search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106635"

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் கண்டக்டர் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையை சேர்ந்தவர் கோபி (40). இவர் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனக்கு கொடுக்கப்பட்ட பயணிகள் டிக்கெட் காணாமல் போனதாக அதிகாரிகளிடமும்,பஸ் நிலைய போலீசிலும் கோபி புகார் அளித்தார். இதன் காரணமாக போக்குவரத்து அதிகாரிகள் கோபிக்கு பணி வழங்க வில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு அறையில் இருந்த கோபி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் கோபியை பரிசோதனை செய்த போது கோபி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி வழங்கப்படாததால் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கோபி மாரடைப்பால் உயிரிழந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    டிபி சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் அருணா. இவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து அருணாவை பார்ப்பதற்காக அவரது மாமா சுந்தரம், அத்தை சரோஜா ஆகியோர் சென்னை வந்தனர்.

    நேற்று இரவு சொந்த ஊர் திரும்ப கோயம்பேடு பஸ் நிலையம் வந்த சுந்தரம், சரோஜா இருவரும் போளூர் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். அப்போதுஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த அவரது கைப்பை மாயமானது. அதிலிருந்த 10சவரன் நகை, ஏ.டி.எம். கார்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சுந்தரம் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோயம்பேட்டில் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பாரிமுனையில் இருந்து வடபழனி நோக்கி நேற்று மாலை மாநகர பஸ் (எண்.15எப்) வந்தது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் பஸ் வந்தபோது படிகட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை கண்டக்டர் தனசிங் இறங்குமாறு கூறினார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் கண்டக்டர் தனசிங் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதனை அறிந்த மாநகர பஸ் டிரைவர்கள்-கண்டக்டர்கள் பஸ்சை ஓட்டாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்களை மீண்டும் இயக்க செய்தனர்.

    இதற்கிடையே கண்டக்டரை தாக்கியதாக சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்த செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    கோயம்பேட்டில் மாநகர பஸ்சில் பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் சோனாச்சலம். இவரது மனைவி தங்க புஷ்பம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களுரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று சென்னை திரும்பினார்.

    பின்னர் அவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி செல்லும் மாநகர பஸ்சில் (எண்.77) அமர்ந்தார். பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் தங்கபுஷ்பம் தனது கைப்பையை பார்த்த போது, அது கிழிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 13 பவுன் நகை இருந்தது.

    மர்ம நபர்கள் பையை பிளேடால் கிழித்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோயம்பேட்டில் வழிப்பறி கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு நூறடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் கத்தி, செல்போன்கள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் கோயம் பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி, செல்போன் பறிப்பு மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆதம், நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ், பிரவீன் ராஜேஷ், பாலாஜி, மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வா மற்றும் 18வயது சிறுவன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள்கள், கத்தி, 12 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கோயம்பேடு அருகே கஞ்சாவுடன் மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு நூறடி சாலையில் இன்று காலை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியார் வணிக வளாகம் முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்தனர்.

    அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஜூமோன்மியா (வயது20) என்பதும் பாண்டிச்சேரியில் தங்கி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நஜூமோன்மியா யாரிடம் இருந்து கஞ்சா பெற்றார், கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருகிறாரா என்கிற கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போதே கரும்பு, மஞ்சள் விற்பனை தொடங்கி உள்ளன. #Pongal
    போரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் கரும்பு, மஞ்சள் முக்கிய இடம் பிடிக்கும்.

    பண்டிகைக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இப்போதே கரும்பு, மஞ்சள் விற்பனை தொடங்கி உள்ளன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகள் சிறப்பு சந்தைகள் அமைத்து பொங்கல் பொருட்கள் விற்பனையை தொடங்கி உள்ளனர்.

    முதல்கட்டமாக நேற்று முதல் பூ மார்க்கெட் பின்புறம் உள்ள பகுதியில் கரும்பு மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    பண்ருட்டி அருகில் உள்ள சத்திரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்து கரும்புகள் வர தொடங்கி உள்ளன. நேற்று 9 லாரிகளிலும் இன்று காலை வரை 7 லாரிகளிலும் கரும்புகள் வந்துள்ளது.

    20 கரும்பு கொண்ட ஒரு கட்டின் விலை தற்போது ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கரும்பு வியாபாரி ரஜினிகாந்த் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 11-ந் தேதிக்கு பிறகு மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 400 முதல் 500 லாரிகள் வரை கரும்பு லோடுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். 2 நாட்களுக்கு பிறகு கரும்பு விலை சற்று உயரும்.

    மஞ்சள் கொத்து தற்போது குறைந்த அளவே சந்தைக்கு வந்துள்ளது. ஒரு மஞ்சள் கொத்து 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் விலை உயரும்’ என்றார். #Pongal

    மாதவரம் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. #ChennaiMetroTrain


    உலகத்தரம் வாய்ந்த நகர்புறப் பொதுப்போக்கு வரத்து சேவையை சென்னை மாநகரில், சென்னை மெட்ரோ ரெயில் உருவாக்கி உள்ளது.

    2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முதற் கட்டத்திட்டத்தின் அனைத்து வழித்தடங்களிலும் சேவைகள் முழுமையாக இயக்கப்படும்.

    சுமார் 3,770 கோடி ரூபாய் செலவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான முதற்கட்ட விரிவாக்க திட்டச்சேவைகள். 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திட்டமிட்டபடி துவங்கப்படும்.

    மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தினை, 107,55 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்துவதற்கு மாநில அரசு ஏற்கனவே கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி உள்ளது.

    ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையானது 20,196 கோடி ரூபாய் நிதிஉதவியினை, 52 கிலோ மீட்டர் நீளத்திற்கான மாதவரம்- சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம்- சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான முன்னுரிமை வழித்தடப்பகுதிகளுக்கு தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.

    ஏறத்தாழ 4,770 கோடி ரூபாய்க்கான முதல் தவணைக்கான கடன் ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் நாளன்று கையொப்பமிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஒருங்கிணைக்கப்பட்ட பன்முகப் போக்குவரத்து அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வரும்முயற்சியாக, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமச் சட்டம் மற்றும் அதற்கான சட்ட விதிகள், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் நாளன்று அறிவிக்கை செய்யப்படும்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பில் தொடங்கி கோயம்பேடு மேம்பாலம் வரையில் 10 கி.மீ. தூரத்தில் 437 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கேமிராக்கள் பொருத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாக வைத்து குற்றங்களை குறைக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் பிடிபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர், போக்குவரத்து போலீஸ்காரர் தர்மன் என்பவரை மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே தள்ளி விட்ட இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனும் கேமரா பார்வையில் சிக்கினார். இப்படி கண்காணிப்பு கேமராக்கள் குற்றம் செய்யும் அனைவரையுமே காட்டி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பில் தொடங்கி கோயம்பேடு மேம்பாலம் வரையில் 10 கி.மீ. தூரத்தில் 437 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    இதனை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். இதில் 88 கேமராக்கள், போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அண்ணா சாலை, ஆர்.கே. மடம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    சென்னையில் 31 ஆயிரத்து 802 கடைகள் மற்றும் 15 ஆயிரத்து 345 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் வசதி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது பற்றி கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-

    கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் அளவுக்கு கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் தவறு செய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோயம்பேடு பகுதியில் கொள்ளை-வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு விருகம்பாக்கம் சாலையில் நேற்று முன்தினம் இரவு குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் கொருக்குபேட்டை மீனாம்பிகை நகர் 6-வது தெருவைச் சேர்ந்த ராமசந்திரன் (25) பண்டிகையை முன்னிட்டு வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருக்கும் வீடுகளை பகல் நேரத்தில் நோட்டமிட்டு பின்னர் இரவு நேரத்தில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்தார் என்பது தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து 11 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ராமசந்திரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இதுபோல் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய அலுவலகம் முன்பு நேற்று கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு பைக்கை திருடுவதும், செயின் பறிப்பில் ஈடுபடுவதும் பின்னர் அந்த பைக்கை விற்பனை செய்து விடுவதும் தெரியவந்தது. கோயம்பேடு பகுதியில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட வந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். #Diwali
    சென்னை:

    தீபாவளியையொட்டி தமிழக அரசு 5-ந் தேதியை (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்ததால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் வெளியூர் மக்கள் பெரும்பாலானோர் 2-ந் தேதி (அதாவது, நேற்று) சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர்.

    இதையடுத்து வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, 2-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும், 5 தற்காலிக பஸ்நிலையங்கள் செயல்பட தொடங்கும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

    அதன்படி சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் இருந்தது. நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதேபோல், தாம்பரம், ஊரப்பாக்கத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டதாலும், மற்ற வாகனங்கள் அதிகளவில் வந்ததாலும் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.



    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக நேற்று ரெயில்களிலும் பலர் பயணம் செய்தனர். சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களான திருச்செந்தூர், கன்னியா குமரி, தூத்துக்குடி, அனந்தபுரி, ராமேஸ்வரம், நெல்லை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட பல ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேற்று பிற்பகலிலும், இரவிலும் சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. அதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து சேலம், கோவை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    ரெயில்கள் நடைமேடைக்கு வந்ததும் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளை தவிர, முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். ரெயில்வே போலீசார், முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் பயணிகளை வரிசைப்படுத்தி ஏற்றினார்கள்.

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடாமல் இருப்பதற்காக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். #Diwali
    எனக்கு தீபாவளி பண்டிகை கோயம்பேட்டில் தான் என்றும், சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களின் சேவையை கண்காணிக்க உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #Diwali #Vijayabhaskar
    கரூர்:

    போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை கேட்டு பெறுவதில் எந்த தவறும் இல்லை. இதற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய நினைத்தால் எந்த மாநிலத்திலும் ஆட்சி நடக்காது.

    தீபாவளி கால கட்டங்களில் சென்னையில் இருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது போல் இந்த ஆண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.



    குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் நிறைந்துள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தீபாவளியன்று குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆர்வமாக இருப்பார்கள். பெற்றோர்கள் அவர்களுடன் இருந்து பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எனக்கு தீபாவளி பண்டிகை கோயம்பேட்டில் தான்.

    நான் நாளை முதல் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்களின் சேவையை கண்காணிக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Diwali #Vijayabhaskar
    ×