search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதியுதவி"

    மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு பீகார் மற்றும் அரியானா அரசின் சார்பில் தலா 10 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRains #KeralaFloods
    பாட்னா:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.



    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    தமிழக அரசின் சார்பில் 10 கோடி, டெல்லி அரசின் சார்பில் 10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் 25 கோடி என நிதியுதவி குவிந்து வருகின்றன.

    அவ்வகையில் கேரளா மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

    இதேபோல், அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். #KeralaRains #KeralaFloods 
    உள்நாட்டு போரால் சீர்குலைந்த சிரியாவை மறுகட்டமைப்பு செய்யவும், அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. #Syria #SaudiArabia
    ஜெட்டா:

    வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதுதவிர, வடகிழக்கு பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஐ.எஸ்.க்கு எதிரான சண்டையில் அவர்கள் வசமிருந்த அனைத்து பகுதிகளையும் அமெரிக்கா தலைமையிலான படை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான படையின் வசம் இருக்கும் ரக்கா நகரை சுற்றியுள்ள பல பகுதிகளை மறு கட்டமைப்பு செய்யவும், விவசாயம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி செய்யப்போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

    சிரிய அதிபர் ஆசாத்தை கடுமையாக எதிர்க்கும் சவுதி, அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்பது குறிப்பிடத்தக்கது.
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 29 பேர் இறந்துள்ளனர். 22-க்கும் மேற்பட்ட அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் டெலிபோனில் பேசினேன். அப்போது கேரள மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினேன். இதற்காக புதுவை மாநில அரசின் நிதியிலிருந்து ரூ. 1 கோடி வழங்க உள்ளோம்.


    மேலும் கேரள மாநில மக்களுக்கு உதவும் விதமாக தனி கணக்கு ஒன்றை தொடங்க இருக்கிறோம். இந்த தனிக்கணக்கில் புதுவை பொதுமக்களும் வியாபாரிகளும் அதிக அளவில் நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க துணிகள், அரிசி, மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் ஆகியவற்றை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இதனை கேரள மாநில மக்களுக்கு அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaRain #PondicherryCM #Narayanasamy
    சாலை விபத்தில் உயிரிழந்த பெண் பத்திரிகையாளர் சாலினியை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தொலைக்காட்சி நிருபர் சாலினி மற்றும் நண்பர்கள் திண்டுக்கல்லிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, மதுரை திண்டுக்கல் ரோட்டில், பொட்டிகுளம் அருகே கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த சாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சாலினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சாலினி குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    சாலை விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜான்சன் அலெக்ஸ்.

    நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன்.

    புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த பார்த்திபன்.

    திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்லபாண்டி.

    ஈரோடு மாவட்டம், வரப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சாலமன் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    தேனி மாவட்டம், காவல் தொலைத் தொடர்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தர்மர்.

    சேலம் மாநகரம், வீராணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த காமராஜ்.

    திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சந்திரகாந்த் ஆகியோர் மாரடைப்பால் காலமானார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெய் சங்கர்.

    ஆலங்குளம் காவல் நிலைய நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வனராஜ்.

    கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த தனபால்.

    நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகன்.

    மதுரை மாநகரம், கூடல் புதூர் காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த பாண்டிமாதேவி.

    ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சேகர்.

    விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த முருகேச பாண்டி.

    காஞ்சிபுரம் மாவட்டம், நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கஜேந்திரன்.

    நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுந்தரம்.

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சதீஷ்வரன்.

    சென்னை பெருநகரக் காவல், ஆயுதப்படை1, ‘ஈ’ நிறுமம், 23ம் அணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்த் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் செல்வி லோகேஸ்வரி என்பவர் 12.7.2018 அன்று கல்லூரியில், பயிற்சியின் போது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த யோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணாக்கர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரி கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.


    எனது உத்தரவின் பேரில், காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதில், முறையற்ற பயிற்சி வழங்கிய திரு. ஆறுமுகம் என்பவர் நேற்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த செல்வி யோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  #CoimbatoreStudent #Logeshwari 
    மூன்று சக்கர சைக்கிள் கேட்டு தனக்கு கடிதம் எழுதிய மாற்றுத்திறனாளிக்கு உதயநிதி ஸ்டாலின் அவரது வீட்டிற்கு நேரில் சென்று ரூ.10 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை டவுன் கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் அருள் சகாயராஜ் (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் சிறியதாக பெட்டி கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் மூன்று சக்கர வாகனம் வாங்க நிதியுதவி செய்யும்படி உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

    இதைதொடர்ந்து நேற்று தஞ்சையில் நடந்த திருமண விழாவிற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு பொருளுதவி செய்ய கடிதம் எழுதியிருந்த அருள் சகாய ராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கு அருள் சகாயராஜை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். மேலும் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    மாற்றுத்திறனாளியான நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் கடைக்கு சென்று வரமுடியாமல் தொடர்ந்து சிரமப்பட்டு வந்தேன்.

    இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினால் அவர் உதவி செய்வார் என்று நினைத்தேன். அதன்படி அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் கடிதம் அனுப்பினேன்.

    ஆனால் உதயநிதி ஸ்டாலின் எனது வீட்டிற்கே நேரில் வந்து உதவி செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் செய்த உதவியால் 3 சக்கர சைக்கிளில் இனிமேல் கடைக்கு செல்ல எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
    விருதுநகர்:

    கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. புனித பயணம் ஜூலை மாதம் முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்‘ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு வருகிற 6-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு கூடுதலாக ரூ.645 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரி ராதாமோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதாமோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழக கால்நடைத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.441 கோடியே 31 லட்சம், கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக ரூ.41 கோடியே 73 லட்சம், தேசிய கால்நடை இயக்க திட்டங்களில் மத்திய அரசின் பங்காக ரூ.162 கோடியே 42 லட்சம் என மொத்தம் ரூ.645 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கும்படி கேட்டுள்ளோம்’ என்றார். 
    வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவி, மற்றும் விவசாயிகளின் கடன்களை திரும்ப தருவதற்கு தலா ரூபாய் 1 கோடி நிதி வழங்க பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. #AmitabhBachchan
    மும்பை:

    பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நாட்டைக் காக்கும் பணியின்போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ரூ. 1 கோடியும், கடன்களால் அல்லாடி வருகிற விவசாயிகள் கடன்களை திரும்பத் தருவதற்கு ரூ. 1 கோடியும் என மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த தகவல்களை நடிகர் அமிதாப்பச்சன் இப்போது உறுதி செய்து உள்ளார்.

    இது பற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், “ ஆமாம், என்னால் முடியும். நான் செய்வேன்” என கூறி உள்ளார்.

    இதில், பண உதவி உண்மையாகவே தேவைப்படுவோரை சென்று அடைவதை உறுதி செய்யும் தொண்டு அமைப்புகளை கண்டறிந்து பட்டியல் அளிக்குமாறு ஒரு குழுவை அமிதாப்பச்சன் அமர்த்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    ஆனால் இது பற்றி அவர் டுவிட்டர் பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை. #AmitabhBachchan  
    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க நிதி உதவி கேட்டு பிரதமர் மோடி, முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதிய இளம் வீராங்கனைக்கு ரூ.4.5 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    மீரட்:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அங்கு செல்வதற்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும் என்பதால் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.

    எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி இருந்தார்.

    தாம் விளையாட்டு போட்டியில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், என் தந்தை கூலித்தொழிலாளி என்பதால் அங்கு சென்று போட்டியில் பங்கேற்பதற்கான பண உதவியை கேட்டு முதல்மந்திரி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கடிதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், துப்பாக்கிச்சூடு வீராங்கனை பிரியா சிங் ஜெர்மனி சென்று போட்டியில் பங்கேற்பதற்காக உ.பி அரசு சார்பில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவரது பயணத்துக்கான செலவில் ஒரு பகுதியினை மாவட்ட நிர்வாகம் செய்துதரும் எனவும் கூறியுள்ளார்.


    பிரியா சிங்கின் சகோதரர்

    முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இந்த அறிவிப்பால் பிரியா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரியா சிங்கின் சகோதரர் அனிகெட் கவுதம், ‘நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஜெர்மனிக்கு எனது சகோதரியை அனுப்புவதற்கான பண வசதி எங்களிடம் இல்லை. நாங்கள் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer #YogiAdityanath
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #sterliteprotest #TTVDhinakaran
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். வார்டு வாரியாக சென்று அவர் காயமடைந்தவர்களை பார்த்து விபரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    தூத்துக்குடியில் இருந்து காவல்துறை வெளியேறவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தினார்.



    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். திமுக சார்பில் தலா ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #sterliteprotest #TTVDhinakaran

    ×