search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநோயாளி"

    ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மனநோயாளி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தடாகிசோலா கிராமத்தை சேர்ந்தவர் ஷியாமா பட்டி. உறவுக்கார பெண்களான அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்துகொண்டு இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த இவர் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு ஷியாமா பட்டி இன்று பிணமாக தொங்கினார். இதைக்கண்ட கிராம மக்கள் சடார் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர்.

    விரைந்துவந்த போலீசார் ஷியாமா பட்டியின் பிரேதத்தை தூக்கில் இருந்து இறக்கி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த வேளையில், ஷியாமா பட்டியின் வீட்டினுள் அவரது மனைவிகள் இருவரும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    அங்கு கிடந்த ரத்தம் தோய்ந்த சுத்தியலை கண்டெடுத்த போலீசார், மனநோயாளி ஷியாமா பட்டி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பாகிஸ்தானில் நாளை மறுநாள் தூக்கிலிடவிருந்த போலீஸ்காரரின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Pakistanchiefjustice #staysexecution
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர்  கிசார் ஹயாத் என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தன்னுடன் பணியாற்றிய சகப்போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டதாக கிசார் ஹயாத் கைது செய்யப்பட்டார். லாகூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து, லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கடந்த 2008-ம் ஆண்டு தீவிரமான மனநோயாளியாக மாறிய கிசார் ஹயாத்துக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என  கிசார் ஹயாத்தின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இதற்கிடையில், 15-1-2019 அன்று காலை அவரை தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது.

    மனநிலை சரியில்லாதவரை தூக்கிலிட்டு கொல்வதற்கு சர்வதேச சட்டங்கள் இடமளிக்காததால் இந்த தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என பல்வேறு தர்ப்பினரிடம் இருந்தும் பிறநாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தும் கோரிக்கை எழுந்தது.


    இவற்றை எல்லாம் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி சகிப் நசிர், கிசார் ஹயாத்துக்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

    லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சென்று பார்வையிட வேண்டும். அங்குள்ள மனநல மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது? என்று அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த கிசார் ஹயாத்தின் தாயார் மனுமீது நாளை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ளது.

    கிசார் ஹயாத்தின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கு விசாரணையும் நாளை நடைபெறுகிறது.  #Pakistanchiefjustice #staysexecution #mentallyill #mentallyillpoliceman
    குழந்தை கடத்தல் பீதியில் மனநோயாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:     

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரிய பாளையம், ஆரணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி நிலவுகிறது.

    இதனால் ஊருக்குள் வரும் அப்பாவி வெளியாட்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த 9-ந் தேதி பழவேற்காடு பகுதியில் குழந்தை கடத்தல் பீதியால் மனநோயாளி ஒருவர் பொது மக்களால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட் டார். பின்னர் அவரது உடல் பாலத்தில் தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பழவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், மணிகண்டன், கோதண்டன் உள்பட 15 பேரை கைது செய்தனர். அவர்களை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் மன நோயாளி கொலை தொடர்பாக கரிமணல் பகுதியை சேர்ந்த மோகன். செந்தில் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த கொலையில் மேலும் சிலரை கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர். மனநோயாளியை தாக்கும் வீடியோவை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.#tamilnews
    ×