என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 104723"
நாட்டறம்பள்ளியை அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். திருப்பதி, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இளம்பெண் இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யாவிடம், மாமனார் கோவிந்தன் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா அவரிடம் இருந்து தப்பி ஓடி, அருகே உள்ள கிணற்றில் குதித்தார். இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஐஸ்வர்யாவை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கோவிந்தன் மீது நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருவண்ணாமலை டவுன் தண்டராம்பட்டு சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மகளுக்கும், பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு அந்த பெண் பெங்களூரு சென்றார். சில நாட்களுக்கு முன்பு அவர் கணவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அந்த பெண்ணை அவர் பெங்களூருவிலேயே விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.
அந்த பெண் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர், அந்த பெண்ணின் ஆபாச படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன் தந்தையிடம் கூறினார். அவர், திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து பெங்களூரு வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டை எல்லையான குளாம் தக்கா என்ற இடத்தில் பாஷா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
அங்குள்ள மரத்தின் அடியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து எலவனாசூர் கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த பெண்ணின் உடலை பார்த்தனர்.
அவரது உடல் முழுவதும் எரிக்கப்பட்டு, அழுகியநிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை. யாரோ மர்ம மனிதர்கள் இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடல் மீது மண் எண்ணை ஊற்றி எரித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திண்டுக்கல் லயன் தெருவை சேர்ந்த ஜான் அலெக்சாண்டர் குளோரி அஸ்வின் (வயது21). இவர் ஆரோக்கியதாஸ் என்பவரை காதலித்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் திடீரென ஆரோக்கியதாஸ் குளோரியை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் எனவும் கூறினார்.
இதனால் வேதனையடைந்த குளோரி விஷம் குடித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நாகபாண்டியன் (20). இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறி வந்தார். அதற்கு அவர்கள் இன்னும் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.
இதனால் வேதனையடைந்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை புலியகுளம் சந்தியாகு வீதியை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மனைவி பாக்கியமேரி (வயது 81). இவர்களுக்கு 2 மகள்கள். ஒரு மகள் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மற்றொரு மகள் செல்வி (35) பெற்றோருடன் வசித்து வருகிறார்.
தேவசகாயம் ஏற்கனவே இறந்து விட்டார். செல்விக்கு மனநல பாதிப்பு இருந்தது. இதனால் அவரை கவனித்துக்கொண்டு பாக்கியமேரி இருந்தார். இந்நிலையில் நேற்று இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது மூதாட்டி பாக்கியமேரி இறந்து 2 நாட்கள் ஆனது தெரியவந்தது. இது குறித்து ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் இறந்த 2 நாட்கள் ஆகியும் அது தெரியாமல் அதே வீட்டில் மகள் 2 நாட்கள் இருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. நன்மைகள் மட்டுமன்றி தீமைகளும் அதிக அளவில் சமூக வலைதளங்கள் மூலம் நிகழ்கிறது. இதனை கட்டுப்படுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் அவற்றில் கிடைக்கும் நண்பர்கள் குறித்து விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. விழிப்புணர்வு இல்லாமல், பாதுகாப்பற்ற செயலியால் ஏற்பட்ட நட்பு, இந்திய மாணவர் ஒருவரை பலி வாங்கி உள்ளது.
அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல், ஜாமீ லீ, மவுலின் ரதோட்டை மிக மோசமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் ரதோட் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரை தாக்கிய குற்றத்துக்காக ஜாமீ கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரதோட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் அந்த பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
கல்வியில் முன்னேறுவதற்காக ஆஸ்திரேலியா சென்று, தனது உயிரை விட்ட ரதோட்டை எண்ணி அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். #Australia
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகே வசித்து வந்தவர் மவுலின் ரதோட் (வயது 25). இந்திய மாணவரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள கல்லூரி ஒன்றில் கணக்கியல் துறையில் பயின்று வந்தார். இவருக்கும், மேற்கு மெல்போர்னின் புறநகர் பகுதியான சன்பரியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தனியாக வசித்து வரும் அந்த இளம்பெண்ணை பார்ப்பதற்காக மவுலின் ரதோட் கடந்த 23-ந் தேதி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அங்கே படுகாயமடைந்து கிடந்த மவுலின் ரதோடை சிலர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மவுலின் ரதோட் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கொல்லப்பட்ட மவுலின் ரதோட், தனது பெற்றோருக்கு ஒரே மகன் என அவரது நண்பர் கூறியுள்ளார். இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. #IndianStudentKilled #Australia #Tamilnews
மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சிலர், அந்த பெண்ணின் வாயை துணியால் பொத்தி அவரை கடத்திச்சென்று விட்டனர். இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு சென்று மரக்காணம் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
அப்போது பெண்ணை, அதே கிராமத்தை சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது நண்பர்கள் கடத்திச்சென்று விட்டதாகவும், அவர்களை உடனே கைது செய்து பெண்ணை மீட்டுத்தரும்படியும் கோஷம் எழுப்பினர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்ணை கடத்திச்சென்றவர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரி கொல்லப்பட்டரை தெருவை சேர்ந்தவர் சந்தியாதேவி (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி சரண்தேவி(5) என்ற மகளும், 10 மாதம் ஆன சவுமியா என்ற குழந்தையும் உள்ளனர்.
இன்று காலையில் சந்தியாதேவி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 2 குழந்தைகளுடன் மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது அவர், குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு கையில் வைத்திருந்த மண்எண்ணெயை திடீரென தலையில் ஊற்ற முயன்றார். இதை பார்த்த போலீசார், ஓடி சென்று தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை வாங்கி அப்புறப்படுத்தினார்கள்.
அப்போது அவர், போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து சந்தியாதேவியை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான், கூலி வேலை செய்து வருகிறேன். எனது ஊரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வெள்ளிப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவரது கடையில் நான் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நாங்கள் இருவரும் 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தோம். இதனால் எனக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் பிறந்த சான்றிதழிலும் தகப்பனார் பெயர் கார்த்திகேயன் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அவர், என்னுடன் வாழ மறுத்து வருகிறார். குடும்ப செலவுக்கும் பணம் தருவதில்லை. இது குறித்து கேட்டால் என்னை அவர் அடித்து உதைக்கிறார். வலி தாங்க முடியாமல் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார், இது உங்கள் குடும்ப விஷயம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டனர். எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
சேலம் பொன்னம்மா பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வேலவன். இவரது மனைவி ரேவதி (வயது 31). மனு நீதி நாளான இன்று காலை ரேவதி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென அவர் நுழைவு வாயில் முன்பு வைத்து மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது உறவினர் ஒருவருக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும், அவர் திருப்பி தரவில்லை என்றும், இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜிகான். இவரது மகள் அனிதா (வயது 23). இவர் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான ராஜேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது காதலன் ராஜேசுடன் அனிதா வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர்கள் அந்த பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜேசின் முதல் மனைவி அனுராதா மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை தேடி வந்தனர்.
கடந்த 21-ந்தேதி அனிதாவுடன் அந்த பகுதியில் இருந்த ராஜேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருடன் இருந்த அனிதாவை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காதலனை விட்டு பிரித்து தன்னை வீட்டுக்கு அழைத்து வந்தது அனிதாவுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. இதனால் அவர் வீடு திரும்பியது முதல் மனமுடைந்து காணப்பட்டார். இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அனிதா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அனிதாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இந்த காதல் 7 ஆண்டுகளை கடந்த நிலையில், ஸ்ரீராமிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் தனது காதல் குறித்து வீட்டிலும் எடுத்துக்கூறி, அவர் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார். இவர்களது திருமணத்தை ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுவதாக கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் அவர், ‘உன்னை காதலிக்கும் ஸ்ரீராம் ஆண் அல்ல; அவர் ஒரு பெண்’ என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அந்த இளம்பெண் உடனடியாக பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்தார். பின்னர் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. ஸ்ரீராம் என்ற பெயரில் காதலனாக வலம் வந்தவரையும், அவரை காதலித்த இளம்பெண்ணையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது, ஸ்ரீராம் என்ற பெயரில் ஆண் வேடத்தில் இருந்தவர், பெண்தான் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணிடம் நகை மோசடி செய்வதற்காக 7 ஆண்டுகளாக நாடகமாடி வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து அவர் போலீசில் கூறுகையில், ‘எனக்கு கடன் அதிகமாக இருப்பதால் அதனை அடைக்க வழி தெரியவில்லை. ஆண் போன்று நடித்து ஒரு பெண்ணை திருமணம் செய்தால், அந்த பெண் வரதட்சணையாக கொண்டு வரும் நகையை ஏமாற்றி வாங்கி விற்று கடனை அடைக்க முடிவு செய்தேன். அதற்காக ஸ்ரீராம் என்ற பெயருடன் 7 ஆண்டாக அந்த பெண்ணை காதலிப்பது போல் நடித்து வந்தேன். நான் எதிர்பார்த்தது போன்று திருமணமும் எங்கள் இருவருக்குள் ஏற்பாடாகியது. ஆனால், எப்படியும் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து திருமணத்துக்கு முன்னதாகவே உண்மையை மணப்பெண்ணிடம் தெரியப்படுத்திவிட்டேன்’ என்று தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காதலித்த பெண் தரப்பில் புகார் எதுவும் போலீசாரிடம் அளிக்கப்படவில்லை. எனினும் நீண்ட நாட்களாக ஒரு பெண் ஆணாக நடித்து தனியார் நிறுவனத்தில் பணி செய்தது எப்படி? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண் ஒருவரை காதலித்து மோசடிக்கு முயன்ற இந்த ருசிகர சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் மேரி (வயது 25). இவர் திருப்பூர் ஸ்ரீநகரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் சென்னையை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து டோரிஸ் மேரியும், மணிகண்டனும் திருமணம் செய்து கொண்டனர்.
புதுமணத்தம்பதி அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் சிவகுமாருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினர். காதல் கைகூடிய மகிழ்ச்சியில் புதுமணதம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறுக்கிழமை மணிகண்டன் சென்னை செல்வதாக கூறிவிட்டு சென்றார். சென்னையில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு மணிகண்டன் திருப்பூர் திரும்பினார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்போடப்பட்டிருந்தது. மணிகண்டன் கதவை தட்டிப்பார்த்தார்.
வெகுநேரமாகியும் எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது டோரிஸ் மேரி தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவி பிணமாக தொங்குவதை பார்த்த மணிகண்டன் கதறி அழுதார்.
மணிகண்டனின் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டோரிஸ் மேரியின் உடல் அழுகிய நிலையில் தொங்கியது.
இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக டோரிஸ் மேரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் திருமணம் செய்த கணவர் தன்னை விட்டு பிரிந்து செல்ல சென்னை சென்று விட்டார் என்ற அச்சத்தில் இறந்தாரா? அல்லது வேறு காரணமா என்று போலீசார் பல்வேறுகோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தவிர திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.#tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்