search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினகரன்"

    அதிமுகவுடன் கருத்து வேறுபாடு இல்லை, நட்பு ரீதியில் தினகரனுடன் உள்ளேன் என்று கலைச்செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளார். #dinakaran #kalaiselvanmla #admk

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன். இவரிடம் தற்போது தினகரன் அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டபோது கூறியதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா என்னை நேரடியாக விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்ததால்தான் எம்.எல்.ஏ.வாக தேர்வானேன். நான் அ.தி.மு.க.வில்தான் இருந்து வருகிறேன். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன்.

    ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் நாங்கள் அவருக்கு வாக்களித்து முதல்-அமைச்சராக தேர்வு செய்தோம்.

    தற்போது டி.டி.வி.தினகரனுடன் நட்பு ரீதியாகதான் இருந்து வருகிறேன். மேலும் அவர்தான் என்னை அவரது அணிக்கு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வில்தான் இருப்பதாக கூறுகிறீர்கள், ஆனால், தமிழக அரசை மட்டும் குறை கூறி வருகிறீர்களே ஏன் என்று கேட்டபோது, தமிழக அரசுக்கும், எனக்கும் மாற்று கருத்துதான் உள்ளது. அதனால்தான் எங்கள் பகுதியில் உள்ள குறைகளை சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறினேன். அதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது நியமித்துள்ள சத்துணவு பணியாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. 

    கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தி.மு.க. தொகுதிக்கு சுமார் 10 கோடி அளவில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், எனது தொகுதி முழுவதும் புறக்கணிக்கப்பட்டு அடிப்படை வசதியான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்தவித வசதியும் செய்து கொடுக்காமல் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற நான் வலியுறுத்தி வருகிறேன். கேள்வி கேட்பது என்னுடைய உரிமை, அதை செய்து வருகிறேன். ஆனால், அ.தி.மு.க. கட்சிக்கும், எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.  #dinakaran #kalaiselvanmla #admk

    தமிழகத்தில் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி துரோகிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். #TTVDhinakaran #Jayalalitha

    திண்டுக்கல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    நாம் அனைவரும் மதங்களை கடந்து தமிழர்கள், இந்தியர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு என்றுமே ஆதரவாக இருப்போம்.

    வாக்குவங்கியை மனதில் வைத்துக்கொண்டு இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சிலர் அரசியல் பேசுகின்றனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முஸ்லிம் மக்களுக்கு தெரியும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வழியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். மதவாத, சாதிய சக்திகளை அனுமதிக்கமாட்டோம்.


    இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்.

    தமிழகத்தில் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி துரோகிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின் தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி கவிழும். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும்.

    மீத்தேன், ஸ்டெர்லைட், சேலம்- சென்னை 8 வழிச்சாலை போன்ற மக்கள் விரோத திட்டங்கள் இல்லாத ஆட்சியாகவும், சகோதரத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் ஆட்சியாகவும் அமையும். மேலும் தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் ஆட்சியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #Jayalalitha

    தினகரனை ஆதரித்த அ.தி.மு.க. கூட்டணி எம். எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி இப்போது தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர். #TTVDhinakaran

    சென்னை:

    தினகரனை ஆதரித்த அ.தி.மு.க. கூட்டணி எம். எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி இப்போது தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர்.

    முக்குலத்தோர் புலிப்படை எம்.எல்.ஏ. கருணாஸ் எடப்பாடி பழனிசாமி அரசை தற்போது கடுமையாக வசைபாடுகிறார்.

    டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் இவர் அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் தி.மு.க. நடத்திய போட்டி சட்டமன்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார். சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி அரசை ஆதரித்து பேசுவதும் இல்லை.

    கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ. தனியரசு ஆரம்பத்தில் தினகரன் பக்கம் இருந்தாலும் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். தமிமுன் அன்சாரி மற்றும் கருணாசுடன் கூட்டு சேராமல் தனித்து செயல்படுகிறார்.


    மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

    இதுபற்றி அவரிடம் கேட்டபோது ரம்ஜான் நோன்பு கஞ்சி இலவச அரிசி வழங்குவது குறித்து பேசியதாக தெரிவித்தார். கட்சி வி‌ஷயங்கள் குறித்து பேசவில்லை என்றார்.

    எடப்பாடி பழனிசாமி - தினகரன் அணி இரண்டும் இணைய வேண்டும் என்று பாடுபட்டதாகவும் அது சாத்தியமில்லாததால் தான் ஒதுங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாகவே கருத்து சொல்லி வந்தனர். ஆனால் இப்போது 3 பேரும் தனித்தனி நிலைப்பாட்டை எடுத்து செயல்படுகின்றனர். இந்த போக்கு தினகரனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    அது மட்டுமல்ல தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜி, பழனியப்பனை தவிர மற்ற 16 எம்.எல்.ஏ.க்களும் நமது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வெறுத்துபோய் உள்ளனர்.

    எம்.எல்.ஏ.வாக இல்லாததால் தொகுதியில் வலம் வர முடியவில்லை. சட்டசபைக்கு போகாததால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் உள்ளனர். தீர்ப்பு வரும் என்று காத்திருந்து காலம் விரயமானது தான் மிச்சம் என்று புலம்பி வருகின்றனர். #TTVDhinakaran

    சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தினகரன் சந்தித்து பேசினார். #TTVDinakaran #Velmurugan
    செங்குன்றம்:

    சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புழல் சிறையில் இருக்கும் வேல் முருகனை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. அம்பத்தூர் வேதாச்சலம், உடன் சென்றார். #TTVDinakaran #Velmurugan
    சாராய ஆலை குற்றச்சாட்டு தொடர்பாக டி.டி.வி. தினகரன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டசபையில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.
    சென்னை:

    சட்டசபையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு பிரச்சினையை முன்வைத்து பேசினார்.

    2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 6,672 மதுக்கடைகளை குறைப்பேன் என்று மறைந்த ஜெயலலிதா குறிப்பிட்டு இருந்தார். அதன்படி பதவி ஏற்றதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார்.

    பிப்ரவரி மாதம் பிறந்த நாளன்று 500 மதுக்கடைகளை மூடினார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 3.866 கடைகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    கடந்த மே 21-ந்தேதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி 810 கடையை மீண்டும் திறக்க இந்த அரசு முயற்சிக்கிறது. அம்மா வழியில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்க முயற்சி செய்வது சரியா? இதற்கு காரணம் என்ன என்றார்.

    உடனே அ.தி.மு.க. உறுப்பினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். ஒரு உறுப்பினர் “உர்..ர்.. என்று சத்தம் எழுப்பினார். தொடர்ந்து டி.டி.வி. தினகரன் பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது சபாநாயகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    சபாநாயகர்:- யாரும் உங்கள் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாக சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்க வாய்ப்பு கொடுக்க முடியாது. மதுவிலக்கு மற்றும் துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரிடம் பதில் இருந்தால் விளக்கம் அளிப்பார்.

    (அதன் பிறகு தினகரன் மீண்டும் பேச எழுந்தார். அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கவில்லை.)



    அமைச்சர் தங்கமணி:- 2016 தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து பூரண மது விலக்கு கொண்டு வருவதுதான் நமது கொள்கை என்று அம்மா அறிவித்தார். அதன்படி 23.5.2016-ல் 500 மதுக்கடையை மூட கையெழுத்திட்டார். அதன் பிறகு அம்மா பிறந்த நாளில் 500 கடைகள் மூடப்பட்டது. இப்போது 3.866 கடைகள் உள்ளன. பக்கத்து மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் வந்து விடக் கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமுடன் உள்ளது. 2002-ல் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளுக்கு 25 சதவீதம் மது பானம் சப்ளை செய்தது யாருடைய ஆலையில் இருந்து அவர்களது குடும்பத்தை சார்ந்ததுதானே. மது விலக்கை பற்றி பேசுபவர்கள் அவர்களது மதுபான ஆலையை அப்போது மூடசொல்லி இருக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறியதும் தினகரன் பதில் அளிக்க முற்பட்டார். சபாநாயகர் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. மைக் இல்லாமலேயே சிறிது நேரம் பேசினார். வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். மைக் இல்லாமல் பேசிய பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் கூறினார்.

    இதையடுத்து தினகரன் வெளிநடப்பு செய்தார். சட்டசபைக்கு வெளியே வந்த தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த அரசு 810 மதுக்கடையை புதிதாக திறக்க முயற்சி செய்கிறது என்று கூறினால் நிதானம் இல்லாமல் பேசுவதாக என்னைப் பார்த்து கூறுகிறார்கள். எனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மது ஆலை இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த சாராய ஆலையும் கிடையாது. என் குடும்பம் என்றால் நானும் என் மனைவியும்தான். ஒரு வேளை எங்கள் உறவினர் குடும்பத்தினருக்கு மது ஆலை இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அந்த ஆலையில் இருந்து மது வாங்க மாட்டோம் என்று இவர்களால் சொல்ல முடியவில்லை.

    கோவை அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இவர்களுக்குத்தான் நிறைய பங்கு உள்ளது. இந்த ஆட்சி போகும் போது தொழிற்சாலைகளில் யார்-யார் பினாமி என்பது தெரிந்துவிடும். ஹவாலா பணத்தை காட்டி நான் ஜெயித்ததாக அமைச்சர் கூறுகிறார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.6,000 வீதம் ஓட்டுக்கு பணம் கொடுத்து ரூ.180 கோடி வரை செலவு செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    நாங்கள் ரூ.20 நோட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. வாக்குறுதி கொடுத்து இருந்தாலும் அதை நிறைவேற்றுவோம். மதுசூதனன் ஆட்கள்தான் ரூ.20 நோட்டை காட்டி மக்களை தூண்டி விடுகிறார்கள்.

    தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார். இவர்கள் ஆட்கள்தான் இவரை மிரட்டி இருப்பார்கள். எங்கள் கட்சி ஆட்கள் இவரை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. யார் மிரட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்றி தி.மு.க.வை மீண்டும் சபைக்கு வரவழைக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் மற்றும் விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளனர். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்விநேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி பேசியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்படுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அந்த ஆலைக்கு மத்திய அரசு கொடுத்த லைசென்சை ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை அனுமதி ரத்து செய்வது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    காமராஜர், எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது சட்டமன்றத்தை புறக்கணித்த எதிர்க்கட்சியை அழைத்து மீண்டும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வைத்திருக்கிறார்கள். அதுபோல் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை அழைத்து அனைவரும் இணைந்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

    சபையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி நாங்கள் தான். எனவே தி.மு.க.வை அவைக்கு வரவழைக்க வேண்டும் என்று சபாநாயகருக்கும் முதல்வருக்கும் கோரிக்கை விடுக்கிறோம்.

    அபுபக்கர் (முஸ்லிம் லீக்):- எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருக்கும் போது தி.மு.க. ஒட்டுமொத்தமாக சபையை புறக்கணித்தது. உடனே கருணாநிதியை எம்.ஜி.ஆர் அழைத்து சட்டசபையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். எம்.ஜி.ஆர். வழியில் வந்த இந்த அரசு அதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    தினகரன் (அ.ம.மு.க.):- நான் அரசுக்கு வைக்கும் கோரிக்கை அனைத்து கட்சிகளும் இந்த சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதுதான். தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சி. அதையும் அழைத்து சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக என்ன நடந்தது என்ற உண்மை மக்கள் அனைவருக்கும் தெரியும். சட்டமன்றம் என்பது மக்கள் கருத்துக்களை தெரிவித்து தீர்வுகாண வேண்டிய இடம். எனவே பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வையும் வரவழைக்க வேண்டும். அவர்கள் ஜனநாயக கடமையாற்ற சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீசெல்வம்:- கருத்துக்களை சொல்ல அனைவருக்கும் முழு உரிமை இருக்கிறது. அதை தி.மு.க. சபையில் வந்து சொல்லலாம். அதை விட்டுவிட்டு வெளியே கூட்டம் நடத்துகிறார்கள். ஜனநாயக கடமையாற்ற அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அவர்களை யாரும் வெளியேற்றவில்லை. எனவே அவர்களாகவே சபைக்கு வந்து பங்கேற்கலாம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly
    மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை விசாரணை ஆணையம் தற்போது வெளியிட என்ன காரணம்? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.#jayalalithadeath
    ஆலந்தூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடாததால் கொதித்து போய் உள்ளனர். கலெக்டரிடம் மனுக்களை தரச்சென்ற எங்களை போலீசார் சுட்டு கொன்று உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் பழைய நிலைக்கு திரும்புவோம். இல்லை என்றால் எங்களை சுட்டு கொன்றுவிடுங்கள் என்று கூறுகின்றனர்.

    ஆலையை மூடுவதற்கான உத்தரவாதத்தை அரசு தரவேண்டும். தூத்துக்குடி கலெக்டர் சரியாக கையாளாததால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக நினைக்கின்றனர். துப்பாக்கி சூட்டிற்கு யார் உத்தரவிட்டது?.

    காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து விரைவில் அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் மத்திய அரசு காலதாமதம் செய்யக்கூடாது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் பேசிய ஆடியோவை தற்போது விசாரணை ஆணையம் வெளியிட காரணம் என்ன?. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைக்கவே இவ்வாறு அரசு செயல்பட்டு உள்ளது. இதுபற்றி நீதிபதி ஆறுமுகசாமியிடம்தான் கேட்கவேண்டும்.

    இந்த அரசு மீது தூத்துக்குடி மக்கள் கோபமாக உள்ளனர். இது தெரியாமல் முதல்-அமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் விஷப்பரீட்சையில் இறங்க பார்க்கிறார்கள். போலீசாருடன் செல்வது விபரீத விளைவுகள் ஏற்படும். ஆலையை மூடிவிட்டு மக்களை சந்திக்க தூத்துக்குடி சென்றால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார். #jayalalithadeath 
    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகள் சாதனைகள் எதையும் செய்யவில்லை. வேதனைகளைத்தான் நமக்கு தந்துள்ளது என தினகரன் கூறியுள்ளார். #dinakaran #pmmodi #centralgovernment

    மதுரை:

    மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதுரை வந்தார். ஓட்டலில் தங்கியிருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா தான் உண்ணும் உணவுப்பட்டியலை அவரே எழுதுவார். இதை நான் பல முறை பார்த்துள்ளேன். ஜெயலலிதா மருத்துவ மனையில் பேசிய ஆடியோவை விசாரணை ஆணையம் வெளியிட்டு இருப்பது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்புவதற்காகத் தான்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகள் சாதனைகள் எதையும் செய்யவில்லை. வேதனைகளைத்தான் நமக்கு தந்துள்ளது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.  #dinakaran #pmmodi #centralgovernment

    ஆரம்ப பள்ளிகளை மூட முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் முடிவிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    800-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்கிற செய்தி ஊடகங்களில் வந்துக் கொண்டிருக்கிறது.

    அரசு கல்வி நிலையங்கள் என்பது வணிக நோக்கத்துக்காக நடைபெறுவது கிடையாது. கல்வியை மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கெல்லாம் கொண்டுச் சேர்க்கும் பெரும்பணியைத்தான் அரசு பள்ளிகள் செய்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்தின் மாபெரும் தலைவர்கள் புதிய பள்ளிகள் திறக்கும் புனித பணியினை முன்னெடுத்து வந்துள்ளனர். அதிலே பெருமகிழ்ச்சியும் கொண்டனர். ஆனால் இந்த அரசோ கல்வி நிலையங்களை மூடிக் கொண்டிருக்கிறது.

    அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, எளியோர்தான். ஒரு பகுதியில் உள்ள பள்ளியை மூடி, இன்னொரு இடத்துக்கு அம்மாணவர்களை மாற்றும்போது அங்கு சென்று அவர்கள் படிக்க வேண்டுமானால் பல சங்கடங்களைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

    ஏதேதோ அற்ப காரணம் சொல்லி பள்ளிகளை மூடும் திட்டமென்பது, மூடத்தனத்தின் உச்சக்கட்டம். 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடுவதால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும், கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கும், பேரிடியாக அமையும்.

    நீட் என்கின்ற அநீதி கிராமப்புற மாணவர்களின், மருத்துவ கனவை சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் பழனிசாமி அரசின் இந்த முடிவும், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற பிள்ளைகளின் கல்வியின் தேவையை நாசமாக்கும். இவை இரண்டையும் மிகப் பெரிய சதிவலையின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

    கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கு பேரிடியாக அமையப்போகும் இந்த முடிவை பழனிசாமியின் அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டத்தை பழனிசாமியின் அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.


    தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர காரணமாக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது என்று டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார். #dinakaran #opanneerselvam

    ஈரோடு:

    கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நசலச்சங்கத்தின் 3-வது மாநில மாநாடு மற்றும் புதிய கட்சி தொடக்க விழா ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்தது. மாநாட்டுக்கு சங்க மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் தலைமை தாங்கினார். மாநாட்டில் புதிய திராவிட கழகம் என்கிற புதிய கட்சி தொடங்கப்பட்டது.

    மாநாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-

    புதிய திராவிட கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கி இருப்பதே , வருங்கால தமிழகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

    கொங்கு மண்டலம் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக பதவியில் அமர்த்தியவர் சசிகலா தான்.

    தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர அவர் காரணமாக இருந்தவர் பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது.

    கடந்த 15-ந் தேதி கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவு வந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் எழுதினார். அதில் தென்னிந்தியாவில் பா.ஜ.க. மலர கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதில் இருந்தே அவர் துரோகத்தை ஒப்பு கொண்டு உள்ளார்.

    அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், பகல் கனவு காண்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்லுவது, வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

    காரணம் மக்கள், குறிப்பாக தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்று கூட நான் எடப்பாடிக்கு சென்ற போது அங்குள்ள பொதுமக்கள், பெரியவர்கள் தமிழகத்தில் இன்று நடக்கும் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றனர். இந்த மாநாடு நடத்த பல்வேறு தடைகள் வந்தது. அதை தாண்டி தான் நடந்து வருகிறது.

    அதன் பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-


    கர்நாடகாவில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுபோல் எங்களது கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது மக்களாட்சி அமையும்.

    கமல்ஹாசன் மாற்றத்தை கொண்டு வருவேன் என்கிறார். அவரால் எப்படி மாற்றம் கொண்டு வர முடியும். மக்கள் தானே மாற்றத்தை கொண்டு வர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #dinakaran #opanneerselvam

    பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க எடப்பாடி பழனிசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.#edappadipalanisamy #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக  துணை  பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிக பெரிய தாக்குதல். விலைவாசி உயர்வு அனைத்திற்கும் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் விளக்கம் என்பது கண்டனத்திற்குரியது.

    எண்ணை நிறுவனங்களே ஒவ்வொரு நாளும் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற ஆபத்தான முடிவை மத்திய அரசு எடுத்த காரணத்தினால், பெரும் பின்னடைவை இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், கர்நாடக தேர்தல் பிரச்சாரம் நடைப்பெற்ற காலத்தில் மட்டும், மந்திரம் போல் உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை, தேர்தல் முடிந்த உடன் உயர்ந்து விட்ட விநோதத்தை மத்திய பா.ஜ.க. அரசு தான் விளக்க வேண்டும்.

    தங்களின் ஆதாய அரசியலுக்காக, பெட்ரோல்டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இப்பொது தேர்தல் முடிந்தவுடன் மக்களின் தலையில் தாங்கமுடியாத இப்பெரும் சுமையை ஏற்றக் காரணமாய் இருக்கும் மத்திய அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.



    தற்போது கச்சா எண்ணை விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலர் விலையில் உள்ள இந்தச் சூழலில், பெட்ரோல் டீசல் விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால், இன்னும் சில நாட்களில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றிக்கு 100 டாலர் எட்டும் என்று கணிக்கப்படுகிறது. அப்போது பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயரும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

    தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிக அளவு பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை சுமத்துகிறது என்பதையும் இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன். இப்பிரச்சினையில் பழனிசாமியின் அரசு வழக்கம் போல கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் உள்ளது, மிகவும் அத்தியாவசியமாகி விட்ட பெட்ரோல் டீசலின் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் முனைப்பு காட்டும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைத்து மக்களை காக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.#Edappadipalanisamy #TTVDinakaran
    ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர்கள் கானல் நீராகி போய்விடுவார்கள் என்று தினகரனை குறிப்பிடாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கி பேசினார். #TNCM #EdappadiPalanisamy
    ஊட்டி:

    ஊட்டியில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

    மறைந்த முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அம்மா நீலகிரி மாவட்டத்தை தனது சொந்த மாவட்டமாக கருதினார். எனவே இந்த மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் வந்த இந்த அரசும் நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதற்கு இங்குள்ள மின்திட்டங்கள் உதவியாக இருக்கிறது. இன்று கூட குந்தா புனல்மின் திட்டத்துக்கு 1850 கோடியில் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உங்களை கேட்டுகொள்வதெல்லாம், பொதுமக்கள் மின்சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும், நாட்டுக்கு உதவியாக இருக்கும்.


    அம்மாவால் ஓரங்கட்டப்பட்டவர்கள் தங்களை சர்வ வல்லமை படைத்தவர்களாக காட்டிக் கொண்டு மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று கூறி, ஊர், ஊராக சுற்றுகிறார்கள்.

    அவர்களது எண்ணம் கானல் நீராக மாறிவிடும். காவிரி பிரச்சனையை பொறுத்தவரை 1986-ம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கடிதம் எழுதினார். அதன்தொடர்ச்சியாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சட்ட போராட்டங்களின் மூலம் அம்மா, அரசிதழில் வெளியிட செய்தார். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வுக்கான உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். 32 ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முக்கிய பிரச்சனையாக விளங்கும் காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் இன்று மதியம் இறுதி தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளது. இன்று கிடைக்காவிட்டாலும், 22-ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் நிச்சயம் நல்ல தீர்ப்பை வழங்கும்.

    ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு இருக்கும். அம்மா அவர்கள் என்ன நினைத்தாரோ, அதை நடைமுறைபடுத்தும் விதமாக இந்த தீர்ப்பு இருக்கும். இதற்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #EdappadiPalanisamy
    ×