search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளுபடி"

    உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #centralgovernment
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

    இதனால், விவசாயிகள், காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பும் நிலை ஏற்படும் என்று பா.ஜனதா கருதுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, விவசாயிகளின் பயிர் கடன்களுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. தற்போது, விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்வரை குறுகிய கால பயிர் கடன் அளிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால், 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், உரிய தேதிக் குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மீதி 4 சதவீத வட்டியையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்கலாமா? என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    ஏற்கனவே, வட்டி தள்ளுபடி மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி சுமை ஏற்பட்டு வருகிறது. வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்தால், இந்த சுமை ரூ.30 ஆயிரம் கோடியாக உயரும் அபாயம் உள்ளது.

    விவசாயிகளுக்கு மற்றொரு சலுகையாக, உணவு தானிய பயிர்களின் காப்பீட்டுக்கு அவர்கள் செலுத்தி வரும் பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.



    இயற்கை காரணிகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும்வகையில், ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பயிர் காப்பீட்டு திட்டம், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகளிடம் இருந்து 2 சதவீதம், 1.5 சதவீதம், 5 சதவீதம் என பயிர்களுக்கு ஏற்ப குறைவான பிரிமியம் தொகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. மீதி பிரிமியத்தை மத்திய-மாநில அரசுகள் ஏற்று வருகின்றன.

    இனிமேல், விவசாயிகள் செலுத்தும் சொற்ப பிரிமியத்தையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், அவர்கள் ஓராண்டுக்கு செலுத்தும் ரூ.5 ஆயிரம் கோடி பிரிமியத்தை மத்திய அரசே ஏற்க வேண்டி இருக்கும்.

    அத்துடன், நடப்பு நிதியாண்டில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் அளவை ரூ.11 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

    விவசாயிகளுக்கான சலுகைகளை வகுப்பது பற்றி உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. புத்தாண்டு பரிசாக இத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.#centralgovernment
    விவசாய கடன்களை தள்ளுபடி செய்த அசாம் மற்றும் குஜராத் முதல்-மந்திரிகளை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டோம், அதுபோல், பிரதமரையும் தூக்கத்தில் இருந்து எழ வைப்போம் என்று ராகுல் காந்தி கூறினார். #RahulGandhi #Modi
    புதுடெல்லி:

    மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் சமீபத்தில் பதவி ஏற்றன. அடுத்த சில மணி நேரங்களில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அறிவித்தனர். அதுபோல், நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இதற்கிடையே, பா.ஜனதா ஆளும் குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் அறிவிப்புகளை வெளியிட்டனர்.



    ரூ.600 கோடி விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை அசாம் மாநில முதல்-மந்திரி வெளியிட்டார். கிராமப்புற மக்களின் ரூ.625 கோடி மின்கட்டண பாக்கியை தள்ளுபடி செய்து குஜராத் முதல்-மந்திரி அறிவித்தார்.

    பா.ஜனதா அரசுகளின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    குஜராத், அசாம் மாநிலங்களின் முதல்-மந்திரிகளை காங்கிரஸ் கட்சி, தூக்கத்தில் இருந்து எழ வைத்து விட்டது. ஆனால், பிரதமர் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருக்கிறார். அவரையும் எழ வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #Modi 
    ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Farmsloans #RahulGandhi #PMModi
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது இந்த மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக நேற்று பதவியேற்ற அசோக் கெலாட் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் வங்கிக்கடன் ரத்து செய்யப்படுவதற்கான முதல் கோப்பில் கையொப்பமிட்டார்.

    அவரை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில புதிய முதல் மந்திரியாக பதவியேற்ற  பூபேஷ் பாகெல் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் குறுகியகால கடன்கள் இன்னும் 10 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள கிராம வளர்ச்சி வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்துக்காக கடன் வாங்கிய சுமார் 16.65 லட்சம் மக்கள் பயனடைவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லியில் இன்று பாராளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, அனில் அம்பானி உள்பட நாட்டில் உள்ள 15 தொழிலதிபர்கள் தொடர்பான கடன்பாக்கி பற்றி பாராமுகமாக இருக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்ற தவறி விட்டதாக குற்றம்சாட்டினார்.

    5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், ஆறே மணி நேரத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்.

    இதேபோல், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.  #Farmsloans #RahulGandhi #PMModi

    ஜம்மு காஷ்மீர் சட்டசபையை ஆளுநர் கலைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #JKAssembly #SupremeCourt
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    ஆளுநர் ஆட்சி டிசம்பர் 18-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடந்த மாதம் பிடிபி,  தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தது. இதேபோல் 2 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட மக்கள் மாநாட்டுக் கட்சி, பாஜக மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில், நவம்பர் 21-ம் தேதி சட்டசபையை கலைத்து ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பாஜக தலைவர் ககன் பாகத் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவர் சட்டசபை கலைப்புக்கு முன்பாக, எம்எல்ஏவாக இருந்தவர்.

    ககன் பாகத்தின் வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். #JKAssembly #SupremeCourt
    ஆண்டு இறுதியை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. #Toyota



    டொயோட்டா நிறுவன கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுக்க இயங்கி வரும் ஜப்பான் நிறுவனத்தின் விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

    பழைய மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் புது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2019 முதல் டொயோட்டா கார் மாடல்களின் விலை 4 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் நிலையில், புது சலுகைகள் புதிய கார் வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.



    டொயோட்டா ஃபார்ச்சூனர்

    ஃபார்ச்சூனர் எஸ்.யு.வி. கார் வாங்குவோருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் 2.8-லிட்டர் டீசல் மோட்டார் கொண்ட மாடலுக்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதே போன்று 166 பி.ஹெச்.பி. பவர் கொண்ட 2.7-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    டொயோட்டா யாரிஸ்

    இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ், ஹோன்டா சிட்டி மற்றும் ஹூன்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புது யாரிஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ.1.1 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்னோவா மாடலுக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை என்றாலும், இரண்டாம் தலைமுறை மாருதி சுசுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை விற்பனையில் போட்டி போடுகின்றன. டொயோட்டா எம்.பி.வி. மாடலில் 150 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.4 லிட்டர் டீசல், 174 பி.ஹெச்.பி. வழங்கும் 2.8 லிட்டர் டீசல், 168 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    வாடிக்கையாளர்கள் டீசல் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளுடன், எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடல்களுக்கு அறிவிக்கப்படாத மறைமுக சலுகை வழங்கப்படுகிறது என்றாலும், இந்த கார் பெற இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா எடியோஸ்

    டொயோட்டா எடியோஸ் செடான், ஹேட்ச்பேக் (எடியோஸ் லிவா) மற்றும் கிராஸ்-ஹேட்ச் (எடியோஸ் கிராஸ்) என மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் மற்றும் டீசன் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அவ்வாறு 68 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4-லிட்டர் டீசல் என்ஜின், செடான் மற்றும் கிராஸ் ஹேட்ச் மாடலில் 90 பி.ஹெச்.பி., 1.5 லிட்டர் பெட்ரோல், ஹேட்ச்பேக் மாடலில் 80 பி.ஹெச்.பி., 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை டொயோட்டா எடியோஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தள்ளுபடி மற்ரும் சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா கொரோலா ஆல்டிஸ்

    ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூன்டாய் எலான்ட்ரா மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட கொரோலா ஆல்டிஸ் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.8-லிட்டர் பெட்ரோல் என்ஜின், 88 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வேரியன்ட்களில் கிடைக்கிறது. கொரோலா ஆல்டிஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் கார் விலையில் இருந்து அதிகபட்சம் ரூ.75,000 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை பெற முடியும்.
    விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumarasamy
    முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர்களுக்கு குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகள் குறித்த விவரம் வருமாறு:-

    விவசாய கடன் தள்ளுபடி குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அதனால் விவசாயிகள் இடையே எழுந்துள்ள சந்தேகங்களை போக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும்.

    33 வங்கிகளிடம் இருந்து சுமார் 20 லட்சம் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடிக்கு என்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் பணியை சேடம் மற்றும் தொட்டபள்ளாபுரா ஆகிய தாலுகாக்களில் சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறோம். இதுவரை 4,000 விவசாயிகள் தாமாக முன்வந்து தங்களின் விவசாய கடன் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளனர்.

    தெருவோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க தாலுகாக்களுக்கு தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோசாலை திறக்க வேண்டிய அவசியம் எழுந்தால், அதற்கு சரியான இடத்தை மாவட்ட கலெக்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். பசுமை தீவனத்தை வளர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு அதற்கான விதைகளை வழங்க கால்நடைத்துறைக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வறட்சி பாதித்த பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோக பணிகளுக்கு 30 மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை குறைந்துவிட்டது. இதனால் வெங்காயத்திற்கு ஆதரவு விலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஆவதாக புகார்கள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டத்தின் மூலம் கூடுதலாக ரூ.450 கோடி ஒதுக்கி இருக்கறோம். இதை பயன்படுத்தி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 மாவட்டங்களில் ெதாழிற்பேட்டைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #kumarasamy
    தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரக்கோரி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #SupremeCourt #BallotPaper
    புதுடெல்லி:

    மாநில சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஓட்டுச்சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு எந்திரத்தின் மூலம் ஓட்டுப் போடும் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் விரைவாக வெளியாகின்றன. அரசுக்கு செலவும் குறைந்து உள்ளது.

    ஆனால் மின்னணு எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும், இதனால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என்றும் சில கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இதை மறுத்துள்ள தேர்தல் கமிஷன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மிகவும் நம்பகமானது என்றும், அதில் எந்த மோசடியும் செய்ய முடியாது என்றும் பலமுறை விளக்கம் அளித்து உள்ளது. அதை நிரூபித்தும் காட்டி இருக்கிறது.



    இந்த நிலையில், மீண்டும் வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வரவேண்டும் என்று கோரி ‘நியாய பூமி’ என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தவறாக பயன்படுத்த முடியும் என்றும், எனவே தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அந்த எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், இனிவரும் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையையே அமல்படுத்துமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், எல்லா நடைமுறைகள் மற்றும் எந்திரங்களையுமே தவறாக பயன்படுத்த முடியும் என்றும், சந்தேகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  #SupremeCourt #BallotPaper
    இலவச காலணி டெண்டர் அறிவிப்பில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐக்கோர்ட் உத்தரவிட்டது. #ChennaiHighCourt
    சென்னை:

    2018-19-ம் கல்வியாண்டுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தின் கீழ் 59.09 லட்சம் ஜோடி காலணி கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்தது.

    ரூ.114 கோடி மதிப்பிலான இந்த டெண்டரை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் காஸியாபத்தில் உள்ள ஷாம் சன் பாலிமர்ஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    விதிமுறைகளை மீறி இந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த டெண்டர் அறிவிப்பில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி மகாதேவன் விசாரித்தார். வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    காலணி தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighCourt
    அனைத்து கோவில்கள், சர்ச்சுகள் மற்றும் தேவாலயங்களில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #WomenEntryTemples
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. கோவில் நடை திறந்தபோது இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இந்த சீசனில் பெண்கள் யாரும் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.



    இந்நிலையில் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அனைத்து கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். பெண்கள் மட்டுமே வழிபடக்கூடிய ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மற்றும் காமக்யா கோவிலில் ஆண்கள் எப்போதும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த மனுவை இன்று ஆய்வு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரர் இந்த நீதிமன்றத்தின் விசாரணை வரம்பிற்குள் எந்த கோவில்களையும் குறிப்பிடாததால், விசாரணைக்கு ஏற்க முடியாது என குறிப்பிட்டனர். #DelhiHC #WomenEntryTemples
    போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #BoforsCase #CBIAppeal #SupremeCourt
    புதுடெல்லி:

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய ராணுவத்திற்கு பீரங்கி வாங்குவதற்காக ஸ்வீடன் நாட்டின் ஆயுத தயாரிப்பு  நிறுவனமான போபர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதில்  ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

    இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம் மற்றும் இந்துஜா சகோதரர்களை விடுதலை செய்து 2005ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.



    இந்த தீர்ப்பு வெளியான 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. வலுவான ஆதாரங்கள் சிபிஐயிடம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில்,  சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவை இன்று தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டுக்கான காலம் கடந்துவிட்டதால் விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

    இதேபோல் பாஜக மூத்த தலைவர் அஜய் அகர்வாலும் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்தார். அவரது மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. #BoforsCase #CBIAppeal #SupremeCourt
    அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கேட்டு கைதானவர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Chennaigirlharassment
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பலரால் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்.

    அந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகவும், லிப்ட் ஆப்ரேட்டர்களாகவும் வேலை பார்த்தவர்கள் உள்பட 17 பேர் அந்த சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி சோர்ந்து போன நிலையில் காணப்பட்டாள். அந்த சிறுமியிடம், அவளது அக்காள் விசாரித்தபோது தான் இந்த கொடூரம் வெளி வந்தது.

    இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் குற்றப்பத்திரிகையின் நகல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர், இந்த வழக்கை அயனாவரம் போலீசார் விசாரிப்பது நியாயமாக இருக்காது.


    அதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையுடன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில் சிறப்பு வக்கீல் என்.ரமேஷ் ஆஜாராகி, தமிழக போலீசார் இந்த வழக்கை நியாயமாகவும் சட்டப்படியாகவும் விசாரித்து வருகின்றனர்.

    அந்த விசாரணையில் உள்நோக்கம் உள்ளது என்றோ, தன்னை வேண்டுமென்றே போலீசார் உள்நோக்கத்துடன், தனிப்பட்ட பகையுடன் கைது செய்து விட்டனர் என்றோ மனுதாரர்கள் கூறவில்லை.

    இந்த வழக்கின் விசாரணை விவர ஆவணத்தை (கேஸ் டைரியை) இந்த கோர்ட்டு ஆய்வு செய்யலாம்’ என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பித்தார். அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பதற்கு சரியான காரணங்களை மனுதாரர்கள் கூறவில்லை. அதனால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். #Chennaigirlharassment
    குட்கா ஊழல் வழக்கில் கைதான சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #GutkhaScam #CBI
    சென்னை:

    தமிழகத்தின் மிக முக்கிய ஊழல் வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படும் குட்கா வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் இந்த வழக்கு மிகத்தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில் மாதவராவ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கடந்த மாதம் சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.



    இதையடுத்து, சமீபத்தில் ஜாமீன் கோரி சிவக்குமார் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு குறித்து சிபிஐ தனது பதிலை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதில் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், சிபிஐ தரப்பு பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
    ×