search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107602"

    சென்னை தொழில் அதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று சிறை வைத்து கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சாமியார் சதுர்வேதியை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். #Chaturvedi
    சென்னை:

    சாமியார் பிரேமானந்தா போல, சென்னையில் தொழில் அதிபரின் மனைவி- மகளையும் வீட்டில் சிறை வைத்து, பின்னர் ஆந்திராவுக்கு கடத்தி சென்று கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சாமியார் சதுர்வேதி.

    இவர் சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தார். முதுகலை பட்டதாரியான இவர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவார். தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி வந்தார்.

    அரிசியை வெண்பொங்கலாக மாற்றி காட்டி, பல்வேறு சித்து விளையாட்டுகளை இவர் செய்து வந்தார். இவருக்கு ஏராளமான பெண் பக்தர்கள் உண்டு.

    சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தொழில் ரீதியாக தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க சாமியார் சதுர்வேதியை நாடினார். தொழில்அதிபரின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி அவரது வீட்டிற்கு சென்ற சாமியார் சதுர்வேதி பல்வேறு பூஜைகளை செய்தார்.

    அப்போது தொழில் அதிபரின் மனைவியும், 16 வயது மகளும் சாமியாருக்கு பக்தர்கள் ஆனார்கள். பிரச்சினையை தீர்ப்பதாக கூறி தொழில் அதிபரின் வீட்டிற்குள் புகுந்த சாமியார் சதுர்வேதி, தொழில் அதிபரின் வீட்டின் கீழ்தளத்தை நாளடைவில் அபகரித்துக்கொண்டார்.

    வீட்டை அபகரித்ததோடு நிற்காமல், தொழில் அதிபரின் மனைவியையும், மகளையும் தனக்கு வசியப்படுத்திக் கொண்டார். மேலும் அவர், தொழில் அதிபரின் மனைவியையும், மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    தனது அறைக்குள்ளேயே அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து, விசேஷ பூஜை என்ற பெயரில் அவர்களை நிர்வாணப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதை தெரிந்துகொண்ட தொழில் அதிபர், சாமியார் சதுர்வேதியை தனது வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினார். வீட்டை காலி செய்ய மறுத்த சாமியார் சதுர்வேதி தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தொழில்அதிபர் தனது மனைவியையும், மகளையும் மீட்டுத்தரும்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    கற்பழிப்பு, கடத்தல், சிறை வைத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை பிரிவு உள்ளிட்ட 18 சட்டப்பிரிவுகளின் கீழ் சாமியார் சதுர்வேதி மீது 2004-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சாமியார் சதுர்வேதி கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 3 பேர் கைது ஆனார்கள். தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் அபகரித்தது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தையும் சதுர்வேதி பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. சாமியார் சதுர்வேதியிடம் இருந்து தொழில்அதிபரின் மனைவியும், மகளும் மீட்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் சாமியார் சதுர்வேதி மீதும், அவருடன் கைதானவர்கள் மீதும் சென்னை மகளிர் கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    ஆனால் ஜாமீனில் வெளிவந்த சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. ஆனால் போலீசாரால் சாமியார் சதுர்வேதி எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் மகளிர் கோர்ட்டு சாமியார் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை கடந்த அக்டோபர் 9-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டது. அந்த காலக்கெடுவும் முடிந்துவிட்டது.

    சாமியார் சதுர்வேதி வழக்கு விசாரணையை சந்திக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை தேடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளி மாநிலங்களுக்கும் சென்று வந்தனர். தற்போது அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடாமல் இருக்க விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. அவரை பற்றி தகவல் அறிந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  #Chaturvedi
    கள்ளக்காதல் விவகாரத்தில் டெம்போ டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இருளப்பபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரம் சிவன் கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரெகு (வயது 31). டெம்போ டிரைவர். இவர் குளச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ரெகுவுக்கும், அபிஷாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அபிஷா, கணவரை பிரிந்து குளச்சலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். குழந்தைகளுடன் அவர் அங்கேயே தங்கியுள்ளார். ரெகு, தனது தாயார் எழிலரசியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் ரெகு வெளியே சென்று விட்டு வருவதாக தாயாரிடம் கூறி விட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாயார் எழிலரசியும், உறவினர்களும் பல இடங்களில் ரெகுவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இன்று காலை ரெகு, அதே பகுதியில் ரோட்டோரம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மார்பு உள்ளிட்ட பகுதியில் பலமாக கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. இரவில் 2-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ரெகுவை விரட்டி, விரட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    ரெகுவை துரத்திய அவர்கள் முதலில் பைப் கம்பியால் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ரெகு சிறிது தூரம் ஓடி உள்ளார். அதன்பிறகே கொலையாளிகள் ரெகுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். ரெகு, தப்ப முயன்றதற்கான தடயங்கள் அந்த பகுதியில் காணப்பட்டன.

    ரெகு கொலை குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் டி.எஸ்.பி. இளங்கோவன், இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரெகு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெகுவை கொன்றவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். கள்ளக்காதல் விவகாரத்தில் ரெகு கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    ரெகுவின் தாயார் எழிலரசி அந்த பகுதியைச் சேர்ந்த 2 பேரின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் தான் தனது மகனை கொன்றிருக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தனது மருமகளுடன் அந்த 2 பேருக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதனை தட்டிக்கேட்டதால் ரெகுவை அவர்கள் 2 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளதாகவும் கூறினார். எழிலரசி கூறிய தகவல்கள் உண்மைதானா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எழிலரசி குறிப்பிட்ட 2 பேரையும் தேடி போலீசார் அவர்களது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் மாயமாகி இருந்தனர். இதனால் அவர்களின் மனைவிகளை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் இருளப்பபுரம் பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூரில் குடும்ப தகராறில் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தென்னவன்(38).இவரது மனைவி கவிதா(32). இவர்கள் 2 பேரும் திருப்பூர் குமாரானந்தபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்தனர். தென்னவன் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கவிதா பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    தென்னவனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்தது.

    இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் கவிதா மன உளைச்சலில் இருந்தார். மேலும் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்படுவது அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.

    நேற்று தென்னவன் வெளியே சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த கவிதா வி‌ஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே இறந்தார்.

    வெளியே சென்ற தென்னவன் வீடு திரும்பியபோது மனைவி தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டை உள் பக்கம் பூட்டி கொண்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை வெகு நேரமாகியும் தென்னவன் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது தென்னவன் தூக்கில் தொங்குவதையும், கவிதா பிணமாக கிடந்ததையும் கண்டு திடுக்கிட்டனர்.

    இது குறித்து திருபூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிகக்ப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலை செய்த தென்னவன் - கவிதாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வேலூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.

    கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் குமாரானந்த புரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புவனேஸ்வரம் அருகே ராணுவ வீரருன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனேஸ்வரம்:

    மேற்கு வங்காளம் மெத்னிப்பூரை சேர்ந்தவர் மந்துப்பத்ரா. இவர் ஒரிசா மாநிலம் தென்கானல் என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி அருணா. இவர் சமூக வலைதளம் மூலம் பலருடன் நட்பு வைத்திருந்தார். பேஸ்புக்கில் சஞ்சய்குமார் என்ற எல்லை பாதுகாப்புபடை வீரர் அருணாவுக்கு அறிமுகமானார்.

    அரியான மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் அசாமில் நேபாளம் எல்லையில் பணியாற்றி வந்தார். அருணாவும், சஞ்சய்குமார் அடிக்கடி பேஸ்புக்கில் தொடர்பு கொள்வது வழக்கம். இது அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது.

    சஞ்சய்குமார் அடிக்கடி தென்கானலுக்கு வந்து அருணாவை சந்திப்பார். அப்போது அவர்கள் தனிமையில் இருப்பது வழக்கம். இந்த காதல் விவகாரம் மந்துப்பத்ராவுக்கு தெரிய வந்தது. அவர் அருணாவை கண்டித்தார்.

    இதனால் கணவரை தீர்த்து கட்டிவிட்டு சஞ்சய் குமாரை திருமணம் செய்து கொள்ள அருணா முடிவு செய்தார். இதற்கு சஞ்சய்குமார் சம்மதித்தார். கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சஞ்சய்குமார் தென்கானலுக்கு வந்தார்.

    அன்று காலை அருணா கணவர் மந்துப்பத்ராவுக்கு காலை உணவில் வி‌ஷத்தை கலந்து கொடுத்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அருணா காதலர் சஞ்சய் குமாரை வீட்டுக்கு அழைத்தார். அவர் கத்தியால் மந்துப்பத்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் அசாம் சென்று விட்டார்.

    தனது கணவரை யாரோ கொன்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் அருணா கொலை பின்னணியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை போனை ஆய்வு செய்த போது சஞ்சய் குமாருடன் பேஸ் புக்கில் அடிக்கடி தொடர்பு கொண்டது தெரியவந்தது.

    அது பற்றி தீவிரமாக விசாரித்த போது காதலருடன் சேர்ந்து கொலை செய்ததை அருணா ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் அசாமுக்கு சென்று சஞ்சய் குமாரை கைது செய்தனர். அருணா மற்றும் சஞ்சய் குமார் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    திருப்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி தலைமறைவாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பாப்பணன் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதியில் குடியிருப்பவர்களிடம் வாரம் ரூ. 100 என்ற அடிப்படையில் தீபாவளி சீட்டு நடத்தினார்கள்.

    இதில் ஏராளமானோர் பணம் செலுத்தினார்கள். 52 வாரம் முடிந்து 6,200 ரூபாய் முதிர்வு தொகை தருவதாக கணவன்-மனைவி கூறி இருந்தனர்.

    ஆனால் சீட்டு முடிவடைந்து பணம் கொடுக்க வேண்டிய நிலையில் கணவன்-மனைவி தங்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். அவர்களில் 15 பேர் ரூ. 6 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் தெரிவித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதால் மோசடி தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தலைமறைவான கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    தூத்துக்குடியில் மனைவியின் நடத்தையில் சந்தேகத்தில் மகளை விஷம் கொடுத்து கொன்ற தந்தை, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ராஜீவ்நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது40). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கங்கா (36) தூத்துக்குடி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் சன்விகா (7) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தாள்.

    மகேஸ்வரன் கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். அப்போது, தான் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை கங்காவிடம் கேட்டுள்ளார். அதற்கு கங்கா கணவன் அனுப்பிய பணம் முழுவதும் செலவாகி விட்டது என கூறியுள்ளார்.

    இதனால் மகேஸ்வரனுக்கு மனைவி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாகவும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் மகேஸ்வரன் இன்று அதிகாலை தனது மகள் சன்விகாவுக்கு வி‌ஷத்தை கொடுத்து, தானும் வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தை, மகளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சன்விகா இன்று காலை பரிதாபமாக இறந்தாள்.

    மகேஸ்வரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி மீதான நடத்தை சந்தேகத்தில் 7 வயது மகளை வி‌ஷம் குடித்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    பெங்களூரில் சொத்துக்காக கணவரை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பெங்களூரு எச்.ஏ.எல். பகுதிக்குட்பட்ட காளப்பா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரா(48). இவரது மனைவி முனிரத்தினம்மா(45). இவர்களுக்கு சேதன்(20), அபிஷேக்(19) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரா, சரக்கு வேன் டிரைவர் ஆவார்.

    இந்த நிலையில், பெங்களூரு அருகே கித்தேகானஹள்ளி என்ற இடத்தில், ராமச்சந்திரா 8 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டார். இந்த சொத்தை, மனைவி முனிரத்தினம்மா தங்களுக்கு தருமாறு கணவரிடம் கேட்டார்.

    இதுதொடர்பாக கணவன்-மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, முனி ரத்தினம்மா கோபித்துக் கொண்டு, தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அத்துடன் சொத்துக்காக, நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார்.

    கடந்த 5-ந் தேதி இரவு, சில மர்ம நபர்கள், ராமச்சந்திராவை தொடர்பு கொண்டு, வாடகைக்கு வேன் வேண்டும் என்றும், எச்.ஏ.எல். கேட் அருகே வருமாறும் கூறினார்கள். இதையடுத்து அங்கு சென்ற ராமச்சந்திராவின் கை, கால்களை கட்டிப்போட்டும், தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியும் வேனில் கொண்டு சென்றனர்.

    பின்னர், கித்தேகானஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து சொத்தை முனிரத்திம்மாவின் பெயரில் எழுதி தருமாறு கொலை மிரட்டல் விடுத்து, சித்ரவதை செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு, ராமச்சந்திராவின் கதறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற ஒருவர், ராமச்சந்திரா அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த எச்.ஏ.எல். போலீசார், ராமச்சந்திராவை மீட்டனர். மேலும் அவர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக புகார் அளித்ததன்பேரில், மனைவி முனிரத்தினம்மா மற்றும் 2 மகன்கள், உறவினர் சிவகுமார்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    தாம்பரம் அருகே பணத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு, வழிப்பறி கும்பல் பறித்துச் சென்றதாக நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். #CashRobbery
    தாம்பரம்:

    தாம்பரம் அருகே பணத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு, வழிப்பறி கும்பல் பறித்துச் சென்றதாக நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவியையும் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.60 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

    திருச்சியை சேர்ந்தவர் முகமது அன்சாரி ராஜா(வயது28). இவர் நேற்று முன்தினம் மாலை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கை மற்றும் வயிற்றில் கத்தியால் கிழித்த காயங்களுடன் சிகிச்சைக்கு சேர்ந்தார். பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது காரில் வந்த கும்பல் தன்னை குத்திவிட்டு ரூ.20 லட்சத்தை பறித்துச்சென்றதாக தாம்பரம் போலீசில் தெரிவித்தார்.



    பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன், சேலையூர் உதவி கமிஷனர் வினோத் சந்தாராம், இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், பிரவீன் மற்றும் போலீசார்் முகமது அன்சாரி ராஜாவை தீவிரமாக விசாரித்தபோது, அவரே கை மற்றும் வயிற்றில் பிளேடால் கிழித்துக்கொண்டு நாடகமாடியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.

    மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துவந்த முகமது அன்சாரி ராஜா, ஆர்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர் சென்னை வந்துவிட்டு திரும்பும்போது, சென்னையில் வசிக்கும் திருச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் கொடுக்கும் பணத்தை ஊரில் இருக்கும் அவர்களது குடும்பத்திடம் கொண்டுசென்று ஒப்படைப்பது வழக்கம்.

    தனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் இப்படி பணம் கொண்டுசெல்லும்போது நாடகமாடி தனக்கு தேவையான பணத்தை அபேஸ் செய்துவிடலாம் என அவர் திட்டமிட்டார். அதன்படி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மனைவியுடன் நேற்று முன்தினம் சென்னை வந்தார். திருமுல்லைவாயிலில் உள்ள உறவினர் வீட்டில் மனைவியை தங்கவைத்தார்.

    மன்னார்குடியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன் உறவினர் நபீஸ் என்பவர் மூலம் ரூ.60 லட்சத்தை கொடுத்து, வீட்டில் கொடுக்கும்படி கூறினார். திருவல்லிக்கேணியில் நபீஸ் இந்த பணத்தை முகமது அன்சாரி ராஜாவிடம் நேற்று முன் தினம் கொடுத்து மன்னார் குடிக்கு கொண்டுசென்று கொடுக்க சொன்னார்.

    பணத்தை பெற்றுக்கொண்டு திருச்சியில் உள்ள ஒரு முகவரியில் கொடுப்பதாக முகமது அன்சாரி கூறினார். தாம்பரம் சானடோரியத்தில் மனைவியை வரவழைத்து அந்த பணத்தை அவரிடம் கொடுத்து கால்டாக்சியில் ஏற்றி திருமுல்லைவாயிலுக்கு அனுப்பிவிட்டார். பின்னர் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பஸ் ஏற செல்வதுபோல சென்று பிளேடால் கை மற்றும் வயிற்று பகுதியில் கிழித்துக்கொண்டு, காரில் வந்த கும்பல் பணத்தை பறித்துச்சென்றதாக நபீசிடம் கூறிவிட்டு போலீசில் பொய் புகார் கொடுத்தது தெரியவந்தது.

    போலீசார் திருமுல்லைவாயிலில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அங்கு பணத்தை மறைத்துவைத்திருந்த தகவலை ஆர்த்திகா தெரிவித்தார். போலீசார் அந்த பணத்தை சோதனை செய்தபோது ரூ.53 லட்சம் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ரூ.60 லட்சத்தை முகமது அன்சாரி ராஜா ஏமாற்றிவிட்டதாக போலீசில் நபீஸ் புகார் செய்தார். கணவன், மனைவியிடம் இதுதொடர்பாக விசாரித்தபோது, மேலும் ரூ.7 லட்சத்தை திருமுல்லைவாயிலில் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது அன்சாரி ராஜா, அவரது மனைவி ஆர்த்திகா இருவரையும் கைது செய்தனர். ரூ.60 லட்சம் ஹவாலா பணமா? எப்படி வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறைக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    கோத்தகிரி அருகே மாடு மேய்த்து கம்யூட்டர் படிக்க வைத்த மனைவி விவாகரத்து கேட்ட வேதனையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தர்மோனா பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 32). மாடு வளர்த்து வருகிறார். இவருக்கும் மந்தாடா பகுதியை சேர்ந்த ‌ஷர்மிளா (27) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

    இந்நிலையில் டேனியல் மாடு வளர்த்து பால் கறந்து மனைவியை கம்ப்பூட்டர் கோர்ஸ் படிக்க வைத்தார். கம்ப்யூட்டர் படிப்பு முடிந்ததும் நீங்கள் மாடு மேய்க்கிறீர்கள், நான் கம்ப்யூட்டர் படித்து விட்டேன். எப்படி பொருந்தும் என்று ‌ஷர்மிளா கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ‌ஷர்மிளா கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இது குறித்தான வழக்கு விசாரணை கோத்தகிரி கோர்ட்டில் கடந்த மாதம் தொடங்கியது. இன்று (5-ந்தேதி) மீண்டும் விசாரிக்க இருந்தது.

    இந்நிலையில் மனைவி விவாகரத்து கேட்ட அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்த டேனியல் நேற்று இரவு வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். வெகுநேரம் ஆன பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது டேனியல் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    பெங்களூருவில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வேதனையில் மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஓசூர்:

    பெங்களூரு, பேட்ராயன் புரா பகுதியில் உள்ள கஸ்தூரிபா நகரை சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி ஷில்பா(29). ஹரீஷ், ஆட்டோமொபைல் கடையில் வேலை செய்து வந்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்த இத்தம்பதியர்க்கு, ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில், ஹரீசுக்கு அவரது நண்பரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதுசம்பந்தமாக இரு குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டு, காவல் நிலையம் வரை புகார் சென்றது. இதையடுத்து போலீசார் ஹரீஷ் மற்றும் நண்பரின் மனைவியை அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.

    இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த ஹரீசின் நண்பர், அவருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன ஹரீஷ், கடந்த திங்கட்கிழமை மாலை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் வேதனையடைந்த அவரது மனைவி ஷில்பா, நேற்று, ஹரீசின் திதிக்கு ஏற்பாடு செய்யும் வேளையில், வீட்டில் உள்ள அறைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக, பேட்டராயபுரா போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    அன்னூர் அருகே விபத்தில் மனைவி பலியான அதிர்ச்சியில் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி பாலாமணி (55).

    சம்பவத்தன்று பாலாமணி தனது தாயார் மாராத்தாளை அழைத்துக்கொண்டு மொபட்டில் அன்னூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். மொபட் பூலுவபாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மொபட் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த பாலாமணி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கால்களில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய மாராத்தாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் சிறுமுகையை சேர்ந்த ஞானசேகரன் (23) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் இது குறித்து பாலாமணியின் கணவர் சண்முகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஒரு காரில் உறவினர்களுடன் புறப்பட்டு அன்னூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். கார் பொகளூர் அருகே வந்த போது சண்முகத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.

    இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக சண்முகத்தை அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் சண்முகத்தின் உடலை அவரது உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். விபத்தில் இறந்த பாலாமணியின் உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கணவன்-மனைவி 2 பேரின் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரேயான் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சண்முகத்தின் மகன் ஸ்ரீதர் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். அவர் வந்த உடன் உடல்கள் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். #tamilnews
    தொழில் அதிபரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தில் தஞ்சை டாக்டர்- மனைவியிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 65). தொழில் அதிபரான இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி அருகில் அபி அண்ட் அபி மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். மேலும் கல்லூரிகளையும் நிர்வகித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு வந்த தொழில் அதிபர் இளங்கோவனை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த இளங்கோவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோரிகுளம் முருகன், கீழையூரை சேர்ந்த கவுதம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சை திலகர் திடல் பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை ஏலம் எடுப்பது தொடர்பாக, இளங்கோவனை கொல்ல முயற்சி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதில் அந்த மருத்துவமனை டாக்டர்கள் பாரதி மோகன், ஆனந்தசேகர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் டாக்டர் பாரதிமோகன் மற்றும் அவரது மனைவி அனுசுயா, மகள் ஜெசிதா மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர் கலைச்செல்வி ஆகியோரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், தலைமையிலான போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதில் தொழில் அதிபர் இளங்கோவனை கொலை செய்ய முயற்சி நடந்தது ஏன்? என்பது பற்றி டாக்டர் பாரதிமோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வாக்கு மூலத்தை போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

    ×