search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகம்"

    கர்நாடக சட்டசபையில் இன்று உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியபோது முதல் மந்திரி எடியூரப்பா உணர்ச்சிமிகு உரையை ஆற்றினார். #KarnatakaElection #Assembly #Yeddyurappa
    பெங்களூரு:

    முதல் மந்திரி எடியூரப்பா இன்று சட்டசபையில் உணர்ச்சிமிகு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த  ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் என்னை வேட்பாளராக அறிவித்தனர். கர்நாடக மக்களின் பிரச்னைகலை தீர்த்து வைக்க பாடுபடுமாறு எனக்கு கட்டளையிட்டனர்.

    கர்நாடகாவில் தனி பெரும்பான்மை கட்சியாக பாஜகவை தேர்வு செய்ததற்கு நன்றி. பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் மக்கள் எங்களுக்கு கூடுதல் எம்.எல்.ஏ.க்களை அளித்துள்ளனர்.

    காங்கிரசும் மஜதவும் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதுதான் மக்களின் தீர்ப்பு. ஆனால், காங்கிரசும் மஜதவும் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றன.

    கர்நாடக தலைநகர் பெங்களூரில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மேலும், மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னை,  குடிநீர் பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன

    மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும் மஜதவும் செயல்பட்டு வருகின்றன. மாநில பிரச்னைகளில் அக்கறை காட்டாதவர்கள் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.

    நான் பதவியேற்றதும் முதல் கையெழுத்தே விஅவ்சாய கடன் தள்ளுபடிதான். ஏரி, குளங்களை பராமரித்து விவசாயிகளுக்கு புத்துயிர் ஊட்ட திட்டமிட்டேன். உயிர் மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன்.

    கர்நாடகாவை முன் மாதிரி மாநிலமாக மாற்ற பிரதமர் மோடி பல திட்டங்களை என்னிடம் கலந்துரையாடினார். கனிம வளத்தை அதிகமாக கொண்டது கர்நாடகா. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் நன்மை தரும் பல திட்டங்கள் கிடைக்கும் என தெரிவித்தார். #KarnatakaElection #Assembly #Yeddyurappa
    கர்நாடகத்தில் நீதியை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். #KarnatakaElection #FloorTest #Chidambaram
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் வீடியோ எடுப்பதுடன், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதற்கு முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறுகையில், பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவை காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.

    சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு எனது வணக்கங்கள். நீதியை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #KarnatakaElection #FloorTest #Chidambaram 
    பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KarnatakaCMRace #Congress #Parameshwara
    பெங்களூர்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இதற்கிடையே, மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். இன்று எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

    கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சொகுசு விடுதியில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள பரமேஸ்வரா, கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஒருவேளை காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமையும் பட்சத்தில், பரமேஸ்வராவிற்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #KarnatakaCMRace #Congress #Parameshwara
    கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரு நாள் மட்டுமே எடியூரப்பா முதல் மந்திரியாக இருப்பார் என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர். #KarnatakaCMRace #Yeddyurappa #Congress
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

    மேலும், இன்னும் 15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதனால்காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலை விரிக்கத் தொடங்கியுள்ளது என காங்கிரஸ்  குற்றம் சாட்டியுள்ளது.



    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரு நாள் மட்டுமே எடியூரப்பா முதல் மந்திரியாக இருப்பார் என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரசார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பா.ஜ.க.வை சேர்ந்த எடியூரப்பாஒருநாள்முதல் மந்திரியாக மட்டுமே நீடிப்பார். அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.
    எடியூரப்ப்பாவை ஆட்சி அமைக்க அழைத்ததன் மூலம் கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா அரசியல் அமைப்பு மீது இருமுறை கடும் தாக்குதலை நடத்தியுள்ளார். 

    பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு தைரியம் இருந்தால் நாளை கர்நாடக சட்டசபையில்  தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    மேலும், நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் நாளை தர்ணா போராட்டம் நடத்த வேண்டும் என கட்சியிருக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். #KarnatakaCMRace #Yeddyurappa #Congress
    எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலாவை திரும்ப அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #KarnatakaCMRace #Vajubhaivala #Congress
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

    ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பா.ஜ.க.வுக்கு இருப்பதோ 104 எம்.எல்.ஏ.க்கள். எனவே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலை விரிக்கத் தொடங்கியிருப்பதாக காங்கிரஸ்  குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில், எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலாவை திரும்ப அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.



    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை உள்ளது. ஆனாலும், இவர்களை அழைக்காமல் கவர்னர் வஜுபாய் வாலா பா.ஜ.க.வின் எடியூரப்பாவை முதல் மந்திரியாக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.  எனவே, அவரை திரும்ப அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், பிரதமர் மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை கர்நாடக கவர்னர் அழித்துவிட்டார். எனவே கர்நாடக மாநிலத்தின் அப்போதைய கவர்னர் பரத்வாஜை திரும்ப பெறவேண்டும் என ஜனாதிபதிக்கு டுவிட் செய்ததையும் காங்கிரசார் நினைவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaCMRace #Vajubhaivala #Congress
    கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணி அளவில் தெரியவரும். #KarnatakaAssemblyElection #Results
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின.



    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது இன்று பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.

    தேர்தல் முடிவுகளை அறிய கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவு தான் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதா வென்றால், அது பிரதமர் மோடியின் கரங்களை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்.

    ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது எனவும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டை போல் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 3 கட்சிகளும் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.

    சித்தராமையா ரகசிய உத்தரவின்பேரில் மாநில உளவுத்துறையும் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றும், காங்கிரஸ் அதிகபட்சமாக 95 முதல் 102 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதா 70 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) 28 இடங்களிலும் வெற்றிபெறும். 30 தொகுதிகளில் 3 கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி உள்ளது, அதில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    உளவுத்துறை ஆய்வு முடிவுகளால் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.  #KarnatakaAssemblyElection #Results 
    கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev
    லக்னோ:

    கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதுவரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை என்பதால் அங்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த மேஜிக் நம்பரை எட்டப்போவது யார் என்பது பரபரப்பான சஸ்பென்சாக உள்ளது.



    இந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படும்.

    இந்த தேர்தலில் பாஜக நிச்சயம் வென்று தென்னிந்தியாவில் ஆட்சி அமைக்கும். கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev
    கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புள்ளதாகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. #Karnatakaelection2018
    பெங்களூர்:

    கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    கர்நாடகா மாநில தேர்தல் வரலாற்றில் இதுவரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை. இதன் காரணமாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியிலும் போலி வாக்காளர் அடையாள அட்டையால் இன்னொரு தொகுதியிலும் தேர்தல் நடக்கவில்லை. மற்ற 222 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

    பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த மேஜிக் நம்பரை எட்டப்போவது யார் என்பது பரபரப்பான சஸ்பென்சாக உள்ளது.

    முதலில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தன. ஆனால் ஓட்டுப்பதிவு தினத்தன்று நடத்தப்பட்ட கருத்து கணிப்புகள் வேறுவிதமாக அமைந்தன.

    சில கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாகவும், சில கருத்து கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும் உள்ளன. பெரும்பாலும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    தேவேகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு சுமார் 30 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்பதை முடிவு செய்யும் கிங்மேக்கராக தேவே கவுடா திகழ்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நாளை (செவ்வாய்க் கிழமை) கர்நாடகாவில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிக்கெல்லாம் முன்னிலை நிலவரம் தெரிந்து விடும். அப்போதே யார் ஆட்சி அமைப்பது என்பது உறுதியாகி விடும்.

    இந்த நிலையில் பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது என்று கூறப்படுவதால் இரு கட்சி தலைவர்களும் இப்போதே ஆள் பிடிக்கும் வேலையை தொடங்கி விட்டனர். சில தொகுதிகளில் சுயேட்சைகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை இரு கட்சி தலைவர்களும் ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார்கள்.

    இதற்கிடையே மதசார் பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி திடீரென சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவர் ஓய்வு எடுப்பதற்காக சென்றுள்ளதாக கூறப்பட்டாலும் அவர் அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் பற்றி ஆலோசிக்கவே சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    சிங்கப்பூரில் குமார சாமியை சந்தித்து பேச பா.ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ரகசியமாக தங்களது பிரதிநிதிகளை அனுப்பி உள்ளன. இரு கட்சிகளும் போட்டி போட்டு குமாரசாமியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால் குமாரசாமி இதுவரை யாரிடமும் பிடி கொடுக்கவில்லை. அவர் தாமே முதல்வராக வேண்டும் என்று புதிய வியூகம் அமைத்து பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநில பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் தேவே கவுடாவும், குமாரசாமியும் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு பா.ஜ.க.வை ஆதரிப்பார்களா? அல்லது காங்கிரசை ஆதரிப்பார்களா? என்பதில் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசை பொறுத்தவரை குமாரசாமி விதிக்கும் எந்த நிபந்தனைக்கும் தலை அசைக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால்தான் சித்தராமையா இல்லாமல் வேறு ஒருவரை குறிப்பாக தலித் ஒருவரை முதல்வராக தேர்வு செய்தால் காங்கிரசை ஆதரிக்க தயார் என்று குமாரசாமி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் தொடர்ச்சியாகத்தான் முதல்-மந்திரி சித்தராமையா, “முதல்வராக தலித்தை தேர்வு செய்தால் எதிர்க்க மாட்டேன்” என்று நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    தேவேகவுடாவை பொறுத்தவரை அவர் 3-வது அணிக்கு ஆதரவாக இருந்து வருகிறார். மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் ஆகியோர் தேவேகவுடாவை 3-வது அணிக்கு தலைமை ஏற்கும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனவே 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணியில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்ற திட்டத்துடன் இருக்கும் தேவேகவுடா பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர தயங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ஜ.க.வுடன் உறவு இல்லை என்பதை கடந்த 2 மாதங்களில் பல தடவை தேவேகவுடா உறுதிப் பட கூறி விட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல்காந்தி தேவேகவுடாவை குற்றம் சாட்டி பேசுகையில், “பா.ஜ.க.வின் பி-அணியாக மதசார்பற்ற ஜனதா தளம் திகழ்கிறது” என்று கூறியிருந்தார்.

    இதற்கு தேவேகவுடா உடனே மறுப்பு தெரிவித்தார். பா.ஜ.க.வின் பி-அணியாக செயல்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று உறுதிப்பட கூறியிருந்தார்.

    ஒரு சமயம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக குமாரசாமி கருத்துகளை வெளியிட்டதாக கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேவே கவுடா, “கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சியாக இருப்போமே தவிர பாஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். ஒருவேளை குமாரசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் அவரை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்குவதற்கும் தயங்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.

    எனவே பா.ஜ.க.வுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்குமா? என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது. ஒருவேளை தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தேவே கவுடாவுடன் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபடக்கூடும் என்று கூறப்படுகிறது.

    தேவேகவுடா 3-வது அணியில் தீவிரமாக இருப்பதால் குமாரசாமிக்கு பா.ஜ.க. தலைவர்களில் சிலர் ஏற்கனவே வலைவீசி வைத்துள்ளனர். முதல்வர் பதவி உள்பட பல சலுகைகளை குமாரசாமியிடம் பா.ஜ.க. கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் வி‌ஷயத்தில் தேவேகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் மதசார் பற்ற ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் தனீஷ் அலி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சிக்கு தனிபெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் அது காங்கிரஸ் பொறுப்பாகும். 2019-ம் ஆண்டு தேர்தலை அவர்கள் எப்படி சந்திக்க முடியும். எனவே ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகே எங்கள் நிலையை தெரிவிப்போம்” என்று கூறினார்.

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது. ஆனால் அதே அளவுக்கு காங்கிரசை ஆதரிக்க கூடாது என்றும் அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    முந்தைய தேர்தல்களில் மாநில கட்சிகளை குறிப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை பலவீனப்படுத்தியதில் காங்கிரசுக்கு அதிக பங்கு உண்டு என்று குமாரசாமியின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே குமாரசாமியை காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு திருப்திப்படுத்துகிறதோ அந்த அளவுக்குதான் காங்கிரசுக்கு மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு கிடைக்கும்.

    ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் அதற்கு அனுமதிப்பார்களா? என்று தெரியவில்லை. அவர்களும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் உள்ளனர்.

    ஓட்டு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பே கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை பா.ஜ.க.வும், காங்கிரசும் தீவிரமாக தொடங்கி விட்டதால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்று கோடிக்கணக்கான ரூபாயில் சூதாட்டமும் “களை” கட்டி உள்ளது. #Karnatakaelection2018
    பாரதிய ஜனதா கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும் கர்நாடக மாநிலத்தில் தனது தலைமையில் ஆட்சி அமையும் எனவும் எடியூரப்பா கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa
    பெங்களூரு:

    மத்திய மந்திரியும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சதானந்த கவுடா மங்களூரு அருகே புத்தூரில் உள்ள காரடி அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    பாரதிய ஜனதா முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா சிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா ஓட்டுசாவடியில் ஓட்டு போட்டார். முன்னதாக அவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து பூஜை நடத்தினார்.

    அதன் பிறகு மகன் விஜயேந்திராவுடன் சென்று வீட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டார். அதன் பிறகு ஓட்டுசாவடிக்கு சென்று காலை 7.05 மணிக்கு தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாரதிய ஜனதா கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் கர்நாடக மாநிலத்தில் எனது தலைமையில் ஆட்சி அமையும் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறிறனார்.#KarnatakaElections2018 #Yeddyurappa
    கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #KarnatakaElections2018 #ModiCallVoters
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடகத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில், நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ‘கர்நாடகாவில் வாழும் என் சகோதர சகோதரிகள் இன்று அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள்  தவறாமல் வாக்களித்து தங்கள் பங்களிப்புடன் இந்த ஜனநாயக திருவிழாவை சிறப்படைய செய்ய வேண்டும்’ என மோடி டுவிட்டரில் கூறியுள்ளார். #KarnatakaElections2018 #ModiCallVoters
    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா வாக்களித்தார்#KarnatakaElections2018
    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    ஷிமோகா அருகே ஷிகார்பூரில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிஎஸ் எடியூரப்பா வாக்களித்தார். மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்தார்.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.



    தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #KarnatakaElections2018
    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. #KarnatakaElections2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடகத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன.

    இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 



    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் உள்பட 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் 15-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #KarnatakaElections2018
    ×