search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்
    • மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி உடையநேந்தல் கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் கண்மாய் நிரம்பியது.

    விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். இன்று நடந்த மீன்பிடி திருவிழாவில் செண்பகம் பேட்டை, இரணியூர், கீழசெ வல்பட்டி, குன்றக்குடி கும்மங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.சிறுவர்கள், பெரிய வர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    • நாமக்கல் வடக்கு நல்லி பாளையம் அரசு மேல்நி லைப்பள்ளியில் கடந்த 28-ந் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • புத்தகத் திருவிழா இன்று டன் நிறைவு பெறுவ தாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் வடக்கு நல்லி பாளையம் அரசு மேல்நி லைப்பள்ளியில் கடந்த 28-ந் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழா வில் 80 அரங்குகள், சொற்பொழிவு கள், பட்டி மன்றம், குழந்தை களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திரு விழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண் காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நடைபெற்று வருகிறது.

    புத்தகத் திருவிழா இன்று டன் நிறைவு பெறுவ தாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

    இதையடுத்து, நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (12-ந் தேதி) இந்த புத்தகத் திரு விழா நடை பெறும். எனவே பொது மக்கள், மாணவ, மாணவிகள், எழுத்தாளர்கள், கல்வியா ளர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்ப டுத்தி தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் ஊஞ்சல் பொன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாசி மாத திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு நெய், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாகச் சென்றது. ஊர்வலத்தின் போது கோலாட்டம், புலி ஆட்டம், சுருள் விளையாட்டுகள் மற்றும் நையாண்டி, பொய்க்கால் குதிரை போன்ற நாட்டுப்புற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பக்தர்களும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்தனர்.

    விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அழகர்கோவிலில் மாசி திருவிழா நடந்தது.
    • பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தில் அன்னப்பறவை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அலங்காநல்லூர்

    தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்ப டுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் முக்கியமானது. இந்த விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று காலை நடந்தது. ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பட்டார்.

    மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்தார். பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் காலை 10.50 மணிக்கு தெப்பத்தின் கிழக்கு புறமுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அன்னப்பறவை வாகனத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் முழுவதும் தெப்பத்தில் இருக்கும் கள்ளழகர் இன்று மாலை பூஜை முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபாடு செய்தனர்.

    இன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு இருப்பிடம் சேருகிறார்.

    • திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் திருவிழா நடந்தது.
    • மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி கடைசி வெள்ளிக்கிழமை அன்று அன்னதான பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையெட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ணன் திரளி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜாராம் ஊர் நாட்டாமை அழகர்சாமி விழா கமிட்டி நிர்வாகி பழனி முருகன் மற்றும் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் மகளிர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மேளதாளத்துடன் கல்யாணத்திற்கு சீர் வரிசைகள் கொண்டுவந்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 11 நாள் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மேளதாளத்துடன் கல்யாணத்திற்கு சீர் வரிசைகள் கொண்டுவந்தனர்.

    இதில் மலர் அலங்காரத்தில் வீற்றிருந்த சுவாமி அம்பாளுக்கு அக்கினி வார்த்து வேத மந்திரங்கள் முழுங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் கோவில் உள் பிரகாரத்தில் வீதியுலா நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    • மாபெரும் புத்தகத் திருவிழா, நல்லிபாளையத்தில் உள்ள, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
    • நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில், முதன் முறையாக, தமிழ்நாடு அரசு சார்பில், மாபெரும் புத்தகத் திருவிழா, நல்லிபாளையத்தில் உள்ள, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்தார். டி.ஆர்.ஓ. மணிமேகலை வரவேற்றார். எம்.பி., சின்ராஜ், எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பேசியதாவது:-

    தற்போதைய சூழ்நிலையில், புத்தகம் வாசிப்பது குறைந்துள்ளது. இளைஞர்கள் வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சோசியல் யாக்களில் காட்டும் ஆர்வத்தை, புத்தகம் வாசிப்பதில் காட்டுவதில்லை. புத்தகம் வாசிப்பதன் மூலம், தன்னம்பிக்கை பெறமுடியும். அந்த தன்னம்பிக்கை இருந்தால்தான், நாளைய உலகில் போராட முடியும். முன்னுக்கு வரமுடியும்.

    பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து, புத்தக அரங்கை காண்பித்தால் அவர்களுக்கு புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடு வரும். அதன் மூலம், பத்து பேர், 100 பேர் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தினால், நாளைய சமூகம் நன்றாக இருக்கும். இது குறிப்பிட்ட தனிநபர் ஆர்வம் கிடையாது. குழந்தைகள் படித்தால், நாளைக்கு இந்த சமூகத்துக்கு அவர்கள் மூலம் பயன்பாடு கிடைக்கும்.

    நாடு முன்னேறி இருக்கிறது. நமக்கு என்று கலாச்சாரம், பண்பாடு இருக்கிறது. சிலப்பதிகாரம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் இருப்பது நமக்கு பெருமைதான். அதனால், குழந்தைகளை அழைத்து வந்து படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தினால், நாளைய சமூகம் நன்றாக இருக்கும். அதன் மூலம் ஏற்படுகின்ற சமூக மாற்றங்களும் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புத்தக திருவிழாவில், 80 அரங்குகள், 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன. வரும், 10-ந் தேதி வரை நடக்கும் இந்த புத்தக திருவிழாவில், தினமும், காலை 11 மணி முதல், மதியம் 2 மணி வரை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, பாட்டு, கவிதை, படம் பார்த்து கதை சொல்லுதல், வினாடி வினா, மாறுவேடம், நாடகம் மற்றும் பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது.

    மேலும், மாலை, 3 மணி முதல், 5 மணி வரை, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, மாலை 6 மணி முதல், இரவு 9 மணி வரை20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டி–மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சி–கள் நடைபெற உள்ளது.

    • பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அக்ரஹாரம், புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழப்பாடி காமராஜ்நகரில் பெரியாற்றின் கரையிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் குல தெய்வமாக விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது. அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.

    இந்நிகழ்வு, காண்போரை பரவசமூட்டும் வகையில் அமைந்தது. பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் வழியில் குல தெய்வமான பெரியாண்டிச்சி அம்மனுக்கு, ஆடு,கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இளம் தம்பதிகள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது குத்தி, உறவினர்களை அழைத்து விருந்து வைத்து உபசரித்தனர்.

    நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு, நேற்று முன்தினம் திரண்டு சென்ற வாழப்பாடி பகுதி மக்கள், முப்பூஜை வழிபாடு நடத்தியதும். பெரியாண்டிச்சி அம்மன் கோயிலிலுள்ள முன்னடியான் என அழைக்கப்படும் கருப்பனார் சுவாமிக்கு மதுபானம் படையலில் வைத்து வழிபாடு நடத்தியதும் குறிப்பிடதக்கதாகும்.

    இதுகுறித்து, வாழப்பாடி புதுப்பாளையம் சரவணன், அக்ரஹாரம் அங்கமுத்து, கலைச்செல்வி ஆகியோர் கூறியதாவது:

    பணி நிமித்தமாக பல்வேறு பகுதியில் வசித்து வரும் உறவினர்களை, ஒரே இடத்தில் சந்தித்து உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஒட்டு மொத்த பங்காளிகளின் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து, குலதெய்வமான பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் முப்பூஜை திருவிழா கொண்டாடுவதை முன்னோர்கள் வழியில் தொடர்ந்து வருகிறோம்.

    100 குடும்பங்களை சேர்ந்த உறவுகள் ஒன்றிணைந்து குல தெய்வ முப்பூஜை வழிபாடு நடத்தியது பெரும் மகிழ்ச்சி–யை ஏற்படுத்தியதோடு, உறவை பலப்படுத்தி ஒற்று–மையை அதிகரித்துள்ளது' என்றனர்.

    • பத்ரகாளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி திருவிழாவில் பங்கேற்றதோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தீ மீதி திருவிழா கோவில் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், விரதமிருந்த பக்தர்கள் கவுல்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தி பரவசத்துடன் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சில பக்தர்கள் தங்களது குழந்தையை சுமந்து கொண்டு தீ மிதித்தனர்.

    இதில் கவுல்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி திருவிழாவில் பங்கேற்றதோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் கோவிலில் கிடா வெட்டும், இரவில் விநாயகர் கோவிலில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தியும், மா விளக்கு எடுத்தும் வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பது மாணவர்களுக்கு சிறப்பானதாக அமையும்.

    நீடாமங்கலம்:

    தேசிய அறிவியல் தினத்தை யொட்டி, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து "நிலா திருவிழா " என்ற நிகழ்வு வலங்கைமான் விருப்பாட்சிபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது.

    இதில் வானவியல் அறிஞர் பரமேஸ்வரன் பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களை யும், வானில் தெரியக்கூடிய நட்சத்திரங்களையும் காட்டினார்.

    மேலும், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து வலங்கை மான் வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் நிர்மல் கூறியதாவது:-

    மாணவர்களிடையே வானியல் மற்றும் அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், அதிகரிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பது கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றார்.

    நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி, தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வீரப்பூர் கோவில் மாசிப்பெருந்திருவிழாவில் இன்று பெரியகாண்டியம்மன் பெரிய தேர்பவனி நடந்தது
    • ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப் பாறையை அடுத்த வீரப்பூரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த கன்னிமாரம்மன் கோவில்களின் மாசிப்பெருந் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சி–களில் ஒன்றான பெரிய–காண்டியம்மன் பெரிய தேர்பவனி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

    வீரப்பூர் ஜமீன்தார்களும், கன்னிமாரம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்க–ளு–மான மீனா ராம–கிருஷ் ணன், தரனீஷ், ஆர்.பொன் னழகேசன், சௌந்தர–பாண்டியன் ஆகி–யோர் தலைமை தாங்கினர்.

    இதில் பட்டியூர் கிராமங்க–ளின் ஊர் முக்கியஸ்தர்கள், கன்னிமாரம்மன் கோவில் களின் பரம்பரை பூசாரிக–ளான பெரியபூசாரி செல் வம், குதிரை பூசாரி மாரி–யப்பன், சின்ன பூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை, கோவில் பரம்பரை அர்ச்ச–கர் ரெங்கசாமி அய்யர் ஆகி–யோர் அம்னுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    அதன் பின்னர் அலங்க–ரிக்கப்பட்ட பெரிய–காண்டி–யம்மன் கோவில் முன்பு நிலையில் அலங்க–ரித்து நிறுத்தி வைக்கப்பட்டி–ருருந்த தேரில் எழுந்த–ருளினார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்கு பின்னர் சாம்புவன் காளை முரசு கொட்டி முன் செல்ல தேர் புறப்பட்டது.

    போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது திரண்ட பக்தர் கள் தங்கள் விவசாய நிலங்க–ளில் விளைந்த தானியங்க–ளையும், மலர்களையம், மலர் மாலைகளையும் தேரோடும் வீதியின் இருபுறமும் நின்று தேர் மீது போட்டு வணங்கி–னர். நிலையில் இருந்து புறப்பட்ட தேர் கோவிலை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    முன்னதாக நேற்று மாலை வீரப்பூரில் பொன்னர் குதிரை வாகனத்தில் அணி–யாப்பூர் குதிரை கோவி–லுக்கு சென்று அம்பு போடும் வரலாற்று நிகழ்ச்சி–யான வேடபரி திருவிழா நடைபெற்றது. பெரிய–காண்டியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிப்பட்ட குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்து குதிரை பூசாரி மாரியப்பன் குடை–பிடித்தபடி குதிரை வாக–னத்தில் நின்றவாறு வந்தார்.

    அந்த வாகனத்தை பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் கூட்டம் சுமந்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மனை பெரிய பூசாரி செல்வம் யானை வாகனத்தில் நின்று வர அதனை பட்டியூர் கொடிக்கால்காரர்கள் வகை ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் சுமந்து சென்றனர்.

    வாகனங்களுக்கு முன்பு முரசு கொட்டும் காளை செல்ல, அதைத் தொடர்ந்து கன்னிமாரம்மன் கோவில் களின் பரம்பரை அறங்கா–வலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களுமான மீனா ராமகிருஷ்ணன், தரனீஷ், ஆர்.பொன்னழகேசன், சௌந்தரபாண்டியன் ஆகி–யோர் சென்றனர்.

    அவர்களை தொடர்ந்து குதிரை, யானை வாகனங் கள் சென்றது. வாக–னங் களை தொடர்ந்து சின்ன–பூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை தங்காள் கரகத்துடன் சென்றனர்.

    6.10 மணிக்கு வேடபரி புறப்பட்டு அணியாப்பூர் குதிரை கோவில் சென்று இளைப்பாற்றி மண்டபம் திரும்பியது. இன்று அதி–காலை இளைப்பாற்றி மண்டபத்தில் இருந்து வாகனங்களில் தெய்வங் கள் வீரப்பூர் பெரிய–காண்டியம்மன் கோவிலை வந்தடைந்தது. வேடபரி சென்ற வழி நெடுக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான குடி–பாட்டுக்காரர்களும், பக்தர்களும் நின்று வழி–பட்டனர். நிகழ்ச்சிகளை ஆசிரியர் திருவாசக விடவை வெ.நல்லுசாமி தொகுத்து வழங்கினார்.


    • வீரப்பூரில் இன்று மாலை பொன்னர் குதிரை தேரில் சென்று அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது
    • மெய்சிலிர்க்க வைத்த படுகளம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

    மணப்பாறை:

    மணப்பாறை அருகே வீரப்பூர் மாசிப் பெருந்திரு–விழாவின் முக்கிய நிகழ் வான வேடபரி என்னும் பொன்னர் குதிரை தேரில் அணியாப்பூர் சென்று அம்பு போடும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. வீரப்பூர் கோவில் முன்பிருந்து பெரிய தேரில் அம்மன் பவனி நாளை மதியம் நடை–பெறுகிறது.

    வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் மாசிப் பெருந் திருவிழாவை சிறப்பாக நடத்திட வீரப்பூர் கன்னி–மாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்க–ளும், வீரப்பூர் ஜமீன்தார்க–ளுமான ஆர்.பொன்னழ–கேசன், சௌந்தர–பாண்டி–யன், சுதாகர் என்ற சிவசுப்ர–மணிய ரெங்கராஜா, வீரப் பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகளும்,

    வீ.பூசாரிபட்டி நான்கு கரை பட்டையதார்களுமான பெரியபூசாரி செல்வம், குதிரை பூசாரி மாரியப்பன், சின்னபூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை மற்றும் வீ.பூசாரிபட்டி ஊர் முக் கியஸ்தர்கள், பூசாரி–கள், சோம்பாசிகள், பரிசா–லங்கள், பட்டியூர் கிரா–மங்களின் ஊர் முக்கியஸ்தர் கள், கிராம மக்கள் திரு–விழாவிற்கான ஏற்பாடு–களை செய்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அண்ணன்மார் என்று அழைக்கப்படும் பொன் னர்-சங்கர் மாண்டு பின் மீண்டதாக கூறப்ப–டும் படுகளத்தில் படு–களம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு இந்த முக்கிய நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் குவிந்தி–ருக்க ஒவ்வொருவராக திடீர் திடீரெனவும், சிலர் சாமி ஆடியபடியும் வந்து கீழே சாய்ந்தனர். கீழே சாய்பவர்களை அங்கு இறை தொண்டாற்றும் ஊழியர்கள் தூக்கி வந்து கோவில் முன்பு வரிசையாக படுக்க வைத்தனர்.

    பலரும் இப்படி வரிசை–யாக படுக்க வைத்திருக்க யாரும் அசைவற்று அப்ப–டியே கிடந்தனர். இது அனை–வரையும் ஆச்சரியப்பட வைத்த மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. நேற்று நள்ளிரவில் கீழே விழுந்த–வர்கள் எல்லாம் இன்று அதிகாலை வரை சில மணி நேரம் அப்படியே இருந்தனர். அதன் பின்னர் அம்மன் பல்லக்கில் பவனி வரும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ச்சியாக அலங்க–ரிக்கப்பட்ட அம்மன் மற் றும் தீர்த்தம் கோவில் வளாகத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்ற பின் பருவம் அடையாத சிறுமி ஒன்று திடீரென எழுந்து சாமியாடினார். அப்போது கோவில் பூசாரி–கள் தீர்த்தத்துடன் சென்று சிறுமியை அழைத்து வந்த பின் அந்த சிறுமி கீழ வரிசையாக படுத்தி–ருப்ப–வர்கள் மீது தீர்த்தத்தை தெளித்ததும் சில மணி நேரம் அசைவற்று கிடந்தவர்கள் துள்ளி எழுந்து விட்டனர்.

    இந்த வரலாற்று நிகழ்ச்சி தான் அண்ணன் மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி–யாகும். மிகவும் தத்ரூ–பமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி–யில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட–னர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை படுகளம் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களும், பூசாரி–களுமான முனியப்பன் பூசாரி, கருப்பண்ணசாமி பூசாரி, வீரசங்கன் பூசாரி ஆகியோர் செய்திருந்தனர்.

    திருவிழாவையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆலோசனையின் பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதே போல் பக்தர்களின் அடிப்படை தேவைகளை வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மேற்பார்வையில் நல்லாம் பிள்ளை மற்றும் அணியாப் பூர் ஊராட்சிக–ளின் ஊராட்சி மன்றதலை–வர் கள், ஒன்றியக்குழு உறுப்பி––னர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்துள்ள–னர். அவசர தேவைக்கு மருத்துவ முகாம் அமைக் கப்பட்டு மருத்துவக் குழு–வினர் தயார் நிலையில் உள் ளனர்.

    மேலும் சுகாதார துறையி–னர் மற்றும் வருவாய்து–றையினரும் பணியில் ஈடு–பட்டு உள்ளனர். பக்தர் களின் வசதிகாக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    ×