என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுவை"
புதுவை அருகே திருக்கனூர் - விழுப்புரம் மெயின் ரோட்டில் தமிழக எல்லையையொட்டி தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் திருக்கனூர் மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் ஏராளமானோர் மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மதுக்கடையை கேஷியர் பூட்டிவிட்டு சென்றார். அவர் கடையை பூட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடை மீது வீசினர். உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அந்த வெடிகுண்டு கடையின் ஷெட்டரில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மதுக்கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடையின் ஷெட்டர் மட்டுமே சேதமானது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டு வீசியவர்களின் அடையாளங்கள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் வெடிகுண்டு வீசிய நபர்கள் யார் - எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமூல் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ரவுடிகள் மதுக்கடை மீது வெடிகுண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால் திருக்கனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு வீசப்பட்ட மதுக்கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்த டிரைவர் பலராமன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதகமாக சட்டங்களை திருத்தக்கூடாது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும்( செவ்வாய்க்கிழமை), நாளையும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பிற தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் புதுவையில் பஸ்கள் ஓடவில்லை. தனியார் பஸ்கள் மட்டுமின்றி புதுவை அரசு போக்குவரத்துக்கழக பஸ்களும் ஓடவில்லை. தமிழகத்தில் இருந்து புதுவைக்கும், புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் குறைந்தளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூரில் பணி செய்யும் ஊழியர்கள் பஸ் நிலைய வாசலில் நூற்றுக்கணக்கில் பஸ்களுக்காக காத்திருந்தனர். தனியார் என்ஜினீயரிங், மருத்துவக்கல்லூரி மாணவர்களை அழைத்து செல்வதற்காக சில பஸ்கள் மட்டும் இயங்கின. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் ஆட்டோ, டெம்போக்களும் முழுமையாக இயங்கவில்லை.
நகரின் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் காலை நேரத்திலேயே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை மார்க்கெட் வளாகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
நகர பகுதி மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சேதாரப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, திருபுவனை உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்க வில்லை. புதுவையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. மத்திய-மாநில அரசுகளின் அலுவலகங்கள் இயங்கினாலும் ஊழியர்களின் வருகை குறைவாக இருந்தது. ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவையில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
போராட்டத்தையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். பஸ் நிலையம், ரெயில்வே நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ரோந்து சென்றனர். #BharatBandh
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின. அதே வேளையில் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
அதுபோல் இன்று காலை 7.30 மணியளவில் புதுவையில் இருந்து தமிழக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.
புதுவை- கடலூர் சாலையில் நைனார் மண்டபத்தில் சென்றபோது, ஒரு மர்ம கும்பல் அந்த பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டது.
இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து அந்த பஸ் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ் மீது கற்களை வீசிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Bharatbandh
புதுவை ரெட்டியார் பாளையத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கடந்த செப்டம்பர் மாதம் வங்கி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகையில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 8 இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதே போல் அங்குள்ள மற்றொரு தேசிய வங்கியில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 11 இருந்ததை அதிகாரிகளின் சோதனையில் கண்டு பிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் சென்னையில் உள்ள தலைமை ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ரிசர்வ் வங்கி மானேஜர் சேனாதிபதி புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வங்கியில் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருவண்ணாமலை மாவட்டம் நுங்கம்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். (வயது 50). தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று சேகர் சேதராப்பட்டு- புதுவை பஸ்சில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மறைமலை அடிகள் சாலையில் பஸ் சென்ற போது டிரைவர் ‘திடீர் பிரேக்’ போட்டார். இதில் சேகர் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சேகரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் சுரேஷ் கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 63). இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முரளிதரன் தனது மோட்டார் சைக்கிளில் உப்பளம் ரோடு வழியாக சோனாம் பாளையம் சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் முரளிதரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முரளிதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு பகுதி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டு நாகராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
2018-ம் ஆண்டு மத்திய அரசில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைக்காவிட்டாலும், மாநிலத்தில் இருந்து நாம் திட்டத்திற்காக, திட்டமில்லா செலவினங்களுக்காக ஒதுக்கிய தொகையை செலவிட தடைகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளோம்.
நம் மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத தன்மை, மாநிலத்தில் கவர்னர் அதிகார வரம்பு மீறி செயல்படுவது. இதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களின் சம்பளத்தை தவிர மற்றவற்றை முறையாக நிறைவேற்றி வருகிறோம்.
விவசாயம், கல்வி, மருத்துவம், சுற்றுலா, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, நகர சுத்தம் என பல விருதுகளை பெற்றுள்ளோம். மத்திய அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம். இந்த அங்கீகாரமானது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது.
இப்போது நிதி அயோக், உலக வங்கி இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் புதுவை மாநிலம் மக்கள் நிம்மதியாக வாழ அனைத்து வசதியும் பெற்ற மாநிலங்களில் இந்திய அளவில் 5-வது இடம் பெற்றுள்ளது. இது நிர்வாகத்தை எப்படி செம்மைப்படுத்தியுள்ளோம்? என்பதை தெளிவாக காட்டுகிறது.
திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படாவிட்டால், கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்காவிட்டால் 2018-ல் இன்னும் பல சாதனைகளை படைத்திருப்போம். தடைகளை உடைத்தெறிந்து 2019-ல் மாநில வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவோம்.
சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு கிடைக்காததால், புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தற்போது இவ்விஷயம் தீவிரமாகியுள்ளது.
முன்பு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும், அரசியல் கட்சிகள் வலியுறுத்துவார்கள், பொதுக்கூட்டத்தில் பேசுவார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல முயற்சி எடுத்தாலும் மாநில அந்தஸ்து தரப்படவில்லை.
தற்போது என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சியினரை சந்தித்து மாநில அந்தஸ்து தேவை பற்றி எடுத்துக்கூறியுள்ளோம். மத்திய அரசு நிதி கமிஷனில் சேர்க்காத நிலை, நமக்கு கிடைக்க வேண்டிய வரி விகிதாச்சாரப்படி கிடைக்காதது. அதிகாரம் இருந்தும் திட்டங்களை செயல்படுத்த தடை என பல கஷ்டங்கள் உள்ளன. புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவது ஏற்புடையது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். இதையெல்லாம் நாங்கள் வலியுறுத்தினோம்.
முதல் முறையாக அனைத்து அரசியல் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதை எங்கள் ஆட்சியில் ஏற்படுத்தியுள்ளோம். இது மத்திய அரசுக்கு அழுத்தம் தரும்.
அரசியல் கட்சியினர், எம்.எல்.ஏ.க்கள், சமூக அமைப்புகள் இணைந்து வருகிற 4-ந்தேதி பாராளுமன்றம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 21 அரசியல் கட்சிகள் கலந்துகொள்கிறது. பா.ஜனதா, சிவசேனா தவிர அனைத்து அரசியல் கட்சிகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தர கடிதம் அனுப்பியுள்ளோம்.
ஜனாதிபதி 2016-ம் ஆண்டு கவர்னர் கிரண்பேடியை புதுவை மாநிலத்திற்கு கவர்னராக நியமித்தார். துணை நிலை ஆளுநர் அலுவலகம் அரசு ஒப்புதல் இல்லாமல் துணைநிலை ஆளுநர் செயலகம் என மாற்றி கடிதம் அனுப்புகிறார். கிரண்பேடி கவர்னரா? அல்லது 5 கவர்னர்கள் அங்கு பணிபுரிகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தேவநீதிதாஸ் பதவிக்காலம் முடிந்ததும் அவரை பதவி நீட்டிப்பு செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பினார். உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி தரவில்லை. அதை மறைத்து கவர்னர் தேவநீதிதாசை ஆலோசகராக நியமித்துள்ளதாக எனக்கு கடிதம் அனுப்பினார். அதை நான் மறுத்து கன்சல்டன்டாகவே தேவநீதிதாசை நியமிக்க வேண்டும் என நான் கூறினேன்.
ஆனால் கவர்னர் உள்துறை அமைச்சக உத்தரவை மீறி தேவநீதிதாசை நியமித்துள்ளார். நான் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியும் பதில் வரவில்லை.
ஓ.எஸ்.டி. அண்ட் கன்சல்டன்ட் என தேவநீதிதாசை நியமித்தது தவறானது. கவர்னர் அலுவலகத்திற்கு செயலாளர் இல்லை. புதுவையில் உள்ள எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் செயலாளராக நியமிக்கலாம் என கடிதம் அனுப்பினேன். ஆனால் கவர்னர் யாரையும் நியமிக்காமல் தேவநீதிதாசை செயலாளர் போல நியமித்துள்ளார். அதிகாரிகளை அழைப்பது, கூட்டம் நடத்துவது என கவர்னர் வேலையை தேவநீதி தாஸ் செய்ய முடியாது. அவர் 2-வது கவர்னராக செயல்படுகிறார்.
மற்றொரு அதிகாரியான ஸ்ரீதர் அரசு அதிகாரிகளுக்கு தேர்வு வைக்கிறார். இவர் 3-வது துணைநிலை ஆளுநர். 4-வது துணைநிலை ஆளுநராக காவல்துறை அதிகாரி உள்ளார். 5-வதாக கேர்டேக்கர் ஒருவர் உள்ளார். அவர் 5-வது துணைநிலை ஆளுநராக செயல்படுகிறார். அதிகார துஷ்பிரயோகம் மிகப்பெரும் அளவில் நடக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வரும்.
கவர்னர் கிரண்பேடி 3 மாதம் இருப்பார். அதன்பிறகு மற்ற அதிகாரிகள் எங்கே செல்வார்கள்? புதுவை சிறிய மாநிலம். அவர்கள் பணியை அவரவர் செய்ய வேண்டும். இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு 3 மாதத்தில் விடை கிடைக்கும். புதுவையில் அரசு ஆட்சி நடக்கிறதா? கோமாளிகள் ஆட்சி நடக்கிறதா? என தெரியவில்லை.
பொய்யான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றனர். ஆனால் கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது என்பதை புதுவை மக்கள் உணர்ந்துள்ளனர்.
கவர்னரால் திட்டத்தை தள்ளிப்போட முடியும். தடுத்து நிறுத்திவிட முடியாது. மக்களுக்கு செய்ய முடியவில்லையே என்றுதான் நாங்கள் வருந்துகிறோம்.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து வருகின்றன. எனவே 2019-ம் ஆண்டு புதுவை மாநில மக்களுக்கு நன்மைகளை அளிக்கும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார். #CMNarayanasamy
‘பெய்ட்டி’ புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று மதியம் கரையை கடந்தது.
இதனால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளிகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு கல்வித்துறையின் மதிய உணவுக்கூடம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வருவாய்த்துறை செயலாளர் தேபேஷ்சிங், கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்திரி ஆகியோர் முடுக்கி விட்டுள்ளனர். மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பங்களை சீரமைத்தல் உள்ளிட்ட நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
புயல் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:-
பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது, 11 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 6 மணி நேரத்தில் இந்த மழை கொட்டி தீர்த்துள்ளது. மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளது.
வீடுகள் மீது மரங்கள் விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் இல்லை. தேவையான நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார். #PietyCyclone
வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி அரபிக் கடலுக்கு சென்று விட்டது.
அதன் பிறகு தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது.
மழை படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம்-புதுவையில் வறண்ட வானிலை நிலவுகிறது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வியட்நாம், தாய்லாந்தையொட்டியுள்ள சியாம் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அந்தமான் கடல் பகுதிக்கு பரவிவருகிறது.
தொடர்ந்து மேற்கு திசை நோக்கி காற்று விசுவதால் அந்தமான் கடல் பகுதியில் 2 நாளில் மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக கடற்கரை பகுதி வரை பரவுகிறது.
இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிறது.
சென்னையை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழையானது சராசரி அளவைக் காட்டிலும் 47 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. சென்னையில் இந்த சீசனில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவான 60 செ.மீ.க்கு பதில் 32 செ.மீ. மட்டுமே பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் முடிய இருக்கிறது. இனிவரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இடைவெளிவிட்டு மீண்டும் மழை பெய்யும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் தர்மபுரி, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில நேரங்களில் வெப்பம் அதிகரித்து இருந்தது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 30.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. நாளை வெப்பம் மேலும் அதிகரித்து 31டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRains
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல கேரளா போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால் ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கத்தை விட குறைந்துள்ளது.
சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை கண்டித்தும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடத்தப்படும் என பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டம் உள்நோக்கம் கொண்டது, தேவையற்றது என்றும், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பந்த் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பந்த் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
முதல்-அமைச்சர் நாராயணசாமியும் புதுவையில் பந்த் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. கேரளா மாநிலத்தில்தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.
இந்த பந்த் போராட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். மேலும் சட்ட ஒழுங்கில் பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே பா.ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று மாலை பெரியார் சிலை அருகில் இருந்து பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஊர்வலம் சென்றனர்.
அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் கொடுத்தபடி நகர பகுதி முழுவதும் சுற்றி வலம் வந்தனர்.
முழு அடைப்பு குறித்து சாமிநாதன் கூறியதாவது:-
இந்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். போராட்டத்திற்காக வணிகர் சங்கங்கள், மார்க்கெட் வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர், மீனவர்கள், தொழிலாளர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் ஆதரவு கேட்டுள்ளோம். பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.
இதனால் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் இயங்காது. தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்காது. இதற்கு முன் புதுவையில் ஆளும் கட்சி தரப்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தேவையற்ற விஷயங்களுக்குக்கூட பந்த் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது, பெரும்பான்மை மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் போராட்டம். இதனால் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaIssue #BJP #Bandh
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்