search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமங்கலம்"

    திருமங்கலம் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா, விவசாயி. இவர் இன்று காலை அருகில் உள்ள அச்சம்பட்டி காலனிக்கு சென்றார்.

    அங்கு ரோட்டோரத்தில் உள்ள கடையில் டீ குடித்தார். பின்னர் அங்குள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது திருமங்கலத்தில் இருந்து வந்த மினிலாரி சுப்பையா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுப்பையா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருமங்கலம் அருகே குடும்ப பிரச்சினையில் ஆத்திரம் அடங்காத கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது பெரிய பூலாம்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெத்தண்ணன் (வயது 69). இவருக்கு மாரியம்மாள் (60) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகளுக்கு திருமணமாகி அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மகள் தந்தை வீட்டுக்கு வந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பெத்தண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனைவியை எச்சரித்துள்ளார்.

    சிறிது காலத்தில் இந்த பிரச்சினை பெரிதாகி பெத்தண்ணன்-மாரியம்மாளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மாரியம்மாள் கோபித்துக்கொண்டு மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று குடும்பத்தினர் சமரசம் பேசினர். இதையடுத்து மாரியம்மாள் கணவன் வீட்டுக்கு சென்றார். நேற்றும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் சிறிது நேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு விட்டு தூங்கினர்.

    ஆனாலும் மனைவி மீது ஆத்திரம் அடங்காத பெத்தண்ணன் அதி காலையில் எழுந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவி மாரியம்மாள் கழுத்தில் அரிவாளால் வெட்டினார். இதில் அவரது தலை துண்டானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் சம்பவத்தன்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி பெத்தண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    திருமங்கலம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் சஞ்சீவி (வயது 15). இவர் கப்பலூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    குதிரைசாரிகுளம் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் பழுதானது. உடனே அதனை அங்கேயே விட்டுவிட்டு சதீஷ்குமார் வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் வீட்டில் இருந்த தனது மகன் சஞ்சீவியிடம் மோட்டார் சைக்கிளை எடுத்துவருமாறு கூறியுள்ளார்.

    அதன்படி சஞ்சீவி குதிரைசாரிகுளம் 4 வழிச்சாலையில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் சஞ்சீவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்-கள்ளிக்குடி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

    இதுதொடர்பான புகார்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் திருமங்கலம் தாலுகா மற்றும் கள்ளிக்குடி போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தனிப்படை போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த நாகையா மகன் செந்தில்குமார் (வயது30) என தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் அவரை கைது செய்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கள்ளிக்குடி பகுதியில் திருப்பரங்குன்றம் ராஜீவ்நகரைச் சேர்ந்த திருச்செல்வம் (44) என்பவர் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ளிக்குடி போலீசார் திருச்செல்வத்தை கைது செய்தனர். இவரிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    திருமங்கலம் அருகே தோட்டத்தில் போலி மது தயாரிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து போலி லேபிள், மூலப் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புளிய கவுண்டன்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் தங்கமாயன். இவரது தோட்டத்தில் போலி மதுபானம் (பிராந்தி) தயாரிக்கப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது போலி மது தயாரிப்புக்கான பொருட்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 4 கேன்களில் 120 லிட்டர் மூலப்பொருட்கள், 13 ஆயிரம் போலி லேபிள், 5 மூட்டைகளில் 180 மில்லி பாட்டில்கள், 3 மூட்டைகளில் பாட்டில் மூடிகள் மற்றும் பேக்கிங் எந்திரம் போன்றவை தோட்டத்தில் இருந்தன.

    மேலும் போலி மது தயாரிக்கும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்றனர். போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அங்கிருந்த போலி மது தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், பிடிபட்ட 3 பேரும் மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவர்களது பெயர் பிரகாஷ் (வயது35), விக்னேஷ் வரன் (25), சுரேஷ் (28) என்பதும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. போலி மது தயாரிக்கப்பட்ட தோட்டத்து உரிமையாளர் தங்கமாயன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த போலி மதுபான ஆலை பல ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வந்திருக்கலாம் என்றும், இங்கு தயாராகும் போலி மது பல கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை ஆலங்குளத்தில் உள்ள தமிழ்நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35). இவர் நேற்று திருமங்கலம் அருகே கிழவனேரியில் நடந்த உறவினர் விசே‌ஷத்திற்கு சகோதரி மகன் தங்கப் பாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் அவர்கள் மாலையில் மதுரைக்கு புறப்பட்டனர். மறவமங்கலம் மேம்பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் வேகமாக இறங்கியது.

    இதில் பின்னால் அமர்ந்திருந்த மஞ்சுளா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானதால் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம், அண்ணாநகர் உள்பட 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் இடையே ஏற்பட்ட வரவேற்பையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு 13,800 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.

    இந்த சூரிய ஒளி மின்சார வசதியால் வருடத்துக்கு ரூ.6.3 லட்சம் மின்சார செலவு குறைகிறது. உயர் மட்ட பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 6 மெகாவாட் சூரிய ஒளி சக்தி மின்சாரம் தயாரிக்கும் வகையிலான சோலார் பேனல்கள் விரைவில் நிறுவப்பட உள்ளன.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதுவரை 1.6 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உள்பத்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி பேனல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தினசரி மின் தேவைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.


    2016-ம் ஆண்டு கோயம்பேடு மெட்ரோ நிர்வாக அலுவலகத்தில் சூரிய ஒளி மின்சார வசதி தொடங்கப்பட்டு தினசரி 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாக அதிகரிக்கப்பட்டது.

    கோயம்பேடு மெட்ரோ அலுவலகத்தில் மாதத்திற்கு 1.35 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் ரூ.22 லட்சம் மின்சார செலவு ஒவ்வொரு மாதமும் சேமிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    திருமங்கலத்தில் அரசு பஸ் மீது கல் வீசிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் பயணிகளுடன் திருமங்கலத்திற்கு புறப்பட்டது.

    சீனிராஜ் (வயது 44) என்பவர் டிரைவராகவும், ஆதிமூலம் என்பவர் கண்டக்டராகவும் பணியில் இருந்தனர்.

    திருமங்கலம் தெற்குத் தெரு விநாயகர் கோவில் அருகே அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது மஞ்சள் பனியன் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று பஸ்சின் பின்புறம் கற்களை வீசிவிட்டு தப்பினார். இதில் கண்ணாடிகள் உடைந்தன.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்கு தெருவைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் 4 வழிச்சாலையில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    பேரையூர்:

    திருமங்கலம் நகர் போலீசார் 4 வழிச்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

    அவர்களில் ஒருவன் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டான். மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பிடிபட்ட 2 பேரையும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

    அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேரிடம் இருந்தும் 1 கிலோ 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் மணிகண்டன் (வயது 20) பசுமலை குறிஞ்சி நகர், சல்மான்கான் (23) பழங்கா நத்தம் என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய விவேக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருமங்கலம் அருகே மரக்கடை உரிமையாளரிடம் ரூ.57 ஆயிரம் மோசடி செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பேரையூர்:

    திருமங்கலம்-சோழவந்தான் சாலையில் மரக்கடை நடத்தி வருபவர் முருகேசன். இவரிடம் கோச்சடையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மரச்சாமான்கள் வாங்கி வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேல்முருகனும் அவரது உறவினர் மல்லியும் சேர்ந்து ரூ. 57 ஆயிரத்து 343 மதிப்பிலான மரக்கதவை வாங்கி உள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளனர்.

    இதுபற்றி கேட்டபோது பணத்தை தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக திருமங்கலம் நகர் போலீசில், முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே பட்டதாரி பெண் காதலனுடன் சென்றதால் அவரது குடும்பத்தினர் வாலிபர் வீட்டுக்கு தீ வைத்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.டி.ராஜன் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம், அரசு பஸ் டிரைவர். இவரது மகன் அருண் (வயது26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    திருமங்கலம் ராஜீவ் நகரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் சர்மிளா (25), முதுகலை பட்டதாரி. இவரும், அருணும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்மிளாவுக்கு வேறு ஒருவருடன் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இது பிடிக்காத அவர் கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.

    இதுகுறித்து திருமங்கலம் போலீசில் பன்னீர்செல்வம் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் காதலன் அருணுடன் சர்மிளா சென்று இருப்பது தெரியவந்தது.

    இதனால் சர்மிளா குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர். அவரது உறவினர்கள் அருண் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற சர்மிளாவின் உறவினர்கள் அங்கிருந்து பொருட்கள் அடித்து உடைத்து சூறையாடினர். பின்னர் வீட்டுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் இருந்து போல்நாயக்கன்பட்டிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது.

    உடனடியாக அங்கு சல்லி கற்கள் பரப்பப்பட்டன. அத்தோடு பணி நின்றுவிட, பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். கடந்த ஒரு மாத காலமாக அந்த வழியே சென்று வந்த மாணவ -மாணவிகள் சாலையில் நடக்க முடியாமல் தவித்தனர்.

    கர்ப்பிணி பெண்கள், இருசக்கர வாககனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து காயம் அடைந்தனர். ஆனாலும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை திருமங்கலம-உசிலம்பட்டி சாலையில் சாத்தங்குடி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ×