search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ"

    வாட்ஸ்அப் செயலியில் வேகமாக வலம் வரும் அதிர்ச்சி வீடியோவின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் 2019 பொது தேர்தல் நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஒட்டுமொத்த தேசமே புதிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், பழைய வீடியோ ஒன்று வைரலாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

    வைரலாகும் ஒரு நிமிட வீடியோவில் அறையினுள் அதிகாரிகள் சோதனை செய்வதும், அந்த அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 



    பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்தவர்களின் விவரங்களை ஒருவர் இந்தி மொழியில் சேகரிக்கும் காட்சிகளுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. பொது தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட அரசியல் கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி இருக்கிறது என்ற வாக்கில் தகவல்கள் பரப்பப்படுகிறது.

    உண்மையில் தற்சமயம் பரவி வரும் வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது ஆகும். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய தேர்தல் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
    ஓட்டு போடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #VotingProcessRecord #PostedFacebook
    அவுரங்காபாத்:

    மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார். இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. அந்த நபர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

    தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்செயல், தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேஸ்புக்கில் வீடியோ நீக்கப்பட்டது. 
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரிவிக்கலாம் என்றும், புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கோவை அவினாசி ரோட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களோ, புகைப்படங்களோ வைத்திருப்பவர்களும் கோவை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் அல்லது புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் கொடுப்பவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

    இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையோ, வீடியோ ஆதாரங்களையோ சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாலோ 94884 42993 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். cb-c-i-d-c-b-e-c-ity@gm-a-il.com என்ற இணையதள முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தனர். #Gorakhpurwoman #Watchingvideo #Delivery
    கோரக்பூர்:

    உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கோரக்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தார். அவர் அரசு போட்டித் தேர்வுகளுக்கு அங்கு தங்கி இருந்து படித்து வந்தார்.

    இந்த நிலையில் அப்பெண் தங்கி இருந்த வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அப்பெண்ணும், பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையும் இறந்து கிடந்தனர்.

    அவரது அறையில் கிடந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அதில், வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுப்பது எப்படி? என்ற வீடியோ இருந்தது.

    விசாரணையில் திருமணமாகாத அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்து இணைய தளத்தில் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.

    இதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டது. பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். #Gorakhpurwoman #Watchingvideo #Delivery


    வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபல வலைத்தளமான யூடியூபில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம். #YouTubeRewind2018



    யூடியூப் வலைதளத்தில் டிசம்பர் 6ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ, யூடியூப் வரலாற்றில் இதுவரை அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோவாகி இருக்கிறது. 

    இதுவரை சுமார் 12.7 கோடி பேர் பார்த்துள்ள யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோவினை 22 லட்சம் பேர் லைக் செய்துள்ள நிலையில், சுமார் 1.1 கோடி பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். முன்னதாக யூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோவாக ஜஸ்டின் பீபர் பதிவேற்றம் செய்த பேபி மியூசிக் வீடியோ இருந்தது.

    யூடியூப் சார்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவே அதிக டிஸ்லைக் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ரெடிட் பயன்படுத்துவோர், யூடியூப் ரீவைன்ட் வீடியோ பற்றி மீம்களை பதிவேற்றம் செய்து, இதனை டிஸ்லைக் செய்யக் கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 



    யூடியூப் வெளியிட்டதிலேயே மிகவும் மோசமான வருடாந்திர வீடியோவாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. வீடியோவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைப்புகள் மீது பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இத்துடன் வீடியோவின் தீம் அதிகளவு செயற்கையாக இருக்கிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    யூடியூபில் பிரபலங்களாக பார்க்கப்படும் மார்கியூஸ் பிரவுன்லீ, டெக்னிக்கல் குருஜி மற்றும் நடிகர் வில் ஸ்மித் ஆகியோர் வீடியோவின் துவக்கத்தில் தோன்றுகின்றனர். அந்த வகையில் வீடியோவில் மேலும் சில பிரபலங்கள் இடம்பெறவில்லை என பலர் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

    யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ பெற்றிருக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், யூடியூப் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறது. ஒற்றை வரியில் பதிவிடப்பட்டு இருக்கும் ட்விட் யூடியூபில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதை நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறது. #YouTubeRewind2018
    மகாராஷ்டிர மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. #100YearOldBridge #BridgeDemolition
    தானே:

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது கலு நதியின் குறுக்கே இரண்டு சிறிய மலைகளை இணைந்து பாலம் கட்டப்பட்டது. ஷகாபூர்- முராத் தாலுகாக்களை இணைக்கும் இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிதிலமடைந்து, கடந்த ஆண்டு மிகவும் மோசமானது. இதனால் இந்த பாலம் அபாயகரமான பாலம் என அறிவிக்கப்பட்டு, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி வெடிவைத்து பாலம் தகர்க்கப்பட்டது. பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்திவாய்ந்த வெடிகள் பொருத்தப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்கச் செய்யப்பட்டது. அதிகாலையில் பாலத்தை வெடிவைத்து தகர்த்த காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர். நொடிப்பொழுதில் பாலம் இடிந்து விழும் காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

    அந்த பாலம் இருந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #100YearOldBridge #BridgeDemolition



    உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி சிறையில் கைதிகள் மது அருந்தும் சம்பவம் தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். #Raebarelijail
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஜெயிலுக்குள் கைதிகள் மது அருந்தி உற்சாகமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

    இந்த வீடியோ காட்சிகளை உள்ளூர் டி.வி. சேனல் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது. அதில் கைதி ஒருவர் செல்போனில் யாரிடமோ பேசி மதுபானம் கொண்டு வருமாறு கூறுகிறார்.

    இதையடுத்து ஜெயிலுக்குள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்படும் மதுவை கைதிகள் அருந்தும் காட்சி மற்றொரு கைதி ஆயுதத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டும் காட்சியும் அந்த வீடியோவில் இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    இதையடுத்து ரேபரேலி மாவட்ட ஜெயில் மூத்த சூப்பிரண்டு பிரமோத்குமார், ஜெயிலர் கோவிந்த்ராம் மிஸ்ரா, துணை ஜெயிலர் ராம்சந்த்ர திவேரி, தலைமை வார்டன் லால்தா பிரசாத் பாண்டே, வார்டன்கள் கங்காராம், ஷிவ்மங்கள்சிங் ஆகிய 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 கைதிகள் வேறு ஜெயில்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இதுபற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சிறைத்துறை முதன்மை செயலாளர் அரவிந்த்குமார் கூறியதாவது:-

    வீடியோ வெளியானவுடன் ஜெயில் வளாகத்தில் உடனடியாக சோதனை செய்யப்பட்டது. அங்கு 4 செல்போன்கள், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுதொடர்பாக மூத்த ஜெயில் சூப்பிரண்டு உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றார்.

    கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பத் ஜெயிலில் மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி சக கைதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இச்சம்பவத்தின்போது ஜெயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

    இதுபோல உத்தரபிரதேசத்தில் உள்ள பல ஜெயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் சோதனை கருவிகள் செயல்படாமல் இருந்தது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. #Raebarelijail
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #CoimbatoreGovtHospital
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    மேலும் 1600 மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை வெளியே தூக்கி வீசும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி 45 வயது மதிக்கதக்க பெண் ஆதரவற்ற நிலையில் உடல் நிலை பாதிப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அவரை டாக்டர்கள் வார்டு எண் 85 பெண்கள் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 9 மணியளவில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

    அந்த பெண்ணின் உறவினர்கள் யாரும் வராததாலும் பெயர், ஊர் போன்ற தகவல்கள் தெரியாததால் அந்த பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் வார்டிலேயே வைத்தனர்.

    அப்போது அங்கு சுற்றித்திரிந்த பூனை ஒன்று தரையில் வைக்கப்பட்டு இருந்த பெண்ணின் காலை கடித்து கொண்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கூறினர். அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை.


    இதனையடுத்து அவர்கள் பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சியை தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மேலும் அங்கு இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் பெண்ணின் உடலை உடனடியாக பிணவறைக்கு கெண்டு செல்லுமாறு தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவ ஊழியர்கள் இறந்த பெண்ணின் உடலை அவசர அவசரமாக பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #CoimbatoreGovtHospital
    சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டைக்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர் மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக அனுப்பிய வீடியோ பதிவை தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று முன்தினம் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 2 போலீசாரும், அவர்களுடன் சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாகுவும் பலியானார்கள். தூர்தர்ஷன் நியூஸ் சேனலின் உதவியாளர் மூர்முகுத் சர்மா, பத்திரிகையாளர் தீரஜ் குமார் ஆகியோர் உயிர்தப்பினர்.

    முன்னதாக, துப்பாக்கி சண்டைக்கு நடுவே, மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக பேசி, வீடியோவில் பதிவு செய்தார். ஒரு கால்வாய்க்குள் படுத்தபடி அவர் பதிவு செய்த வீடியோவில், துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாயும் காட்சி தெரிகிறது.

    அதில், ‘அம்மா, இந்த தாக்குதலில் நான் கொல்லப்படலாம். உயிர் பிழைத்தால் நன்றி சொல்வேன். மரணம் என்னை நெருங்கியபோதிலும் எனக்கு பயம் இல்லை’ என்று அவர் பேசி உள்ளார். அந்த வீடியோவை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
    மும்பையில் கால்பந்து விளையாடிய போது காருக்கு அடியில் சிக்கிய சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.#MumbaiBoy
    மும்பை:

    மும்பையில் கடந்த 24-ந்தேதி காரில் சிக்கிய சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்தது.

    கடந்த 24-ந்தேதி மாலை 7 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டு இருந்தனர். ஒரு சிறுவன் உதைத்த பந்து குடியிருப்பு ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே உருண்டு ஓடிவந்தது.

    இரு சிறுவர்கள் அந்த பந்தை விரட்டி வந்து கடத்திச் சென்று விடுகிறார்கள். அப்போது சிகப்பு கலர் டிசர்ட் அணிந்த சிறுவனின் ஷு லேஸ் கழன்றுவிட்டதால் கார் அருகில் முழங்கால் போட்டு அமர்ந்து ஷு லேஸ் கயிரை சரி செய்கிறான். இந்த நேரத்தில் காரில் அமர்ந்து இருந்த பெண், சிறுவன் காருக்கு முன்னாள் அமர்ந்து இருப்பது தெரியாமல் காரை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.

    இதில் சிறுவன் காருக்கு அடியில் சிக்கி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்படுகிறான். நல்ல வேளையாக இரு சக்கரத்துக்கும் இடையில் சிக்கிக் கொள்ள அப்படியே தரையில் படுத்துக்கொள்கிறான். இதனால் கார் சக்கரத்தில் அடிபடாமல் அதிசயமாக தப்பிவிட்டான்.

    அதை கார் ஓட்டிய பெண்ணும் கவனிக்கவில்லை. அவனுடன் விளையாடிய சிறுவர்களும் கவனிக்கவில்லை. உயிர் தப்பிய சிறுவன் எந்தவித அதிர்ச்சியும் இல்லாமல் தானாகவே எழுந்து ஓடிச் சென்று மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடுகிறான். எதுவும் நடக்காதது போல் அதிர்ச்சியின்றி கால்பந்து விளையாட்டில் மும்முரம் காட்டினான்.

    இந்தக் காட்சி அந்த குடியிருப்பின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. முதலில் சிறுவன் மீது கார் மோதுவதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் அவன் துள்ளிக் குதித்து ஓடுவதைப் பார்த்து “அப்பாடா... தப்பித்தான்... கடவுளே...” என்று நிம்மதி அடைய முடிகிறது.

    இந்த வீடியோவைப் பார்த்த மும்பை போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை கைது செய்தனர். அஜாக்கிரதையாக காரை ஓட்டிச் சென்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகள் விளையாடும் போது கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #MumbaiBoy

    Video Courtesy: DailyMail

    விஜய் மல்லையாவுக்கு மும்பை ஜெயிலில் டி.வி., காற்றோட்ட வசதி கொண்ட அறை ஒதுக்கப்படுவதாக லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ வீடியோ தாக்கல் செய்துள்ளது. #VijayMallya #UKCourt #CBI
    லண்டன்:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9500 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சி.பி.ஐ. முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்படுவார். ஆனால் அங்குள்ள சிறைகளில் போதிய வசதி கிடையாது. அவர் மோசமாக நடத்தப்படுவார் என விஜய் மல்லையாவின் வக்கீல் வெஸட் மினிஸ்டர் கோர்ட்டில் தெரிவித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து இந்திய சிறைச்சாலையின் தன்மை குறித்தும், அதில் உள்ள வசதிகள் குறித்தும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    அதற்கு பதில் அளிக்கும் வகையில் மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள ஜெயிலில் அறை எண் 12-ல் உள்ள வசதிகள் குறித்த வீடியோவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் அவர் அடைக்கப்படும் அறையில் உள்ள அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.

    அங்கு டி.வி.செட், தனியாக கழிவறை வசதி, இயற்கையான சூரிய ஒளி அவர் அறைக்குள் வருவது போன்ற அமைப்பு உள்ளது. அவர் நூல் நிலையம் சென்று படிப்பதற்கான வசதிகள் நடை பயிற்சிக்கான இட வசதி குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


    இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்து விட்டனர். அதே நேரம் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “இந்திய சிறைகளில் சுகாதார வசதி இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து அறிய இங்கிலாந்து கோர்ட்டு விரும்பியது.

    இந்திய சிறைகள் சுகாதாரமாக இருக்கிறது என்ற ஆதாரத்துக்காக அந்த வீடியோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விஜய் மல்லையா அடைக்கப்பட இருக்கும் சிறை கிழக்கு பார்த்து உள்ளது. இதனால் அங்கு சூரிய வெளிச்சம் நன்றாக கிடைக்கும் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, “சிறை அறையில் எதிர் எதிராக ஜன்னல்கள் மற்றும் காற்றோட்ட வசதி உள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நடைபயிற்சிக்கு ஏற்ற வகையில் இடவசதி உள்ளது. எனவே அவரை இந்தியாவுக்கு அனுப்புவதில் எந்தவித தடையும் இருக்காது.

    இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் இன்னும் 2 மாதத்தில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். #VijayMallya #UKCourt #CBI
    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா ஜூஸ் குடித்த அறையின் அமைப்பும், காட்சிகளும் முரண்படுவதால் அந்த வீடியோ உண்மையானதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. #Jayalalithaa #ApolloHospital
    சென்னை:

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவரது மறைவுக்கு பின்பு வெளியானது. அவ்வாறு ஜெயலலிதா ஜூஸ் குடித்தபோது இருந்ததாக கூறப்பட்ட அறையை ஆணையத்தின் வக்கீல்கள் ஆய்வு செய்தனர். அந்த அறையின் அமைப்பும், வீடியோவில் உள்ள காட்சிகளும் முரண்படுவதால் அந்த வீடியோ உண்மையானதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது.



    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவின் பேரில் ஆணையத்தின் வக்கீல்கள் எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வு குறித்து ஆணைய வட்டாரம் தரப்பில் கூறப்படுவதாவது:-

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவரது மறைவுக்கு பின்பு வெளியானது. இந்த வீடியோ சசிகலாவால் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஜெயலலிதா ஜூஸ் குடித்தபோது இருந்ததாக கூறப்பட்ட சாதாரண அறை ஆய்வு செய்யப்பட்டது.

    ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவில் கண்ணாடி போன்ற ஜன்னல் இருப்பதும், அறையை ஒட்டி செடிகள் இருப்பதும் தெரியும். ஜெயலலிதா கண்ணாடி வழியாக வெளியே பார்க்கும்போது பசுமையாக தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கையாக செடிகளை வைத்திருந்ததாக அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறையில் ஜெயலலிதா டி.வி. பார்த்துக் கொண்டே ஜூஸ் குடித்ததாக கூறப்பட்டது.

    அந்த அறையின் அமைப்புப்படி பார்த்தால் ஜெயலலிதா படுத்திருந்த இடத்துக்கு எதிரே வாசல் தான் உள்ளது. அங்கு டி.வி. இருக்க வாய்ப்பு இல்லை. அதேபோன்று ஜன்னலும் இல்லை. வீடியோவில் இருந்த அமைப்பே அந்த அறையில் இல்லை. இதன்மூலம் அந்த வீடியோ உண்மையானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதுகுறித்து கேட்டதற்கு, தற்போது அந்த அறையை அறுவை சிகிச்சை கூடமாக (ஆபரேசன் தியேட்டர்) மாற்றி விட்டதாக அப்பல்லோ தரப்பில் கூறப்பட்டது. இது கேள்விக்குறியாக உள்ளது.

    அமைச்சர்கள் இருந்ததாக கூறப்படும் அறையில் இருந்து ஜெயலலிதாவை பார்க்க முடியாது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறைக்குள் யார், யார் செல்கிறார்கள் என்பதை அமைச்சர்கள் பார்க்கலாம். அதேபோன்று ஜெயலலிதா சிகிச்சையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் குழுவினருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்தும் ஜெயலலிதா அறையில் என்ன நடக்கிறது? என்பதை பார்க்க முடியாது. எனவே அவர்கள், ஜெயலலிதா அறையில் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்திருக்க முடியாது.

    ஜெயலலிதா இருந்த தீவிர சிகிச்சை பிரிவு அறை எண்.2008-ஐ பொறுத்தமட்டில் 14-க்கு 14 அடி அளவில் தான் இருந்தது. அந்த அறையில் 8 அடி அகலத்துக்கு மருத்துவ சிகிச்சைக்கான எந்திரம்(மெஷின்) வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தில் தான் ஜெயலலிதா படுத்திருந்த கட்டில் உள்ளது. அந்த அறையில் 2 பேர் மட்டுமே நிற்க முடியும். சசிகலா தங்கியிருந்தது ‘சூட் ரூம்’ எனப்படும் சொகுசு அறை ஆகும். இந்த அறை 30-க்கு 30 அடி என்ற அளவில் இருந்தது.

    சசிகலா தங்கியிருந்த அறையை ஒட்டி 5 அறைகளில் அவரது உறவினர்கள் தங்கி இருந்தனர். அந்த அறைகளில் பெரிய ஷோபாக்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

    இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.  #Jayalalithaa #ApolloHospital 
    ×