search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானாமதுரை"

    மானாமதுரை அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது40). டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் செய்து வந்தார்.

    மானாமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் நடை பயிற்சிக்காக மோட்டார் சைக்கிளில் வைகை ஆற்றுக்கு வந்தார். அங்கு ஆற்றங்கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது அங்கு ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் சரவணனை சுற்றி வளைத்தது. அவர்களை கண்டதும் சரவணன் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

    பலரும் நடைபயிற்சி செய்யும் காலை நேரத்தில் கொலை நடந்திருப்பது மானாமதுரையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் மானாமதுரை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் நடந்த மானாமதுரை இடைத்தேர்தலில் அ.ம.மு.க.விற்காக சரவணன் தீவிர பணியாற்றினார். இது பிடிக்காததால் யாராவது கொலை செய்தார்களா? அல்லது பேரூராட்சி ஒப்பந்தப்பணி விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்டம்முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடை பெற்று வருகிறது.

    கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    மானாமதுரை பகுதியில் 4 வழிச்சாலை பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து மானாமதுரையில் இயங்கி வந்த ரெயில்வேகேட் விரைவில் மூடப்பட உள்ளது.
    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கி தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதி அனைத்திலும் உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது மானாமதுரையை அடுத்த கமுதக்குடி மற்றும் திருப்புவனம் பாலங்கள் தவிர்த்து மற்ற பாலங்கள் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலங்கள் கட்டப்பட்ட இடங்களில் உள்ள ரெயில்வே கேட்கள் விரைவில் மூடப்பட உள்ளன. அதன்படி மானா மதுரையில் இருந்து மதுரை செல்லும் அகல ரெயில் பாதையின் குறுக்கே தற்போது ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. தற்போது மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவிலில் இருந்து மானா மதுரை புதிய பஸ் நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை புதிய பாலம் கட்டப்பட்டு அந்த பாலத்தில் இரு பாதை வழியாக போக்குவரத்து அனுமதிக்கபட்டு வருகிறது. இதையடுத்து இனி மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நேரடியாக மானாமதுரை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விடும். இடையில் உள்ள மானா மதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காது.

    மேலும் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் மதுரை செல்லவும் மதுரையில் இருந்து மானாமதுரை நகருக்குள் வரவும் புதிய பஸ் நிலையம் வந்து தான் செல்ல முடியும். மேலும் ஏற்கனவே செயல்பட்டு வந்த மானாமதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் பஸ் நிறுத்தம் இனி பயன்பாட்டில் இருக்காது. வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மானாமதுரை நகர் பகுதிக்குள் வர வேண்டுமானால் சிவகங்கை செல்லும் பஸ்களில் பயணம் செய்தால் தான் நகருக்குள் வரமுடியும்.

    மேலும் சிவகங்கை செல்லும் பஸ்கள் அனைத்தும் மானாமதுரை அண்ணாசிலை வழியாக சர்வீஸ் ரோட்டில் சென்று அதன் பின்னர் இடது புறத்தில் ஏறி பாலத்தை கடந்து தான் புதிய பஸ் நிலையம் செல்லும். மேலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை செல்லும் வாகனங்கள் அனைத்தும் தல்லாகுளம் முனியாண்டி கோவிலை சுற்றி வந்து வலது புறமாக திரும்பி சர்வீஸ் ரோடு, அண்ணாசிலை, தேவர் சிலை, காந்தி சிலை, சிப்காட் வழியாக சிவகங்கைக்கு செல்ல வேண்டும்.

    மேலும் சரக்கு வாகனங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கைக்கு செல்ல வேண்டுமானால் மானா மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பை-பாஸ் பாலம் வழியாகத்தான் செல்ல முடியும். இந்த புதிய வழி போக்குவரத்து நடைமுறை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த புதிய வழித்தட பயணத்திற்கான கருத்து கேட்பு நடத்துவதற்காக தற்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்த புதிய வழித்தடம் குறித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதும் மானாமதுரையில் உள்ள ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பை-பாஸ் அண்ணாசிலை பஸ் நிறுத்தமும் மூடப்பட உள்ளது. அத்துடன் சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட 7 ரெயில்வே சந்திப்புகளில் ஒன்றான மானாமதுரை சந்திப்பில் இருந்து மதுரை செல்லும் பாதையில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டும் மூடப்பட உள்ளது.
    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    மானாமதுரை:

    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    மழை காரணமாக மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதேபோல் பள்ளி கட்டிடங்களிலும் மழைநீர் இறங்கி ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. மழையால் சிவகங்கை, வேம்பத்தூர் சாலையும் சிதைந்து கிடக்கிறது.

    சுற்றிலும் பள்ளி சுற்றுச்சுவரை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. பள்ளியில் தேங்கிய மழைநீரை உடனே வெளியேற்றுவதுடன் ஈரப்பதத்துடன் உள்ள கட்டிடங்களை தொடர்ந்து பயன்படுத்தலாமா? என ஆய்வு செய்ய வேண்டும். வேம்பத்தூரில் இருந்து பச்சேரி வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என வேம்பத்தூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தில் வைகை ஆற்றின் தடுப்பு கல்லை உடைத்து மர்ம நபர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை வட்டாரத்தில் விடிய, விடிய நடக்கும் மணல் திருட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மானாமதுரையில் அரசு மணல் குவாரி இல்லாததால் பலரும் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் வசிக்கும் பலரும் அதிகாரிகளை சரிகட்டி மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் வைகை ஆற்றில் இறங்கும் கும்பல் விடிய, விடிய மணலை அள்ளி பக்கத்து கிராமங்களில் குவித்து வைத்து பகலில் லாரிகள் மூலம் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்துகின்றனர்.

    குறிப்பாக கல்குறிச்சி, ஆலங்குளம், கரிசல்குளம், வேதியரேந்தல், கீழமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டு அதிகம் நடந்து வருகிறது. இதற்கிடையில் மானாமதுரை பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் மணல் திருட்டு அதிகாரிகள் உடந்தையுடன் படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மானாமதுரையை அடுத்த கால்பிரவு அருகே மணல் திருட்டு நடக்காமல் இருக்க ஆற்றையொட்டி தடுப்பு கற்களை வைத்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தடுப்பு கற்களை உடைத்து மர்ம நபர்கள் லாரியை கொண்டு மணல் அள்ளி சென்றுள்ளனர். இது அப்பகுதி விவசாயிகளிடையே மேலும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மணல் திருட்டை தடுக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து தாசில்தார் சுந்தராஜனிடம் கேட்டபோது, தடுப்புகள் அமைத்தும் அதனை உடைத்து மணல் அள்ளிச் செல்கின்றனர். இதற்கு மேல் என்னதான் செய்யமுடியும். யார் அள்ளினார்கள் என்று விசாரித்து வருகிறோம் என்றார்.

    விவசாயிகள் கூறுகையில், மணல் திருட்டால் வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதுடன், விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனை தடுக்க சிறப்புக்குழுக்கள் மூலம் கண்காணித்து மணல் திருடுவோர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    மானாமதுரையில் காங்கிரஸ் மகளிர் பிரிவு சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மானாமதுரை:

    மத்திய அரசின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது போன்ற நட வடிக்கைகளைக் கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்தும் மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத மாநில அரசைக் கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    மகளிர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் வித்யா கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி செந்தாமரை, பாண்டியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், மாவட்ட நிர்வாகி ரமேஷ்கண்ணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

    காங்கிரஸ் கிழக்கு வட்டாரத் தலைவர் ஆரோக்கிய தாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் பிரேம சந்திரன், நிர்வாகிகள் புருஷோத்தம்மன், காசி மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். முடிவில் மேனகப்பிரியா நன்றி கூறினார்

    மானாமதுரை அருகே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் பலியான நிலையில் இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த 7 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் என்பவர் நேற்று இறந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    இதுகுறித்து பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தொடக்கத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டதாக பழையனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், ஜானகிராமன் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 
    மானாமதுரை அருகே நடந்த கோஷ்டி மோதலில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் கச்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் (வயது32) இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இன்னும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், வழக்கு விசாரணையை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என வலியுறுத்தி கச்சநத்தம் கிராமத்தினர் மற்றும் கட்சியினர் 3-வது நளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டம் நிலவி வருகிறது. போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.#tamilnews
    மானாமதுரை அருகே இரட்டைக்கொலை விவகாரத்தில் உடல்களை வாங்க மறுத்து விடிய விடிய உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர், கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் கச்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்

    அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் பலியான 2 பேரில் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனால் பலியான மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்களும் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலெக்டர் அலுவலக சாலையோரம் சென்ற அவர்கள், விடிய விடிய அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறி வருவதால் ஆஸ்பத்திரி சாலை பதட்டமாகவே உள்ளது.#tamilnews
    இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மதுரை கோர்ட்டில் 5 பேர் சரணடைந்தனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே ஆவரங்காட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

    இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை தொடர்பாக பழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய சுமன், அருண்குமார், அக்கினி, ராஜேஷ், அஜய் தேவன் ஆகிய 5 பேர் இன்று மதுரை மாவட்ட ஜே.எம்.(எண்.4) கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து நீதிபதி கவுதமன், 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். #tamilnews
    இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். 8 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு. அதை அடுத்துள்ள கிராமம் கச்சநத்தம். இந்த 2 கிராமங்களிலும் வெவ்வேறு பிரிவினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராம மக்களிடையே ஜாதிய ரீதியான மோதல்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இதனால் இரு கிராமத்தினரை அடிக்கடி போலீசார் சமரசம் செய்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதிலும் இரு கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஆவரங்காடு வழியாக வந்துள்ளனர்.

    அப்போது ஆவரங்காட்டைச் சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த வாலிபர்கள் ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்ததால் அங்குள்ள சிலர் ஆத்திரமடைந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராமத்துக்குள் புகுந்தனர். அங்கு கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது. அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளையும் அந்த கும்பல் சேதப்படுத்தியது.

    இதில் ஆறுமுகம் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த சண்முகராஜனை (27) மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாகக உயிரிழந்தார். சண்முகராஜன் என்ஜினீயர் ஆவார்.

    மேலும் அரிவாளால் வெட்டப்பட்ட தனசேகரன் (52), அவரது மகன் சுகுமார் (22), மலைச்சாமி (55), சந்திரசேகர் (35), தெய்வேந்திரன் (48), மகேஸ்வரன் (18) உள்ளிட்ட 8 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர்.

    அவர்களை உடனடியாக மீட்டு மதுரை, சிவகங்கை, மானாமதுரை ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இரு கிராம மக்களிடையே மேலும் வன்முறை வெடிக்காத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 2 பேர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 20 பேரை தேடி வருகிறார்கள்.

    இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மானாமதுரை அருகே நடைபெற்ற வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் சிக்கினர்.

    சிவகங்கை:

    மானாமதுரை அருகே உள்ள மாங்குடி விலக்கில் சிப்காட் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்களை நிற்குமாறு போலீசார் சைகை காட்டினர்.

    ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாகச் சென்றனர். எனவே போலீசார் அவர்களை தங்கள் ஜீப்பில் விரட்டினர்.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளை மடக்கி 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரிய கோட்டையைச் சேர்ந்த பிரதாப் (வயது 29), வைரம் பட்டியைச் சேர்ந்த கனிராஜா (26), சிவகங் கையைச் சேர்ந்த சசிகுமார் (21) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளதும், ஜாமீனில் வெளி வந்த இவர்கள் அதன் பின்னர் தலைமறைவானதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என மானாமதுரையில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி அளித்தார்.
    மானாமதுரை:

    மானாமதுரையில் தேவேந்திர மக்கள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் எச்.ராஜா பேசும்போது, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி கர்நாடகாவில் 135 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும். 

    பின்னர் நடைபெற்ற முகாமில் 200–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். 

    முகாமிற்கான ஏற்பாடுகளை தேவேந்திர மக்கள் அறக்கட்டளை நிறுவனர் சிவசங்கரி பரமசிவம், சட்ட ஆலோசகர் சிவகாமி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கவுதம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    ×