஷாவும் வெற்றி பெற்று வந்தால் சர்வாதிகாரி ஹிட்லர் பாணியில் இந்த நாட்டை நாசப்படுத்தி விடுவார்கள் என குறிப்பிட்டார். #Mamata #AntiBJPRally
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    கொல்கத்தா:
        
    கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலுக்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது பாஜவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.



    நாங்கள் இருவரும் அமைத்துள்ள கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அங்கு ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது.

    எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என பாஜகவினர் கேட்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார். அவருக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு பிரதமரை உங்களால் காட்ட முடியுமா? எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் 10 நாள் தொடர் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.

    அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான மெகா ஊழலின் உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கின்ற பொறுப்பும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

    மத்திய-மாநில அரசுகளின் செயல்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற விதமாக தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பொதுக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 2-ந்தேதியில் இருந்து 12-ந் தேதி முடிய தொடர் பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar
    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார். #RamTemple #VHP #Delhi
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராமலீலா மைதானத்தில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார்.

    டெல்லியில் நிருபர்களிடம் மேலும் கூறுகையில், “ராமர் கோவில் கட்டுவதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம். அந்த அளவுக்கு ராமர் கோவிலுக்கு எதிரானவர்களின் மனதையும் எங்கள் பொதுக்கூட்டம் மாற்றிவிடும்.

    ஒருவேளை மசோதா கொண்டுவரப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அலகாபாத் கும்பமேளாவின்போது முடிவு செய்யப்படும்” என்றார். 
    அரியலூரில் தமிழ்மாநில காங்கிரஸ் 5-ம் ஆண்டுதுவக்க விழா பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார். #gkvasan
    அரியலூர்:

    அரியலூர் - திருச்சி புற வழிச்சாலையில் (வாணிமகால் எதிரே) தமிழ் மாநில காங்கிரஸ் 5ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. 

    அந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ் மூப்பனார், மாநிலதுணை தலைவர் ஞானதேசிகன், மாநில பொது செயலாளர் கோவைதங்கம், விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, முன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி, சித்தர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெங்க ராஜன், மாசிலாமணி, நல்ல முத்து, அரியலூர் மாவட்ட தலைவர் எஸ்ஆர்எம்குமார், மற்றும் முன்னாள், இன்னாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட  தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.   

    பொது கூட்டத்தின் ஏற்பாடுகளை விழா குழுவினர் தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். #gkvasan
    அரியலூரில் வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-வது ஆண்டு பொதுக்கூட்டம் குறித்து ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். #TamilMaanilacongress #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் 5-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிற சிறப்பான நிகழ்வு வரும் டிசம்பர் 1-ந்தேதி அரியலூர் மாநகரில் மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.

    தேசிய பார்வையில் மாநில நலனை முன்னிறுத்தி சிறப்பாக செயல்படும் த.மா.கா “தமிழகம் முழுவதும்“ உள்ள தேசிய, மாநில கட்சிகளுக்கு இணையாக மக்கள் பிரச்சனைகளை கைகளில் எடுத்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம், பொதுக்கூட்டம், இயக்க நிகழ்ச்சிகள் என்று இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பதால் த.மா.கா நல்ல இயக்கமாக, அசைக்க முடியாத சக்தியாக உருவாகி உள்ளது.

    இனிவரும் காலங்களில் நாம் ஆட்சி அமைப்பதற்கும் அல்லது மற்ற கட்சியினர் ஆட்சி அமைப்பதற்கும் த.மா.கா தான் முதன்மையான, முக்கிய கட்சியாக விளங்கும் என்பதை நம்மால் உறுதிப்படக் கூறமுடியும். இதற்கு தமிழகத்தில் உள்ள மாநில, மாவட்ட, நகர, கிராம, பேரூராட்சி அளவில் உள்ள த.மா.கா தொண்டர்களின் கடுமையான உழைப்பு பேருதவியாக இருக்கிறது என்பதை பெருமையோடு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

    தங்களது குடும்பத்தாருடனும், உற்றார் உறவினர்களுடனும் நமது இயக்க நண்பர்களுடனும், நமது தொண்டர்களுடனும் படை சூழ அரியலூர் மாநகரத்திற்கு டிசம்பர் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அணி அணியாக, அலை கடலாய் ஆர்ப்பரித்து பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகியோரது புகழ் பாடி, த.மா.கா கொடி ஏந்தி, வீறு நடைபோட்டு வந்து விழாவை சிறப்பாக்கிட வேண்டுகிறேன்.

    நாளையின் வெற்றி நமதே என்ற நம்பிக்கையோடு வாருங்கள். சந்திப்போம், சங்கமிப்போம், புதிய வரலாறு படைப்போம்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார். #TamilMaanilacongress #GKVasan

    ×