search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருந்து"

    எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

    மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

    மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே, தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.



    டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன்,  சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்தில் பங்கேற்றனர்.
    சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொது விருந்து நடந்தது.
    திருவாரூர்:

    சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பொது விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டார். இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், செயல் அதிகாரி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல காகிதகாரத் தெருவில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. இதையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.

    திருவாரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான தமிழ்ச்செல்வி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பொதுவிருந்து நடந்தது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால், அவளிவநல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சைவ விருந்தளித்து உபசரித்தார். #VenkaiahNaiduhostsPresident
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சைவ விருந்தளித்து உபசரித்தார்.

    இதுதொடர்பாக, புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு, ‘ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தார் எனது வீட்டில் விருந்துண்டதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaiduhostsPresident
    புதுவை கவர்னர் கிரண்பேடி அளித்த விருந்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. #governorkiranbedi #narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

    மோதல் அவ்வப்போது விஸ்வரூபம் எடுப்பதும், பின்னர் சுமூகமாவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நாராயணசாமி அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் கவர்னர் கிரண்பேடியுடன் சமாதான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.



    கிரண்பேடி புதுவை கவர்னராக பொறுப்பேற்று இன்றோடு (செவ்வாய்க்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையொட்டி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று மாலை விருந்து அளித்தார்.

    இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி தவிர்த்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் ஆவேசமான முதல்-அமைச்சர் நாராயணசாமி, “தன்மானம் இல்லாதவர்கள் மட்டுமே கவர்னரின் விருந்தில் பங்கேற்பார்கள்” என்று கூறினார்.

    இதனையடுத்து நேற்று மாலை நடந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

    அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்த், திருமுருகன், செல்வம், சுகுமாரன், கோபிகா, சந்திரபிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர், தலைமை செயலாளர் அஸ்வின் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். #governorkiranbedi #narayanasamy

    ×