search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உசிலம்பட்டி"

    உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்தில் வசிப்பவர் கண்ணாடிச்சாமி. இவரது மகன் கல்யாணசுந்தரம் (வயது 29). இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உடற் பயிற்சி பேராசிரியராக உள்ளார்.

    கல்யாணசுந்தரத்தின் மனைவி ஜெயபிரதா பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இரவில் ஆஸ்பத்திரியில் கல்யாணசுந்தரம் தங்கியிருந்தார்.

    இன்று காலை கல்யாண சுந்தரம் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 தங்கச்சங்கிலிகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    11 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக கல்யாணசுந்தரம் தெரிவித்த புகாரின் பேரில் கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 14 பவுன் நகைகளை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பெருமாள் பட்டியைச் சேர்ந்த குருமூர்த்தி மனைவி அமிர்தவல்லி (வயது29). இவர் சம்பவத்தன்று இரவு சென்னைக்கு செல்வதற்காக உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் வைத்திருந்த கைப்பையில் 14 பவுன் நகை இருந்ததாக தெரிகிறது.

    அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதையடுத்து அமிர்தவல்லி உசிலம்பட்டி-தேனி மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு பஸ் நிலையம் திரும்பினார்.

    இந்த நிலையில் அமிர்தவல்லி தற்செயலாக கைப்பையை சோதித்து பார்த்தார். அப்போதுதான் பையில் இருந்த 14 பவுன் நகைகள் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக அமிர்தவல்லி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குணசீலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    உசிலம்பட்டி போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி அருகே உள்ள சடச்சிபட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது தோட்டத்து கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் விஷால் (வயது15). அவரது நண்பன் ஜெயக்கொடி (13) ஆகியோர் குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது விஷால் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். கிணற்றுக்குள் குதித்ததில் ஜெயக்கொடி காயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி இருந்தாலும் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி ஊராட்சிக்குட்பட்டது மாருதிநகர், சத்யாநகர். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீருக்காக பெண்கள் நீண்டதூரம் சென்று அலையும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென காலிகுடங்களுடன் உசிலம்பட்டி-மதுரை மெயின் ரோட்டில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் மதுரை-தேனி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ இடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    உசிலம்பட்டி அருகே அரசு பஸ் மோதியதில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 61).

    இவர் இன்று காலை அங்குள்ள மதுரை சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையை நோக்கி அரசு பஸ் வேகமாக வந்தது.

    அந்த பஸ் எதிர்பாராத விதமாக சாலையை கடந்த லட்சுமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து செக்கானூரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டியில் 16-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி மின் வினியோக செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    உசிலம்பட்டி, தும்மக் குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு, சின்னக் கட்டளை, எழுமலை மின் நிலையங்களில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே அந்த நேரத் தில் உசிலம்பட்டிநகர், நக்கலப்பட்டி, தொட்டப்ப நாயக்கனூர், மேக்கிலார் பட்டி, கீரிபட்டி, சிந்து பட்டி, தும்மக்குண்டு, வேப்ப னூத்து, பூதிப்புரம், வடுக பட்டி, போத்தம்பட்டி, சின்னக்கட்டளை, சேடப் பட்டி, குப்பல்நத்தம், மங்கல் ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப் பட்டி, வகுரணி, அயோத்தி பட்டி, அல்லிகுண்டம், பொம் மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம் பரணி, சென்னம்பட்டி, பர மன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார் பட்டி, பேரையூர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    அதேபோல் எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, அதிகாரிப்பட்டி, எம்.கல் லுப்பட்டி, துள்ளுக் குட்டிநாயக்கனூர், டி.ராம நாதபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப் பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில் நாயக்கனூர், எ.பெருமாள் பட்டி, மானூத்து, சாப்டூர், அத்திபட்டி, அணைக் கரைப்பட்டி, மெய்நத்தம் பட்டி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்து பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொட்டிக் குண்டு, பாப்பா பட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைபட்டி, வையம்பட்டி, லிங்கப்ப நாயக்கனூர், புதுக் கோட்டை, சீமானூத்து, துரைச்சாமிபுரம்புதூர் மற்றும் அதனை சார்ந்த ஊர்களிலும் மின் வினி யோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

    உசிலம்பட்டியில் பெண் துப்புரவு தொழிலாளியிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்த வரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    உசிலம்பட்டி ஆனந்தா நகரைச் சேர்ந்த முனியாண்டி மனைவி நாகம்மாள் (வயது 48). துப்புரவு தொழிலாளி.

    இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த விருமாண்டி (59) என்பவரிடம் கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக ரூ.1 லட்சம் கடன் கேட்டார். இதற்கு விருமாண்டி தயங்கினார்.

    அப்போது நாகம்மாள் ஏ.டி.எம். கார்டை தருகிறேன். அதில் இருந்து மாதந்தோறும் வட்டிப்பணம் ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து விருமாண்டி உசிலம்பட்டி பஸ் நிலையம் வந்து நாகம்மாளிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு ஏ.டி.எம். கார்டை வாங்கிச் சென்றார்.

    சமீபத்தில் நாகம்மாள் ரூ. 1 லட்சம் அசலை திருப்பி கட்டிவிட்டு ஏ.டி.எம். கார்டை பெற்றார். அதன் பிறகு ஏ.டி.எம். கார்டில் பண இருப்பை சோதித்து பார்த்தபோது விருமாண்டி ரூ.1.32 லட்சம் பணத்தை கூடுதலாக எடுத்தது தெரிய வந்தது.

    இது குறித்து நாகம்மாள் உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. கல்யாண்குமார் வழக்குப்பதிவு செய்து விருமாண்டியை கைது செய்தார். இதில் தொடர்புடைய அவரது மருமகள் சுபா (35) தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உசிலம்பட்டி பகுதியில் நாளை மின் சப்ளை நிறுத்தப்படுவதாக உசிலம்பட்டி மின் விநியோகம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    உசிலம்பட்டி:

    இது குறித்து உசிலம்பட்டி மின் விநியோகம் செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    சின்னக்கட்டளை துணை மின் நிலையம் மற்றும் எழுமலை துணை மின் நிலையங்களில் (நாளை வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லி குண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுபப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், பகுதிகளில் மின் விநியோம் இருக்காது. கேத்துவார்பட்டி, பேரையூர், எழுமலை, சூலபுரம், உலைபட்டி, மள்ளபுரம், அய்யம் பட்டி, எம்.கல்லுபட்டி, அதிகாரிபட்டி, துள்ளு குட்டிநாயக்கனூர், ராமநாதபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைபட்டி, தடை யம்பட்டி, பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானூத்து மற்றும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews
    உசிலம்பட்டி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் 76 வயதான மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது76). இவரது மகன் காசி. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த காசிக்கு, அன்னக்கொடி பல இடங்களில் பெண் தேடினார். ஆனாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது.

    இதனால் விரக்தி அடைந்த அன்னக்கொடி தோட்டத்தில் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அன்னக்கொடியின் மற்றொரு மகன் மனோகரன் உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    கண்மாய் நீரில் மூழ்கடித்து 12 வயது சிறுவனை கொன்ற 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பெருமாள்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் மகன் கவின் குமார் (வயது12).

    இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கவின்குமார் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கண்மாயில் குளிக்க சென்றான். அடுத்த ஒரு மணி நேரத்தில் கவின் குமாரின் உடல் குளத்தில் மிதப்பதாக தகவல் வந்தது.

    இதையடுத்து செல்லப்பாண்டி உத்தப்ப நாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    சிறுவன் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் கவின்குமாருடன் குளிக்க சென்ற 3 மாணவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கவின்குமாரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டு முன்பு இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கருமாத்தூரை அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி மலர் (வயது 27).

    கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன், மகளுடன் மலர் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் முன்பு மர்மமான முறையில் மலர் இறந்து கிடந்தார்.

    அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. உடலில் கத்திக்குத்து காயமும் காணப்பட்டது. எனவே அவரை யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    செக்கானூரணி போலீசார் சம்பவ இடம் சென்று மலர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உசிலம் பட்டி துணை சூப்பிரண்டு கல்யாணகுமார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    உசிலம்பட்டி அருகே கிணற்றில் மிதந்த சிறுவன் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியைச் சேர்ந்த ஒச்சு என்பவரின் தோட்டத்து கிணற்றில் சிறுவன் ஒருவன் பிணமாக கிடந்தான்.

    இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த சிறுவனின் பெயர் சஞ்சய் (வயது 17) என்றும், அழகுமலை என்பவரின் மகன் என்பதும் தெரியவந்தது.

    சஞ்சய்க்கு நீண்ட நாட்களாகவே காக்கா வலிப்பு நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் கிணற்றில் குளித்த போது நோய் பாதிப்பு காரணமாக இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இருந்த போதிலும் சஞ்சய் மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×