search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102691"

    சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
    சென்னை:

    சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06001), மறுநாட்களில் காலை 10.50 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

    மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜூலை 8, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06002), மறுநாட்களில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரெயில் (06005), மறுநாட்களில் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 8, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06006), மறுநாட்களில் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    தாம்பரம்-கொல்லம் இடையே வாரம் மூன்று முறை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஜூலை 2-ந்தேதி முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும்.

    இச்சிறப்பு ரெயில் (06027), மறுநாட்களில் காலை 10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06028), மறுநாட்களில் பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (06007), மறுநாட்களில் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

    மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஜூலை 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06008), மறுநாட்களில் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 4, 11, 18, 25, ஆகஸ்டு 1, 8, 22, 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்டிரல்-சந்திராகாச்சி சிறப்பு கட்டண ரெயில் (06058), மறுநாட்களில் இரவு 7 மணிக்கு சந்திராகாச்சியை சென்றடையும்.

    புதுச்சேரியில் இருந்து ஜூலை 7, 14, 21, 28, ஆகஸ்டு 4, 11, 25, செப்டம்பர் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும் புதுச்சேரி-சந்திராகாச்சி சிறப்பு கட்டண ரெயில் (06010), திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிக்கு சந்திராகாச்சியை சென்றடையும்.

    மேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    நெல்லை அருகே கணவன், மனைவியை வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன்(வயது55). இவரது மனைவி சுபேதாபானு (45). இவர்கள் சுத்தமல்லி பஜாரில் ஓட்டல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் 6 பிரியாணி பார்சல் விற்பனை செய்த போது, அதில் சிக்கன் பீஸ் இல்லை என்று ஒரு கும்பல் தகராறு செய்தது. இதில் வாக்குவாதம் முற்றி ஜாகீர்உசேனையும், அவரது மனைவி சுபேதாபானுவையும் அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் படுகாயமடைந்த 2 பேரும் பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதநகரைச் சேர்ந்த சபரி (25), மற்றும் அவரது நண்பர்களும் ஈடுபட்டது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நேற்று இரவு சபரியையும், பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து (27) என்பவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களது நண்பர்கள் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். #tamilnews
    நெல்லையில் கைதான திருமண மோசடி தம்பதி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. குடும்ப பெண்களின் படங்களையும் அவர்கள் வாட்ஸ்-அப் மூலம் ஆண்களுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் நெல்லை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மணமகள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதை அறிந்த ஒரு கும்பல் முருகனிடம் செல்போன் மூலம் பேசி அழகான பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, பெண்ணுக்கு பெற்றோர் இல்லை என்பதால் திருமண செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான பணத்தை அனுப்புங்கள் என்றும் கூறியுள்ளது.

    இதனை நம்பிய முருகன், அந்த கும்பலுக்கு ரூ.27 லட்சத்து 81 ஆயிரத்து 705 கொடுத்துள்ளார். திருமணத்துக்கு தாமதம் ஆனதால் சந்தேகம் அடைந்த முருகன் இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    முருகன் புகார் தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் ரமா, அனிதா ஆரோக்கிய மேரி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே சத்யாநகரில் வசித்து வந்த சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேரும் இந்த திருமண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த கும்பல் சென்னை அடையாறு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன், சென்னை எல்.ஐ.சி. ஊழியர் அன்பழகன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான அரசகுமரன் உள்ளிட்டோரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பல கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர்.

    தற்போது போலீசார் இவர்களிடம் இருந்து ரூ.63½ லட்சம், 69 பவுன் தங்க நகைகள், நிலம் மற்றும் சொகுசு பங்களா, செல்போன்கள், பித்தளை சிலை ஆகியவற்றை மீட்டுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1½ கோடி ஆகும்.

    இந்த திருமண மோசடி தம்பதி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கைதான சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேருக்கும் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் என். புதுக்கோட்டையை அடுத்த காளிசெட்டிபட்டி ஆகும். இவர்கள் பல பேரிடம் இதுபோல் மோசடி செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு அஞ்சுகிராமம் அருகில் சொகுசு பங்களா கட்டி வசித்து வந்துள்ளனர். இதுபோன்ற மோசடி செயல்களுக்காகவே அவர்கள் நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த கும்பல் மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தப்படும் இணையதளங்களை அடிக்கடி நோட்டமிட்டுள்ளனர். அதில் 45 வயது முதல் 50 வயதுக்குள் இருக்கும் அதிகாரிகள், வசதி படைத்தவர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். பின்னர் அவர்களது செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் அழகாகவும், ஆபாசமாகவும் பேச்சு கொடுத்து ஆசையை தூண்டினர். பின்னர் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்றவற்றில் பதிவிடப்பட்டு இருக்கும் அழகான குடும்ப பெண்களின் படங்களை தேர்வு செய்து வைத்து, அதில் மிகவும் அழகாக இருக்கும் பெண்களின் புகைப்படங்களை வாட்ஸ்- அப் மூலம் அந்த ஆண்களுக்கு அனுப்பி உள்ளனர்.

    அதாவது செல்பி மோகத்தில் இளம்பெண்கள் தங்களது செல்போன் படங்களை வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பதிவு செய்கின்றனர். அதனை சேமித்து வைத்து மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் அதிகமாக வெளியே தெரியாத துணை நடிகைகள், டி.வி. நாடக நடிகைகள் படங்களையும் அனுப்பி உள்ளனர். இதில் சிக்குகின்றவர்களை நைசாக பேசி தங்களது வங்கி கணக்குக்கு இணையதளம் மூலம் பணத்தை அனுப்ப கூறி பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

    தற்போது நெல்லை மாட்ட குற்றப்பிரிவு போலீசார் சுப்பிரமணியன் வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்துள்ளவர்களின் பட்டியலை சேகரித்து உள்ளனர். இதில் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தி விவரங்களை சேகரிக்க உள்ளனர்.

    மேலும் இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டோர் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. 
    தொடர் மழை காரணமாக நெல்லை, கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வால்பாறை தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் கொடுமுடியாறு அணை பகுதியில் மட்டும் 24 மணி நேரத்தில் 170 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

    இதையொட்டி நேற்று முன்தினம் 70 அடியாக இருந்த கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 80 அடியாக உயர்ந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50.70 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 8 அடிக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 34 கனஅடியாக அதிகரித்தது.



    இதனால் நேற்று முன்தினம் 19.68 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 65.29 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 45.61 அடி நீர்மட்டம் உயர்ந்தது. நம்பியாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நம்பி கோவிலில் தவித்த 50 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

    இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் இன்று (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் 15 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. கூடலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மண் சரிந்து தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் கூடலூர் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் ஒரு கார் மீது மரம் சரிந்து விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது.

    தமிழக-கேரள எல்லையில் குமுளி அருகே உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகமானதால் லோயர்கேம்பில் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்றால் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த செம்மான்விளை, வாழப்பறம் வீடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலையன் (வயது 67), குழிச்சல், நெடுமங்காலவிளையை சேர்ந்த தொழிலாளி அகஸ்டின் (36) ஆகியோர் உயிரிழந்தனர்.

    திருச்சி மணப்பாறையில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜூ (43), மனோகர் (41) ஆகியோர் பலியாகினர். 
    தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.
    நெல்லை:

    தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டை மலைப்பகுதியில் உள்ள குண்டாறு அணையில் 57 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. செங் கோட்டை நகர பகுதியில் 33 மில்லி மீட்டர் மழையும், தென்காசியில் 28 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    பாபநாசம், கொடுமுடியாறு அணை பகுதியிலும் அதிக மழை பெய்து வருகிறது. பாபநாசத்தில் 27 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி தண்ணீர் வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக இருந்தது. இது ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 42 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதனால் அணைக்கு வினாடிக்கு 272 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இன்றைய நீர்மட்டம் 72.80 அடியாக உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று 48.60 அடியாக இருந்தது. இன்று 1 அடி உயர்ந்து 49.50 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 57.50 அடியாக உள்ளது.

    குண்டாறு அணை நீர்மட்டம் நேற்று 17.88 அடியாக இருந்தது. ஒரே நாளில் இங்கு 5 அடி உயர்ந்து இன்று 22.38 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 12 அடியாக உள்ளது. இது போல அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 70 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையில் கடந்த மார்ச் மாதம் முதல் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருவதால் அணையில் உள்ள அனைத்து தண்ணீரும் வெளியேற்றப்பட்டு விட்டது. தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே பழுது பார்க்கும் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 522.43 கன அடி தண்ணீர் செல்கிறது.

    ஆனால் அதிகாரிகள் அந்த தண்ணீர் முழுவதையும் ஆற்றில் திறந்து விட்டு விடுகிறார்கள். இதனால் அணையில் தண்ணீர் இல்லாமல் சகதி தண்ணீர் மட்டும் 19.68 அடிக்கு உள்ளது. உடனடியாக சேர்வலாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவை நிறுத்தி அணையில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    நெல்லை, பாளை உள்பட மாவட்டத்தில் பரவலாக இன்று காலையும் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டாறு    - 57
    செங்கோட்டை - 33
    கொடுமுடியாறு - 30
    தென்காசி    - 28
    பாபநாசம்     - 27
    அடவிநயினார் - 20
    சேர்வலாறு - 19
    கடனா அணை - 15
    ராமநதி - 15
    கருப்பாநதி - 12
    ராதாபுரம்    - 11
    மணிமுத்தாறு - 9.2
    ஆய்க்குடி - 7.2
    அம்பை - 4.2
    முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளுடன் தாம்பரம்-நெல்லை இடையே புதிய ரெயில் சேவை நேற்று தொடங்கியது. கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சிமணியாச்சியில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முன்னோட்டமாக கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு அன்று தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலாக ‘அந்த்யோதயா’ ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததால், தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று தேதி குறிப்பிட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்தானது.

    இந்தநிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.40.4 கோடி செலவில் 3-வது முனையமாக உருவாக்கப்பட்டது. இதையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 8-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.

    அதன்படி தாம்பரம் ரெயில் முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழா சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குலசேத்திரா வரவேற்று பேசினார். சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி நன்றி கூறினார்.

    மத்திய இணை மந்திரிகள் ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து வைத்து ‘அந்த்யோதயா’ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து அந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டு சென்றது.

    ரெயில் 4.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விழா தாமதாக தொடங்கியதாலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பேசியதாலும் ரெயில் தாமதமாக 5.05 மணிக்கு புறப்பட்டது.

    தொடக்க விழா என்பதால் ‘அந்த்யோதயா’ ரெயில் வண்ண மலர்கள், மா இலை, பலூன்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    ‘பயோ’ கழிப்பறை, எல்.இ.டி. விளக்கு, புதிய வர்ணம், சோலார் மேற்கூரை, மெத்தை இருக்கை என ரெயிலின் உள்புற பகுதி அமைந்திருக்கிறது. எனவே பயணிகள் புதுவித அனுபவத்துடன் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர்.

    முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளில் 10 பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மற்ற பெட்டிகளில் சில பயணிகள் மட்டும் இருந்தனர். லக்கேஜ் பெட்டி உள்பட 2 பெட்டிகள் தனியாக உள்ளன.

    சென்னையில் பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக தென்மாவட்ட மக்கள் தங்கி உள்ளனர். குறிப்பாக தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். எனவே தாம்பரம்- நெல்லை புதிய ரெயில் சேவைக்கு தென்மாவட்ட மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சிலர் கூறும்போது, ‘தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது நெல்லைக்கு ரெயில் இயக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ரெயிலை விருத்தாசலம், அரியலூர் வழியாக இயக்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லாது என்ற அறிவிப்பு ஏமாற்றத்தை தருகிறது. நெல்லை, முத்துநகர் போன்ற அதிவிரைவு ரெயில்களே அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. எனவே விரைவு ரெயிலான அந்த்யோதயாவும் அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    நெல்லை அருகே நள்ளிரவில் காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை அடுத்த மேல குன்னத்தூரில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு வழிபாடு முடித்து அனைவரும் சென்றுவிட்டனர். நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்தனர்.

    பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை திருடினர். இதையடுத்து கோவில் கருவறை கதவின் பூட்டை உடைக்க முயன்றனர். முடியாததால் உண்டியலை மட்டும் அப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் தப்பின.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து ரேகைகளை பதிவு செய்தார்கள். இது குறித்து கோவில் நிர்வாகி முருகாண்டி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய மந்திரிகள் இன்று தொடங்கி வைக்கின்றனர். #AntyodayaTrain
    சென்னை:

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக்கும் பணிகள் ரூ.40.4 கோடியில் நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இருமார்க்கத்திலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கடந்த சில மாதங்களுக்கு தேதியை அறிவித்தது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மத்தியில் ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. தெற்கு ரெயில்வே மீது விமர்சனங்களும் கிளம்பின.

    இந்தநிலையில் தாம்பரம்-நெல்லை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. மேலும் தாம்பரம் ரெயில் முனையமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

    தாம்பரம் ரெயில் முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கின்றனர். மேலும் புதிய ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த விழாவுக்கு தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்க உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    தொடக்க விழாவான இன்று மட்டும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்பை நாளை(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    நாளை(சனிக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து தினசரி இரவு 12.30 மணிக்கு ரெயில் இயக்கப்படும். அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு ரெயில் புறப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கு வந்து சேரும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்தும் அமரும் இருக்கை வசதி கொண்டவை. முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்.

    முன்னதாக கோவை ரெயில் நிலையத்தில் கோவை-பெங்களூரு கே.எஸ்.ஆர். இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட உதய் விரைவு ரெயில் சேவை தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோவை-பெங்களூரு இடையிலான புதிய ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    திங்கட்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் உதய் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு ரெயில் இயக்கப்படும். பெங்களூருவை அன்றைய தினம் மதியம் 12.40 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ரெயில் புறப்படும். கோவை ரெயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    நெல்லை, திருச்சி, சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்று சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    சென்னை:

    சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் மாதிரி சட்டமன்றக்  கூட்டம் கீழ்க்கண்ட நாட்களில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் நடைபெறும்.

    5-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) திருநெல்வேலி- வி.எம்.எஸ்.திருமண மண்டபம், மகாராஜா நகர், பாளையங்கோட்டையில் நடக்கிறது.

    8-ந் தேதி (வெள்ளி) திருச்சியில் கரூர் பை-பாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது.

    12-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) சேலம்- இரும்பாலை ரோட்டில் உள்ள எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில் நடக்கிறது.


    நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பஸ்கள் கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #Thoothukudifiring
    நெல்லை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பஸ்கள் கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் நெல்லையை அடுத்த சிவந்திபட்டி அருகே விட்டிலாபுரம் பகுதியில் வந்தபோது அங்கு மறைந்துநின்ற மர்ம நபர்கள் திடீரென பஸ்சை நோக்கி கல்வீசினர்.

    இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதமானது. இதுபற்றி சிவந்திபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல நாசரேத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு தனியார் பஸ் சென்றது. பஸ் சிவந்திபட்டி அருகே சென்றபோது அந்த பஸ் மீதும் மர்ம கும்பல் கல்வீசியது.

    இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் வழியாக வீ.கே.புதூருக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

    பஸ் மேலமெஞ்ஞானபுரம் அருகே வந்தபோது அங்கு மறைந்து நின்ற மர்ம நபர்கள் பஸ்சை நோக்கி கல்வீசினர். இந்த சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

    இதுபற்றி குற்றாலம் போலீசில் புகார் செய்யப்ப‌ட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Thoothukudifiring
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரியில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. #Thoothukudipolicefiring #internetresumes
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க இணையதளச் சேவைகளை முடக்கிவைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    எனினும், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணையச்சேவைக்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளது. #Thoothukudipolicefiring #internetresumes
    நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை காரில் கடத்திய 4 பேர் குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவரது மகள் சுகன்யா(வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சங்கரசுப்பு மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார். வீட்டில் சுகன்யா மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் மாலையில் திரும்பிவந்து பார்த்தபோது சுகன்யாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிய போது 4 பேர் காரில் கடத்திசென்றதாக கூறினர்.

    இதையடுத்து சங்கரசுப்பு டவுண்போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×