search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க."

    • அ.தி.மு.க. குற்றச்சாட்டு
    • புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன், உருளை யன்பேட்டை தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சரஸ்வதி மகாலில் இன்று நடந்தது.

    தொகுதி செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அன்பழகன் உடையார், சிவக்குமார், ராமலிங்கம், நாக.லோகநாதன், சுரேஷ்குமரன், பர்கத், ராஜா, ஜெயராஜ், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மோட்சநாதன், நந்தன், ஆனந்தராஜ், ஆறுமுகம், துரைசாமி, இளவழகி, சாவித்திரி, மதி, பாபு, பாலசுப்ரமணியன், சம்னேஸ், வளர்மணி, அப்துல்ரகுமான், ஜக்மால், டெய்சிக் கிளாரா, பாலசுப் பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் அதி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நலன் கருதி வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை நம்மை நம்பி பொதுச்செயலாளர் எடுத்து வருகிறார். அவர் இடும் பணியை தொய்வின்றி செய்ய வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

    தேசிய கல்வி கொள்கையை முன்னிறுத்தி புதுவையில் மாணவர்களை தி.மு.க.வினர் தவறாக கொண்டு செல்கின்றனர்.

    தாய் மொழியான தமிழ் தேசிய கல்வி கொள்கையால் பாதிக்க வாய்ப்பில்லை. மாணவர்களை வைத்து தி.மு.க. நடு வீதியில் போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது.

    புதுவையில் உள்ள எந்த தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் இல்லை. தேசிய கல்வி கொள்கையை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள நிலையில், புதுவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ்பாடம் முதல் பாடமாக அரசு கொண்டுவர வேண்டும்.

    உருளையன்பேட்டை தொகுதி இளைஞர்கள் பலர் முன்பு இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வை நம்பி தங்களது வாழ்க்கையை இழந்துள்ள–னர். அவர் சுயநலத்துக்காக வியா–பாரிகளை தூண்டி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளான புதிய பஸ் நிலையம், அண்ணாதிடல், பெரிய–மார்க்கேட் கட்டு–மான பணி–களை நிறுத்தியுள்ளார்.

    நடந்து செல்ல கூட வழியில்லாத மார்க்கெட் பகுதியை நவீனப்படுத்த வியாபாரிகளை முன்னி றுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கின்றன. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப வியாபாரிகள் உண்மை நிலையை உணர்ந்து அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரவு, எம்.ஏ.கே. கருணாநிதி, குணசேகரன், உமா, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழகத் துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி, உழவர் கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற் சங்க பேரவை செயலாளர் பாப்பு சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

    திருப்பூர்:

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் தென்னம்பாளையம் பகுதி 56-வது வட்டம் சார்பில் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செரங்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாணவர் அணி துணை செயலாளர் ஹரிபிரசாந்த் தலைமை தாங்கினார். தென்னம்பாளையம் பகுதி செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி பேசும்போது, 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடந்து.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா சிவ கங்கையில் கொண்டாடப் பட்டது. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சேவியர் தாஸ், பழனிச்சாமி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வ மணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்தி ணரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலா ளர் சிவதேவ்குமார், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன்.

    காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, மாவட்ட கவுன்சிலர் தேவ ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் சங்கர்ராமநாதன், அமைப்பு சார அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாணவ ரணி அன்பு, சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உருப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா கலந்து கொண்டார்

    குளச்சல் :

    குளச்சல் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

    இதில் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமையில் எம். ஜி.ஆர்., ஜெயலலிதா உருப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரவீந்திர வர்சன், ஆனக்குழி சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சந்துரு, மாவட்ட பொருளாளர் திலக், எஸ்.எம்.பிள்ளை, விஜயகுமார், பஷீர் கோயா, தாசின், மேரி ஜெசிக்கலா, செர்பா, சிட்டி ஷாகுல், வினோத், ஜெகன், அம்பிளிகலா, சிசிலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    உடுமலை:

    .தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் மலர் மாலை அணிவித்தார்.
    • தொடக்க விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூரில் அ.தி.மு.க.வின் 52 -வது தொடக்க விழா கொண்டாடப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமை தாங்கி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், அங்கு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளான தீபொறி அப்பாதுரை,காளிமுத்து, விவேகானந்தர் கவுன்சிலர் பாவனி மற்றும் வார்டு செயலாளர்கள் மகளிர்அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    அ.தி.மு.க.வின் 52 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம் தலைமையில் தக்கலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சிவ.குற்றாலம், இணை செயலாளர் மேரி கமலாபாய், துணைச் செயலாளர்கள் அல்போன்சாள், கே.ஏ.சலாம், பொருளாளர் சில்வெஸ்டர், ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், கடையால் மணி, மாவட்ட அணி செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், மகாஜி செல்வகுமார், ஜாண், யூஜின், விஜயகுமார், காசிராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சக்கீர் உசேன், அம்பலகடை பாபு மற்றும் நிர்வாகிகள் முருகன், திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக் கும், அதன் முன்பு அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத் துக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வா கிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாநில எம். ஜி.ஆர். மன்ற இணைச் செய லாளர் கல்லூர் வேலாயுதம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன்,

    பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்துச் சின்னத்துரை, ஜெனி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சேவல் பரமசிவன், கவுன்சி லர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பகுதி துணை செயலாளர் மாரீசன், இணை செயலாளர் அப்பாஸ், பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்ப ராஜ் ஜெய்சன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ் ணன், நிர்வாகிகள் சீனி முகம்மது சேட், பாறையடி மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பிரதீபா ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு பிரதீபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நெல்லை புறநகர் மாவட்டம் மூலக்கரைப்பட்டி பேரூர் அ.தி.மு.க. நகர துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    இவரது மகள் பிரதீபா (வயது 13). இவர் நெல்லை ஜவகர் நகரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடந்த இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்த உள்ள தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கான தமிழக மாநில அளவிலான தெரிவு போட்டியில் பங்கேற்றார்.

    அதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பிரதீபா, தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவி பிரதீபா, நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியின் தந்தை காளிமுத்து உடன் இருந்தார்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
    • ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்கமார் தலைமை தாங்கினார்.

    ஆரல்வாய்மொழி,

    அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஆரல் வாய்மொழியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்கமார் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பாலகி ருஷ்ணன், ஒன்றிய ஜெய லலிதா பேரவை துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வக்கீல் பரமேஸ்வரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகி செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன், தாழக்குடி நகர செயலாளர் பிரம்ம நாயகம், தாழக்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் ரோகிணி அய்யப்பன், கிளை செயலாளர் அய்யப்பன், கச்சேரி நாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

    நாகர்கோவில் ::

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செய லாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப ட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் சேவியர் மனோகரன், துணைச் செயலாளர் சுகுமாரன், மாணவரணி செயலாளர் மனோகரன், மாநில நிர்வாகிகள் சந்துரு, ராணி, இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன், இளை ஞர் அணி செயலாளர் ஜெயசீலன், வர்த்தக அணி செயலாளர் சந்திரன், வடிவை மகாதேவன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், ஜெஸீம், பொன் சுந்தரநாத், தினேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ், மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, முரு கேஸ்வரன், ஜெய கோபால், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆறு முகராஜா, மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்சன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் ஐயப்பன், டாஸ்மார்க் தொழிற்சங்க செயலாளர் மணிகண்டன், குருந்தன் கோடு ஒன்றிய செயலாளர் ராதாகிரு ஷ்ணன், அண்ணா தொழி ற்சங்க செயலாளர் வைகுண்ட மணி, போக்கு வரத்து மண்டல செயலாளர் விஜயகுமார், முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தங்கப்பன், ரயிலடி மாத வன், தொழிலதிபர் தேவ ராஜ், முன்னாள் நகர பாசறை செயலாளர் பகவத்சிங், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரபீக், ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற உள்ள ஆண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்ற உள்ளார்.
    • பூத் கமிட்டி ஆய்வுக்காக தலைமை நிலைய பொறுப்பா ளரை நியமனம் செய்து உள்ளனர்.

    செங்கோட்டை:

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலு வலகத்தில் நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க.வின் ஆண்டு விழா தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மகிழ்ச்சி திருவிழா. 52-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை என அனைத்து பகுதிகளிலும் உள்ள அ.தி.மு.க. கொடி கம்பத்திற்கும் வண்ணம் பூசி கொடி ஏற்றி பொதுமக்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்க வேண்டும்.

    அதேபோல அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சங்கரன்கோவில் தொகுதி யில் வருகிற 18-ந் தேதி ஜெயலலிதா திடலில் நடைபெற உள்ள ஆண்டு விழாவில் சிறப்புரையாற்ற உள்ளார். அவரை வரவேற்பதற்காக மாவட்டத்தின் 3 தொகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள், இளைஞர், மகளிரணியினர் தயாராக உள்ளனர்.

    அதே போல் சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் பிரசாதத்து டன் மகளிர் அணி நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கவும், 5 வகையான மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்படும். ஏற்கனவே நாம் செய்து வந்துள்ள பூத் கமிட்டி மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.

    பூத் கமிட்டி ஆய்வுக்காக தலைமை நிலைய பொறுப்பா ளரை நியமனம் செய்து உள்ளனர். பொறுப்பாளர் வரும் போது நம்முடைய மாவட்டத்தில் அனைத்து பூத் கமிட்டி பணிகளை முடித்து அவர் ஆய்வுக்காக வைத்திட வேண்டும். சங்கரன்கோவில் தொகுதிக்கு வருகை தரும் தென்காசி தனி மாவட்டம் தந்த எடப்பாடி பழனிசாமிக்கு தென்காசி மாவட்டத்தின் செயல்பாடு, சிறப்புகளை காட்டும் வண்ணம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் சண்முகப்ரியா, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தலைமை நிலைய பேச்சாளர் தீக்கணல் லெட்சுமணன், அமுதா பாலசுப்பிரமணியன், சந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×