search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்"

    சென்னை-புறநகர் பகுதியில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மாமல்லபுரம்:

    ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை காலம் அமலில் இருக்கிறது.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1000, வவ்வால் ரூ. 750, சங்கராரூ. 350, நண்டு ரூ. 300, இறால் ரூ. 400, பாறை ரூ. 800, கடமா ரூ. 400, அயிலை ரூ. 300 என்று விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இதை சரி செய்யும் வகையில் கேரளா, ஆந்திரா, ஓடிசா, கோவா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது. இதன் மூலம் விலையை குறைத்து விற்பனையை அதிகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 45 நாட்கள் தடைக்காலத்தை 61 நாட்களாக உயர்த்தியதால் மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம், மரக்காணம் சுற்று வட்டார கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி அருகே மீன்பிடிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி புதுப்பட்டாணி தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். இவரது  மகன் யாசர் அராபத்(வயது 9). அங்குள்ள பள்ளியில் 4-ம்வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறையை அடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்றான். அதன்பிறகு அவன் வீடு திரும்பவில்லை. 

    இந்த நிலையில் நங்கஞ்சி பகுதியில் உள்ள கிணற்றின் அருகே யாசர் அராபத்தின் செருப்பு மற்றும் மீன் பிடிக்கக்கூடிய தூண்டில்கள் கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் மற்றும் அரவக்குறிச்சி போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். 

    அப்போது கிணற்றுக்குள் யாசர்அராபத் இறந்து கிடந்தான். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள்   வரவழைக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. கிணற்றில் மீன்பிடிக்கும் போது யாசர் அராபத் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன் விற்று கல்லூரியில் படிக்கும் கேரள மாணவிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது செய்யப்பட்டார். #KeralaGirl #Hanan #FishSelling
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், தொடுப்புழா என்ற இடத்தில் உள்ள அல் அசார் கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருபவர் மாணவி ஹனன் (வயது 19).

    இவர், குடிகார தந்தை குடும்பத்தை கைவிட்டுச்சென்ற நிலையில், தாயாருக்கு மனநிலை சரியில்லை என்ற சூழலில், தினமும் சந்தைக்கு சென்று மீன் வாங்கி வந்து விற்று, அதைக் கொண்டு தன்னையும், தாயாரையும், சகோதரரையும் காத்துக்கொண்டு படித்து வருவதாக தெரிகிறது. பகுதி நேர வேலை போல மலையாள படங்களில் சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.



    இவருடைய ஆசை, எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவர் ஆவதுதான்.

    மாணவி ஹனனைப் பற்றி பிரபல பத்திரிகை ஒன்றில் சிறப்புக்கட்டுரை வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது.

    அதைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடிக்க உள்ள படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்து உள்ளது. இந்த வாய்ப்பை டைரக்டர் அருண் கோபி வழங்கி உள்ளார். மேலும் பல அரசியல் பிரபலங்களும், பட உலகினரும் அவருக்கு உதவ முன் வந்தனர்.

    இது குறித்து அறிந்தவர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டனர். ஒரு தரப்பினர், ஹனனைப் பாராட்டினர்.



    இன்னொரு தரப்பினரோ மாணவி ஹனனை கடுமையாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்தனர். குறிப்பாக “ஹனன் வசதியானவர், சினிமாவில் நடிப்பதற்காகத்தான் மீன் விற்பதாக நாடகம் ஆடுகிறார்” என்ற ரீதியில் கருத்துக்கள் வெளியானது. இது அந்த மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

    இது குறித்து ஹனன் பேட்டி அளிக்கையில், “நான் பொய் பேசுவதாக சொல்கிறார்கள். இது தவறு. நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்தான். வாழ்க்கை நடத்துவதற்கு போராடி வருகிறேன். 7 வயதிலேயே எனக்கு கஷ்டங்கள் ஆரம்பித்து விட்டது. எல்லா பகுதி நேர வேலைகளும் செய்து இருக்கிறேன்” என உருக்கமுடன் கூறினார்.

    இதை அந்த மாணவி படித்து வரும் கல்லூரி நிர்வாகமும் உறுதி செய்தது.

    இதே போன்று ஹனனுக்கு பட வாய்ப்பு தந்து உள்ள டைரக்டர் அருண் கோபி டி.வி. சேனல்களுக்கு அளித்த பேட்டியில், “ஹனனுக்கு எதிரான விமர்சனங்கள், அவரை அடித்துக்கொல்வதற்கு சமமானது. இந்த விமர்சனங்கள் அடிப்படை இல்லாதது” என கூறினார்.

    ஹனனுக்கு எதிரான விமர்சனங்களுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

    ஹனனை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார். அது மட்டுமின்றி அந்த மாணவி மீன் விற்கும் படத்தை தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார்.

    அதைத் தொடர்ந்து அந்த மாணவியை தரக்குறைவாக விமர்சித்த வயநாடு பகுதியை சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  #KeralaGirl #Hanan #FishSelling
    தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை. இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Minister #jayakumar #ADMK
    சென்னை:

    மீன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு 2001-ம் ஆண்டு அறிவித்தப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10-ந்தேதி தேசிய மீன் வளர்ப்போர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை இயக்குனர் டாக்டர் சமீரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், சிறந்த மீன் வளர்ப்போருக்கான விருதை மதுரையை சேர்ந்த அழகுரவி, சிறந்த முறையில் கடலில் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்போரில் கோவளத்தை சேர்ந்த மீனவர் குழு முதல் பரிசும், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எபி, ஹெஸ்டர் ஆகியோர் 2-வது பரிசும், அதே பகுதியை சேர்ந்த டேனியல், சூசைசத்தியகுரு ஆகியோர் 3-வது பரிசும் பெற்றனர். இவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்.

    அத்துடன் 2017-2018-ம் ஆண்டு மீன் குஞ்சு வளர்க்க 100 சதவீதம் இலக்கை எட்டியதற்காக பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் தலைமையில் உள்நாட்டு மீனவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மின்சார கட்டண சலுகை, மீன்பண்ணை அமைக்க அனுமதி மற்றும் மானியம், மீன்களுக்கான உணவுகளை கிடைக்க வழி செய்வது, மீன் அங்காடிகள் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய உத்தரவை வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் மீன்களில் ‘பார்மலின்’ என்ற ஒருவகை ரசாயனப்பொருள் சேர்க்கப்பட்டதாக வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தியாகும். மீன்களில் எந்த ரசாயன பொருளும் சேர்க்கப்படவில்லை.



    தமிழகத்துக்கு மொத்த தேவையில் 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றை ரசாயனங்களை பயன்படுத்தி பதப்படுத்தி வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

    அண்டை மாநிலங்களில் மீன்களில் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் எந்தப்பகுதிக்கு மீன்கள் கொண்டு வந்தாலும், அவற்றை கடும் சோதனைக்கு பின்னரே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனையில், மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் ஆகிய இணைந்து ஆய்வு மேற்கொள்ளும். இதுதொடர்பாக, மீனவர் கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #jayakumar #ADMK
    நாகலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமா பகுதியில் ரசாயனம் கலந்த ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #ChemicalMixedFish #Nagaland
    கோஹிமா:

    மீன்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதன் மீது பென்ஸோயேட் மற்றும் அம்மோனியா ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வெளியானது. இந்த வகை வேதிப்பொருட்களால் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வேதிப்பொருட்கள் கலந்த மீன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில் உள்ள மீன்கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் இருந்து மீன்கள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு, சுமார் ஆயிரத்து 666 கிலோ எடை கொண்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்கள் இறக்குமதி செய்பவர்களிடமும் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Nagaland
    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வேதிப்பொருட்கள் கலந்த 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு அருகே மீன்களில் கலப்படம் செய்வதாக சுகாதாரத்துறைக்கு வந்த புகார்களை அடுத்து, சிறப்பு ஆபரேஷன் ஒன்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தினர். அந்த ஆபரேஷனில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 47 வகை மீன்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    பரிசோதனைக்கூடத்தில் நடத்திய ஆய்வில் மீன்களில் சோடியம் பென்ஸோயேட், அம்மோனியா ஆகியவை கலந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வகை வேதிப்பொருட்கள் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தக்கூடியவை. இதன்மூலம் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து வந்த மீன்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் கேரளாவில் வேதிப்பொருள் கலக்கப்பட்ட 12 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ChemicalMixedFish #Kerala
    ×