என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருணாஸ்"
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், தோட்டா மங்கலம், அஞ்சுகோட்டை, தொண்டி, வட்டாணம் ஆகிய பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடங்களை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் யாரும் வைகையில் இருந்து தண்ணீர் பெற்றுத்தரவில்லை. ஆனால் அம்மா ஆட்சியில் வைகையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு குறிப்பாக ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலெல்லாம் தண்ணீரை நிரப்பி ஏழை, எளிய மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது.
விவசாயத்திற்காக பெரிய கண்மாய் நிரப்பப்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கிடைக்காத பகுதிகளை தெரிவித்தால் உடனடியாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
அ.தி.மு.க.வின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டு தி.மு.க. தலைவர் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்கிறார்.
எனவே அவரைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #Manikandan #Karunas
முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் அவரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கோர்ட்டில் ஜாமீன் பெற்று கருணாஸ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அவரை வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக நெல்லை போலீசார் சென்னைக்கு வந்து முகாமிட்டு அவரது வீடு தேடி சென்றனர். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து விட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.
கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து பேசி வந்தனர்.
தற்போது உடல் நலம் சரியாகிவிட்டதால் ஆஸ்பத்திரியில் இருந்து கருணாஸ் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீட்டுக்கு வந்து விட்டார்.
இன்று காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார்.
சட்டசபை சபாநாயகர் எந்த பக்கமும் சாயாமல் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால்தான் அவர் மீது விமர்சனம் எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Karunas
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கடந்த ஆண்டு நடைபெற்ற பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் நான் பங்கேற்று மரியாதை செலுத்தினேன். அப்போது எனது ஆதரவாளர்கள் தாக்கியதில் தேவர் பேரவை தலைவர் கார் சேதப்படுத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புளியங்குடி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற போது நான் அங்கு இல்லை. இந்த வழக்கில் என்னை சேர்க்க முகாந்திரம் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக 2 மாதங்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். #Karunas #MaduraiHC
#Vadachennai comes with its raw, gritty, uncut intensity to the theatres from 17th October, censored ‘A’. #oct17#anbu
— Dhanush (@dhanushkraja) October 9, 2018
நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மரியாதை செலுத்த சென்றபோது மோதல் வெடித்தது. இது தொடர்பாக புளியங்குடி போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கருணாசை கைது செய்வதற்கு சமீபத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கருணாசுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
2017ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாசை காவல்துறை இப்போது கைது செய்ய முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் போலீசார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளிப்பதாக கூறினார். #KarunasMLA
சென்னை:
நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. சென்னை போலீசாரால் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் அதிகாரி அரவிந்தன் ஆகியோரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கருணாசை முதலில் கைது செய்தனர்.
இதன்பின்னர் சேப்பாக்கம் போராட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த 2 வழக்குகளிலும் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தினமும் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் அவர் கையெழுத்திட உத்தரவிடப்பட்டு இருந்தது.
சென்னை போலீசார் தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார்.
இந்த நிலையில் புளியங்குடியில் கடந்த ஆண்டு தேவர் பேரவை தலைவர் முத்தையா என்பவரின் கார் உடைக்கப்பட்ட வழக்கில் கருணாசை கைது செய்ய புளியங்குடி போலீசார் சென்னை வந்தனர்.
சாலி கிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.
இதையடுத்து கருணாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் கருணாஸ் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது 8-ந்தேதிக்கு முன்ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி கருணாசின் முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. அப்போது கருணாசுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸ் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். #Karunas #MaduraiHighCourt
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.
இவர் அ.தி.மு.க. குறித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் விமர்சனம் செய்ததால் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கருணாஸ் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கும்படி கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த மனு சபாநாயகரின் ஆய்வில் உள்ளது.
இதற்கிடையே ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள கருணாஸ், சபாநாயகரை பதவி நீககம் செய்யகோரி தனது வக்கீல்கள் மூலம் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
இந்த மனு சட்டசபை கூடும்போது முதல் அஜண்டாவில் வைக்கப்படும். 35 பேர் மெஜாரிட்டி இருந்தால் விவாதம் நடைபெறும். இல்லை என்றால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:-
சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தனித் தீர்மானம் யார் கொண்டுவர நினைத்தாலும் எழுத்துப் பூர்வமாக 14 நாட்களுக்குள் முன்னறிவிப்புடன் சட்டசபை செயலாளருக்கும், அதன் பிரதியை சபாநாயகரிடமும் கொடுக்க வேண்டும்.
இதை சட்டசபை கூடும்போது முதல்நாள் பட்டியலில் சேர்ப்போம். சட்டசபையில் இதற்கு 35 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தரவேண்டும். போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்றால் அனுமதி மறுக்கப்படும்.
உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் 7 நாட்களுக்குள் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும். அப்போது துணை சபாநாயகர் இந்த சபையை நடத்துவார்.
சட்டசபையில் தி.மு.க.வுக்கு 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் கருணாசுக்கு ஆதரவு கொடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதுபற்றி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனிடம் கேட்டதற்கு கருணாஸ் தி.மு.க.விடம் ஆதரவு கேட்டால் அந்த நேரத்தில் கட்சி மேலிடம் இதை பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார். #Karunas #Speaker
வடபழனி சூர்யா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று சந்தித்து பேசினார்.
பின்னர் ஜெ.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஐ.சி.யு. வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன்.
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக கருணாஸ் செயல்படுவதாக நினைத்து பழைய வழக்குகளை தோண்டி எடுக்கிறார்கள். அவருக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உள்ளதாக பத்திரிகை, தொலைக்காட்சியில் பார்த்தேன்.
ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த தகுதி நீக்க வழக்கில் இன்னும் தீர்ப்பு வராமல் 3-வது நீதிபதியிடம் சென்றுள்ளது.
இந்த 3-வது நீதிபதியும் சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என்று சொல்லிவிட்டால் சபாநாயகர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்?
எனவே நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சபாநாயகர் கொஞ்சம் அமைதியாக இருந்து 3-வது நீதிபதியின் தீர்ப்பை பார்த்து விட்டு அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? இல் லையா? என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
இந்த ஆட்சி முடியும் தருவாய்க்கு வந்து விட்டது. ஒரு நோயாளி ஆஸ்பத்திரியில் முடியாமல் இருக்கும் போது மூச்சை இழுத்து இழுத்து விடுவான். இதை பார்ப்பவர்கள் நல்லா மூச்சு விடுகிறான் என்பார்கள். அது நிற்பதற்கான மூச்சு தானே தவிர நல்லா மூச்சுவிடுவதாக அர்த்தமில்லை.
அதுபோல் இந்த ஆட்சி முடியும் நேரத்தில் ஆட்சியாளர்கள் சர்வாதிகார உச்சிக்கு செல்கிறார்கள். இது நீடிக்காது. இந்த ஆட்சி நீதிமன்றத்தின் மூலமாகவும், மக்கள் மன்றத்தின் மூலமாகவும் தூக்கி எறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Karunas #JAnbazhagan
காமெடி நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
நாடார் சமுதாயம் பற்றி தரக்குறைவாக விமர்சித்த அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் பேசினார்.
இதற்காக நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கருணாஸ் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது ஆதரவாளர்களுக்கு மது வாங்கி கொடுப்பதற்காக மட்டுமே தினமும் ரூ.1 லட்சம் வரை செலவு செய்கிறேன். தனது அமைப்பான முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கொலை செய்யவும் தயங்கக் கூடாது என்றும் கருணாஸ் பேசி இருந்தார்.
இதற்காக அவரை காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர். ஆனால் கோர்ட்டு அதனை ஏற்கவில்லை.
இந்த நிலையில் ஐ.பி.எல். போராட்ட வழக்கிலும் கருணாஸ் கைது செய்யப்பட்டார். திருவல்லிக்கேணி போலீசார் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். கோர்ட்டில் போலீஸ் காவல் மறுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 2 வழக்குகளிலும் கருணாஸ் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் புளியங்குடியில் போடப்பட்ட ஒரு வழக்கில் கருணாசை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் புலித்தேவன் நினைவிடத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி கருணாஸ் மாலை அணிவிக்க சென்றார்.
அப்போது கருணாஸ் ஆதரவாளர்களுக்கும், தேவர் பேரவை தலைவர் முத்தையா தேவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது.
இதில் கருணாஸ் மற்றும் முத்தையா தேவரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 2 தரப்பினரும் அளித்த புகாரில் புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முத்தையா தேவர் காரை சேதப்படுத்தியதாக கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் இப்போது கருணாஸ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
அவரை கைது செய்வதற்காக புளியங்குடி டி.எஸ்.பி. ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.
நேற்று மாலையில் புளியங்குடியில் இருந்து புறப்பட்ட போலீசார் இன்று அதிகாலையில் சென்னை வந்தனர். சாலிகிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்கு அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் படை சென்றது.
நெல்லையில் இருந்து வந்திருந்த 15-க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்னை விருகம்பாக்கம் போலீசாரும் சென்றனர். மொத்தம் 50 பேர் கருணாசின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் கருணாஸ் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாசை 3-வது முறையாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே புளியங்குடியில் போடப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் கருணாஸ் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. #Karunas #KarunasMLA
சென்னை:
சாதி மோதலைத்தூண்டும் வகையிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தாக்கிப் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. கைதாகி ஜாமீனில் விடுதலை ஆனார்.
கருணாஸ் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவர் என்பதால் அவர் மீது கட்சிதாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இதற்காக அரசு கொறடா ராஜேந்திரன் சபா நாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதை ஏற்று கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.
இந்தநிலையில் சபா நாயகர் தனபாலை நீக்க கோரி கருணாஸ் சார்பில் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சட்ட சபை விதிகளை மீறி சபா நாயகர் செயல்படுகிறார்.
‘‘நான் தமிழக சட்ட சபையில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. வாக இருக்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட பிரிவு 68 மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்ட 179 (சி) விதியின் கீழ் சபாநாயகர் தனபாலை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட சட்ட பிரிவுகளின்படி அவருக்கு 14 நாட்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
சட்டசபையை உடனே கூட்டி சபா-நாயகரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
கடிதத்தின் நகல் சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. கருணாஸ் சார்பில் அவரது வக்கீல்கள் சட்டசபை செயலாளரிடம் மனுவை அளித்துள்ளனர்.#KarunasMLA #SpeakerDhanapal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்