search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    நேபாளத்தில் கடும் குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள குடிசைக்குள் மூட்டிய நெருப்பின் புகை மூட்டத்தால் மூச்சு திணறி தூக்கத்திலேயே பெண்ணும் 2 மகன்களும் இறந்தனர். #Mentruationhut
    காட்மாண்டு:

    நேபாளத்தில், மாதவிலக்கு காலத்தில் பெண்களை வீட்டில் இருந்து வெளியேற்றி கால்நடை கொட்டகை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது.

    தீண்டாமையின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படும் இந்த செயலை குற்றம் என அறிவித்து, இது தொடர்பாக தனி சட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு நேபாள அரசு இயற்றியது. எனினும் நேபாளத்தில் பல கிராமங்களில் இன்னும் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், பஜூரா மாவட்டத்தை சேர்ந்த ஆம்பா போஹரா (வயது 35) என்கிற பெண்ணுக்கு மாதவிலக்கு காலம் என்பதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கப்பட்டார். அவரது 2 மகன்களும் அவருடன் தங்கி இருந்தனர்.

    இந்தநிலையில் குடிசையில் அவர்கள் 3 பேரும் பிணமாக கிடந்தனர். கடும் குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள குடிசைக்குள் நெருப்பு மூட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சு திணறி தூக்கத்திலேயே 3 பேரும் இறந்ததாகவும் கூறப்படுகிறது.  #Mentruationhut
    கோவை மத்திய சிறையில் ஆயுள் கைதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது 56).

    இவர் அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ராமசாமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இன்று அதிகாலை 3.40 மணிக்கு இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு ஜெயில் ஊழியர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோயம்பேடு பஸ்நிலையத்தில் கழிவறையில் மயங்கி விழுந்த கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் போலீஸ் டி.எஸ்.பி. உயிரிழந்தார்.
    சென்னை:

    கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் ஆனந்த பிரகாசம். இவரது குடும்பத்தினர் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார்கள்.

    பணி முடிந்து ஆனந்த பிரகாசம் சென்னை திரும்பி வருவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் அரசு பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்குள்ள பொது கழிவறைக்கு சென்றார். அங்கு திடீரென ஆனந்த பிரகாசம் மயங்கி விழுந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்த பிரகாசத்தை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஆனந்த பிரகாசம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பந்தளத்தில் போராட்டம் நடத்திய இந்து அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சபரிமலை கர்ம சமிதி உறுப்பினர் உயிரிழந்தார். #SabarimalaProtest #KeralaShutdown #ProtesterDies
    பந்தளம்:

    கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலைக்கு 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது.

    சபரிமலை கர்ம சமிதி சார்பில் பந்தளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றபோது, அங்கிருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சபரிமலை கர்ம சமிதியைச் சேர்ந்த சந்திரன் உன்னிதான் (55) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சந்திரன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இறந்துபோனார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கேரளாவில் இன்று சபரிமலை கர்ம சமிதி அமைப்பு சார்பில்  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #SabarimalaProtest #KeralaShutdown #ProtesterDies 
    ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு சென்ற பிளஸ்-1 மாணவி மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கல்கோவில் கிராமத்தை சேர்ந்த கங்கைஅமரன் மகள் மகாலெட்சுமி (வயது15). ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    அரையாண்டு தேர்வு விடுமுறை தினத்தையொட்டி பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    மாணவி மகாலெட்சுமி இன்று காலை சிறப்பு வகுப்பில் பங்கேற்க பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். 2-வது மாடியில் உள்ள அவரது வகுப்பறைக்கு சென்றார் காலை 9.30 மணிக்கு மாணவி திடீரென 3-வது மாடிக்கு சென்றார்.

    அங்கு சென்ற அவர் மாடியில் இருந்து திடீரென விழுந்தார். இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் ஓடிவந்தனர். அவர்கள் மாணவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மாணவியின் பெற்றோர் ஆலங்காயம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் உறவினர்கள் பள்ளியில் குவிந்தனர். அவர்கள் மாணவியின் உடலை கண்டு கதறி அழுதனர்.

    ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து போலீசார், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.

    வடமதுரை:

    திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது மாணவி மாரியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் மோதி பலியானார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பராமரிப்பு முறையாக இல்லாததால் விபத்துகள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த பேரிகார்டுகளில் ஒளிரும் பட்டைகள் இல்லாததால் இரவு நேரத்தில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. நேற்றிரவும் தொடர்ந்து 3 வாகனங்கள் மோதியதில் பேரிகார்டு சேதமடைந்தது. மேலும் வாகனங்களும் சேதமடைந்ததால் ஆத்திர மடைந்த ஓட்டுனர்கள் பேரிகார்டுகளை அப்புறப்படுத்தி சென்டர் மீடியனில் வீசிஎறிந்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் விபத்தை தவிர்ப்பதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர்.

    இதன் காரணமாகவே தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. போலீசாரும் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் விதிகளை மீறி அதிவேகமாக செல்கின்றனர். 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டதற்கான அவசியம் புரியாமல் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் பணம் வசூலில் குறியாக உள்ளனர். பயணிகளின் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனாலேயே பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்றனர்.

    குளச்சல் அருகே புது மாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளச்சல்:

    நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது மனைவி உஷா (29). இவர்களுக்கு திருமணம் முடிந்து 12 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மணி மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் பாலப்பள்ளத்தில் உள்ள உஷாவின் தாயார் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

    அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    குளச்சல் பள்ளிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (51). பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி சுதா (40). இவர் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தினகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட் டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாத வருத்தத்தில் அவர் அதிகளவு மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தினகரன் இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை பேலஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (70). இவர் வக்கீலாக இருந்தார்.

    இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் மகன் நாகர்கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சதாசிவம் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பவம் குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரம்மகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பிணமாக கிடந்த சதாசிவத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியின் கோரத்தாண்டவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. #Tsunami #IndonesiaTsunami
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில்  உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது.

    பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.


     
    சுனாமி தாக்குதலில் முதல் கட்டமாக 43 பேர் பலியானதாக தகவல் வெளியானது. சுனாமியின் வேகம் குறைந்து தண்ணீர் வடியத் தொடங்கியதும் மீட்பு பணியை தொடங்கியபோது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நேற்று மாலை நிலவரப்படி சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 என்ற நிலையில் இருந்தது. இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 281 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Tsunami #IndonesiaTsunami
     
    திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து இறந்ததையடுத்து, கேரளாவில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #KeralaBJPBandh #SabarimalaIssue
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பந்தல் அமைத்து பா.ஜனதா கட்சியினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று அதிகாலை வேணுகோபாலன் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போராட்ட பந்தலின் முன்பு ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷம் எழுப்பியபடி தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    வேணுகோபாலன்

    சபரிமலை விவகாரத்தில் திருவனந்தபுரம் மட்டும் அல்லாமல் கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தாலும் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலை போராட்ட விவகாரத்தில் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததை கண்டித்து இன்று மாநில அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன. பாஜகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள பல்கலைக்கழக மற்றும் கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில், முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  #KeralaBJPBandh #SabarimalaIssue
    சீனாவில் ரசாயன தொழிற்சாலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். #ChinaBlast
    பீஜிங்:

    வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோவ் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

    இதன் காரணமாக வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்தன. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



    இந்த குண்டுவெடிப்பில் 38 லாரிகள், 12 கார்கள் தீக்கிரையாகின. வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குண்டுவெடிப்பா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #ChinaBlast
    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். #AfghanBlast #USSoldiersDied
    காஸ்னி:

    ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தாலும், அவர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் படைகளும், அங்குள்ள அமெரிக்க கூட்டுப்படைகளும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

    அவ்வகையில் காந்தஹார் மாகாணத்தில், மேவான்ட் மாவட்டம், பேண்ட் இ டெமர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளை குறி வைத்து நேற்று அமெரிக்க கூட்டுப்படைகள் வான் தாக்குதல் நடத்தின. இதில் தலிபான் அமைப்பின் உள்ளூர் தலைவன் ரகமதுல்லா உள்ளிட்ட 7 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகளின் ஆயுத தொழிற்சாலையும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு கருவிகளும், கண்ணிவெடிகளும் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸ்னி நகரில் அமெரிக்க சிறப்பு படை வீரர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அமெரிக்க வீரர்கள் வாகனத்தில் சென்றபோது நெடுஞ்சாலையோரம் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில், 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் மற்றும் அமெரிக்க ஒப்பந்ததாரர் என 4 பேர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க கூட்டுப் படையைச் சேர்ந்த 12 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  #AfghanBlast #USSoldiersDied
    கஜா புயலால் வாழை, தென்னை, சோளம் சேதமடைந்ததால் சோகத்தில் இருந்த பெண் விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GajaCyclone
    கந்தவர்க்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் பல ஆயிரம் ஏக்கர் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    கந்தவர்க்கோட்டை அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி சந்திரா (வயது 45). விவசாயிகளான இவர்களுக்கு அதே பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வாழை, தென்னை, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர். அவற்றை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.

    சமீபத்தில் வந்த கஜா புயலால் இந்த பயிர்கள் கடுமையான வகையில் சேத மடைந்தன. சேதமடைந்த பயிர்களை சந்திரா கடந்த 17-ந்தேதி பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து யாருடனும் பேசாமல் சோகத்தில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்திரா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கந்தவர்க்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.  #GajaCyclone

    ×