search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுன்"

    குன்னம் அருகே ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி(வயது 40). இவர் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். முத்துசாமி வீட்டுடன் இணைந்த கடை வைத்து நடத்தி வருகிறார். செந்தமிழ்ச்செல்வி மேலமாத்தூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு தினமும் தனது மொபட்டில் வந்து செல்வது வழக்கம். இவர் நகை அணிந்து தனியாக மொபட்டில் வந்து செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை செந்தமிழ்ச்செல்வி தனியாக தனது மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அப்போது ஒதியம் சமத்துவபுரத்தில் இருந்து 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேரும், பனிக் குல்லா அணிந்த 2 பேரும் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    சமத்துவபுரம் தாண்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செந்தமிழ்செல்வியை ஓரம்கட்டி மொபட்டில் இருந்து கீழே ஓடையில் தள்ளி, கத்தியை காட்டி மிரட்டி தாலி சங்கிலி, 2 தங்க சங்கிலிகள் என மொத்தம் 9 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.

    மேலும் காதில் அணிந் திருந்த தோட்டை அறுத்து எடுக்க முற்பட்டபோது வேன் ஒன்று அந்த வழியாக வந்ததால் அப்படியே ஆசிரியை விட்டு விட்டு 9 பவுன் நகைகளுடன் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    காணை அருகே தொழிலாளி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து 8½ பவுன் நகையை திருடி சென்றனர்.
    விழுப்புரம்:

    காணை அருகே உள்ள ஆரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 39), செங்கல் சூளை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அதே கிராமத்தில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்ததும் மாலையில் மணிகண்டன் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில், அதில் வைத்திருந்த 8½ பவுன் நகையை காணவில்லை. மணிகண்டன் குடும்பத்தினர் வேலைக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1¾ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் புதிய வீட்டு வசதி வாரியம் அருகில் சத்யசாய் நகரில் குடியிருந்து வருபவர் பெருமாள். இவர் பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா பாப்பாரப்பட்டி நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பெருமாள் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 1½ லட்சம் ரூபாய், 25 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள், பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 8 லட்சம் எனக்கூறப்படுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதே போல கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

    வீட்டின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே இறங்கி கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    திருவண்ணாமலை அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.21 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராசிபுரம் அருகே, விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 26¾ பவுன் நகை திருட்டு போனது. இது தொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50), விவசாயி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ராஜா (25) என்ற மகன், ஜெயம்மாள் என்ற மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. என்ஜினீயரான ராஜா கோவையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் தங்கவேல், அவருடைய மனைவி, மருமகள் ரம்யா ஆகியோர் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கவேல் மனைவியுடன் அதே பகுதியில் உள்ள அவர்களது தோட்டத்துக்கு சென்று விட்டார். மருமகள் ரம்யாவும் 8.30 மணியளவில் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    மாலையில் ரம்யா வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தது.

    பீரோவில் இருந்த 26¾ பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ரம்யா தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். அதேபோல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது அங்கும், இங்கும் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள அம்புஜவல்லிபேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி கலா (வயது 37). இவர் சம்பவத்தன்று இரவு மாமியார், குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் தூங்கிக்கொண்டிருந்த கலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், திருடன், திருடன் என சத்தம்போட்டார். இதனால் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் எழுந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூரில் வீடு புகுந்து 56 பவுன் நகைகள் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே பேடரப்பள்ளி நந்தவன லே-அவுட் பகுதியை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி, இரவு மர்ம ஆசாமிகள் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின்பேரில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில், சிப்காட் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேல்(வயது 35) என்பவரை போலீசார் நேற்று, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் சக்திவேலிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளியை பிடித்து, நகைகளை மீட்ட சிப்காட் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பாராட்டி, பரிசு வழங்கினார். 
    நடந்து சென்ற ஆசிரியையிடம் 5 தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மலைக்கோட்டை:

    திருச்சி இ.பி. ரோடு, ஜான் தோப்பு பகுதியில் உள்ள கார்கில் நகரை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி கற்பகம் (வயது 46). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலையில் கற்பகம் தனது வீட்டிலிருந்து ஆண்டார் தெரு பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது அவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கற்பகம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பகம் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இது குறித்து கற்பகம் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    சேந்தமங்கலம் அருகே, லாரி டிரைவர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேந்தமங்கலம்:

    சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரை சேர்ந்தவர் பங்காரு (வயது 50), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சினிமா தியேட்டர் உரிமையாளர் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் 10 கிலோ எடையுள்ள வெள்ளிப்பொருட்கள் திருட்டுப்போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அடையாறு:

    சென்னை மயிலாப்பூர் லஸ் அவென்யூ 3-வது தெருவை சேர்ந்தவர் ஷீலா பார்த்தசாரதி (வயது 49). சினிமா தியேட்டர் உரிமையாளர். குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த இவர் நேற்று முன்தினம் வீடு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் 10 கிலோ எடையுள்ள வெள்ளிப்பொருட்கள் திருட்டுப்போனது தெரியவந்தது.

    இதுகுறித்து ஷீலா பார்த்தசாரதி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கோவையில், 2 வீடுகளில் மர்ம ஆசாமிகள் புகுந்து 38 பவுன் நகையை திருடி சென்றனர். மேலும் கத்திமுனையில் பெண்ணிடம் நகையை வழிப்பறி செய்து கைவரிசை காட்டினார்கள்.
    கோவை:

    கோவையில் சமீபகாலமாக சங்கிலி பறிப்பு சம்பவங்கள், வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிரித்துள்ளன. இதற்கு காரணம் போலீசார் முறையாக ரோந்து செல்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் 3 இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

    கோவை கோணவாய்க்கால்பாளையம் வெள்ளலூர் சாலையை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவர் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் குடும்பத்தோடு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப் பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஜெகநாதன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீடு புகுந்து தங்க நகையை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கோவை ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ரமேஷ்(40). இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டை விட்டு வெளியூர் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கோபால். இவர் விவசாயத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சாந்தாமணி (51). இவர்கள் திருக் கடையூருக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பஸ்சில் சிங்காநல்லூர் வந்தனர். அவர்கள் வீடு திரும்புவதற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வீடு அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் வேகமாக வந்து ஆட்டோவை வழிமறித்தனர். இதனால் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சிஅடைந்தார்.

    பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சாந்தாமணி அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் 2 வீடுகளுக்குள் புகுந்து 38 பவுன் நகைகள் மற்றும் பெண்ணிடம் வழிப்பறி செய்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசிதேடி வருகிறார்கள்.
    சிறுபாக்கத்தில் ஹெல்மெட் கொள்ளையர்கள் வீடு புகுந்து பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். மேலும் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டிலும் நகையை அவர்கள் திருடி சென்று விட்டனர்.
    சிறுபாக்கம்:

    சிறுபாக்கம் அடுத்த விநாயகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சத்தியா(வயது 29). இவர் தீபாவளியை முன்னிட்டு, பொயனப்பாடியில் உள்ள தனது தந்தை செல்வராஜ் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு தீபாவளி பண்டிகைக்காக தேவையான பலகாரங்களை செய்யும் பணியில் சத்தியா மற்றும் அவரது தாய் பொம்மி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    பின்னர் இரவில் பொம்மி தூங்குவதற்காக மேல்மாடிக்கு சென்று விட்டார். கீழ் தளத்தில் சத்தியா அவரது குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு 2.30 மணிக்கு ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம மனிதர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த சத்தியா எழுந்தார். அப்போது 2 பேர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். தொடர்ந்து அவர்கள், சத்தியாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.

    இதேபோல், அதே தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தனபால் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். தனபால் அதிகாலையில் எழுந்து பார்த்த பிறகு தான் தனது வீட்டில் நகை, பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் ஹெல்மெட் கொள்ளையர்கள், தனபாலின் வீட்டில் திருடிவிட்டு சத்தியாவின் வீட்டுக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். மேலும் தடயவியல் நிபுணர் குமார் நேரில் வந்து தடயங்களை சேகரித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் வழக்குப்பதிவு செய்து, ஹெல்மெட் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஒரே தெருவில் 2 வீடுகளில், ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 
    ×