search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டா"

    தமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) எந்த வேட்பாளர்களையும் விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 1 கோடியே 26 லட்சத்து 6  ஆயிரத்து 636  வாக்குகளை (29.8 சதவீதம்) பெற்றது.



    மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் மொத்தமாக 72 லட்சத்து 50 ஆயிரத்து 210 (17.1 சதவீதம்) வாக்குகளை  பெற்றுள்ளன. 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) நோட்டா சின்னத்தில் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 861 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

    இதேபோல் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் 47 ஆயிரத்து 191 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
    தமிழகம் முழுவதும் ‘நோட்டா’ குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறியது. #Nota #ChennaiHighCourt #ElectionCommission
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ‘நோட்டா’ குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

    சென்னை ஐகோர்ட்டில், நிர்மல்குமார் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், ‘நோட்டா’வில் வாக்களிக்கலாம். ஆனால், இந்த ‘நோட்டா’ குறித்து பொதுமக்களுக்கு முழுமையான விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தவில்லை.

    இதனால், ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு தங்களுடைய வாக்குகளை செலுத்த மறைமுகமாக வாக்காளர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் விதிகளுக்கு எதிராக அமைந்து விடுகிறது. எனவே, நோட்டா குறித்து மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு, உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், “நோட்டா குறித்து பஸ் நிலையங்களிலும், தியேட்டர்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நோட்டா குறித்த துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, கோயம்பேடு, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெரிய அளவிலான எல்.இ.டி., டி.வி. திரையில் விழிப்புணர்வு விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள் மூலமும், நடமாடும் வாகனங்கள் மூலமாகவும், நோட்டா குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

    மேலும் அந்த பதில் மனுவில், “தெற்கு ரெயில்வே, மெட்ரோ ரெயில் மூலமும் நோட்டா குறித்து விளம்பரப்படுத்தப்படுகிறது. போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், மாரத்தான் ஓட்டம் மூலமும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. நோட்டா குறித்து தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.    #Nota #ChennaiHighCourt #ElectionCommission

    தேர்தலில் ‘போட்டியிடும் வேட்பாளர்கள் மீது திருப்தி இல்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’ என்று தேர்தல் ஆணையம் போஸ்டர்கள் அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. #ElectionCommission #Nota
    கோவை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஓட்டுப் பதிவு குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு தலைப்புகளில் போஸ்டர்கள் அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    ‘நமது இலக்கு, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு’ என்று ஒரு போஸ்டரும், ‘ஓட்டளிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்’ என்ற தலைப்பில் மற்றொரு போஸ்டரும் அச்சிடப்பட்டுள்ளது.

    உடல் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளும், சிரமமின்றி ஓட்டளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளது.

    தேர்தலில் ‘போட்டியிடும் வேட்பாளர்கள் மீது திருப்தி இல்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’ என்று ஒரு போஸ்டரும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டு எந்திரத்தில், ‘நோட்டா’ பட்டன் இருக்கும் இடமும் காண்பிக்கப்பட்டுள்ளது.



    தேர்தல் கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம் என்ற தலைப்பில் உள்ள போஸ்டர், தேர்தல் ஆணையத்தின் ‘சிவிஜில் ஆப்’ நோக்கம், பயன்பாடு பற்றி விளக்குகிறது. இந்த போஸ்டர்கள் பொதுஇடங்கள், அரசு அலுவலகங்கள், ஓட்டுச்சாவடிகளில் ஒட்டப்பட உள்ளது. #ElectionCommission #Nota
    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மந்திரிகள் 4 பேர் நோட்டா ஓட்டால் தோல்வியை தழுவினார்கள். #BJP #Congress #Nota #MadhyaPradeshAssemblyElection2018
    போபால்:

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

    பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி, சுயேட்சைகளுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

    அந்த மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளாகும். மெஜாரிட்டிக்கு 116 இடங்கள் தேவை.

    காங்கிரஸ் 114 இடங்களையும், பா.ஜனதா 109 தொகுதியையும் கைப்பற்றின. பகுஜன் சமாஜ்-2, சமாஜ்வாடி-1 சுயேட்சை-4 இடங்களில் வெற்றி பெற்றன.

    மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு நோட்டாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 22 தொகுதிகளில் பா.ஜனதா குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு நோட்டா முக்கிய பங்கு வகித்தது.

    பா.ஜனதா மந்திரிகள் 4 பேர் நோட்டாவால் வெற்றியை இழந்து தோல்வியை தழுவினார்கள்.



    குவாலியர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட உள்துறை இணை மந்திரி நாராயணன்சிங் குஷ்வா 121 ஓட்டில் தோற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1550 வாக்குகள் கிடைத்தது. தமோ தொகுதியில் நிதி மந்திரி ஜெயந்த் மல்லையா 799 வாக்கில் தோற்றார். இங்குநோட்டாவுக்கு 1,299 ஓட்டுகள் கிடைத்தது.

    ஜபல்பூர் வடக்கு தொகுதியில் சுகாதாரதுறை இணை மந்திரி சரத் ஜெயின் 578 வாக்குகள் வித்தியாத்திலும், (நோட்டா 1,209), புர்கான்பூர் தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி 5,120 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 5,700) தோற்றனர்.

    இதேபோல காங்கிரசுக்கும் சில தொகுதிகளில் நோட்டாவால் பாதிப்பு ஏற்பட்டது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நோட்டாவுக்கு மொத்தம் 5.4 லட்சம் ஓட்டுகள் கிடைத்தது. இது 1.4 சதவீதம் ஆகும். இதன் மூலம் அந்த மாநிலத்தில் 5-வது இடம் கிடைத்தது.

    பா.ஜனதா 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரஸ் 40.9 சதவீத ஓட்டுகளும், பகுஜன் சமாஜ் 5 சதவீத ஓட்டுகளும், ஜி.ஜி.பி. கட்சி 1.8 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. அதற்கு அடுத்த இடத்தில் நோட்டா இருக்கிறது. சமாஜ்வாடி ((1.3 சதவீதம்), ஆம் ஆத்மி (0.7 சதவீதம்) ஆகிய கட்சிகள் நோட்டாவுக்கு அடுத்த நிலையிலேயே உள்ளன. #BJP #Congress #Nota #MadhyaPradeshAssemblyElection2018
    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - மெஹ்ரீன் பிர்சாடா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நோட்டா' படத்தின் விமர்சனம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada
    தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் நாசர். அவரது மகன் விஜய் தேவரகொண்டா, அரசியலில் ஈடுபாடு இல்லாமல் வெளிநாட்டில் வீடியோ கேம் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    சிறு வயதிலேயே தாயை இழந்த விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு, இந்தியா வந்து தனது அம்மா பெயரில் இருக்கும் ஆசிரமத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த ஆசிரமத்தை சத்யராஜ் நிர்வகித்து வருகிறார். அவரது மகளான மெஹ்ரின் பிர்சாடா பத்திரிகை ஒன்றில் நிருபராக இருக்கிறார்.



    இப்படி இருக்க, தனது பிறந்தநாளுக்காக இந்தியா வரும் விஜய் தேவரகொண்டா, தனது பிறந்தநாளை கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்துடன் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், நாசர் அழைப்பின் பேரில் அவசரமாக அழைத்துச் செல்லப்படும் விஜய் தேவரகொண்டா இரவோடு இரவாக தமிழகத்தின் புதிய முதல்வராக அறிவிக்கப்படுகிறார்.

    நாசர் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எண்ணிய நாசர், சாமியார் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தனது மகனையே முதலமைச்சராக்குகிறார். நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை விஜய் தேவரகொண்டா வெளியில் வரவேண்டாம் என்றும் நாசர் அறிவுறுத்துகிறார்.

    இந்த நிலையில், நாசருக்கு எதிராக அந்த வழக்கின் பின்னணி திரும்ப, அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாசர் கைது செய்யப்படுவதால், தமிழ்நாட்டில் கலவரம் மூள்கிறது. அந்த கலவரத்தில் உயிரிழப்புகளும் ஏற்டுகிறது. இந்த நிலையில், செய்வதறியாது தவிக்கும் விஜய், மக்களை சந்திக்க வெளியில் வருகிறார்.



    அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ஆக்ரோஷமாக பேசும் விஜய், கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அவரது ஆக்ரோஷமான உத்தரவு அவருக்கு ரவுடி முதலமைச்சர் என்ற பெயரை வாங்கிக் கொடுக்கிறது. எதிர்கட்சி தலைவரின் மகளான சஞ்சனா நடராஜன், கல்லூரியில் படிக்கும் போதே விஜய் ரவுடி தான் என்று பிரசாரம் செய்து, அவருக்கு எதிராக சில சதிதிட்டங்களையும் தீட்டுகிறார்.

    இதற்கிடையே ஜாமீனில் வெளியில் வரும் நாசர், குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாக அரசியலில் நுழைந்து தற்போது மக்களுக்காக உழைக்க வேண்டும், நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கவனம் செலுத்துகிறார் விஜய். அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, டம்மியான ஒருவரை பதவியில் உட்கார வைக்க நாசர் முடிவு செய்கிறார். ஒருகட்டத்தில் இது அப்பா, மகன் அரசியல் சண்டையாக மாறுகிறது.



    கடைசியில், அப்பா, மகனுக்கு இடையே நடந்த அரசியல் போரில் யார் வெற்றி பெற்றார்? தனக்கு எதிராக வந்த சூழ்ச்சிகளை விஜய் தேவரகொண்டா முறியடித்தாரா? முதலமைச்சராக நீடித்தாரா? தனது பழைய வாழ்க்கைக்கே திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே நல்ல அடித்தளத்தை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். முதலமைச்சர் பதவி பற்றி எந்த அனுபவமுமின்றி வேண்டா வெறுப்பாக அதில் உட்காரும் அவர், தனக்கு எதிராக வரும் சிக்கல்களை எதிர்நோக்கும் காட்சிகளிலும், தமிழ் வசனங்களை பேசும் போதும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு சொல்லும்படியாக பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியான சஞ்சனா நடராஜன் அரசியல் களத்தில் தீயை பற்றவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    படத்திற்கு முக்கிய பலம் சத்யராஜ் மற்றும் நாசரின் நடிப்பு. சத்யராஜ் அவரது உண்மையான தோற்றத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் நாசர் முக்கிய பங்காற்றுகிறார். அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் ஒரு சில காட்சிகளில் வருகிறார்.

    பொதுவாக அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும். அனைவரும் அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை கையில் எடுப்பதில்லை. அப்படி கையில் எடுத்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் என்றும் கூறமுடியாது. அந்த வகையில் தைரியமாக அரசியல் கதையை இயக்கியுள்ள ஆனந்த் சங்கருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாவது பாதி கொஞ்சம் நீளமாகவும் இருக்கிறது. திரைக்கதையில் இரண்டாவது பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

    சாம்.சி.எஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் கேட்கும் ரகம் தான். சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `நோட்டா' ஒருமுறை வாக்களிக்கலாம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada

    விஜய்சேதுபதியின் ‘96’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ படங்கள் ரிலீசால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #NOTA
    தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.

    ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியிட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை வாரத்தின் முதல் இரண்டு வாரத்திலும், கடைசி வாரத்திலும் திரையிட தேதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் அந்த படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது. 



    இந்த நிலையில் அடுத்த வாரம் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணு விஷாலின் ராட்சசன், விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களையும் திரைக்கு கொண்டுவர அனுமதி வழங்கி அவற்றுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5-ந் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்தனர். 

    இதற்கிடையே விவேக்கின் எழுமின் படம் அக்டோபர் 18-ஆம் தேதிக்கும், உதயாவின் உத்தரவு மகாராஜா படம் அக்டோபர் 26-ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. #96TheMovie #NOTA #ProducersCouncil

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் நோட்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சத்யராஜ், தனது லொள்ளு பேச்சால் அரங்கில் இருப்பவர்களை சிரிப்பலையில் மூழ்கடித்தார். #NOTA #Sathyaraj
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் நாயகனாக தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா, சன்சனா நடராஜன் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேசும் போது,

    “நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப்படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் டப்பிங் பேசுவது தான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. ஆனால் இந்தப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா, அழகான தமிழ் உச்சரிப்புடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது கண்டு பிரமித்து போனேன். 



    நான் இந்த படத்தில் ஜாலியாக நடித்திருக்கிறேன் என்று நாசர் சொன்னார். என்னுடைய 41 வருட சினிமா வாழ்க்கையில், சின்ன மேக்கப் கூட இல்லாமல் நான் நடித்த முதல் படம் இது தான். விக் இல்லாமல் கூட நடித்திருக்கிறேன். ஆனால், ரொம்ப நாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர். #NOTA #Sathyaraj #VijayDevarakonda

    சத்யராஜ் பேசிய வீடியோவை பார்க்க:

    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்திற்காக நானும் மரண வெயிட்டிங் என்று கூறினார். #NOTA #VijayDevarakonda
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா, சன்சனா நடராஜன் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

    சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், சன்சனா மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    விழாவில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும்போது, “ஆனந்த் சங்கரை பொறுத்தவரை பாடல்களை குறைத்து பின்னணி இசையில் கவனம் செலுத்துவார். எனக்கும் அதே அலைவரிசை என்பதால் எளிதாக செட்டாகி விட்டோம். இந்தப்படத்தின் பின்னணி இசையை கவனிப்பவர்கள், இவர் வித்தியாசமான முயற்சிகளை பண்ணுவார் என என்மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பார்கள். நாம் எதிர்கொண்ட, நம்மை பாதித்த விஷயங்களை இதில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்” என்றார்.



    நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித் துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத் திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங். இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை.” என்றவர் ‘சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

    இந்தப்படம் வரும் அக்-5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #NOTA #VijayDevarakonda

    விஜய் தேவரகொண்டா பேசிய வீடியோவை பார்க்க:

    அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #NOTA #VijayDevarakonda
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 6ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 4-ல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada
    அர்ஜுன் ரெட்டி நாயகன் நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்துள்ளார். #NOTA #VijayDevarakonda
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. 

    ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன்விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் விளம்பர பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. அதற்காக தனது பிரசாரத்தை இன்று முதல் துவங்க இருப்பதாக விஜய் தேவரகொண்டா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தை வருகிற அக்டோபர் 4-ல் ரிலீஸ் செய்ய படக்குழு யோசித்து வருகிறது. 

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் முறையில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் ‘நோட்டா’ என்ற வாய்ப்பை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மாநில சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    இதை எதிர்த்து குஜராத் மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  முன்னாள் கொறடா ஷைலேஷ் மனுபாய் பார்மர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



    மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும்போது ‘நோட்டா’ முறையை பின்பற்றினால் குதிரை பேரத்துக்கும் ஊழலுக்கும் வசதியாகி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தங்களது பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் பயன்படுத்த மட்டும்தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. 

    மாநிலங்களவை தேர்தலிலும் நோட்டாவை அனுமதித்தால் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்பதை ஊக்குவிப்பதைப் போல் ஆகிவிடும் என சுட்டிக்காட்டியதுடன் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது.

    ‘நோட்டா முறையை அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னர் கடந்த 2014-ம்  ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்குச்சீட்டுகளில் நோட்டா முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

    அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தங்களுக்கு வசதியாக இருந்ததால் இதுதொடர்பாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ என தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
    நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன், தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக ரெயிலில் செல்லும் போது அவதிப்பட்டிருக்கிறார். #Mehreen
    நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, ஹன்சிகா, சமந்தா என்று முன்னணி நடிகைகள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடிப்பதால் சென்னை, ஐதராபாத், மும்பை என்று படப்பிடிப்புகளுக்காக விமானத்திலேயே பறந்தபடி இருக்கிறார்கள்.

    கேரளாவில் நடிகையை காரில் கடத்திய சம்பவத்துக்கு பிறகு கதாநாயகிகளுக்கான பாதுகாப்பில் அக்கறை எடுக்கும்படி நடிகர் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

    இந்த நிலையில் நடிகை மெஹ்ரீன் ரெயில் பயணத்தில் குடிபோதையில் இருந்த ஒருவரால் அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

    மெஹ்ரீன் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தமிழில் தயாராகும் நோட்டா படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். 



    நோட்டா படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து மெஹ்ரீன் சென்னை புறப்பட்டார். ஆனால் அவருக்கு விமானம் கிடைக்கவில்லை. இதனால் ரெயிலில் பயணமானார். அப்போது அவரது இருக்கையை வேறு ஒருவர் ஆக்கிரமித்து உட்கார்ந்து இருந்தார். அவர் மது அருந்தி போதையில் இருந்ததால் மெஹ்ரீனுக்கு பயம் ஏற்பட்டது. 

    நீண்டநேரம் ரெயிலில் நின்று கொண்டே பயணித்தார். பின்னர் தனது இயக்குனருக்கு போன் செய்து நிலைமையை விளக்கினார். அந்த இயக்குனர் காருடன் ரசிகர்களையும் அனுப்பி வைத்தார். அந்த ரசிகர்கள் மெஹ்ரீனை காரில் ஏற்றி சென்னை வரை வந்து பத்திரமாக இறக்கி விட்டு சென்றனர்.
    ×