search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மராட்டியம், கோவா மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மலைசார்ந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சூறைக்காற்று அவ்வபோது வீசும்.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லார் பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தோவாளை, கூடலூர், பெரியார் அணை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 7 செ.மீ, கோவையில் 2 செ.மீ., தென்காசி மேட்டுப்பாளையத்தில் 1 செ.மீ, மழையும் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
    கேரளாவில் வருகிற 15-ந்தேதி வரை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால் கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. ஒரே நாளில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்றும் சில இடங்களில் 10 முதல் 12 சென்டிமீட்டர் வரை மிக கனத்த மழை பெய்யும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந்தேதி வரை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை கேரளாவில் மழைக்கு 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான வீடுகளும் இடிந்து உள்ளன. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

    நேற்று கேரளாவில் அதிகபட்சமாக இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் 32 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் இன்று இடுக்கி, கோட்டயம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பத்தனம் திட்டா மாவட்டத்தில் ராணி, மல்லப்பள்ளி தாலுகாக்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும், பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த மழை காரணமாக மலங்கரா அணை நிரம்பி விட்டது. இந்த அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்து விடப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் இந்த அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முகியார் அணை, நெய்யாறு போன்ற அணைகளுக்கும் அதிக அளவு தண்ணீர் வருவதால் அந்த பகுதி மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பாதைகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் சுற்றுலா தலங்களில் உள்ள சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாலும் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 15-ந்தேதி வரை அனைத்து துறை அரசு அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு தொடர்பாக 1072 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மழை காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தின் மற்ற இடங்களிலும், புதுவையிலும் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.


    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார், வால்பாறையில் 7 செ.மீ. மழையும், பொள்ளாச்சி, நீலகிரி ஜி.பஜாரில் 5 செ.மீ மழையும், செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், பெரியாறு ஆகிய இடங்களில், 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    தென் மேற்கு பருவமழை நாளை முதல் மேலும் தீவிரம் அடையும் என்றும், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 நாட்களுக்கு பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
    மும்பை:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதேபோல் மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களிலும், தெலுங்கானா, ராயலசீமா கடலோர ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

    நாளை முதல் தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும், மராட்டியத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடலோர மாவட்டங்களிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதனால் மும்பைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தின் ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மராட்டிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி மும்பை மற்றும் கொங்கன் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    அப்பகுதியில் அவசர நிலைமைகளை எதிர் கொள்ள தயாராக இருக்குமாறு மாநில பேரிடர் மீட்பு குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மந்த்ராலயா பகுதி கட்டுப்பாட்டு அறைகள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி மற்றும் தாசில்தார் அலுவலகங்கள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மும்பை வாசிகள் அவசர உதவிகளுக்கு 1916 என்ற எண்ணிலும், புறநகரில் வசிப்போர் 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் இந்த மாதத்தின் மழைப்பொழிவு அளவு 101 சதவீதமாக இருக்கும். ஆகஸ்டு மாதத்தில் இது 94 சதவீதமாக இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை 8.30 மணி தொடங்கி 11-ந்தேதி வரை கேரளா, கடலோர கர்நாடகா, வடக்கு உள் கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், நாளை காலை 8.30 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர கர்நாடகாவில் மிதமிஞ்சிய அளவுக்கு பலத்த மழை பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #MumbaiRain
    கோவிலில் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்கும் செயலில் பூசாரிகள் ஈடுபடக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. #MaduraiHighCourt
    மதுரை:

    ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.250, ரூ.150, ரூ.100 கட்டண தரிசன முறை அமலில் உள்ளது. இந்த கட்டண டிக்கெட் வாங்கும் பக்தர்கள் சாமியை அருகில் நின்று தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

    கோவிலுக்கு சம்பந்தமே இல்லாத பலர் கோவில் முன்பகுதியில் நின்று கொண்டு பக்தர்களை சாமி அருகே அழைத்துச் சென்று தரிசிக்க வைப்பதாக கூறி டிக்கெட் வாங்காமல் கோவிலுக்குள் அழைத்து செல்கின்றனர்.

    அதே நேரத்தில் டிக்கெட்டுக்கு உரிய கட்டணத்தை வசூலித்துக்கொள்கின்றனர். இப்பணத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்துவதில்லை.

    இவ்வாறு கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த தனி குழு அமைக்கவும், கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள், பக்தர்களிடம் பணம் வசூலிக்க தடை விதித்தும், கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும், கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எம்.வி. முரளிதரன், டி. கிருஷ்ணவள்ளி ஆகியோர் ஏற்கனவே விசாரித்து தீர்ப்பினை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் இன்று பிறப்பித்து உள்ளனர்.

    கோவிலில் சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட பூசாரிகளால் மட்டுமே பூஜைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பக்தர்களையும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி ஒரே விதமாக நடத்த வேண்டும்.

    கோவில் ஊழியர்கள் மற்றும் பூசாரிகள் வருகைக்காக பயோமெட்ரிக் பதிவு கருவியை பொருத்த வேண்டும். பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் பூசாரிகள் ஈடுபடக்கூடாது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை கமி‌ஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    சட்டபூர்வமாக நியமிக்கப்படாத பூசாரிகள் குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் மற்றும் கோவில் அதிகாரி ஆகியோர் வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர். #MaduraiHighCourt
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிவிதித்தால் வர்த்தக பலன்களை பெற முடியாது என அமெரிக்காவுக்கு, சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. #China #Warns
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ராஸ் நேற்று முன்தினம் பீஜிங் வந்தார். அவர் சீன துணை பிரதமர் லியு ஹியுடன் நேற்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் குறிப்பிடத்தக்க வகையிலான புதிய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தானதா? என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

    எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்தால் அனைத்து ஒப்பந்தங்களும் செல்லுபடியாகாது என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:-

    விவசாயம், எரிசக்தி, நேர்மறையான முடிவை எட்டுதல் மற்றும் உறுதியான வளர்ச்சி போன்ற துறைகள் தொடர்பாக வாஷிங்டனில் எட்டப்பட்ட உடன்பாட்டை செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் நல்ல தொடர்பில் ஈடுபட்டு இருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வது என்ற சீனாவின் நடைமுறையில் மாற்றம் இல்லை.

    அமெரிக்கா மற்றும் சீனா தற்போது ஏற்படுத்தி இருக்கும் உடன்பாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து இருதரப்பும் சந்தித்து பேச வேண்டும். மாறாக வர்த்தக போரில் ஈடுபடக்கூடாது.

    சீன பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிமுகம் செய்தால், வர்த்தக பலன்கள் எதையும் பெற முடியாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் செயலற்றதாகி விடும்.

    இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

    முன்னதாக பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த வில்பர் ராஸ் கூறுகையில், ‘எங்கள் சந்திப்புகள் இதுவரை நட்பு ரீதியாகவும், வெளிப்படையாகவும் அமைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக சில பயனுள்ள தலைப்புகளும் இதில் இடம்பெற்று இருந்தன’ என்று தெரிவித்தார்.  #China #Warns #Tamilnews
    தகுதிச்சான்று பெறாமல் பள்ளி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விழுப்புரம்:

    கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகளின்படி நிபந்தனைகள் சரியாக உள்ளதா? என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வகையில் மொத்தம் 1,073 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    இந்த வாகனங்களை ஒவ்வொன்றாக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகள் ஏறவும், இறங்குவதற்கும் ஒருவழி கதவு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா?, அவசரகால கதவு பொருத்தப்பட்டுள்ளதா?, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, பள்ளி வாகனங்களின் முன், பின் பகுதிகளில் பள்ளி வாகனம் என்றும், வாகனத்தின் இடதுபுறத்தில் பள்ளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண், வலதுபுறத்தில் பள்ளியின் பொறுப்பாளர் பெயர், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம், இணையதள முகவரி, போலீஸ் நிலைய தொலைபேசி எண் ஆகியவை எழுதப்பட்டிருக்கிறதா? என்றும் கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 210 தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,073 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 724 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்வதற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்படும். தகுதிச்சான்று பெறாத வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லுதல் கூடாது. அதையும் மீறி மாணவர்களை ஏற்றிச்செல்வது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுதவிர மாதந்தோறும் ஒவ்வொரு பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்து போக்குவரத்து விதிப்படி முறையாக செயல்படுகிறதா? என்று கண்காணிக்க வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோக்கள், வேன்கள் அதிகளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லுதல் கூடாது. அதையும் மீறி ஏற்றிச்சென்றால் சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள், வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், உதவி கலெக்டர்கள் (பயிற்சி) காயத்திரி, வித்யா, வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தர்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், கவிதா, குண்டுமணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். 
    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ‘‘தடை அதை உடை’’ என்ற பெயரில் இசை ஆல்பம் இன்று வெளியிடப்பட்டது. சுமார் 4 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் டைரக்டரும் நடிகருமான அமீர், நடிகர்கள் விதார்த், அருள்தாஸ், சவுந்தர பாண்டியன், விஷ்வாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த இசை ஆல்பத்தை டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிராக இத்தனை அடக்குமுறைகள் ஏன்? எமர்ஜென்சி காலத்தை விட இப்போது தான் தமிழகத்தில் அதிகமாக குண்டர் சட்டம் ஏவி விடப்படுகிறது, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

    தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், தமிழக அரசின் நடவடிகைகளுக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அது அறவழியில் வித்தியாசமான போராட்டமாக இருக்கும். தமிழக அரசால் அந்த போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாது.

    பின்னர் பாரதிராஜாவிடம் சீமான் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-



    திருச்சியில் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் மோதிக் கொண்டதில் சீமான் ஆதரவாளர்களை மட்டும் கைது செய்திருப்பது ஏன்? வைகோ மீது மட்டும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? சீமானை கைது செய்ய போலீசார் அவரை தேடி வருகிறார்கள். எங்களது வலிமையையும், சக்தியையும் அடக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பேசிய வேல்முருகனும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற தடியடிக்கு கண்டனம் தெரிவித்தார்.

    அவர் கூறும்போது தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தியும் அரசு செவி சாய்க்காததால் இன்று தீவிரமாக குரல் எழுப்பி உள்ளனர். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த பாடலை அந்தோனி தாசன் பாடி உள்ளார். பிரவீன் இசை அமைத்துள்ளார். மதன் இயக்கி உள்ளார்.

    தென் சீனக்கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சோதனை செய்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிலிப்பைன்சிஸ் தெரிவித்துள்ளது.
    மணிலா:

    சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

    அதே சமயம் தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக உரிமை கோரும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘எச்-6கே’ ரக குண்டு வீச்சு விமானம் உள்பட பல்வேறு போர் விமானங்களை தென் சீனக்கடல் பகுதியில் தரை இறக்கி சோதனையில் ஈடுபட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ள பிலிப்பைன்ஸ், இதற்காக சீனா மீது தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது. பிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்சின் நிலைப்பட்டை உறுதி செய்யும் விதமாக சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், நாட்டின் இறையாண்மைக்கு சொந்தமான பிரதேசங்கள் மற்றும் பகுதிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பிலிப்பைன்ஸ் பாதுகாக்கும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
    மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது. இந்தநிலையில் மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நினைவேந்தல் நிகழ்ச்சியை சில அமைப்புகள் பொதுமக்கள் கூடும் மெரினாவில் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன. எனவே யாரும் போராட்டம் எனும் பெயரில் மெரினாவில் தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தற்போது புயலாக மாறி உள்ளது. இதற்கு வானிலை மையம் சாகர் என பெயரிட்டுள்ளது.

    இப்புயல் ஏடன் வளைகுடாவில் ஏமனுக்கு கிழக்கு-வடகிழக்கில் 390 கி.மீ. தொலைவிலும், ஸ்கோட்ரா தீவுகளில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது.


    இதன் காரணமாக ஏடன் வளைகுடா மற்றும் அதையொட்டி உள்ள மேற்கு மத்திய பகுதிகள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், புயலின் தாக்கம் அதிகரிக்கும்போது காற்றின் வேகம் 90 கி.மீட்டருக்கு அதிகமாகவும் வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    சோமாலியாவில் இன்று மதியம் கரையை கடக்கும் ‘சாகர்’ புயலின் தாக்கத்தால் கேரளாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar #RailfallWarningKerala
    திருவனந்தபுரம்:

    சமீபத்தில் தென் மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் ஒன்று உருவாகி உள்ளதாகவும், அதற்கு சாகர் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தற்போது மேற்கு திசையிலிருந்து தென்மேற்கு திசையை நோக்கி நகர துவங்கியுள்ளது.

    அரபிக்கடலின் தென் மேற்கு திசையை நோக்கி நகரும் சாகர் புயலால், கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் பலத்த மழையும், சூறைகாற்றும் வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘சாகர் புயல்’ சோமாலியா நாட்டின் கடற்பகுதியில் கரையை கடக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சாகர் புயல் காரணமாக தமிழகம், கேரளா, கோவா, மஹாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Sagar #RailfallWarningKerala
    ×