search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்கள்"

    இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் 7400 பேர் அமெரிக்க அரசிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USRefugess #AsylumSeekers
    நியூயார்க்:

    போர்கள், வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக பொதுமக்கள் தங்கள் நாடுகளை விட்டு இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

    இந்நிலையில், உலகின் பலவேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள அகதிகள் தொடர்பாக ஐ.நா. அகதிகள் முகமை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு (2017) இறுதி நிலவரப்படி மொத்தம் 68.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மட்டும்  16.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இவ்வாறு இடம்பெயர்ந்து சென்றவர்களில் அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்த அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் சால்வடோர் நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்த நாட்டைச் சேர்ந்த 49500 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் கடந்த ஆண்டு மட்டும் 7400 பேர் அமெரிக்க அரசிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தியாவில் கடந்த ஆண்டு நிலவரப்படி மொத்தம் 197,146 அகதிகள் உள்ளனர். அவர்களில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள 10519 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. இந்தியாவில் இருந்து சென்றவர்களில் 40391 பேர் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் கோரி உள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USRefugess #AsylumSeekers

    நேபாளத்திற்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். #NepalTourists #NepalEconomicSurvey
    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டின் சுற்றுலாப் பயணிகள் குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கையை அரசு சமீபத்தில் வெளியிட்டது. 2017-ம் ஆண்டுக்கான இந்த ஆய்வறிக்கையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை விவரம், அதிக அளவில் வருகை தந்த சுற்றுலாப் பகுதி மற்றும் சுற்றுலா மூலம் கிடைத்த வருவாய் போன்ற புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த ஆய்வறிக்கையின்படி, நேபாளத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். 2017ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 9 லட்சத்து 40 ஆயிரத்து 217 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதில் 17.1 சதவீதம் பேர் இந்தியர்கள். சீனா 11.1 சதவீத சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா 8.44 சதவீதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டும் இந்தியர்களே முதலிடம் பிடித்திருந்தனர்.



    நேபாளத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டும் 47 சதவீதம் ஆகும். குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப்  பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

    81 சதவீத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலமாகவும், 19 சதவீத பயணிகள் தரைவழி போக்குவரத்து மூலமாகவும் (குறிப்பாக இந்தியர்கள்) நேபாளத்திற்கு வருகை தந்துள்ளனர். #NepalTourists #NepalEconomicSurvey

    பா.ஜ.க. தலைமயிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் கடந்த 4 வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்கள் காப்பாற்றப்பட்டதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். #Indiansrescued #MEASushma
    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் வெளியுறவுத்துறை ஆற்றிய சாதனை பட்டியல் புத்தகத்தை புதுடெல்லியில் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உலகில் உள்ள பல நாடுகளுக்கு நமது நாட்டின் தலைவர்கள் சென்றதே இல்லை என்பதை அறிந்து நான் வியப்படைந்தேன். எங்கள் ஆட்சி அமைந்த பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுடனும் நட்புறவை ஏற்படுத்தவும், பலப்படுத்தவும் தீர்மானித்தோம்.

    அதன்படி, இதுவரை 186 நாடுகளுடன் மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆட்சியில் 
    வெளிநாடுகளில் தவித்த 90 ஆயிரம் இந்தியர்களை காப்பாற்றி இருக்கிறோம். வெளிநாடுகளில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட பலரை பிரதமர் மோடி காப்பாற்றியுள்ளார். கடல்கடந்து சென்ற இந்தியர்கள் இன்று வெளிநாடுகளில் அமைதியாக வாழ்கிறார்கள்.

    பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை என்று ஒருபோதும் கூறியதில்லை. ஆனால், தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Indiansrescued #MEASushma
    நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்திர பிரதேசத்தில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியுள்ளார். #OmPrakashRajbhar
    லக்னோ:

    உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டாக்டர். சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் அமைச்சரவை மந்திரியுமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கலந்து கொண்டனர்.

    அப்போது வாரணாசியில் சமீபத்தில் ஏற்பட்ட மேம்பால விபத்து குறித்து பேசிய ஓம் பிரகாஷ், ’நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது., அதை அகற்றுவது எளிதான காரியம் அல்ல’ என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஓம் பிரகாஷ், ‘சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயங்களில், ஆந்திரா, கேரளாவை விட உ.பி சிறப்பாகவே திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதியநாத்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை’ என தெரிவித்தார்.

    ஓம் பிரகாஷ் ராஜ்பர் இவ்வாறு பா.ஜ.க.வை தாக்கிப் பேசுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என ஓம் பிரகாஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Corruptioninblood #OmPrakashRajbhar
    ×