என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தினகரன்"
தருமபுரி:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தண்டனை காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் வதந்தி பரவியது. இது குறித்து கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். கடந்த 2, 3 மாதங்களாகவே அவரது உடல்நிலை குறித்து சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அரசியல் அனாதைகள் தான் இது போன்ற வதந்திகளை பரப்பி வருவது எங்களுக்கு தெரியும்.
கடந்த மாதம் சசிகலா பிறந்த நாளின் போது எங்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக எங்களிடம் பேசினார். இனிமேலாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #pugazhenthi #sasikala
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘‘ முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தினகரன் முதல்வராக சதி செய்தார். என்று கூறினார்.
தினகரனின் சொந்த ஊரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். அவர் பேசுவது எல்லாம் உண்மையல்ல என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். பதவி வெறியில் இவ்வாறு பேசுகிறார்.
தி,மு.க.வுடன் கைக் கோர்த்து கொண்டே இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். பின்னர் டெல்லியில் இருந்து உத்தரவு வந்தவுடன் இந்த ஊழல் ஆட்சியுடன் சேர்ந்து கொண்டு ‘துணை முதல்வர்’ பதவியை வகிக்கிறார். அவரது நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. என்னை சதி செய்தார் என்று கூறுகிறார். இதை யாரும் நம்ப மாட்டார்கள். அவரது மனைவி கூட நம்ப மாட்டார். ஓ.பி.எஸ். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்னை தெரியும். விரக்தியில் உள்ள ஓ.பி.எஸ். மனநிலை பாதித்தவர் போல் பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் குறுக்கிட்டு, ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி முக்கொம்பு அணையை பார்வையிடும் நேரத்தில் நீங்களும் சுற்றுப்பயணம் செல்கிறீர்களே? என்றனர்.
இதற்கு தினகரன் பதிலளித்து பேசும் போது, ஸ்டாலின் சுற்றுப்பயணம் பற்றி எனக்கு தெரியாது. கடைமடை பகுதிவரை தண்ணீர் இல்லாததால் ஆகஸ்ட் 19-ந் தேதி நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து விட்டோம். அதன்படி இன்று மாலை நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கடைமடைக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூர்வாரும் பணியில் சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டம் என்று கூத்து நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொருளாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #dinakaran #OPanneerselvam
சென்னை:
காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள், கீழ்காணும் பொறுப்புகளில் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவைத் தலைவர் - முத்தையா
துணைச் செயலாளர்கள் - பரிமளா தர்மலிங்கம், ராஜேந்திரன்
பொருளாளர் - குட்டி (எ) சண்முகானந்தம்
தலைவர் - ரா.திருவேங்கடம்
செயலாளர் - வரலட்சுமி குமரவேல்
அவை தலைவர் - பிரபாகரன்
வடசென்னை தெற்கு மாவட்டம்
வடசென்னை தெற்கு மாவட்டத்தின், மாவட்ட கழகம் மற்றும் பகுதி கழகம் ஆகியவைகளின் திருத்தியமைக்கப்பட்ட புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள், கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவைத் தலைவர் - காதர் மீரான்
அவைத் தலைவர் - ஜெக நாதன்
அவைத் தலைவர் - பார்த்த சாரதி
திரு.வி.க. நகர் தொகுதி - பெரியசாமி
துறைமுகம் தொகுதி - செங்கை சிவா
ராயபுரம் தொகுதி - தனலட்சுமி.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை சுற்றி வரும் மூக்குப்பொடி சாமியாருக்கு நிரந்தரமாக எந்த இடமும் கிடையாது. விரும்பிய இடத்தில் தங்கியிருப்பது இவரது வழக்கம். பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சில மாதங்கள் தங்கியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள ஒரு டீக்கடையில் தங்கியிருந்தார். தற்போது கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்ரி ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கிறார்.
இவர் யாரிடமும் பேசுவதில்லை. பெரும்பாலும் மவுன நிலையிலேயே இருப்பார். கோபம் வந்தால் திட்டுவது இவரது வழக்கம். இவர் திட்டினாலும், கை உயர்த்தி காட்டினாலும் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் மூக்குப்பொடி சாமியாரின் தீவிர பக்தரான டி.டி.வி.தினகரன் சேஷாத்ரி ஆசிரமத்தில் தங்கியுள்ள மூக்குப்பொடி சாமியாரை நேற்று சந்தித்து ஆசிபெற்றார்.
மேலும் தரையில் கால் மீது கால் போட்டப்படி படுத்திருந்த மூக்குப்பொடி சாமியாரின் அருகில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
விரைவில் 18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வெளிவர உள்ள நிலையில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டி மூக்குப்பொடி சாமியாரிடம் தினகரன் ஆசிபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் உள்ளது. இதன் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
அதில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் கொடி ஏற்றுவதாக இருந்தது. அந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்டதால் அதிகாரிகள் அந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.
இந்த நிலையில் நேற்று இரவு தினகரன் குடியாத்தம் வழியாக சென்றார். அவர் கொடி ஏற்றுவதற்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை அருகே கட்சியின் நகர செயலாளர் நித்யானந்தம் தலைமையில் நிர்வாகிகள் அவசர அவசரமாக கொடிக் கம்பம் அமைத்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து திடீரென அ.தி.மு.க.வினர் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அதேவேளையில் தினகரன் வந்த வாகனம் வந்தது.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மதிப்பில்லை. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை அதிரடியாக கைது செய்கிறார்கள். இது இடிஅமீன் ஆட்சி. அராஜக சுயநல ஆட்சி. ஜனநாயகம் என்ற பெயரில் அடிமைகள் ஆட்சி நடக்கிறது.
காவிரியில் வெளியேறும் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. டெல்டா பகுதிகளில் கால்வாய்களையும், நீர்நிலைகளையும் தூர் வாருவதற்காக ரூ.400 கோடி ஓதுக்கப்பட்டு இருந்தது. அது எங்கே போனது?
கடைமடை பகுதிக்கு இதுவரை காவிரி நீர் செல்லவில்லை. முறையாக தூர்வாரி இருந்தால் டெல்டா பகுதி முழுமையாக காவிரி தண்ணீர் கிடைத்து இருக்கும். ஆனால் இப்போது விவசாயிகள் போராடும் நிலை உருவாகி இருக்கிறது. நாங்களும் போராடுவோம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து இயற்கையே பயப்படுகிறது என்று அமைச்சர் ஒருவர் கூறி இருக்கிறார். அம்மாவை விட எடப்பாடியார் பெரிய ஆள் என்று கூறி வருகிறார்கள். இந்த ஆட்சி நீதிமன்றத்தின் கருணையால் ஓடிக்கொண்டு இருக்கிறது.
எங்கள் கட்சியில் தொண்டர்கள் மோதிக் கொண்டது பற்றி பெரிதாக பேசுகிறார்கள். இது உள்கட்சி பிரச்சினை. சகோதரர்கள் சண்டை. விரைவில் சரியாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #ADMK
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு வருகிற 26-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் ராமுத்தேவர், மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை பேச ஆரம்பித்தார். அப்போது மாவட்ட நிர்வாகிகள் பலரது பெயரை சொல்லாமல் தனக்கு வேண்டியவர்கள் பெயரை மட்டும் கூறினார்.
இதனால் மற்றொரு தரப்பினர் அவரை பேச விடாமல் கூச்சலிட்டனர். இதனையடுத்து தங்கத்துரை ஆதரவாளர்கள் அவர்களை அமருமாறு எதிர்த்து கோஷமிட்டனர்.
சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதுடன் நாற்காலிகளையும் வீசினர். தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டடத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் அலறியடித்து மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு தங்கத்துரை தனது ஆதரவாளர்களுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
கடந்த மாதம் செம்பட்டியில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திலும் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். தங்கதமிழ்ச்செல்வன் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தும் கேட்கவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் அ.ம.மு.க. இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதால் இது குறித்து கட்சி தலைமையிடம் எடுத்து கூறி குழப்பத்தை ஏற்படுத்தும் நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
18 எம்.எல்.ஏ.வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டத்தின் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளில் நடக்கவேண்டிய இந்த கூட்டத்திற்கு தடைவிதித்ததால் இன்று நடக்கிறது. நம்மால் வளர்ந்த ஜாம்பவான் அமைச்சர் வீரமணி என்னென்ன சொத்துக்கள் சேர்த்துள்ளார் என்ற பட்டியலை அவருடன் இருப்பவர்களே என்னிடம் கொடுத்துள்ளார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று 8 கோடி தமிழ் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அந்த தீர்ப்பு வந்ததும் இந்த ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும். ஆட்சியாளர்கள் மாமியார் வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கிவிட்டது. வேலூரில் ஆங்கிலேயருக்கு எதிராக 1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. அதேபோன்று சுதந்திரம் பெற்றதும் செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடியும் குடியாத்தத்தில் இருந்துதான் நெய்யப்பட்டு அனுப்பப்பட்டது. முப்படைக்கும் வீரர்களை அனுப்பும் மாவட்டம் வேலூர். அதேபோன்று இந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
தமிழகத்தில் நடைபெறும் துரோக ஆட்சியை அகற்ற, அதர்மத்தை முறியடிக்க 13 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். அதேபோன்று திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். இரண்டாவது இடம் உதய சூரியனுக்கா, இரட்டை இலைக்கா என்பதுதான் போட்டி. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் பலிக்காது. அவர்கள் பணம் கொடுத்தாலும் மக்கள் குக்கர் சின்னத்திற்குதான் வாக்களிப்பார்கள்.
திருவாரூர் கருணாநிதி வெற்றிபெற்ற தொகுதியாக இருந்தாலும், எனக்கும் அதுதான் சொந்தஊர். முன்பு வேண்டுமானால் கருணாநிதி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தற்போது நமது மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என்பதற்காகவும், துரோக ஆட்சியை அகற்றவும் நமக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள்.
உண்மையான அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகமாக பரிணாமம் பெற்றுள்ளது. இனி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. என்பது போர்டும், கட்டிடமும்தான் உள்ளது. மக்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள். ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். எம்.ஜி.ஆர். 1972-ல் புதிய கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் வெற்றிபெற்றார். தி.மு.க. 2-வது இடத்திற்கும், காங்கிரஸ் 3-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதேபோன்று அம்மாவின் தொண்டர்கள் மீண்டும் சரித்திரம் படைப்பார்கள்.
நான் உங்களால் உருவாக்கப்பட்ட தலைவன். அதனால்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றுபெற்றேன். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் சின்ன அம்மாவால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்கள் சின்ன அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு மக்கள் விரோத நடவடிக்கை, மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தடைவிதித்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கதவை திறந்துவிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து ஒரு ஆண்டு பெரிய சாதனை படைத்துவிட்டதாகவும், ராஜதந்திரம் என்றும் கூறுகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிட கழக கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா திராவிடர் கழகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைகிறார்கள். அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் திராவிட தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி நம்மை விட்டு மறைந்து இருக்கிறார்கள்.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் மட்டுமே நடத்துகிறார். ஆனால் மக்கள் நலனில் அக்கறை இல்லை.
தற்போது காவிரியில் தண்ணீர் வந்தும் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை.
சசிகலா செய்த காரியங்கள் தவறாக, கெடுதலாக போய்விட்டது. அவர் சதியில் மாட்டிக் கொண்டார். அதனை மீட்க அண்ணா திராவிட கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
டி.டி.வி. தினகரன் 1 கோடி உறுப்பினர்கள், 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க போவதாக கூறிக்கொண்டு, நலத்திட்டம் என்ற பெயரில் குக்கர் உள்ளிட்ட பொருட்களை லஞ்சமாக கொடுத்து வருகிறார்கள். மக்கள் கூட்டத்தை பணம் கொடுத்து கூட்டப்படுகிறார்கள். இந்த கூட்டத்தை பார்த்து பலர் ஏமாந்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு ரூ. 4.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அரசு எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் ஆகும். தவறான அரசியல் செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
தி.மு.க. தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களின் கடமை. தியாகம் செய்தவர்கள் மதிக்கப்பட வேண்டும்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது, எங்கள் உடம்பில் அ.தி.மு.க. ரத்தம் ஓடுகிறது, திருவாரூர் இடைத்தேர்தலில் நடுநிலையில் இருப்போம். நாங்கள் போட்டியிட வில்லை.
தேர்தல் தொடர்பாக தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
டி.டி.வி. தினகரன் அரசியலில் அசிங்கமான சக்தி. ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் வரை பணம் சென்று கொடுத்தனர்.
தினகரன் பணத்தை கொண்டு அரசியல் செய்கிறார். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என தினகரன் நினைக்கிறார். ஸ்லீப்பர் செல் ஒன்றும் தினகரனுக்கு கிடையாது.
ஜெயானந்த் திவாகரன் கத்துக்குட்டி என்றால் டி.டி.வி. தினகரன் ஏன் பயப்படுகிறார்?
இவ்வாறு அவர் கூறினார். #Divakaran #dinakaran #thiruvarurelection
அச்சரப்பாக்கத்தை அடுத்த தேன்பாக்கத்தில் வசித்து வந்தவர் பாலமுருகன் (வயது 37). இவர் தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அச்சரப்பாக்கம் நகர செயலாளராக இருந்தார்.
பாலமுருகன் அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் டீக்கடை நடத்தி வந்தார். தினமும் அதிகாலை 4 மணிக்கு கடையை திறப்பது வழக்கம்.
இன்று காலை அவர் வழக்கம் போல் கடையை திறந்தார். சிறிது நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக கடையின் அருகே உள்ள இடத்துக்கு சென்று விட்டு திரும்பி நடந்து வந்தார்.
அப்போது அருகில் உள்ள கடைகளில் ஆங்காங்கே பதுங்கி இருந்த 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாளுடன் பாலமுருகனை சுற்றி வளைத்தனர்.
அதிர்ச்சி அடைந்த அவர் கொலை கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் பாலமுருகனை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டீக்கடையில் இருந்தவர்களும், அவ்வழியே வந்தவர்களும் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொலை திட்டத்தை முடித்த கும்பல் சிறிது தூரத்தில் தயாராக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அச்சரப்பாக்கம் காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா விரைவில் நடை ற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தின் போது பால முருகனுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. எனவே இந்த மோதலில் கொலை நடந்ததா? கட்சியினர் யாருடனும் மோதல் உள்ளதா? அல்லது தொழில் போட்டி ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலையுண்ட பால முருகனுக்கு பவானி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கும்பகோணம்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிலையில் கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதி தங்கியிருந்த தினகரன் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமீபகாலமாக முட்டையில் முறைகேடு, மதிப்பெண்ணில் முறைகேடு, கோவில் சிலைகளில் முறைகேடு என ஏராளமான முறைகேடுகள் மற்றும் ஊழலில் தமிழகம் சிக்கியுள்ளது. அம்மாவின் பேரைச் சொல்லிக் ஏமாற்றும் இந்த ஆட்சி அம்மாவின் கொள்கையில் இருந்து தடம் மாறிச் செல்கின்றனர். இந்த சுயநல கும்பலின் ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். எனவே தேர்தலின் மூலம் இந்த ஆட்சி அகற்றப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து ரகுபதி கமிஷன் கலைக்கப்பட்டது குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து தினகரன் கூறுகையில் , ‘‘இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும்’’ என்றார் .
இதன் பின்னர் சுவாமிமலையில் இருந்து மன்னார்குடி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார். #Dhinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்