search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில்பாலாஜி"

    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களை தடுத்ததாக செந்தில் பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

    சென்னை:

    அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. செய்தி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாபு முருகவேல் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியில் தொட்டிக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி ஓட்டுப்போட விடாமல் தடுத்துள்ளார். இது நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. அப்பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும்.

     


    எனவே செந்தில்பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓட்டுப்போடவிடாமல் தடுக்கப்பட்ட வாக்காளர்களை மீட்டு அவர்கள் வாக்களிக்க செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்காக வாக்காளர்களுக்கு பிரியாணி தயார் செய்து வினியோகிக்க உள்ளனர்.

    இதற்காக அதிக அளவில் இறைச்சி மற்றும் காய்கறிகள் வாங்கி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 50 ஆயிரம் பொட்டலங்கள் வினியோகிக்க உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.

    எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள் உடனடியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஆர்.கே.நகர் பாணியில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து அதனை வாக்காளர்களுக்கு விநியோகித்துள்ளார். டோக்கன் முறையில் அதனை விநியோகித்துள்ள அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து விட்டு, மாலையில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

    மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதற்காக அவர் இந்த மாதிரி செயல்படுகிறார். இந்த தகவல் எங்களுக்கு தெரியவந்ததையடுத்து போலீசிலும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்துள்ளோம். இருப்பினும் தி.மு.க.வின் தில்லுமுல்லு அரவக்குறிச்சி மக்களிடையே எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செந்தில்பாலாஜி என்ற ஒருவர் அ.ம.மு.க. கட்சியில் இருந்து சென்று விட்டால் இக்கட்சி செயலற்றுப் போய்விட்டது என அர்த்தம் இல்லை என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார். #Senthilbalaji #palaniappan
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவை தலைவர் எஸ்.பி. லோகநாதன் தலைமை தாங்கினார்.

    இதில் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செந்தில்பாலாஜி என்ற ஒருவர் அ.ம.மு.க. கட்சியில் இருந்து சென்று விட்டால் இக்கட்சி செயலற்றுப் போய்விட்டது என அர்த்தம் இல்லை. ஒன்றுபட்ட திமுக.,விலிருந்து அ.தி.மு.க., பிரிந்தபோது எம்.ஜி.ஆருடன் மாநில, மாவட்ட நிர்வாகிகளோ, மந்திரிகளோ உடன் இல்லை. தொண்டர்களை மட்டுமே நம்பி அவர் கட்சியைத் தொடங்கி விஸ்வரூப வளர்ச்சி பெற்றார். ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாய் இருந்தபோதும் ஜெயலலிதாவுடன் பெரிய நிர்வாகிகளோ, மந்திரிகளோ உடனில்லை. தொண்டர்களை மட்டுமே நம்பி சாதித்துக் காட்டினார்.

    அதேபோல அமமுக.,வை தொண்டர்களுடன் தினகரன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவார். ஜெயலலிதா மீது வழக்குப்போட்ட தி.மு.க.,வுடன் கைகோர்த்துள்ள செந்தில்பாலாஜி அங்கிருக்கும் சில கொலு பொம்மைகள் போல இருப்பார்.

    கரூர் மாவட்டம் ஜெயலலிதாவிற்கு எக்கு கோட்டையாக இருந்தது போல இனி தினகரனின் கோட்டையாய் மாறும். செந்தில்பாலாஜியை திமுக., சேர்த்துக்கொண்டது தி.மு.க.வின் பலவீனத்தைக் காட்டுகிறது. துரோகத்தினை வீழ்த்தவேண்டும் என தினகரன் பக்கம் வந்த அவர் அதே துரோகத்தைச் செய்துவிட்டார். தி.மு.க.,வில் பல சாமிகள் உள்ளனர். அவர்களை மீறி இவரால் எதுவும் செய்துவிட முடியாது. தினகரனைத் தவிர யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார், ஆனால் தினகரன் நம்பர் ஒன், மற்றவர்கள் எல்லாம் பூஜ்ஜியம். வரும் பொதுத்தேர்தல் அல்லது 20 தொகுதி இடைத்தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க., அ.ம.மு.க.வைத் தேடி வரும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஆரியூர் சுப்பிரமணி, தங்கவேல், அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ., உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #Senthilbalaji #palaniappan
    அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத்தயார் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். #ADMK #MRVijayabaskar #SenthilBalaji
    கரூர்:

    கரூர் க.பரமத்தியில் அ.தி.மு.க. ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:-

    1½கோடி பேரை உறுப்பினர்களாக கொண்ட அ.தி.மு.க. பல சோதனைகளை தாண்டி வந்துள்ளது. இந்த ஆட்சி எப்போது எத்தனை நாள் நீடிக்கும் என ஏங்கியவர்கள் நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் கொடுத்த 85 வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை செந்தில்பாலாஜி நடத்தியுள்ளார்.

    கடந்த 4½ ஆண்டுகள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்தார்? மாறாக இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க செய்தது யார்?. கட்சியை அழிக்க நினைத்தவர்களுக்கு ஜெயலலிதா ஆன்மா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.



    அவர் பொறுப்பில் இருக்கும் போது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது அரசியல் செய்வதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 249 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வெளியிடப்பட்ட புத்தக வடிவிலான ஓட்டு சீட்டில் இரட்டை இலையினை தேடிப்பிடித்து மக்கள் ஓட்டு போட்டதால் அ.தி.மு.க. வேட்பாளர் மரியம் உல் ஆசியா வென்றார்.

    அப்படிப்பட்ட இந்த தொகுதியில் மீண்டும் செந்தில்பாலாஜி நின்று வெற்றிபெற்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜெயலலிதாவிற்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாத தம்பி துரைதான் அவரது இறப்புக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். #SenthilBalaji #ThambiDurai
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மணப்பாறை சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பங்கேற்று பேசியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 75 நாட்களாக ஐ.சி.யூ. அருகே நின்று வாட்ச்மேன் வேலை பார்த்தவர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை.  ஜெயலலிதாவிற்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாத தம்பி துரைதான் ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணம்.

    தம்பிதுரை நினைத்திருந்தால் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றிருக்கலாம். ஆனால் தம்பிதுரையின் கனவு, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தான் முதல்-அமைச்சராக வேண்டும் என்று 75 நாட்களும் மருத்துவமனை வாசலில் அமர்ந்திருந்தார்.

    ஆனால் விசாரணை ஆணையம் இதுவரை தம்பிதுரையை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கவில்லை என்பது தெரியவில்லை. இதில் இருந்தே தெரிகிறது தம்பிதுரை தான் முதல் குற்றவாளி என்று.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த அரசு காப்பாற்றப்பட வேண்டும் என்றால், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். நாங்கள் 18 பேரும் முதல்வரை மாற்ற வேண்டும் என்று தான் கவர்னரிடம் மனு கொடுத்தோம்.

    இந்த வாரம் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் சட்டமன்றத்திற்குள் செல்லும் நிலை வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய கட்சி கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொண்டு தேர்தலை சந்திப்போம். இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று நிச்சயமாக வெற்றி பெறுவோம். எங்களை எதிர்ப்பவர்கள் டெபாசிட் கூட பெற முடியாது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு உண்மை என்பதால் தான், அதற்கு உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு தெரியவருகின்றது என்றார். #SenthilBalaji #ThambiDurai
    கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு கொடுத்தார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு கொடுத்தார். அப்போது இது குறித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அன்பழகன் பதில் கூறினார்.

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 232 மனுக்கள் வரப்பெற்றன. மனுவை பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனு தாரருக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டார்.


    கைக்குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஸ்ரீமதி உள்பட அவரது குடும்பத்தினரை படத்தில் காணலாம்.



    இதில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் சேர்ந்து வந்து கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்டவற்றின் மூலம் பிழைப்பு நடத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது விவசாயம் பொய்த்து போனதாலும், முறையாக காவிரி, அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி மறுக்கப்படுவதாலும் அவர்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கால்நடைகளை பராமரிக்க கூட வழியில்லாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். எனவே கரூர் மாவட்ட மக்களின் கட்டுமான பணிகளுக்காக காவிரி, அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் எடுத்து கொடுத்து பிழைப்பு நடத்தும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா பொய்யாமணியை சேர்ந்த வைரபெருமாள், சுக்கம்பட்டி சுப்ரமணி, நச்சலூர் ராஜா, சின்னபணையூர் பாலசுப்ரமணியம் மற்றும் ஜீயபுரத்தை சேர்ந்த ரவி உள்ளிட்ட நெல்கொள்முதல் வியாபாரிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், நாங்கள் குளித்தலை பகுதியை சேர்ந்த 600 விவசாயிகளிடம் 29,249 மூட்டை நெல் கொள்முதல் செய்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த சின்னகண்ணு(வயது 38) மற்றும் அவரது மனைவி கவுசல்யா ஆகியோரது நிறுவனத்திற்கு விற்பனைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்தோம். அதற்குரிய பணம் ரூ.3½ கோடியை 15 நாட்களில் தந்து விடுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை ரூ.61 லட்சத்து 54 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி ரூ.2 கோடியே 89 லட்சத்தை தர மறுத்து இழுத்தடித்தனர். இந்த நிலையில் பணத்தை எப்போது திருப்பி தருவீர்கள் என சின்னகண்ணு, கவுசல்யாவிடம் கேட்டபோது உரிய பதில் இல்லை. எனவே பணமோசடியில் ஈடுபட்ட இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணத்தை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் அருகே வாங்கல் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி ஸ்ரீமதி(23) தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், எனது கணவர் சிவக்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் லாரிக்கு படுதா கட்டும் வேலைக்காக சென்றார். அப்போது அங்கு லாரியில் மணல் ஏற்றி கொண்டு கடத்தியது தெரிய வந்தது. பொக்லைன் மூலம் மணலை அள்ளி லாரியில் போட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரம் மோதியதில் எனது கணவர் சிவக்குமார் படுகாயமடைந்தார். அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர். எனவே அவருக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டும். மேலும் மணல் கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    குளித்தலை வட்டம் வீரம்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி தெருக்களில் கடந்த சில வாரங்களாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் அருகே கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான அளவில் இடவசதி இல்லாததால் நோயாளிகளில் சிரமப்படுகின்றனர். எனவே நவீன வசதிகளுடன் இந்த சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் லாலாப்பேட்டை நாகராஜன் அளித்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்து மக்கள் கட்சியின் கரூர் நகர தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை முதல் சுங்ககேட் வரையும், சில பகுதிகளிலும் தள்ளுவண்டி கடைகள் வைத்து போக்குவரத்திற்கு சிலர் இடையூறாக வியாபாரம்செய்கின்றனர். எனவே இது பற்றி உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரூர் நகராட்சியிலுள்ள அரசு டாஸ்மாக் கடை பாரில் கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் அரசு காலனி பகுதியில் சாக்கடை வடிகாலை சிலர் அடைத்து வைத்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணி உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.

    இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மனு அளித்த 3 பயனாளிகளுக்கு அம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 1 பயனாளிக்கு பிரெய்லி கைக்கடிகாரம், 2 பயனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×