search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105717"

    தண்டராம்பட்டில் வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை, கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தென்முடியனூர் ஊராட்சி நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு. இவரது மகன் செல்வம் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா (21). கடந்த சில நாட்களாக செல்வம் சென்னைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சவுந்தரபாண்டியன் (25) என்ற வாலிபருடன் மீனாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து மீனா உல்லாசமாக இருந்துள்ளார்.

    செல்வம் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்னை சென்றார். இரவில் வீட்டில் தனியாக இருந்த மீனாவை சந்திக்க கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் வந்தார். 2 பேரும் தனிமையில் இருந்ததால் படுக்கையில் உல்லாசமாக இருந்தனர்.

    சென்னைக்கு வேலை சென்ற கணவன் செல்வம் நள்ளிரவு 1 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டிற்குள் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

    வீட்டுக்குள் புகுந்த செல்வம் அரிவாளை எடுத்து 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அவர்கள் பலத்த காயமடைந்து அலறினர். அக்கம், பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து செல்வத்தை சமரசம் செய்தனர்.

    பின்னர், 2 பேரையும் மீட்டு தண்டராம்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தலையில் பலத்த வெட்டு விழுந்ததில் மீனாவின் நிலைமை கவலைகிடமாக இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கள்ளக்காதலன் சவுந்தரபாண்டியன் தனியார் ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுதொடர்பாக, தென்முடியனூர் கிராம நிர்வாக அலுவலர் சம்பத் அளித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திண்டுக்கல் அருகே தீ விபத்தில் கணவருடன் கருகிய இளம்பெண் பலியானார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் மனைவி நாகஜோதி (வயது 24). சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது நிஷாந்த் (5), நந்தகுமார் (3)என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் காளீஸ்வரன் மற்றும் நாகஜோதி படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மகன் நந்தகுமாருக்கும் காயம் ஏற்பட்டது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நாகஜோதி பலியானார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் இன்று மீண்டும் மும்பையில் உள்ள ஆசிய இதயவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #LaluarrivesMumbai #LaluatAsianHeartInstitute
    மும்பை:

    கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, கடந்த மே மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், மூல நோய் அறுவை சிகிச்சைக்காக மே மாதம் 19-ம் தேதி பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். 

    மும்பை நகருக்கு வந்தடைந்ததும் லாலுவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் உடனடியாக லாலு அனுமதிக்கப்பட்டார். 

    அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். உடல்நிலை தேறிய பின்னர் மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த  8-7-2018 பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

    இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் இன்று மும்பைக்கு அழைத்து வரப்பட்ட லாலு ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். #LaluarrivesMumbai  #LaluatAsianHeartInstitute 
    காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கருணாநிதியை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணமாக தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கருணாநிதியை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    கருணாநிதியின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் சீராக இயங்குகின்றன. ஆனாலும் சுயநினைவு இல்லாத நிலையே தொடர்கிறது.

    சிறுநீரக நோய் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. அதற்காக நோய் எதிர்ப்பு மருந்துகள் சிரை வழியாக செலுத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரத்த அழுத்தம் குறைந்து கவலைக்கிடமான நிலை ஏற்பட்டது. அதற்கான மருந்து செலுத்தப்பட்டு ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    கருணாநிதியின் ரத்தத்தில் கடுமையான நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சிறுநீரக நோய் தொற்று, நிமோனியா காய்ச்சல், வயிற்றுப்பகுதியில் நோய் தொற்று காரணமாக ரத்தத்தில் நோய் தொற்று உருவாகும்.

    நோய் தொற்றை எதிர்ப்பதற்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடிய வேதிப்பொருட்கள் முயற்சி செய்யும். அப்போது இந்த வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலப்பதால் கடுமையான நோய் தொற்று ஏற்படுகிறது.

    ரத்தத்தில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று காரணமாக சுயநினைவு இல்லாத நிலை, ரத்த அழுத்தம் குறைதல், மூச்சு விடுவதில் சிரமம், தோலின் நிறம் மாறுதல், ரத்த அணுக்களின் (பிளேட் லெட்டுகள்) எண்ணிக்கை குறைதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

    முதுமை காரணமாக இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளுக்காக சிரை வழியாக செலுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவாக செயல்பட்டது.

    ஏனெனில் முதுமை காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.

    இந்த பாதிப்புகளை 24 மணி நேரமும் கண்காணித்து சிரைவழியே மருந்துகளை செலுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    ஆரல்வாய்மொழி அருகே போலீஸ் கண்காணிப்பில் எஸ்.ஏ. ராஜா மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த மறைந்த எஸ்.ஏ. ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா (வயது 55). இவர், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். ஜான்சல் ராஜா ஆரல்வாய்மொழி அருகே உள்ள கல்லூரியின் நிர்வாகியாக உள்ளார். இவரை ஒடிசா மாநில போலீசார் வழக்கு ஒன்றில் கைது செய்து நாகர்கோவில் ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    ஜான்சல் ராஜாவை வருகிற 30-ந்தேதி ஒடிசா கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜான்சல் ராஜா திடீரென கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பரிவில் சேர்க்கப்பட்டுள்ள ஜான்சல் ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒடிசா மாநில போலீசாரும் குமரி மாவட்ட போலீசாரும் ஜான்சல் ராஜா சிகிச்சை பெறும் வார்டின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் கண்காணிப்பில் அவருக்கு இன்று 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரை ஒடிசா மாநில போலீசார் அங்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஜான்சல் ராஜாவின் வக்கீல்கள் மதுரை ஐகோர்ட்டில் அவருக்கு ஜாமீன் கேட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
    சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். #Jayalalithaa #death #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுவரி சங்கர், செவிலியர் ராஜேசுவரி ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுரி சங்கர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-



    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சர்க்கரை நோய் நிபுணர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை நான் தான் பரிந்துரைத்தேன். ஜெயலலிதாவுக்கு முதல் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள் கொடுக்கப்பட்டன.

    மருத்துவமனையில் தயாரித்த உணவு தனக்கு பிடிக்கவில்லை என ஜெயலலிதா கூறியதை தொடர்ந்து அவரது சமையல்காரர் மூலம் மருத்துவமனை சமையல் அறையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

    எனது பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்ட சில உணவுப்பொருட்களை ஜெயலலிதா சாப்பிட மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா விருப்பத்தின் பேரில் மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி கிச்சடி, தயிர்சாதம், உருளைக்கிழங்கு வருவல், பிங்கர் சிப்ஸ், கப் கேக், திராட்சை பழம், மாம்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள், மாதுளை, மலை வாழைப்பழம், ஐஸ்கிரீம், இளநீர், லட்டு, ஜாங்கிரி, பாதாம் அல்வா போன்ற உணவுப்பொருட்களை ஜெயலலிதா எடுத்துக்கொள்ள அனுமதித்தேன்.

    இந்த உணவு வகைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், கலோரியை கணக்கிட்டும் தான் வழங்கப்பட்டது. இதனால், ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

    செவிலியர் ராஜேசுவரி அளித்த வாக்குமூலத்தில், ‘பெரும்பாலான நாட்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நான் பணியில் இருந்த போது ஜெயலலிதாவை பார்ப்பதற்காக கவர்னர் வித்யாசாகர்ராவ் 2 முறை மருத்துவமனைக்கு வந்தார். முதல்முறை வந்த போது ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. இதனால், ஜெயலலிதா அவரை பார்க்கவில்லை. 2-வது முறை வந்தபோது பிசியோதெரபி சிகிச்சையில் இருந்தார். இதனால், அப்போதும் கவர்னரை ஜெயலலிதா பார்க்கவில்லை. ஜெயலலிதாவை கவர்னர் இருமுறை பார்க்க வந்த விவரத்தை அவரிடம் யாரும் கூறவில்லை’ என்று கூறி உள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  #Jayalalithaa #Death #ApolloHospital #tamilnews
    வானூர் அருகே பாம்பு கடித்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வரகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வெள்ளச்சி (வயது 63). இவர் கோழிகள் வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இவரது கோழி முட்டையிட்டது. அதனை எடுக்க வெள்ளச்சி சென்றபோது, அங்கு கிடந்த பனை ஓலையில் இருந்த நல்லப்பாம்பு அவரை கடித்து விட்டது.

    மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளச்சி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிளியனூர் போலீசில் வெள்ளச்சியின் மகன் ஆறுமுகம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிகிச்சைக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தங்களுக்கு அளித்துள்ள சிறப்பு அனுமதி சீட்டின் மூலம் 2 பேரை தங்களுடன் ரெயிலில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #IndianRailway #PiyushGoyal
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்காக வேறு இடங்களுக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள், இதுவரை டாக்டர் அனுமதி பெற்று தங்களுடன் பெற்றோரில் ஒருவரை மட்டுமே ரெயிலில் இலவசமாக அழைத்து சென்று வந்தனர். இதனால் பெற்றோரை பிரிந்து ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தவித்தனர். ரெயில்வே ஊழியர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், இந்த விதிகளை தளர்த்தி உள்ளார்.

    அதன்படி இனிமேல் சிகிச்சைக்காக செல்லும் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் தங்களுக்கு அளித்துள்ள சிறப்பு அனுமதி சீட்டின் மூலம் 2 பேரை தங்களுடன் ரெயிலில் இலவசமாக அழைத்துச் செல்லலாம். நோய் பாதிப்புக்கு உள்ளான ரெயில்வே ஊழியர்களின் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தங்களுடன் 2 பேரை அழைத்து செல்ல சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ரெயில்வே மந்திரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல ரெயில்வே ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #IndianRailway  #PiyushGoyal #Tamilnews

    சிவகாசியில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடித்த நண்பர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விருதுநகர்:

    சிவகாசி லிங்காபுரம் காலனியில் டாஸ்மாக் மதுக்கடை(எண்-11851) உள்ளது. இங்கு நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் மது பாட்டில்களை வாங்கியுள்ளனர். அவர்கள் மதுபாட்டில்களுடன் சிறுகுளம் கண்மாய் கரை பகுதிக்கு சென்று ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். மது குடித்த சில நிமிடங்களிலேயே காமராஜர் காலனியை சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் கணேசன்(வயது21) வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதைப்பார்த்ததும் மற்றவர்கள் பயந்து போய் கணேசனின் தம்பி சக்திவேலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் ஆட்டோவில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் அங்கு வந்து சேருவதற்குள் மதுகுடித்த மேலும் 3 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அனைவரையும் சக்திவேல் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள்அறிவுறுத்தினர்.

    உடனே அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கணேசன், வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த ஷேக் ஜமாலுதீன் என்பவரது மகன் சையது இப்ராகிம்ஷா என்கிற ஜம்பு(22), லிங்காபுரம் காலனி அய்யாத்துரை என்பவரது மகன் கவுதம்(15) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

    இதுகுறித்து சக்திவேல் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் கணேசனுடன் சேர்ந்து மது குடித்த முத்தாட்சிமடத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் அய்யப்பன்(22), காமராஜபுரம் காலனியை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஜனார்த்தனன்(14), லிங்காபுரம் காலனியை சேர்ந்த முருகன் மகன் சரவணகுமார்(23), சிவஞானபுரம் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் அரிகரன் என்கிற அந்தோணி(22) ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களை உறவினர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் அந்தோணி மட்டும் சிவகாசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    3 பேர் உயிரிழந்த நிலையில் அந்தப்பகுதி முழுவதுமே பரபரப்பும் பதற்றமும் உருவானது. எத்தனை பேர் மது குடிக்க சென்றனர், எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர் என தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் அய்யப்பனின் அண்ணன் முருகன்(27) தனது வீட்டில் சுருண்டு விழுந்து இறந்து கிடந்தார். இதனால் அவரும் நண்பர்களுடன் சென்று மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த ராஜாமுகமது(60), கருப்பையா(62), ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் சிவகுமார்(28), விசுவநத்தம் கணேசன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்த ராசையா மகன் கருப்பசாமி(33) ஆகியோரும் மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் கருப்பசாமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற மூவருக்கும் சிவகாசியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இவர்கள் 4 பேரும் சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள டாஸ்மாக் கடையில்(எண்-11848) மது வாங்கி குடித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சிவகாசியில் 2 கடைகளில் மது வாங்கி குடித்திருப்போர் பாதிக்கப்பட்டிருப்பதால் காலாவதியான மது அங்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. அந்த இரு கடைகளும் உடனடியாக மூடப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் சிவகாசிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.  #tamilnews
    உடல்நலக் குறைவால் டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை இன்று ரத்துசெய்த முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிகிச்சைக்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். #ArvindKejriwal #KejriwalinBengaluru #Kejriwaltreatment
    புதுடெல்லி:

    டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னர் அலுவலகத்துக்குள் 9 நாள் தர்ணா போராட்டம் நடத்திய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது உள்ளிருப்பு போராட்டத்தை முடித்து கொண்டார்.

    கவர்னரின் அறிவுறுத்தலின்படி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசுவார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், 9 நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகியுள்ளதால் சிகிச்சைக்காக நாளை கெஜ்ரிவால் பெங்களூரு புறப்பட்டு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வப்போது பெங்களூருவில் உள்ள தனியார் இயன்முறை (நேச்சுரோபதி) மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #ArvindKejriwal #Kejriwaltreatment
    காரியாபட்டி அருகே மர்ம காய்ச்சலால் மாணவ-மாணவிகள் பாதிப்படைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே உள்ளது அரசகுளம் கிராமம் இங்கு கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு முழுவதும் அடுத்தடுத்து காய்ச்சல் வந்து விடுகிறது. அரச குளம் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காரியாபட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதே போன்று சொக்கனேந்தல் கிராமத்திலும் காய்ச்சல் பரவி வருவதாகவும் அந்த கிராம மக்களும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கிராமங்களில் கிராம மக்கள் முழுவதற்கும் காய்ச்சல் பரவுவதற்கு என்ன காரணம் என்று சுகாதார துறை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம்.
    இதயம், நுரையீரல், மூளை போன்று உடலுக்கு ஒவ்வொரு உறுப்பும் முக்கியம் தான். உடலின் அனைத்து உறுப்புகளும் அதனதன் பணியை சிறப்பாக செய்கின்றன. அந்த வகையில் இதயம், ரத்தத்தை சுத்திகரிக்கிறது. நுரையீரல், சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தில் பிராண வாயுவை நிரப்பி அனுப்புகிறது. மூளை, ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இவ்வாறு உடலின் உள்உறுப்புகள் செய்யும் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

    இத்தகைய உள்உறுப்புகளின் பட்டியலில் தண்டுவடம் என்பது மிக முக்கியமானது. பொதுவாக தண்டுவடம் பாதிக்கப்படுவதால் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. அதனால் சிறு வேலைகளுக்கு கூட பிறர் உதவியை நாடும் நிலை வந்து விடும். இத்தகைய சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை தலைமை மருத்துவர் வடிவேல் கூறியதாவது:-

    தண்டுவட நரம்பு மண்டலம்

    நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடலின் இயக்கத்தை மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம், மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், விபத்தினால் ஏற்படும் தண்டுவட எலும்பு முறிவு, அதன் ஜவ்வு பகுதி வீக்கம், எலும்பு நகர்வு, வயது முதிர்வு மற்றும் பிறவிக்குறைபாடு போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது. இது தவிர காசநோய் கிருமி மற்றும் பிற நோய்க்கிருமி தாக்குதலாலும் தண்டுவட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

    செயல்பாடுகளில் பாதிப்பு

    பொதுவாக விபத்தினால் தண்டுவட எலும்பு முறிந்தால், உடைந்த எலும்புகளுக்கு இடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் நரம்புகள் அழுத்தப்படும் நிலை உருவாகும். அதனால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடும். மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டித்து போகும். அதனால் தசைகள் இயக்கமின்மை, மலம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும்.

    அதேபோல் தண்டுவடத்தின் எலும்பு, கழுத்து பகுதியில் முறிந்தால், கை-கால் செயல் இழப்பு, மார்பு மற்றும் வயிறு, முதுகு பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால் மூச்சு திணறல், உணவு விழுங்குதலில் பிரச்சினை ஏற்படும். கழுத்து எலும்புக்கு கீழ் என்றால் கால்கள், உடல், இடுப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழலில் முதுகில் படுக்கைபுண் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.



    அறிகுறிகள்

    இதுதவிர விபத்தினால் இன்றி, மேற்கூறிய மற்ற காரணங்களால் தண்டுவடத்தின் பாதிப்பு நிலையை அறிய அதன் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பரிசோதனையில் நேராக, முன், பின்பக்கம் என 3 நிலைகளில் குனியவைத்து எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாலும், சி.டி.ஸ்கேனிலும் தண்டுவட பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இதுதவிர எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பதால் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம். இதுதவிர ரத்தபரிசோதனையிலும் தெரிந்து கொள்ளலாம்.

    பிசியோதெரபி

    அவ்வாறு கண்டறிவதில் தண்டுவடத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்தால், நோயாளியின் வயது, எலும்பு முறிவின் அளவு, தண்டுவட நரம்பு செயல்பாடுகளை பொறுத்து பிசியோதெரபி மூலம் சரி செய்ய இயலும். அவ்வாறான சிகிச்சையில் சிலருக்கு ஒரு ஆண்டில் குணம் ஆகும். பாதிப்பு அதிகமாக இருந்தால் குணமடைய 2 அல்லது 3 ஆண்டுகள் கூட ஆகலாம். இந்த காலகட்டத்தில் தவறாமல் அதற்குரிய மருந்து, மாத்திரைகளை உண்ண வேண்டும்.

    பொதுவாக பிசியோதெரபி செய்தும், மருந்து மாத்திரைகளை உண்டும் தண்டுவட பாதிப்பு சரி ஆகவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்டம் அறுவை சிகிச்சைதான். அப்போது தவறான அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது.

    சக்கர நாற்காலி

    தண்டுவடத்தில் முழு அளவில் முறிவு ஏற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது. ஆனால் அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்த போதிய பயிற்சி, பிசியோதெரபி, ஆலோசனைகளை பெற வேண்டும். இதுதவிர ஒரு சிலருக்கு சக்கர நாற்காலி உதவி தேவைப்படலாம். அதன் உதவியால் வீட்டிற்குள் சிறு பணிகளை செய்யலாம். அலுவலகத்துக்கு செல்ல முடியும். மேலும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு விளையாடவும் முடியும்.

    பொதுவாக தண்டுவட பிரச்சினை என்பது குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயதானவர்களுக்கு மட்டும் கால்சியம் சத்து குறைபாடால் இந்த பிரச்சினை வர வாய்ப்புண்டு. அதனை உணவு முறையால் சரி செய்ய இயலும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×