search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103912"

    ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்ட நர்சு, வாலிபர் கவலைக்கிடமாக உள்ளதால் கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏராளமானவர்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 79 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 22 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைதொடர்ந்து அந்த 22 பேரும் கோழிக்கோடு, மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரு நர்சு மற்றும் வாலிபருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 50 டோஸ் வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி கிடைத்த பிறகுதான் அந்த மருந்தை நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று கோழிக்கோடு டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே மண்ணாச்சேரியில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து என்று கூறி மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் ஏராளமானோர் அந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டனர்.

    மாத்திரை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக 30 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது டாக்டர்களின் அனுமதி இல்லாமல் அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒரு ஊழியர் இந்த மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறும்போது நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எனவே பொதுமக்கள் இதுபோன்ற வி‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

    கடலூரில் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் உறவினரின் பெண்ணுக்கு வாலிபர் தாலிகட்டினார்.
    பண்ருட்டி:

    கடலூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 28), பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆசைமுத்து மகள் ரஞ்சிதம் (வயது 24) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி இரு வீட்டார்களும் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவந்தனர். இவர்களது திருமணம் இன்று கடலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் மணமகள் ரஞ்சிதம் கூறி விட்டு சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் ரஞ்சிதத்தை தேடினர். உறவினர் மற்றும் தோழிகளிடம் விசாரித்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் ரஞ்சிதத்தின் தந்தை ஆசைமுத்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரஞ்சிதத்தை தேடினர். மணமகள் மாயமானதை அறிந்த மணமகன் அழகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இன்று திருமணம் நடைபெற இருந்த கடலூர் தனியார் திருமண மண்டபத்துக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்தனர். மாயமான மணமகள் ரஞ்சிதத்தை இன்று காலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர் ஒருவரிடம் அழகேசனுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்துதர விருப்பமா? என மணமகனின் பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோரும் சம்மதித்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர் மகளும் அழகேசனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து புதுமணப்பெண்ணை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். அழகேசன் அந்த மணப்பெண்ணின் கழுத்தில் குறித்த முகூர்த்த நேரத்தில் தாலிகட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர். திடீரென மணப்பெண்ணாக மாறிய பெண்ணை அனைவரும் பாராட்டினர். #Tamilnews
    சென்னை பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர், முன்னாள் காதலியான அவர், தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
    கோயம்பேடு:

    காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் கடந்த 28-ந்தேதி, இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில் கொலையான பெண், சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவருடைய மகள் பொக்கிஷமேரி(வயது 33) என தெரிய வந்தது.

    இதுபற்றி செங்கல்பட்டு போலீசார் அளித்த தகவலின்பேரில் சென்னை அண்ணாநகர் போலீசார் நெற்குன்றம் செல்லியம்மன் நகர் ஆனித் தெருவைச் சேர்ந்த பாலமுருகன்(30), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுகுமாரன் (38) ஆகிய 2 பேரை கைது செய்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் கைதான பாலமுருகன், போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நான், சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தேன். அப்போது எனக்கும், அதே கடையில் வேலை செய்து வந்த பொக்கிஷமேரிக்கும் காதல் மலர்ந்தது. நாங்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தோம். இதற்கிடையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் காதல் முறிந்தது.

    பின்னர் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதற்கிடையில், என்னை சந்தித்து பேசிய பொக்கிஷமேரி, உன்னை என்னால் மறக்க முடியவில்லை. 2-வதாக என்னையும் திருமணம் செய்து கொள் என்று என்னை தொந்தரவு செய்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான், இது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி பொக்கிஷமேரியை, எம்.ஜி.ஆர். நகர், பெரியார் தெருவில் உள்ள எனது நண்பர் வீட்டுக்கு வரவழைத்தேன். அங்கு வந்த பொக்கிஷமேரி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த நான், நண்பரின் வீட்டில் இருந்த குக்கர் மூடியால் பொக்கிஷமேரியின் தலையில் பலமாக தாக்கினேன். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பின்னர் கொலையை மறைக்க திட்டமிட்ட நான், பொக்கிஷமேரியின் உடலை சூட்கேசில் அடைத்து, வாடகை கார் மூலம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதிக்கு சென்றேன். அங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உடலை போட்டு விட்டு, போலீசார் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த 26-ந்தேதி வேலைக்கு சென்ற பொக்கிஷமேரி மாயமானதாக அவரது தாயார், அண்ணாநகர் போலீசில் புகார் செய்து இருந்தார். அண்ணாநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு வந்து மொபட்டை நிறுத்தி விட்டு, அங்கிருந்து எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பாலமுருகனின் நண்பரின் வீட்டுக்கு சென்று உள்ளார். அதன் பிறகு அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    பொக்கிஷமேரியின் தாயார் அளித்த புகாரின்பேரில் இளம்பெண் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து இருந்த அண்ணாநகர் போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். பின்னர் கைதான பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பாலமுருகன் மட்டும் தனியாக இந்த கொலையை செய்து விட்டு, உடலை காரில் கொண்டு சென்று எரித்து இருக்க முடியாது. ஆனால், இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலையான பெண்ணின் முன்னாள் காதலன் பாலமுருகன் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. 
    மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் தாய்மாமன் உள்பட 3 பேர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தனர். மேலும் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது48). லாரி டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி அவரது வீட்டு வாசல் முன்பு வெட்டிக்கொல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி சித்ராவும் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட சேட்டுவின், தாய்மாமன் அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் காந்தி (54), இவருடைய உறவினர் பாபு(27), பாபுவின் நண்பர் சென்னையை சேர்ந்த சக்தி(24) ஆகிய 3 பேர் சேட்டு கொலை தொடர்பாக காளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வினோத்திடம் சரண் அடைந்தனர். உடனே கிராம நிர்வாக அலுவலர் 3 பேரையும் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காந்திக்கும், சேட்டுக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல், காந்திக்கு சொந்தமான இடத்தில் மதுக்கடை அமைத்ததை தடுத்தது, சேட்டுவின் மகள் திருமண பத்திரிக்கையில் காந்தியின் பெயர் போடாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சேட்டுவுக்கும், காந்திக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இந்த முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டம் தீட்டியதும், இதில் காந்தி முந்திக்கொண்டு கூலிப்படை உதவியுடன் சேட்டுவை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில் சேட்டுவை கொலை செய்ததற்கு பணம் வாங்குவதற்காக கூலிப்படையை சேர்ந்த ஒரு வாலிபர் மணல்மேடு பகுதிக்கு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மணல்மேட்டில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், கும்பகோணம் சாக்கோட்டை மருதாநல்லூரை சேர்ந்த கார்த்தி (29) என்பதும், அவர் சேட்டை கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரில் ஒருவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காந்தி, பாபு, சக்தி, கார்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சேட்டு கொலை வழக்கு தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
    மாடியில் இருந்து குதித்தபோது வாலிபரின் முதுகில் பாய்ந்த இரும்பு கம்பியை அகற்றி சென்னை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமி புரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (29). டிரைவரான இவர் மாடியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவர் சினிமாவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் தனது அறைக்கு திரும்பினார். அப்போது வீட்டின் ‘கேட்’ பூட்டப்பட்டிருந்தது.

    காம்பவுண்டு சுவரில் ஏறி முதல் மாடியில் உள்ள தனது அறையின் பால்கனிக்கு சென்றார். அங்குயின் கதவு பூட்டப்பட்டிருந்தது. எனவே அங்கிருந்து வெளியே வர மாடியில் இருந்து குதித்தார்.

    அப்போது வாசலில் உள்ள இரும்பு கதவு மீது விழுந்தார். அவரது முதுகில் கதவின் இரும்பு கம்பி பாய்ந்தது. அவரால் அதில் இருந்து விடுபட முடியவில்லை. வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை நள்ளிரவு 1 மணியளவில் அந்த வழியாக வந்த ஒருவர் பார்த்து நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்டனர்.

    அவருக்கு உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. உடனடியாக 3 அடி நீளமும், 3 செ.மீ. அகலமும் கொண்ட கம்பி முதுகில் 1 அடி ஆழத்துக்கு 7-வது விலா எலும்பு பகுதியில் பாய்ந்து இருந்தது.

    அந்த கம்பியின் முனை வளைந்த நிலையில் ‘கொக்கி’ போன்று டிசைன் செய்யப்பட்டிருந்தது. அந்த கொக்கி முதுகு பகுதிக்குள் இருந்தது. நுரையீரலின் இடதுபுறத்தில் குத்தி ஊடுருவி இதயம் மற்றும் மூச்சுக்குழல் பகுதி வரை சென்று இருந்தது. இதையடுத்து அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு மிகவும் ஆபத்தான ஆபரேசனை 3 டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். முதுகில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியை வெளியே இழுத்து அகற்றினர். தற்போது வாலிபர் வெற்றிவேல் நலமாக இருக்கிறார். ஒரு வார சிகிச்சைக்கு பின் வீடு திரும்புகிறார். #tamilnews
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்அப்பில்‘ அவதூறு தகவல் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். #EdappadiPalanisamy
    தம்மம்பட்டி:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்அப்பில்‘ அவதூறு தகவல் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்அப்பில்‘ அவதூறு தகவல் பரவியது. அவர் குறித்து டி.வி.யில் முக்கிய செய்தி வெளியிடுவது போன்று, கிராபிக்ஸ் செய்து தகவலை பரப்பி விட்டு இருந்தனர்.

    இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் குமரன் தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சூர்யமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் முதலமைச்சர் குறித்து அவதூறு தகவல் பரப்பியவர் தம்மம்பட்டியை சேர்ந்த நடேசன் மகன் விஜயகுமார் (வயது 28) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #EdappadiPalanisamy
    கேரளாவில் கவுரவ கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.#honourkilling #kerala #lovemarriage
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கெவின் ஜோசப் என்ற தலித் வாலிபரும், அதே பகுதியைச் சேர்ந்த நீனு என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

    இந்த காதலுக்கு நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் எதிர்ப்பை மீறி கெவின் ஜோசப்-நீனு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த நீனுவின் குடும்பத்தினர் கூலிப்படை உதவியுடன் கெவின் ஜோசப்பை கடத்தி கொடூரமான முறையில் கொன்று அவரது பிணத்தை ஆற்றில் வீசினார்கள்.

    கேரளாவில் நடந்த இந்த கவுரவக்கொலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    இந்த கொலைக்கு போலீசாரின் அலட்சியமும் ஒரு காரணம் என்று ஆரம்பத்திலிருந்து குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. கெவின் ஜோசப் கடத்தப்பட்டவுடன் அவரது மனைவி இதுபற்றி காந்தி நகர் போலீசில் புகார் செய்த போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிபு, தற்போது முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் உடனடியாக இந்த புகார் பற்றி விசாரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

    இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு அது உண்மை என்று தெரிய வந்ததால் அவரும் அதே போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிஜு ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த கொலையில் குற்றவாளிகளுக்கு காந்தி நகர் போலீசார் உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பற்றி ஐ.ஜி. தலைமையில் விசாரணையும் நடத்தப்பட்டது. அதில், போலீசார் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது.



    இதை தொடர்ந்து காந்தி நகர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜு மற்றும் இரவு பணியில் இருந்த ஏட்டு அஜய்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜுவுடன் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீனுவின் சகோதரர் சானு சாக்கோ போனில் பேசியதற்கான ஆதாரமும் சிக்கி உள்ளது.

    இந்த கொலை வழக்கில் ஏற்கனவே நீனுவின் தந்தை சாக்கோ ஜாண், சகோதரர் சானு சாக்கோ உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கூலிப்படையைச் சேர்ந்த நிஷாது (வயது 24), சிபின் (27), ஜெரோம் (24) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார் உள்பட 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.#honourkilling #kerala #lovemarriage
    கேரளாவில் காதல் கலப்பு திருமணம் செய்த வாலிபர் கவுரவ கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்ணின் சகோதரர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.#HonourKilling #LoveMarriage
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சூரியகவளா பகுதியை சேர்ந்தவர் கெவின் (வயது 23). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் நினு (20). கொல்லம் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கெவினும், நினுவும் காதலித்து வந்தனர்.

    இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்தனர். பின்னர் சூரியகவளாவில் குடும்பம் நடத்தினர். புதுமணத்தம்பதியினர் அனிஷ் என்பவருடன் நேற்று வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது நினுவின் அண்ணன் உள்பட 12 பேர் வீட்டுக்குள் திபுதிபுவென புகுந்தனர்.

    கெவின், அனிஷ் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களை ஒரு வாகனத்தில் கடத்திச்சென்றனர். இதில் அனிஷ் மட்டும் படுகாயத்துடன் திரும்பி வந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனையடுத்து நினு காந்திநகர் போலீசில் தனது கணவர் கெவினை அண்ணன் சானுசாக்கோ மற்றும் அவரது கும்பல் கடத்திச்சென்று விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டு தரவேண்டும் என்று புகார் அளித்தார்.

    இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளை மற்றும் பெண்ணின் அண்ணனையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் கெவின் பிணமாக மிதப்பதாக புனலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வாலிபர் கெவின் கலப்பு திருமணம் செய்ததால் கவுரவ கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக நினுவின் அண்ணன் சானுசாக்கோ, அவரது நண்பர்கள் ரியாஷ், நியாஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் தனது கணவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து நினு கதறி துடித்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

    இது குறித்து புதுப்பெண் நினு கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவர் கடத்தப்பட்டது குறித்து காந்திநகர் போலீசில் புகார் செய்தபோது ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதாக குற்றம்சாட்டினார்.



    போலீசாரின் செயலை கண்டித்து காந்திநகர் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசாரின் மெத்தனபோக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில மனிதஉரிமை ஆணையம் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.

    இதையொட்டி டி.ஜி.பி. லோக்நாத் பெகரா, காந்திநகர் இன்ஸ்பெக்டர் சிபு, சப்-இன்ஸ்பெக்டர் சன்னிமோன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் கோட்டயம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகமது ரபீக் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இந்த கவுரவ கொலையை கண்டித்து இன்று கோட்டயம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வாலிபர் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். #HonourKilling #LoveMarriage
    வாங்கிய கடனை திருப்பி தராததால் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வாலிபர், காரில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் இப்ராகீம்(வயது 26). இவர், சொந்தமாக தொழில் செய்வதற்காக தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த அமீன்(26) என்பவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.20 லட்சத்தை கடனாக பெற்றதாகவும், அதில் ரூ.11 லட்சத்தை இப்ராகீம் திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் மீதம் உள்ள ரூ.9 லட்சம் கடனை திருப்பி தராமல் இப்ராகீம், மலேசியாவுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. ஓராண்டு மலேசியாவில் இருந்த இப்ராகீம், தனது குடும்பத்தினரை பார்க்க சென்னைக்கு திரும்பி வந்தார்.

    இதை அறிந்த அமீன், தனது தம்பி தமீம்(25), நண்பர் சாகுல் உள்பட 3 பேருடன் காரில் விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த இப்ராகீம், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, அவரை அமீன் தடுத்து நிறுத்தி காரில் ஏற்றி, தாம்பரத்துக்கு கடத்திச்சென்றார்.

    அங்கு தனக்கு தரவேண்டிய ரூ.9 லட்சம் பணத்தை திரும்பி தரவேண்டும் என்று கேட்டு மிரட்டினார். பின்னர் இப்ராகீமின் தந்தை சாகுல்அமீத்திற்கு போன் செய்த அவர், மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தபோது சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து வைத்து விட்டார்கள். உடனே ரூ.9 லட்சம் பணத்தை கொண்டு வரவேண்டும் என்று தந்தையிடம் கூறும்படி இப்ராகீமிடம் வற்புறுத்தினார்.

    ஆனால் செல்போனை வாங்கி பேசிய இப்ராகீம், தான் கடத்தப்பட்டு இருப்பதாகவும், ரூ.9 லட்சம் பணம் கேட்பதாகவும் தந்தையிடம் கூறினார்.

    மேலும் பணத்தை தராமல் போலீசுக்கு சென்றால் இப்ராகீமை கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    அதற்கு இப்ராகீமின் தந்தை சாகுல்அமீது, தற்போது ரூ.9 லட்சம் இல்லை. ரூ.3 லட்சம் மட்டும் தருவதாக ஒப்புக்கொண்டார். அந்த பணத்தை தாம்பரம் கொண்டுவருமாறு கூறினர். அதற்கு சாகுல்அமீது, அங்கு வரமுடியாது. திருவல்லிகேணிக்கு வந்தால் பணத்தை தருவதாக கூறினார்.

    பின்னர் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வருமாறு கூறிய சாகுல்அமீது, இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து தாம்பரத்தில் இருந்து காரில் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் வந்தனர். பின்னர் தனது தம்பி தமீமுடன் இப்ராகீமை அனுப்பி வைத்து, பணத்தை வாங்கி வரும்படி கூறிய அமீன் உள்பட 3 பேரும் காரில் இருந்தனர். அதன்படி அங்கு சென்ற தமீமை அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, இப்ராகீமை பத்திரமாக மீட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அமீன் உள்பட 3 பேரும் அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டனர். இது பற்றி விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அமீன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். #tamilnews
    வாணியம்பாடியில் தொடர்ந்து சாராயம் விற்ற வாலிபர் 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வாணியம்பாடி நேதாஜிநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் திருப்பதி (வயது 24). சாராயம் விற்பனை செய்ததாக வெங்கடேசன் மீது வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்ட திருப்பதி கடந்தாண்டு குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் இருந்து திருப்பதி வெளியே வந்தார். அதன்பின்னரும் அவர் சாராயம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையிலான போலீசார் நேதாஜி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பெரிய கேனுடன் வந்த திருப்பதியை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த கேனில் சாராயம் இருந்தது. போலீசார் விசாரணையில், மோட்டார்சைக்கிளில் சாராயத்தை திருப்பதி கடத்தி வந்து நேதாஜி நகரில் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து திருப்பதியை போலீசார், கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி தொடர்ந்து சாராய விற்பனை செய்து வந்ததால், அவரை 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன், பரிந்துரை செய்தார். அதன்பேரில் திருப்பதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

    அதையடுத்து, அதற்கான ஆணையின் நகல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் திருப்பதியிடம் நேற்று போலீசார் வழங்கினர். 
    அறந்தாங்கி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டசம்பவத்தில், தகராறில் ஈடுபட்டதால் அடித்து கொன்ற சித்தப்பா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). அவரது குடும்பத்தினரும், அவரது சித்தப்பா பழனியப்பன் குடும்பத்தினரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். வீரபத்திரன் இரவு நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள ரகுபதி என்பவருக்கு சொந்தமான குடிசையில் தங்கி வந்துள்ளார். மது அருந்தும் பழக்கம் உடைய வீரபத்திரன் பலருடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீரபத்திரன் சாப்பிட்டு விட்டு, குடிசையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று காலை பழனியப்பன் குடும்பத்தினர் பார்த்தபோது, வீரபத்திரன் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபத்திரனை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வீரபத்திரனை கொலை செய்த வழக்கில் அவரது சித்தப்பா பழனியப்பன் (42), உறவினர் ரவிச்சந்திரன் (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் பின் வருமாறு:- சம்பவத்தன்று இரவு வீரபத்திரன், குடிசையில் வழக்கமாக தூங்கும் இடத்தில் தூங்கினார். அப்போது நாங்கள் 2 பேரும் அங்கு சென்று தூங்கி கொண்டிருந்த வீரபத்திரனை எழுப்பி, ஏன் இப்படி குடித்து விட்டு பலருடன் தகராறு செய்கிறாய் என்று கேட்டோம். அப்போது வீரபத்திரனுக்கும் எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் வீரபத்திரனை முகம் சிதையும் அளவிற்கு அடித்தோம். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம், என்று தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  
    கும்பகோணத்தில் கந்துவட்டிகாரர்கள் கொடுமையால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருநீலக்குடி, சீனிவாச நல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் தனது நண்பர் ஒருவர் கந்துவட்டிகாரர்களிடம் கடன் வாங்கும்போது ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.

    இந்நிலையில் அவரது நண்பர் கடந்த 2 மாதம் முன்பு இறந்துவிட்டார். இதனால் கந்துவட்டி காரர்கள் ரமேசிடம் சென்று பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அவர் கடந்த 2 மாதமாக வேறு சிலரிடம் பணம் வட்டிக்கு வாங்கி மாதம் ரூ.2½ லட்சம் வட்டி கட்டி வந்துள்ளார்.

    கடந்த மாதம் வட்டி கட்ட முடியாமல் இருந்தபோது கந்துவட்டிகாரர்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்ததால் அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி உள்ளனர்.

    இந்நிலையில் கடன்வாங்கி இறந்த தனது நண்பர் வீட்டுக்கு கந்துவட்டி காரர்களை ரமேஷ் அழைத்து சென்றுள்ளார். அப்போது நண்பரின் மனைவி தனது கணவர் வாங்கிய கடனை சொத்துக்களை விற்று கட்டி விடுவதாக கூறியுள்ளார். அதற்கு சில காலமாகும் என்று கூறியுள்ளார். ஆனால் கந்துவட்டிகாரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் நேற்று மீண்டும் ரமேசிடம் நீதான் பணத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும். இல்லையென்றால் மாதம் தவறாமல் ரூ.2½ லட்சம் தர வேண்டும் என்று டார்ச்சர் செய்யதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ரமேஷ் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ரமேசை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேசுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×